Pages

வியாழன், ஜூன் 11, 2026

76 கல்வியும்-தொழில்கல்வியும் பயங்கரவாதத்தை வீழ்த்திய பேராயுதம்

 


அ. பாக்கியம்

வறுமை வேலையின்மை மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலான கல்வி ஆகியவையே வன்முறை தீவிரவாதத்திற்கான பின்னணி காரணங்களாகும். அத்துடன் மத நம்பிக்கைகள் இன வேறுபாடுகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்களின் வன்முறை தீவிரவாத குழுக்களின் சிதைவு இவற்றுடன் இணைந்த சுரண்டல் ஆகியவைகளும் காரணங்களாகும்.(வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான முக்கிய நாடுகளின் திட்டத்திலிருந்து)

தீவிரவாதத்தின் செயல் வடிவமாக இருக்கக்கூடிய பயங்கரவாதம் மனித குலத்தின் பொதுவான எதிரிகள். இவை இரண்டையும் எதிர்த்து சர்வதேச சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்டி மக்கள் வாழ்விற்கான சூழலை உறுதி செய்வது ஒரு அரசின் கடமையாகும். 1990 முதல் உலகளாவிய தீவிரவாதமும், பயங்கரவாதமும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, துருக்கி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பல பிராந்தியங்களிலும் பெரும் உயிரிழப்பு களையும் உடமை சேதாரங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை உலகம் அறியும்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்ட நீண்ட வரலாற்றை உடையது. 20ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் அதாவது 1940 ஆம் ஆண்டுகளில் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் பான்-துருக்கியம், பான் இஸ்லாமியம் என்ற பெயரில் பரவ ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாகாணத்தை பிரித்து கிழக்கு துருக்கிஸ்தான் என்ற தேவ ராஜ்ஜிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் முயன்றார்கள். சீனாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் இத்தகைய சக்திகள் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை முன்வைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் இறங்கினார்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக புரட்சி நடைபெற்று சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகு தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்களை வென்றெடுத்தார்கள்.

1990 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு தேசிய இன பிரச்சனைகள் சோவியத் ஒன்றியத்தில் தலை தூக்கியது. இதனால் பல தனித்தனி நாடுகள் உருவாகியது. கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் சிதைவுகளுக்கு உள்ளாகி பல நாடுகளாக மாறியது. இந்த மாற்றங்களில் அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வலுவான தலையீடுகள் இருந்தது. இதே காலத்தில் சீனாவில் ஏற்பட்ட தியானன்மென் சதுக்கம் போராட்டங்களும், அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பு போன்ற சங்கிலிதொடர் நிகழ்வுகள் பிரிவினை சக்திகளை ஊக்குவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கிழக்கு துர்கிஸ்தான் என்ற பிரிவினை கோஷங்கள் உயிர்பெற்றது.

1990 முதல் 2016 ஆம் ஆண்டுகளின் இறுதிவரை ஜின்ஜியாங் மாகாணத்தில் பிரிவினைவாதிகளும், மதத்தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் குண்டு வெடிப்புகளையும், படுகொலைகளையும், தீ வைப்புகள், தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவற்றை விரிவான முறையில் செய்வதற்கான சதிகளில் இறங்கினார்கள். இவர்களின் இந்த நடவடிக்கைகளால் பல அப்பாவி மக்களும் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளும் மரணம் அடைந்தனர். மேலே குறிப்பிட்ட 20 ஆண்டு காலங்களில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத செயல்கள் அடிக்கடி நடைபெற்று கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. சீனாவின் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய சவாலாக மாறியது.

வளர்ச்சியின்மையை பயன்படுத்துவது

தீவிரவாதிகள் பலவீனமா கண்ணிகளை தங்களது செயலுக்க சாதகமாக பயன்படுத்தினர். அதிக மதநம்பிக்கை உள்ள மக்கள், இதர சமுகங்களுடன் அதிக தொடர்பில்லாத மக்களை குறிவைத்தனர். அது மட்டுமல்ல விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் போதுமான அளவுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலைமைகளையும், குறைவான நவீன அறிவியல் அறிவு இருக்கின்ற பகுதியிலும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மக்கள் தொகை குவியலாக இருக்கக்கூடிய இடங்களிலும் இந்த தீவிரவாத செயல்களை முன்னெடுத்தனர்.

     மத கோட்பாடுகளையும் அதன் நியதிகளையும் வேண்டுமென்றே சிதைத்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். மதச்சார்பற்ற கருத்துக்களையும், அதன் சாதனைகளையும் மறுத்து சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு புனிதப் போரில் ஈடுபட்டு தங்களின் மத நம்பிக்கைகளுக்காக இறக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். மதத்தின் நியதிகளை கடைபிடிக்கக்கூடிய உயர்ந்த மத தலைவர்களை இந்த தீவிரவாதிகள் ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல துன்புறுத்தி படுகொலை செய்தார்கள். சீனாவையும், சீன மொழியையும் நவீன அறிவியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தூங்கிவிட்டது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தை மீற வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்கள். ஒவ்வொருவரின் தலைவிதி முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன்படிதான் அனைத்தும் நடக்கும் என்று முலைச்சலவை செய்தனர்.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் உருவாவதற்கு அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார காரணிகள் அடிப்படையாக அமைகின்றது உலகளாவிய பல நாடுகளில் அல்லது பிராந்தியங்களில் இது போன்ற தீவிரவாத செயல்கள் தலைதூக்குகின்றன. ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்தை தடுப்பதற்கு அவர்கள் ஏற்றுக் கொண்டபாநடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்த நடவடிக்கை அந்தந்த நாட்டின் வரலாற்று அம்சங்களையும் கலாச்சார மரபுகளையும் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமைகளையும் கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றை சார்ந்தும் அமைந்திருக்கிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாக பயங்கரவாதத்தையும் ஊற்றிக் கொள்வதற்கு சீன சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை கடைபிடித்தார்கள்..

சட்டம் சார்ந்த கல்வியும் பயிற்சியும்

சீனாவில் சட்டத்தின் ஆட்சி என்ற உணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது முதல் தேவியாக இருந்தது. எனவே சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்புச் சட்டம் குற்றவியல் சட்டம் அறிவியல் நடைமுறைச் சட்டம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் மத விவகாரங்களுக்கான மாகாணத்தின் உள்ளூர் விதிமுறை சட்டங்கள் ஆகியவற்றை பற்றி விரிவான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. கல்விச்சாலைகள் இந்த கருத்துக்களின் வாகனமாக அமைந்தது.

     

இதன் அடிப்படையில் சட்ட விரோத செயல்களையும் குற்றச் செயல்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். குற்றச் செயல்கள் பொது பாதுகாப்பு என்ற அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு குற்றம் நடைபெறுவதற்கான சூழல்கள் என்ன என்பதையும் இச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்ட பொழுது அவர்கள் மீதான வழக்குகள் தொடுவதில்லை என்று கைவிடப்படும் முறை கடைபிடிக்கப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு கட்டாயமாகவோ அல்லது தூண்டுதல் பேரில்லையோ தங்களை அறியாமல் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தனியான பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சட்டத்தின் ஆட்சி பற்றியும் சமூக வளர்ச்சி பற்றியும் போதிக்கப்பட்டது. மூன்றாவதாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை பெற்றவர்களுக்கான பிரத்தியேகமான திட்டங்களை உருவாக்கி அவர்களை பொது சமூகத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டது.

