Pages

சனி, நவம்பர் 30, 2024

மார்க்சின் மறுவார்ப்பு எலினார்:

 அ.பாக்கியம்.

     காரல் மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் ஆறாவதாக பிறந்தவர் எலினார். ஏழு குழந்தைகளில் நான்கு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். மூன்று பெண் குழந்தைகள் ஜென்னி கரோலின், ஜென்னிலாரா, ஜென்னி ஜூலியா எழினார் ஆகிய மூன்று பெண் குழந்தைகள் முறையே 38, 66, 43 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இந்த மூன்று பெண்களும் அவர்களது இணையர்களும்  காரல் மார்க்ஸின் கருத்துக்கள் அடிப்படையில் அரசியல் போராட்டங்களில் புரட்சிகளில் கலந்து கொண்டவர்கள் 


குறிப்பாக இளைய மகள் எலினார் பற்றி இந்த புத்தகம் விரிவாக பேசுகிறது. காரல் மார்க்ஸ் லாரா என்னைப் போன்றவள் என்றாலும் எலினார் நானே தான் என்று குறிப்பிடும் அளவிற்கு எலினாவின் பொது வாழ்க்கை இருந்தது.



இந்தப் புத்தகத்தில் மார்க்ஸ் இருந்த காலத்திலும் அதன் பிறகும் மார்க்சியத்திற்கு எலினா ஆற்றிய பங்கு விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


எலினாவின் வாசிப்பு களப்போராட்டம் காதல் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட வேதனைகள் என அனைத்தும் சுருக்கமான முறையில் தேவையான விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. எடுத்து படித்தால் உடனே முடித்து விடலாம். அந்த அளவிற்கு எழுத்து நடை உள்ளது. 


எழுத்து ஆய்வு கற்பித்தல் மொழிபெயர்ப்பு தொழிற்சங்க பணி என தனது செயல்பாட்டில் பன்முக ஆற்றலை கொண்டவராக எழினார் செயல்பட்டு உள்ளதை என்னுள் வாசிப்பின் வலி உணர முடிகிறது என்று வாழ்த்துரை வழங்கியுள்ள மூத்த தலைவர் டி கே ரங்கராஜன் குறிப்பிட்டுள்ளார். எலினாவின் களப்போராட்டங்கள் பெரும் அனுபவங்களை இயக்கத்திற்கு கொடுத்தது.


72 பக்கங்கள் உள்ள சிறு புத்தகம் 12 துணை தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் வ. பொன்னுராஜ் அவர்கள் மிகச் சிறந்த முறையில் எழினார் வாழ்வின் சாரத்தை பிழிந்து கொடுத்துள்ளார். 


நேற்றைய தினம் (2.9.24) பல்லவன் ரயிலில் அரியலூர் செல்கிற பொழுது இந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன். சுற்றி நடந்த எந்த நிகழ்வும் இந்த புத்தகத்தின் வாசிப்பிலிருந்து என்னை வெளி கொனரவில்லை. அதன் உள்ளே மூழ்கி முடித்தேன்.


இந்தப் புத்தகத்தை பாரதி புத்தக ஆலயம் மே மாதம் வெளியிட்டு உள்ளது விலை ரூபாய் 80/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோழர் கா. சின்னையா தென் சென்னை கட்சி அமைப்பின் அடித்தளம்.

                                     அஞ்சலி    1966 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகி...