Pages

சனி, நவம்பர் 30, 2024

தோழர் அரிகரன்: களப்பணிக்கான வழிகாட்டி :

 



25 9 2024 அன்று அதிகாலை 3:30 மணியளவில் தோழர் ஹரி அவர்கள் தனது 74 வது வயதில் மரணம் அடைந்தார். 


முன்னாள் விமானப்படை வீரர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எழும்பூர் பகுதி செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பூங்கா நகர் பகுதியில் முதல் பகுதி செயலாளர் வங்கி ஊழியர் சங்கத்தின் செயல்பாட்டாளர் என  பல களம் கண்டவர் தோழர் அரி.


1985 ஆம் ஆண்டு ஓட்டேரி அருகில் உள்ள ஸ்ட்ரான்ஸ் ரோடு நியூ பேரன்ஸ் ரோடு இடங்களில் வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. தோழர்கள் நாராயணன், ராதாகிருஷ்ணன், வள்ளுவன், சுப்பிரமணி, சங்கர் மோகன் கொசப்பேட்டை சரவணன், இவர்களுடன் எம்ஆர்எப் சீனிவாசன் இணைந்து இந்த கிளையை உருவாக்கினார்கள். இந்த கிளையின் சார்பில் 1986 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிதண்ணீர் போராட்டம் சென்னை நகரத்தில் மக்கள் எழுச்சி கொண்ட குடிநீர் போராட்டத்தில் துவக்கமாக அமைந்தது. 1987 ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் மூன்றாவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெ ற்ற நேரத்தில் வீடு வீடாக உண்டியல் வசூலை மேற்கண்ட தோழர்கள் கொசப்பேட்டை பகுதியில் நடத்திய பொழுது, தோழர ஹரி  இயக்கத்தில்  ஈர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய மாநாட்டுப் பள்ளிகளின் பிரச்சாரமும் தயாரிப்புகளும் அவரை இயக்கத்திற்குள் செயல்பாட்டாளராக மாற்றியது. 


1989 ஆம் ஆண்டு எழும்பூர் பூங்கா நகர் வாலிபர் சங்கத்தின் அமைப்புக்குழு உருவாக்கப்பட்டூ தோழர் ராஜன் (தற்போது அண்ணா நகர் பகுதி குழு உறுப்பினர்) அதன் ஒருங்கிணைப்பாளராகவும், பெரியமேடு வின்சென்ட், நியூ பேரன்ட்ஸ் ரோடு வள்ளுவன், ஸ்டிரான்ஸ் ரோடு சங்கர், பெரியமேடு வின்சென்ட் என மேலும் சில தோழர்கள் அமைப்பு குழு உறுப்பினர்களாக இருந்த செயல்பட்டார்கள். அதே ஆண்டு கடைசியில் எழும்பூர் பூங்கா நகர் பகுதி குழு மாநாடு நடத்தி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் ஹரி வாலிபர் சங்கத்தின் முதல் பகுதி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டு எழும்பூர் பகுதி முழுவதும் வாலிபர் சங்கத்தை விரிவு படுத்தினார். 


1993 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் எழும்பூர் பகுதி குழு மாநாடு நடைபெற்ற பொழுது, பகுதி செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை பகுதி செயலாளராக செயல்பட்டார். 


இந்தியன் வங்கியில் பணிபுரிந்தாலும் அவர் களப்பணியாற்றுவதில் ஆர்வமாக இருந்து செயல்பட்டார். பல வாலிபர் சங்க தோழர்கள் களப்பணியில் இருந்த பொழுது அரசு வேலை கிடைத்து இணைந்தார்கள். அவர்களும் தங்கள் பணிகளை குறைக்கவில்லை. ஆனால் ஹரி வங்கி பணியில் சேர்ந்த பிறகு களத்திற்கு வந்தார். அதுவே ஒரு துணிச்சலான முடிவும், செயலும் ஆகும். 

ஸ்டாரரன் ரோட்டில், தற்போது செயல்படக்கூடிய பள்ளியை நடத்துவதற்கான பல போராட்டங்களை நடத்தியவர், காவல்துறையின் தாக்குதலை நேருக்கு நேராக எதிர்கொண்டவர், 19 90 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க தூதரகம் முன்பு நடந்த பேரணியில் போலீஸ் நடத்திய கடுமையான தாக்குதலில் இருந்து ஏராளமான பெண்களை பாதுகாத்தது மட்டுமல்ல காவல்துறை பெண்கள் மீதான தாக்குதலை பலவந்தமாகவும் தடுத்து நிறுத்தினார் அவர்கள் வீசிய கண்ணீர் புகை குண்டுகளை எடுத்து பெண்களுக்கு பாதிப்பு வராமல் எறிந்தவர்கள் மீது எறிந்தா. 