மேற்கண்ட 3 பகுதி இளைஞர்களையும் இணைப்பதற்கு அவர்களுக்கு கல்வி அளிப்பது தொழிற்கல்வி அளித்து வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கக் கூடிய பணிகளை செய்தார்கள். இந்தக் கல்வியும் தொழிற்கல்வியும் அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் உள்ளடக்கம் பாதையை மாற்றியது.

மதத் தீவிரவாதத்தையும் அடிக்கடி நிகழும் பயங்கரவாத சம்பவங்களின் வரவழை கட்டுப்படுத்துவதற்கும் இந்த மாகாணத்தில் தொழிற்கல்விக்கான அதை உருவாக்கியது மட்டுமல்ல பயிற்சி மையங்களையும் உருவாக்கினார்கள். கல்வி அறிவை வளர்ப்பது தொழில் திறன்களை இந்த இளைஞர்களிடம் உருவாக்குவது தீவிரவாத கொள்கைகளில் இருந்து அரசியல் ரீதியாக வென்றெடுப்பதற்கான பாடத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

பயிற்சி பெறக்கூடியவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் வழங்குகிறார்கள் இவர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பாட புத்தகங்களை பயன்படுத்தி அதற்கான ஆசிரியர்கள் பணி அமர்த்த படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பையும் பெறுவதற்கான தொழில்கல்வித் திறனை வளர்க்க முடிகிறது. தரமான சீன மொழியை பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயிற்சி கொடுப்பது மூலமாக சீன நாடு முழுவதும் செல்வதற்கும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் தொழில் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் பிற இன குழுக்கள் உடன் தங்குதடையின்றி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த பயிற்சி மையங்கள் அடிப்படை காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் இனச் சிறுபான்மை இளைஞர்களின் மொழிகளை பயன்படுத்துவதற்கும் படிப்பதற்குமான உரிமைகளும் வழங்கப் பட்டன. அதற்கான எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் உரிமைகள் இருந்தது. கல்வி மற்றும் பயிற்சி என்பது ஒரு நபரின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தவோ இருக்கக்கூடிய ஒரு நடவடிக்கை அல்ல அதற்கு மாறாக பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாத கருத்துக்களில் இருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக மட்டுமே இந்த பள்ளிகளும் கல்வி நிலையங்களும் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டது. இந்த மையங்களில் இணைவதற்கான ஒரே அளவுகோல் பயிற்சி பெற வரக்கூடியவர் பயங்கரவாத செயல்களிலோ தீவிரவாதம் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்களிலோ ஈடுபட்டாரா என்பது மட்டும்தான் அளவுகோலாக இருந்தது. இந்த பயிற்சி மையங்களில் அவர்களின் பிராந்தியம் இனம் அல்லது மதத்துடன் எந்த விதமான தலையிடும் செய்யாமல் செயல்படுத்தப்பட்டது

அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும், அவர்களின் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளைப் பயன்படுத்தும் உரிமையும் மையங்களில் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன. மையங்களில் உள்ள விதிமுறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் மெனுக்கள் அனைத்தும் உள்ளூர் இன மொழிகளையும் நிலையான சீன மொழியையும் பயன்படுத்துகின்றன. அனைத்து இனக்குழுக்களின் பழக்கவழக்கங்களும் முழுமையாக மதிக்கப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன, மேலும் பல்வேறு வகையான சத்தான உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவர்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அதே நேரத்தில் மத விவகாரங்கள் தொடர்பான விதிமுறைகளும் கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. மதப் பிரச்சாரம் மத நடவடிக்கைகள் மத அமைப்புகளை நிறுவுதல் போன்றவற்றை பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முழுமையாக தடை செய்யப்படுகிறது. அதாவது கல்வி மற்றும் மதத்தை பிரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். பயிற்சி பெறக்கூடியவர்கள் பயிற்சி நிலையங்களில் மத நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவோ அதாவது நடத்துவதற்கோ பங்கேற்பதற்கோ அனுமதி இல்லை அவர்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட இடங்களிலோ மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

அனைத்து பயிற்சி பெறுபவர்களும் பொது ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் இலவச சுகாதார பரிசோதனைக்கு உரிமை உண்டு. குடும்பக் கவலைகளிலிருந்து அவர்களை விடுவிக்க, ஜின்ஜியாங்கின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள், சமூகப் பாதுகாப்பு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னுரிமை கொள்கைகளின் அடிப்படையில் பயிற்சி பெறுபவர்களின் குடும்பங்களை சமமாக நடத்துகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் வேலை, அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறார்கள்,

கல்வியும் பயிற்சியும் பலனை கொடுத்தது

பயங்கரவாதமும் மத தீவிரவாதமும் சட்ட விரோத நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியும் பயிற்சியும் அதற்குரிய பலனை கொடுத்துள்ளனர். சட்டத்தின் ஆட்சி பற்றிய மக்களின் புரிதல் பல மட்டம் உயர்ந்துள்ளது குடிமக்கள் அரசியல் அமைப்பிற்கும் பிற சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான அங்கீகாரத்தை நோக்கி முன்னேறி உள்ளார்கள். தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்களது கல்வி அறிவையும் சீன மொழி பேசும் திறனையும் தொழில் திறனையும் அதிகமாக பெற்றிருப்பது நாள் மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மத தீவிரவாதம் மதத்தை சிதைவு படுத்தக்கூடியவர்களின் செயல் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் மத தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சமூக சூழலில் சீன மக்கள் குடியரசு எடுத்த முயற்சிகள் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கல்வியும் பயிற்சியும் மனநிலையை மாற்றியது மட்டுமல்ல இனக்குழுக்கள் இடையே பரஸ்பரம் மரியாதையை உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில் உணவு உடை வீட்டு வசதி போக்குவரத்து திருமணங்கள் இறுதிச் சடங்குகள் மற்ற பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நவீன சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது தகவமைப்பு திறன்களை மக்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியும் பயிற்சியும் பெற்றவர்கள் காலாவதியான மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் கைவிட்டு உள்ளனர். நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை நோக்கியும் பண்பட்ட வாழ்வை நோக்கியும் விரும்பிச் செல்லுகின்றனர். சீன மக்கள் குடியரசின் இந்த முயற்சிகள் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத்தையும் மத தீவிரவாதத்தையும் குறைத்து உள்ளது மட்டுமல்ல இக்காலத்தில் எதுவும் நடைபெறவும் இல்லை.

சமூகச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் அமைதியான அதே நேரத்தில் இயல்பான நிலைமைகள் திரும்பிய பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா தொழில் பிரமாண்டமான வளர்ச்சியை கண்டுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சீனாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 150 மில்லியனுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு 40 சதவீதம் உயர்வாகும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டும் 2.6 மில்லியன் பேர் அதாவது 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சமூகம் ஜின்ஜியாங்கின் முயற்சிகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் பயிற்சி சர்வதேச சமூகத்தின் பொதுவான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. டிசம்பர் 2018 இறுதியிலிருந்து, கிட்டத்தட்ட 1,000 பேர் ஜின்ஜியாங்கிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் சீனாவிற்கான வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள், ஐ.நா. அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் ஜெனீவாவை தளமாகக் கொண்ட மூத்த இராஜதந்திரிகள், அத்துடன் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், செய்தி ஊடகங்கள் மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குழுக்கள் (அல்லது பிரதிநிதிகள்) உள்ளனர். களப்பயணங்கள் மூலம், பலர் உண்மையை உணர்ந்து, கல்வி மற்றும் பயிற்சியை மேற்கொள்வதன் அவசரம், அவசியம், சட்டபூர்வமான தன்மை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றைப் புரிந்துகொண்டுள்ளனர்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அனுபவம்

சில நாடுகள் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மையங்களை நிறுவி கல்வி கற்கும் போதனைகளை செய்கிறார்கள். சில நாடுகள் கல்வி மற்றும் மன மாற்ற மையங்களை அமைத்துள்ளார்கள். மேலும் சில நாடுகள் சிறைச்சாலைகள் சமூக நலக்கூடங்கள் இரண்டிலும் பயங்கரவாதிகளை வயிற்றுவித்து மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சில நாடுகள் தீவிரவாதிகள் இஸ்லாமிய கோட்பாட்டை தவறாக சித்தரிப்பதை கண்டிக்கிறார்கள் ஆனால் மதத்தின் உள்ளடக்கத்தை ஊக்குவித்து மிதமான இஸ்லாத்தை ஆதரிக்கின்றார்கள். வேறு சில நாடுகள் அவர்களை தனிமைப்படுத்தி பயிற்சியில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

ஆனால் சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாதத் தாலும் மத தீவிர போதனைகளாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழிற்கல்வியும் பயிற்சி மையங்களையும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதன் மூலம் மற்ற நாடுகளின் முயற்சியில் இருந்து வேறுபட்டு இருக்கிறார்கள். தீவிரவாதம் உருவாகக்கூடிய மூலத்தை கண்டுபிடித்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சி தான் இது இந்த குறிக்கோள்கள் வெற்றி கண்டுள்ளது. சின்ஜியாங்கின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடைந்துள்ளன, மேலும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு அனுபவத்தை பங்களித்துள்ளன. சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தல். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு சோசலிச நாட்டைக் கட்டியெழுப்ப சீன பண்புகளுடன் கூடிய சோசலிசத்தை வளர்ப்பது அவசியமான தேவையாகும்

அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உறுதியான முடிவுகளை அடைய வேண்டும். மக்களின் உயிர்கள், சுகாதாரம், சொத்துக்கள் மற்றும் பிற அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான, நிலையான மற்றும் இணக்கமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். ஜின்ஜியாங்கில் உள்ள அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசாங்கங்கள், மக்களுக்கு தங்கள் பொறுப்பை மனதில் கொண்டு, பயங்கரவாத மற்றும் மத தீவிரவாத போதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் பொறுமையான, கவனமான மற்றும் மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் வெற்றி பெறுவது நீதியை ஊக்குவிக்கிறது, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது மற்றும் அரசாங்கத்தின் நேர்மறையான பிம்பத்தை அளிக்கிறது.

 

ஜின்ஜியாங்கில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதம் இனப்பெருக்கம் செய்து பரவ உதவும் நிலைமைகளை திறம்பட ஒழிக்க முடியும் என்பதை நடைமுறை நிரூபித்துள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சியில் ஜின்ஜியாங்கின் முயற்சிகளின் குறிக்கோள் பயங்கரவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் மூலங்களை அகற்றுவதாகும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜின்ஜியாங் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளத. முன்னேற்றங்களைச் செய்ய முடியும்.

 

அ.பாக்கியம்

வெள்ளி, ஜூன் 05, 2026

75 சமூகத் திட்டங்களின் சீரான வளர்ச்சி-

 

அ.பாக்கியம்

இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய ஒரு மாகாணத்தில் பொருளாதார முன்னேற்றங்கள் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த ஒன்று மட்டுமல்ல அந்த மாகாணத்தின் இயற்கை வளங்களை சார்ந்தும் இருக்கிறது. பொதுவாக இயற்கை இடர்பாடுகள் நிறைந்த பகுதிகளில் இயற்கை வளங்களை பயன்படுத்துகிற அளவிற்கு வளர்ச்சித் திட்டங்களை பல நாடுகள் அமலாக்குவதில்லை. ஆனால் சீனா ஜின்ஜியாங் மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தியது மட்டுமல்ல சமூகத் திட்டங்களை சீரான முறையில் அமலாக்கி மக்களின் வாழ்க்கை தரத்தையே உயர்த்தி நிரந்தரத் தன்மையுடன் பாதுகாப்பானதாக மாற்றி உள்ளது.

குறிப்பாக கல்வி, அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப பயிற்சி, சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகள், வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், வேலையின்மை காலத்தில் காப்பீடு போன்ற பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இனச் சிறுபான்மை மக்களுக்கு இவற்றை எந்த பாகுபாடின்றி நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் 1949 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு கல்லூரியும், ஒன்பது மேல்நிலைப் பள்ளிகளும், 1355 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. கல்விச்சாலைக்கு செல்கின்ற வயதுடைய குழந்தைகளில் 19.8% மட்டுமே தொடக்கப்பள்ளியில் பயின்றனர். இந்த மாகாணத்தின் ஒட்டுமொத்தமான எழுத்தறிவின்மை 90 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தது.

1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பிறகுதான் இந்த மாகாணத்தில் கல்வியில் முன்னெப்பொழுதும் இல்லாத மாற்றங்கள் துரித கதியில் நடந்தேறியது. இந்த மாகாணத்தில் கல்வி அறிவின்மை போக்குவதற்காக ஒன்பது ஆண்டு கட்டாய கல்வியை அனைவருக்கும் வழங்கியதுடன் இளம் மற்றும் நடுத்தர வயதுடைய மக்களிடையே இருந்த எழுத்தறிவின்மையும் ஒழிக்கப்பட்டுள்ளது. வயது வந்தோருக்கான கல்வியும், தொழிற்கல்வியும் மிகப்பெரும் முன்னேற்றங்களை அடைந்தது. 2006 ஆம் ஆண்டு முதல் கிராமப்புற கல்விக்கான நிதி உதவிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் ஜின்ஜியாங் மாகாணத்தில் தொடக்க கல்வியும் மேல்நிலைப் கல்வியும் அனைவரும் இலவசமாக பெறுகின்றனர். 2007ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகம் இடைநிலை மற்றும் உயர் தொழில் மாணவர்களின் கல்விக்காக அரசு இந்த மாகாணத்தில் மட்டும் ஆண்டுதோறும் 129 மில்லியன் யுவான்களை ஒதுக்கீடு செய்தனர். இவ்வாறு ஒதுக்கிய நிதி அமைப்பிலிருந்து பயனடைந்தவர்களில் 70% இனச் சிறுபான்மை மாணவர்கள் ஆவார்கள். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளின் சேர்க்கை விகிதம் இந்த மாகாணத்தில் 99.6 சதவீதமாக இருந்தது.

இனச் சிறுபான்மை மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்பதில் சீன மக்கள் குடியரசு உறுதியாக இருந்ததினால் 9 வருட கட்டாய கல்வியின் அமுலாக்க விகிதம் இந்த மாகாணத்தில் 99 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். சில குறிப்பிட்ட பகுதிகளில் தேவையை கருதி அதாவது அக்சு, கஷ்கர் அவர்களில் மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 15 ஆண்டுகளும் இலவச கல்வி முழுமையாக வழங்கப்படுகிறது.

உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2012ல் 39 இருந்தது. 2024 ல் 63 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து பிராந்தியங்களிலும் இளங்கலை பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் தொழில் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 5. 75 லட்சமாக இருந்தது இது 2012 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகிற பொழுது 60% உயர்வாகும்.