காவல்துறையில் அதிகாரியாக தேர்வு பெற்ற பொழுது நியமனத்திற்கு பணம் கேட்டார்கள் என்ற காரணத்தினால் அந்த உயர் பதவிக்கு செல்லவில்லை என்று பலமுறை தெரிவித்தார். 


அப்போதைய சென்னை நகர கமிஷனர் துரை அவர்கள் இருந்தார். அண்ணாசாலையில் எந்தப் போராட்டமும் நடக்கவும் கூடாது துவங்கவும் கூடாது  என்று முதலில் தடை விதித்த கமிஷனர் அவர்தான். ஒரு பள்ளிக்கூட பிரச்சினைகள் தொடர்பாக அவருடைய அறையில் உள்ளே புகுந்து உங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து தான நாங்கள் போராடுகிறோம் என்று அவர் பேசியதும் நடந்து கொண்டதும் மாற்ற அதிகாரிகளை எல்லாம் கலங்க செய்தது. அன்றைய தினம் ஐஎஸ் உதவி ஆணையராக இருந்தவர் என்னிடமும், அகத்தியலிங்கமிடமும் தொடர்பு கொண்டு கமிஷனரிடமே இப்படி பேசுகிறார் கொஞ்சம் சொல்லி வையுங்கள் என்று தெரிவித்தார்கள். கமிஷனர் அவர் எடுத்த பிரச்சனையை நியாயம் என்று உணர்ந்து கொண்டார். 


இது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் சாதாரண மக்களிடம் இரண்டற கலந்து வாழும் கொள்கையை கடைப்பிடித்தார்.

உண்டியல் வசூல் செய்வதில் அன்றைக்கு இருந்த இளைஞர்களிடம் காணப்பட்ட தயக்கத்தை உடைத்து சகஜமான முறையில் வசூலிப்பதற்கான பயிற்சியை கொடுத்தவர். கொசப்பேட்டை சரவணன் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு கையை முறித்த பொழுது காவல்துறையின் மீது வழக்கு போடுவதிலும் போராட்டங்கள் நடத்துவதிலும் காவல்துறை கடைசியில் மன்னிப்பு கேட்டாலும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று  என்று வழக்கை தொடர்ந்து நடத்தியதில் பங்கு கொண்டார். 


போராட்டங்கள் அதிகமாக நடந்த காலத்தில் அவர் இணைந்தார். பெரிய மேட்டுப்பகுதியில் செயல்பட்ட தோழர்கள் மனோகரன் ராமமூர்த்தி சரளா ராஜாமணி ராஜன் வில்சன் விஜயன் நெல்சன் குமார் விஜயகுமார் போன்றவர்கள் முயற்சியால் சூலை, அவதான பாப்பையா ரோடு, கே.பி பார்க், நரசிங்கபுரம் போன்ற இடங்களில் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. மறுபுறத்தில் நம்மாழ்வார் பேட்டையில்  போக்குவரத்து ஓட்டுநர் ரவனையா, சின்னையா, போக்குவரத்து ஓட்டுநர் சங்கர், சம்பத், நாகராஜன், மோகன் குமார், இளங்கோ, தோழர் தேவி, குமரன், மதிவாணன் போன்ற தோழர்களின் செயல்பாட்டால்  நம் ஆழ்வார் பேட்டை போராட்ட களமாக இருந்தது. இந்த இரண்டு பகுதிக்கும் இடையில் உருவான நியூ பார ன்ஸ் ரோடு, ஸ்டார்ன்ஸ ரோடு பகுதிகளில் எழுச்சி கண்டது ஹரியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 


இந்தப் பணியின் தொடர்ச்சியாக சாலை மாநகர் திடீர் நகர் பகுதிகளிலும் இயக்கங்கள் உருவாகி புகழேந்தி கிருஷ்ணமூர்த்தி போன்ற தோழர்கள் இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டார்கள். ஓட்டேரி பகுதியில் கொசப்பேட்டையிலும் அப்பளத் தொழிலாளர்கள் பிரச்சனைகளிலும்  தோழர் அரி தலையிட்டு உதவினார்


தோழர் ஹரியின் தயக்கமற்ற கள செயல்பாடு அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட காலத்திலும், தொடர் சிகிச்சையில் இருந்த போதும், சாத்தியமான செயல்பாடுகளை செய்து கொண்டே இருந்தார். எழும்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாதாரண மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய உள்ளூர் தலைவராகவே பரிணமித்தார்.


அவருக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டு இருக்கலாம் என்று ஆதங்கம் இருந்தாலும், பழைய தோழர்களால் தகவல் கிடைத்த, அவருடன் பணியாற்றிய பழைய தோழர்கள் கலந்து கொண்டது சற்று ஆறுதலாக தான் உள்ளது.

களப்பணியின் வழிகாட்டியாக செயல்பட்ட தோழர் ஹரிகரன் அவர்களுக்கு  வீரவணக்கம்.

பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

  மத நம்பிக்கை ச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வ...