இரு மொழிக் கொள்கை உறவின் பாலமாகியது.

ஜின்சியாங் உள்ள 10 மில்லியன் இனச் சிறுபான்மையினரின் 70% பேர் எழுத்து வடிவத்தில் உள்ள ஹான் சீன மொழியை புரிந்து கொள்வதில் சிரமப்பட்டனர் இதனால் சிறுபான்மை மக்களுக்கும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு சீன மக்கள் குடியரசு தன்னாட்சி பிராந்திய அரசாங்கம் 2004இல் சிறுபான்மை மாணவர்களிடையே இரு மொழி கல்வியை ஊக்குவிக்க முடிவு செய்தது. இவற்றை அமலாக்குவதற்கு ஆசிரியர்கள் தங்களின் தாய் மொழியிலும் ஹான் சீன மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பை வைத்தனர். இன்று இரு மொழி கல்வி முயற்சிகள் வெவ்வேறு இனக் குழுக்கள் இடையே சிறந்த புரிதல் மற்றும் தகவல் தொடர்பு, சமத்துவம், ஒற்றுமை, பரஸ்பரஉதவி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட உறவுகளை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மக்களின் வளர்ச்சிக்கும் சாதகமான நிலைமையாக மாற்றி உள்ளது. இனச் சிறுபான்மை மக்கள் தங்கு தடையின்றி அனைத்து மக்களுடனும் கருத்து பரிமாற்றங்களையும் வர்த்தகத்தையும் செய்வதற்கு அதன் மூலம் செழிப்பை ஏற்படுத்துவதற்கும் இது ஒரு கருவியாக அமைந்துள்ளது.

எல்லைப் பகுதிகளில் உள்ள சிறுபான்மை மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை வழங்குவதற்காக, 2000 ஆம் ஆண்டு முதல், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உட்பட, நன்கு வளர்ச்சியடைந்த 12 மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 13 உயர்நிலைப் பள்ளிகளில் சின்ஜியாங் மாணவர்களுக்காக அரசு சிறப்பு வகுப்புகளைத் திறந்தது. 2008 ஆம் ஆண்டுக்குள், 12 மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 28 நகரங்களில் மொத்தம் 5,000 மாணவர்களுக்காக 50 சிறப்பு வகுப்புகள் இருந்தன, இது ஆரம்ப மாணவர் சேர்க்கையை ஐந்து மடங்காக உயர்த்தியது. இவர்கள் பெரும்பாலும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்புப் பகுதிகள், குறிப்பாக வறுமைப் பிடித்த அல்லது எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த தொடக்கப் பள்ளிப் பட்டதாரிகளாவர். இவர்களில் 80%க்கும் அதிகமானோர் சிறுபான்மை விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆவர்.

அறிவியல் வளர்ச்சியின் அடிப்படைகள்

1949 இல் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்ட பின்னர் தான் ஜிஞ்சியங் மாகாணத்தில் அறிவியல் முயற்சிகள் துவக்கப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளில் நன்கு கட்டமைக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் மட்டும் 19,72,000 தொழில் வல்லுநர்கள் பணி புரிந்தார்கள். இந்த மாகாணத்தில் மட்டும் 2008 ஆம் ஆண்டு 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட முக்கிய அறிவியல் சாதனைகளை படைத்து 200க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றது மட்டுமல்ல ஒரே மாகாணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இனச் சிறுபான்மை மக்களின் அபாரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. இது உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது.

எல்லையோர இன சிறுபான்மை மக்களின் கலாச்சாரங்களை பாதுகாப்பது மட்டுமல்ல அதை பலப்படுத்துவதும் சோசலிச அரசின் புறக்கணிக்க முடியாத கடமையாகும். தொழில் முறை கலைக் குழுக்களோ கலைகளுக்கான கல்வி சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களோ புரட்சிக்கு முன் இந்த மாகாணத்தில் இருந்தது இல்லை. சீன மக்கள் குடியரசு விரிவான முறையில் கலாச்சார, கலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. வளமான வண்ணமயமான கலாச்சார செயல்பாடுகள் இங்கு வளத்தெடுக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின் படி இந்த மாகாணத்தில் 119 கலை மற்றும் நிகழ்த்து கலை குழுக்கள், இரண்டுக்கும் மேற்பட்ட இலக்கிய மற்றும் கலை ஆராய்ச்சியின் பெரும் நிறுவனங்கள், இரண்டு கலைப்படைப்பு மையங்கள், 15க்கு மேற்பட்ட வெகுஜன கலைக்கூடங்கள், 94க்கு மேற்பட்ட கலாச்சார மையங்கள், 1134 கிராமம் மற்றும் நகர கலாச்சார நிலையங்கள் செயல்பட்டன. சாதாரண கலைஞர்கள் தவிர 4355 நிபுணத்துவம் பெற்ற நிகழ்த்து கலை வல்லுனர்கள் உருவானார்கள்.

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது ஏற்படுத்துவதற்கு இது மட்டும் போதாது. இந்த மாகாணத்தில் 93 க்கு மேற்பட்ட பெரிய பொது நூலகங்களும், 47 க்கு மேற்பட்ட மிகப்பெரிய அருங்காட்சியங்களும், தன்னாட்சி பிராந்திய அளவில் ஆறுக்கு மேற்பட்ட வானொலி நிலையங்களும், எட்டுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. இவை தவிர கிராமங்கள் தோறும் வானொலி மற்றும் தொலைக்காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு தரவுகளின்படி மாகாணத்தில் உள்ள மக்களில் 93.5% பேர் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகளை பெற்றுள்ளனர். இதே அளவிற்கான வகையில் கேபிள் டிவி சேவைகளும், டிஜிட்டல் கேபிள் டிவி சேவைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு பிராந்திய வளர்ச்சி என்ற ஒரு உத்தியை சீன மக்கள் குடியரசு அமலாக்கிய பொழுது கலாச்சார வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டும் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. மக்கள் பொருளாதார பிராணிகள் மட்டும் அல்ல அவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கான கலாச்சார அம்சங்களுக்கும் அதைவிட அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து மாகாணத்தில் செயல்படுத்தி உள்ளது மிகச்சிறந்த முன்னுதாரண மாகும்

சமூக வளர்ச்சி திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் ஆகும். 1949க்கு முன்பு இந்தப் பகுதியில் அடிக்கடி பரவலான நோய்கள் ஏற்பட்டன. ஒட்டு மொத்த இறப்பு விகிதம் 1000 பேருக்கு 20.82 என்ற அளவில் இருந்தது. சிசு மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 420 முதல் 600 வரை அதிர்ச்சியூட்டும் அளவிலிருந்து. சராசரி ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நெடுங்காலம் இருந்துள்ளது. 1949க்கு முன்பு ஜின்ஜியாங் மாகாணத்தில் சில நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 54 மருத்துவ மையங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் 696 படுக்குகள் இருந்துள்ளது. ஒவ்வொரு பத்தாயிரம் நபர்களுக்கும் 1.6 படுகைகளையும், 0,19 மருத்துவர் களையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. 2008 ஆம் ஆண்டு தரவுகளின்படி ஜின்ஜியாங்கில் மொத்தம் 7238 மருத்துவ சேவை மையங்களும், 1629 மருத்துவமனைகளும், சுமார் 93,600 படுக்கைகளும் 43,800 மருத்துவர்கள் இருந்தார்கள். அதாவது ஒவ்வொரு 10,000 மக்களுக்கும் 36 மருத்துவமனை படுக்கைகளும், 21 மருத்துவர்களும் இருந்தனர். உள்ளூர் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு திறன்கள் பெரிது மேம்பட்டு உள்ளது. பெரியம்மை போன்ற சில உள்ளூர் நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

1970 ஆம் ஆண்டுகளில் நடுப்பகுதிகளில் இருந்து ஜின்ஜியாங் மாகாணம் ஒரு திட்டமிடப்பட்ட நோய் தடுப்புத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக தடுப்பூசி விகிதம் சீராக அதிகரித்து வருவது மட்டுமல்ல சுகாதார சேவைகளின் மேம்பாடும் மக்களின் சுகாதார நிலைமைகளையும் வாழ்க்கை தரத்தையும் மிகப்பெரும் அளவு மேம்படுத்தி உள்ளது. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு 1,000 நபர்களுக்கும் பொது இறப்பு விகிதம் 4.88 ஆகவும், 1,000 பிறப்புகளுக்கு சிசு இறப்பு விகிதம் 29.76 ஆகவும் இருந்தது. மக்கள்தொகையின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகளை எட்டியுள்ளது. விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிகளில் சுகாதார சேவைகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளன. மேலும் மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் மும்முனை நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வலையமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், சின்ஜியாங்கில் வேலைவாய்ப்பை விரிவுபடுத்துவதற்கு தொழிலாளர் சேவைகளை ஏற்றுமதி செய்வது ஒரு புதிய வழியாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, தெற்கு சின்ஜியாங்கின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பெரும்பாலும் லாபமற்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பையே நம்பியிருந்தனர். 2006 ஆம் ஆண்டு முதல், சின்ஜியாங் அரசாங்கம் முதலில் தெற்கு சின்ஜியாங்கின் ஜியாஷி மாவட்டத்திலும், பின்னர் முழு தன்னாட்சிப் பகுதியிலும் ஒரு தொழிலாளர் ஏற்றுமதித் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம், உள்ளூர் கிராமப்புற மக்கள் பதிவுசெய்து, தங்களுக்குத் தேவையான தகுதிகளை வழங்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட பிறகு, உள்நாட்டு நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதன் முலம் பயன்பெற்றனர்.

ஓய்வூதியக் காப்பீடு, வேலையின்மைக் காப்பீடு

1978ஆம் ஆண்டின் இறுதியில் சீர்திருத்தம் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார உத்தரவாதங்களை வழங்கும் வகையில் ஜின்ஜியாங்கின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வடிவம் பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஜின்ஜியாங்கில் நகர்ப்புறங்களில் 799 சமூக சேவை மையங்கள் உள்ளன. அடிப்படை ஓய்வூதியக் காப்பீடு, வேலையின்மைக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, தொழில் காயக் காப்பீடு மற்றும் மகப்பேறுக் காப்பீடு ஆகிய ஐந்து முக்கிய காப்பீட்டுத் திட்டங்களில் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு முதல், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தைத் தாங்கும் வீட்டு வசதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்குவதற்கான ஒரு ஆறாண்டுத் திட்டமாகும். 2008 ஆம் ஆண்டின் இறுதிக்குள், அரசு இந்தத் திட்டங்களில் 41.2 பில்லியன் யுவானை முதலீடு செய்து. 1,895,000 வீடுகளைக் கட்டி வலுப்படுத்தியது. அதன் பின்னர், தெற்கு சின்ஜியாங்கில் 742,300 ஏழ்மையான விவசாயக் குடும்பங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வீடுகளில் குடியேறியுள்ளனர்

எனவே பொருளாதார வளர்ச்சி அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் சமூக நலத்திட்டங்கள் விரிவான முறையில் ஆழமான முறையிலும் அமலாக்கப்பட வேண்டும். இவற்றை ஜின்ஜியாங் மாகாணத்தில் அந்த அரசு செய்து முடித்ததன் விளைவாக ஒட்டுமொத்த சீனத்தின் வளர்ச்சியும் வலிமையும் அதிகமாகி உள்ளது.

அ.பாக்கியம்

வியாழன், மே 28, 2026

74 மேற்கு வளர்ச்சி இயக்கம்

 

அ.பாக்கியம்

சீனாவின் இனச் சிறுபான்மையினர் வாழக்கூடிய மேற்குப் பகுதிகளில் துரித வளர்ச்சிகளை மேற்கொள்வதற்காக மேற்கு வளர்ச்சி இயக்கம் என்ற ஒரு திட்டத்தை 2000 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு ஆரம்பித்தது. 1978 ஆம் ஆண்டு சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தமும், திறப்பு கொள்கையும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏற்படுத்திய வளர்ச்சியை மேலும் விரைவுப்படுத்துவதற்காக இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் ஜின்ஜியாங் மாகாணம் மாற்றங்களின் மகுடங்களை தரித்துக்கொண்டது. வறுமை ஒழிப்பு, கல்வியின் வளர்ப்பு, வாழ்க்கைத் தர உயர்வு, கலாச்சார பண்பாட்டின் பரவலும் ஒருங்கிணைந்து ஒரு புதிய எழுச்சியை உருவாக்கியது என்றால் மிகையாகாது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு மிகவும் அத்தியாவசியமானது, அதிலும் குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும், பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகளிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவது சம்பந்தப்பட்ட அரசிற்கு மிகப்பெரிய சவாலான விஷயமாகும். ஜின்ஜியாங்கில் இந்த சவால்களை சந்தித்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், வளர்ச்சியை ஏற்படுத்துதற்கும் சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்ட உற்பத்தி மற்றும் கட்டுமான படை முக்கிய பங்காற்றியது.

1949 முதல் 1978 வரையிலான வளர்ச்சியை இதற்கு முந்தைய பாகத்தில் விளக்கி இருக்கிறேன். தற்போது அதற்குப் பிறகு ஏற்பட்ட வளர்ச்சியின் அம்சங்கள் இங்கே பார்க்கலாம்.

திட்டமிட்ட வளர்ச்சி

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் சாலைகள் அமைக்க வேண்டும்” என்பது சீன பழமொழி. சவால் நிறைந்த இயற்கை அமைப்புகளில் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டும் எட்டு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதன. இது தேசத்தின் இதரப் பகுதியோடு எளிதில் வளர்ச்சியை இணைக்க முடிந்தது. மாகாணங்களுக்கு இடையே 66 நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல 600க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான சாலைகளை உருவாக்கி பொருள் போக்குவரத்திற்கும், உழைப்பு சக்தியின் நகர்வுகளுக்கும் அடித்தளத்தை உருவாக்கினார்கள். இக்காலத்தில் உருவாக்கப்பட்ட சாலைகளின் மொத்த நீளம் 1,47,000 ஆகும். 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த மாகாணத்தில் மட்டும் உயர்கை முதன்மை சாலைகள் என்று அழைக்க கூடிய அதிவேக விரைவுச் சாலைகள் 7,640 கிலோமீட்டர், கிராமப்புற சாலைகள் 1,74,400 கிலோமீட்டர் என்ற அளவில் உயர்ந்தது. பரந்த அளவிலான போக்குவரத்து வாகனங்கள் கிடைப்பதால், பயணம் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஆகியுள்ளது. 1980-களில் சீர்திருத்தம் மற்றும் திறந்த கொள்கையின் ஆரம்ப நாட்களில், உரும்கியிலிருந்து பெய்ஜிங்கிற்கு ரயிலில் பயணிக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. ஆனால் இப்போது விமானத்தில் மூன்று மணி நேரத்தில் பயணிக்க முடிகிறது. 10,000 நகர்ப்புறவாசிகளுக்கு தார் சாலையின் நீளம் 1978-ல் 1.6 கி.மீ., 2000-ல் 4.5 கி.மீ., மற்றும் 2008-ல் 15.7 கி.மீ. வரை உயர்ந்தது.

சமவெளி பிரதேசங்கள் குறைவாக இருக்கக்கூடிய பகுதிகளில் ரயில் பாதைகள் அமைப்பதன் கடினத்தை உணர முடியும். இருந்தும் வளர்ச்சியின் அவசியம் கருதி இந்த மாகாணத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் ரயில் பாதைகளின் மொத்த நீளம் 3000 கிலோமீட்டர். தற்போது 9,557 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 2.5 கோடி தான். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையிலும், தேவையான உள்பகுதியிலும் மாகாணத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு தரவுகளின் படி 7.78 கோடி மக்கள் தொகை இருந்த தமிழ்நாட்டில் மொத்த ரயில் பாதையின் நீளம் 4036 கிலோ மீட்டர் மட்டுமே. இந்தியாவில் ஜின்ஜியாங் மாகாணத்தை போன்ற புவிபரப்பு அமைந்துள்ள வடகிழக்கு மாநிலங்களில் செயல்படக்கூடிய வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே வாரியத்தின் தரவுகளின்படி 3633.85 கிலோமீட்டர் மட்டுமே இயங்குகிறது. வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் தொகை சுமார் 5 கோடி அளவில் உள்ளது. (வளர்ச்சியின் வேகத்தை சுட்டிக் காட்டுவதற்காகவே இந்த ஒப்பீடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. )

எல்லையோர பகுதிகளில் மேம்பாடு

பொதுவாக எல்லைப்புற மாகாணங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இயற்கை அமைப்புகள் கரடு,முரடாக இருப்பதினாலும், முதலீடுகளை செய்வதற்கு தயங்குவார்கள். சீனாவில் அரசின் முழு முன் முயற்சியால் மேற்கண்ட இரண்டு அம்சங்களும் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முதலீடுகளை செய்தார்கள். அங்கு இருக்கக்கூடிய இயற்கை வளங்களை பாதுகாப்பதும், நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் இதற்கு அடிப்படை காரணமாகும். எனவே அடிப்படை கட்டமைப்புகளில் சாலை வசதி, ரயில் போக்குவரத்தை கடந்து விமான போக்குவரத்துக் களையும் விரிவான முறையில் வளர்த்தெடுத்தார்கள். உரும்கியிலிருந்து தொடங்கி, ஜின்ஜியாங்கில் உள்ள சுமார் 70 சீன மற்றும் வெளிநாட்டு நகரங்களையும், 12 மாகாணங்களையும் இணைக்கும் 114 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களைக் கொண்ட ஒரு வலையமைப்பு உருவாகியுள்ளது. இதன் மொத்த விமான வழித்தடங்களின் நீளம் 160,000 கி.மீ.-க்கும் அதிகமாகும். தற்போது, ​​சீனாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஜின்ஜியாங் அதிக எண்ணிக்கையிலான விமான நிலையங்களையும் மிக நீண்ட விமான வழித்தடங்களையும் கொண்டுள்ளது.

10 பில்லியன் யுவானுக்கும் அதிகமான முதலீட்டில், 2008-ல் தாரிம் நதி மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்ததன் மூலம், அதன் கீழ் பகுதிகளில் சுமார் 300 கி.மீ தூரத்திற்கு 30 ஆண்டுகளாக வறண்டு போன நதியின் வரலாறு முடிவுக்கு வந்தது. வடக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு சீனாவில் பாதுகாப்பு மர வரிசைகளை உருவாக்குதல், சமவெளிப் பகுதிகளைப் பசுமையாக்குதல், விவசாய நிலங்களை மீண்டும் காடுகளாகவும், மேய்ச்சல் நிலங்களை மீண்டும் புல்வெளிகளாகவும் மாற்றுதல் போன்ற முயற்சிகளும் விவசாய நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன. தற்போது சுமார் 800,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு சொட்டு மற்றும் தெளிப்புப் பாசனம் கிடைக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஐந்து பில்லியன் கன மீட்டர் நீர் சேமிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில், வேளாண்மையின் கூடுதல் மதிப்பு 69.1 பில்லியன் யுவானை எட்டியது. இது 2000-ஆம் ஆண்டை விட 1.4 மடங்கு அதிகமாகும்; மேலும், தானியங்களின் மொத்த உற்பத்தி 10.2285 மில்லியன் டன்களாக இருந்தது, இது உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்த பிறகு ஒரு சிறிய உபரியை விட்டுச் சென்றது. சீனாவின் முக்கிய வர்த்தகப் பருத்தித் தளங்களில் ஒன்றாக, ஜின்ஜியாங் 2008-ஆம் ஆண்டில் 3.0155 மில்லியன் டன் பருத்தியை உற்பத்தி செய்தது. மொத்த உற்பத்தி, அலகு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவில் முதலிடம் பிடித்தது

விவசாய உற்பத்தி கால்நடை வளர்ப்பு மேம்பாடு

கால்நடை வளர்ப்பு விவசாயத் துறையில் மிக முக்கிய பங்கு வைக்கிறது. உள்ளூர் விவசாய உற்பத்தியில் கால்நடை வளர்ப்பு 27 சதவீதமாக உள்ளது, 2008 ஆம் ஆண்டில் இறைச்சி உற்பத்தி 10 லட்சம் டன்களாக இருந்தது. 2000ம் ஆண்டு விட 95 சதவீதம் அதிகமாகும். பழங்கள் உற்பத்தி செய்வதிலும் இயற்கை பாதுகாப்பதிலும் இணைத்து பயன்படுத்துகின்றனர். 2008இல் பழம் உற்பத்தி செய்யும் மரங்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஹெக்டரை கடந்து இருந்தது. ஆறு பில்லியன் யுவான் அளவிற்கு பழங்கள் உற்பத்தியின் மதிப்பு ஏற்பட்டது.

விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாப்பதற்கான பதப்படுத்தப்படும் அமைப்புகள் மிகவும் அவசியம். உலகின் பல்வேறு நாடுகளில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பாதுகாப்பதற்கான உத்திரவாதமான ஏற்பாடுகள் இல்லை. இந்த மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டு 1059 பதப்படுத்தப்படும் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. சீனாவிலேயே மிகப்பெரிய தக்காளி பதப்படுத்தப்படும் நிறுவனம் இந்த மாகாணத்தில்தான் உள்ளது. இதே போன்று பால் பதப்படுத்தப்படும் நிறுவனங்களையும் உருவாக்கினார்கள். ஆண்டுக்கு 6 லட்சம் டன்கள் உற்பத்தியுடன் சீனாவின் மிகப்பெரிய பீட்சர்க்கரை (பீட்சர்க்கரை என்பது சர்க்கரைவள்ளிக் கிழங்கில் (Sugar beet) இருந்து பிரிக்கப்படும் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பு சர்க்கரையைப் போலவே சுவை, அமைப்பு மற்றும் செயல்பாட்டைக் கொண்டது ) உற்பத்தி தளமாகவும் இந்த மாகாணம் விளங்குகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தி துறைமுக வளர்ச்சி

ஜின்ஜியாங் மாகாணம் எண்ணெய்வளம் நிறைந்த ஒரு பகுதியாக காணப்படுகிறது. சீனா மேற்காசிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த மாகாணத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான வளர்ச்சி அதி வேகமாக ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தில் 27.22 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்தனர். 24 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்தனர். சீனாவிலேயே அதிக இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யக்கூடிய மாகாணமாக ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் எரிவாயு குழாய்களின் கட்டுமான பணிகள் மிகப்பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. 4000 கிலோ மீட்டருக்கு அதிகமான அளவில் குழாய்கள் வளையமைப்பை கொண்டிருக்கிறார்கள். இது இந்த பிராந்தியத்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வேலை வாய்ப்பு உருவாக்கு வதற்கும் நகர்மயமாவதற்கும் உதவி செய்துள்ளது.

 

மற்றொரு பொருளாதார நடவடிக்கையின் களமாக இருப்பது துறைமுகங்களாகும். இந்த மாகாணத்தில் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் தர துறைமுகங்கள் 17 செயல்படுகின்றது. தன்னாட்சி பிராந்தியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாம் தர துறைமுகங்கள் 12 செயல்படுகிறது. இவை இரண்டும் மாகாணத்தை ஒட்டி இருக்கக்கூடிய 12க்கு மேற்பட்ட நாடுகளுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஒரு மாகாணம் 167 நாடுகளுடனும் பிராந்தியங்களுடனும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கலாச்சார பரிமாற்றங்களின் மேற்கொண்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.

இதன் விளைவாக 2008 ஆம் ஆண்டில் ஜின்ஜியாங் வெளிநாட்டு வர்த்தக அளவு 22.217 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. நிதி சாரா நேரடி முதலீட்டில் 164 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலமாக 795 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் ஈட்டியது. பல வெளிநாடுகளுக்கு பிராந்தியத்திலிருந்து பணி செய்வதற்காக திறன் தொழிலாளர்களை அனுப்பி வைக்கின்றனர். இந்த மாகாணத்தில் 500 க்கும் மேற்பட்ட சுற்றுலா மண்டலங்கள் அமைக்கப்பட்டு வருடத்திற்கு இரண்டு கோடி பேர்களுக்கு மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக மாறி உள்ளது.

ஒரு நபருக்கான சராசரி தானிய அளவு 1949-ல் 195.62 கிலோவிலிருந்து 1978-ல் 300.09 கிலோவாகவும், 2008-ல் மேலும் 426.60 கிலோவாகவும் உயர்ந்தது; ஒரு நபருக்கான சராசரி பருத்தி அளவு 1949-ல் 1.18 கிலோவிலிருந்து 1978-ல் 4.46 கிலோவாக உயர்ந்து, 2008-ல் 141.52 கிலோவை எட்டியது; மேலும், ஒரு நபருக்கான சராசரி இறைச்சி அளவு 1949-ல் 11.68 கிலோவாகவும், 1978-ல் 7.83 கிலோவாகவும் இருந்து, 2008-ல் 53.85 கிலோவாக அதிகரித்தது.

வீட்டு வசதி நிலைகளும் பெருமளவில் மேம்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தனிநபர் தரைப்பரப்பு 1983-ல் 10.2 சதுர மீட்டராகவும், 2000-ல் 17.25 சதுர மீட்டராகவும், 2008-ல் 22.79 சதுர மீட்டராகவும் இருந்தது; அதே சமயம், நகரங்களில் தனிநபர் தரைப்பரப்பு 1983-ல் 11.9 சதுர மீட்டராகவும், 2000-ல் 20.06 சதுர மீட்டராகவும் இருந்து, 2008-ல் 27.3 சதுர மீட்டராக அதிகரித்தது.

 

1950 முதல் 2008 வரை, மத்திய அரசு சின்ஜியாங்கில் 386.23 பில்லியன் யுவானை முதலீடு செய்தது, இது அப்பகுதியின் மொத்த முதலீட்டில் 25.7% ஆகும். 1955 (சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி நிறுவப்பட்டபோது) முதல் 2008 வரை, சின்ஜியாங் மத்திய பட்ஜெட்டிலிருந்து மொத்தமாக 375.202 பில்லியன் யுவான் மானியங்களைப் பெற்றது. 2000-ஆம் ஆண்டில் மேற்குப் பிராந்திய மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டதோடு, மானியங்களின் அளவு ஆண்டுக்குச் சராசரியாக 24.4% அதிகரித்து, 2008-ல் 68.56 பில்லியன் யுவானை எட்டியது. மத்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து கடன்களைப் பயன்படுத்தி, அப்பகுதிக்கான மூலதன உள்ளீட்டையும் ஆதரவையும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அரசின் வேண்டுகோளின்படி, தெற்கு சின்ஜியாங்கில் உள்ள 33 மாவட்டங்களுக்கு (அல்லது நகரங்களுக்கு) பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் கலாச்சார உதவிகளை வழங்குவதற்காக, பெய்ஜிங், தியான்ஜின், ஷாங்காய், ஜெஜியாங், ஷான்டாங், லியாவோனிங், ஜியாங்சி மற்றும் ஹெநான் ஆகிய நகரங்களும், 15 அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்களும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வறுமையை ஒழித்து, அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்ததன் மூலம், ஜின்ஜியாங்கில் உள்ள அனைத்து இனக்குழு மக்களும் தற்போது தங்கள் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், மேலும் செழிப்பான வாழ்க்கையை நோக்கியுள்ளனர்.

அ.பாக்கியம்

வியாழன், மே 21, 2026

73 ஜின்ஜியாங் வளர்ச்சி : சிப்பாய்-விவசாயி கோட்பாடு

 



அ. பாக்கியம்

1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதற்கு முன்பு ஜின்ஜியாங் மாகாணம் பின்தங்கிய மாகாணமாகவே இருந்தது. அந்த மாகாணத்தில் முக்கியமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இயற்கை பொருளாதாரமே இருந்து வந்தது. குறைந்த உற்பத்தி திறனும், வளர்ச்சி அடையாத உற்பத்தி முறைகளினாலும் உள்ளூர் வளர்ச்சி என்பது மிகப்பெரும் தேக்கம் அடைந்திருந்தது. அந்த மாகாணத்தில் ஒரு அங்குலம் ரயில் பாதைகள் கூட அதுவரை அமைக்கப்படவில்லை. பரந்து விரிந்த பிரதேசங்களைக் கொண்டிருந்தாலும் பெரிய அளவிலான பண்ணைகளோ வளமான வயல்களோ கிடையாது. தொழில்துறை அடையாளம் என்பதற்கு சில தனியாருக்கு சொந்தமான சிறிய பட்டறைகளே காணப்பட்டன. மக்கள் மிகப் பெரும் அளவிற்கு வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்று வந்தனர்.

ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லை பிரதேசங்களும் அதிக நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய மாகாணமாக இருப்பதினால் இந்த மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டுமொத்தமான வளர்ச்சியுடன் இணைத்து பொதுவான முன்னேற்றத்தை காண்பது கடினமாக இருக்கும். எனவே சீனாவின் மற்றபகுதியிலன் வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்துவதற்காக சிறப்பு முயற்சிகளை உருவாக்கினார்கள். அந்த மாகாணத்திலேயெ வடக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்த வளர்ச்சி தெற்கு பகுதியில் இல்லை என்பதும் எதார்த்தமான நிலைமையாகும்.

ஒருபுறம் ஜின்ஜியாங்கின் தெற்கு வடக்கு வளர்ச்சியை சமப்படுத்துவதும், தேசிய வளர்ச்சியுடன் இணைப்பதும் அடிப்படை தேவையாக இருந்தது. இதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை (jinjiang production and construction corporation .XPCC) ஆகும்.

1949-இல் ஜின்ஜியாங் பிரதேசம் அமைதியான முறையில் விடுவிக்கப்பட்ட பிறகு அங்கு நிறுத்தப்பட்டிருந்த மக்கள் விடுதலை படையினர் அதாவது செம்படை உள்ளூர் மக்களுடன் இணைந்து பாலைவனங்களை விளைநிலமாக மாற்றக்கூடிய முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனை தொடர்ந்து 1954இல் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை XPCC உருவாக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இருந்த 1.75 லட்சம் ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ பதவிகளை துறந்து பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். இந்த அமைப்பு நாட்டின் பாதுகாப்பையும், உற்பத்தியும் இணைத்து செயல்படுத்தக்கூடிய அமைப்பாக உருவாக்கப்பட்டது. சீன வரலாற்றில் குறிப்பாக பண்டைய பேரரசு காலத்தில் சிப்பாய் விவசாயி கொள்கை (Soldier farmer or Tuntian) கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

இது ராணுவம் மற்றும் பொருளாதார உற்பத்தியுடன் இணைந்த ஒரு உத்தியாகும். இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்கள், ராணுவ வீரர்கள் போர்க்காலங்களில் போரிடவேண்டும். அமைதி காலங்களில் எல்லைப் பகுதிகளில் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட்டது. இந்த முறைகள் படைகளுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்யவும், அரசுக்கு உணவு பற்றாக்குறையை தவிர்க்கவும் உதவியது. இவர்களுக்கான குடியிருப்புகள் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டதால் நிலங்களை பாதுகாப்பதோடு அந்நிய ஊடுருவல்களை தடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்தினார்கள்.

இந்தக் கொள்கை சீனாவில் ஒரு சாதாரண சிப்பாயின் வாழ்க்கையை விவசாயத்துடன் இணைத்த து மட்டுமல்ல ராணுவப் படைகளை நிலத்துடன் இணைத்தும் வைத்திருந்தது. இந்த அமைப்பு என்பது சீன வரலாற்றில் ஒரு தனித்துவமான அமைப்பாகும். இந்த அமைப்பு இன்றும் ஜின்ஜியாங் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அமைப்பு எல்லை பாதுகாப்பு, நிலத்தின் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவைகளை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அமைப்பு கட்சி, அரசு, ராணுவம் என்ற மூன்று தளங்களில் ஆரம்ப காலத்திலும், அதன் பிறகு தொழில் துறையும் இணைத்து நான்கு தளங்களில் செயல்படுகிறது. இது சீன சமூகத்தில் ஒரு சிறப்பு சமூக அமைப்பு ஆகும்.

ஜின்ஜிசயாங் போன்ற புவிசார் அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பல்வேறு இன மக்கள் வாழக்கூடிய இடங்களில் பொருளாதார வளர்ச்சியும், அவர்களின் வாழ்க்கை மேம்பாடும்தான் ஒன்றுபட்ட சீனத்தை பலப்படுத்தும் என்பதை அறிந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சிறப்பு அமைப்பின் மூலம் செயல்பட்டது. இந்த கட்டமைப்பு இராணுவப் பாணியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் இராணுவ அமைப்பு அல்ல. இந்தப் பெயர்கள் அதன் வரலாற்றுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன

இந்த அமைப்பு உழைப்பின் உன்னதத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியது. தக்லமாகன் படுகையிலும், கர்பன்டுங்கட் பாலைவனங்களின் ஓரங்களில் சவால்கள் நிறைந்த நீர்ப்பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. காடுகளையும் பெரும் விளைநிலங்களையும் உருவாக்கினர். விவசாயத்திலிருந்து தொடங்கி, ஜவுளி, எஃகு, நிலக்கரி, மின்சாரம், இயந்திரங்கள் போன்ற பல்துறைத் தொழில் அமைப்பை நிறுவினார்க. ஜின்ஜியாங் மாகாணத்தில் 37 இன மக்கள் வாழ்கின்றனர். இந்த அமைப்பின் முயற்சியால், கூட்டு உழைப்பால் அனைத்து இனங்களும் பெரும் குடும்பமாக வளர்ந்தது . முதல் கட்டமாக 1949 முதல் 1978 வரையிலான பொருளாதார வளர்ச்சி என்பது மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் இங்கு இந்த மாகாணத்தின் வளர்ச்சியை இரண்டு கட்டமாக எழுதுகிறேன் 1949 முதல் 1978 வரை முதல் கட்டமாகும் 1978 க்கு பிறகு சீர்திருத்த காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பிரித்து எழுதுகிறேன். புள்ளி விவரங்கள் தான் கூடுதலாக இருந்தாலும் பொய்களை முறியடிப்பதற்கு எதார்த்தமான வாழ்க்கையும் வெளிப்படுத்துவதற்கும் இது ஆதாரமாக அமைகிறது.

1949-1978 சோதனை காலங்களில் சாதனை

இந்த காலகட்டம் என்பது மிகவும் நெருக்கடி மிகுந்தது. முதலாவதாக புரட்சி நடந்து முடிந்து பின்தங்கிய நிலைமையை சமாளிப்பது. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பெரும் முன்னேற்றப் பாய்ச்சல் (1958-1961) மற்றும் கலாச்சாரப் புரட்சி (1966-1976) ஆகியவை ஜின்ஜியாங்கின் வளர்ச்சியில் சிக்கலான மற்றும் மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்தின. இந்த தேசியப் பிரச்சாரங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கிய போதிலும், ஜின்ஜியாங்கின் தனித்துவமான சூழ்நிலைகள் பின்னர் நகரத்தின் வெற்றியை வரையறுத்த வேர்களை வளர்க்க உதவியது.

இக்காலகட்டத்தின் 28 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் இந்த பதட்டமான அரசியல் மாற்றங்களில் சிக்கித் தவித்த பொழுதும் ஜிஞ்சியான் மாகாணத்தில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை சாதித்து காட்டியது. அதற்கு கீழே குறிப்பிட்டுள்ள புறச்சூழலை முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

 

வீட்டு பட்டறைகளின்” ஒரு சிறிய ஆனால் வலுவான அடித்தளம் ஏற்கனவே ஜின்ஜியாங்கில் உருவாகியிருந்தது. 1978 ஆம் ஆண்டில், கிராம அளவு மற்றும் அதற்குக் கீழ்நிலை தொழில்களின் உற்பத்தி மதிப்பு 31.28 மில்லியன் யுவான் ஆக இருந்தது. இது மாவட்டத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் 34% ஆகும். குடும்பம் நடத்தும், கைவினைப் பட்டறைகளின் இந்த ஆரம்பகால நடைமுறையே “ஜின்ஜியாங் மாதிரியின்” முன்மாதிரியாக இருந்தது. இந்த மாதிரியானது, குடும்பத்திற்குச் சொந்தமான வணிகங்களை நம்பியிருப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஜின்ஜியாங்கின் கதை, உள்ளூர் பின்னடைவும் வலுவான வணிக கலாச்சாரமும் இந்த கடினமான கலாச்சார புரட்சி காலங்களைத் தப்பிப்பிழைக்க மட்டுமல்லாமல், அதன் எதிர்கால பொருளாதார அதிசயத்தின் விதைகளை ஏற்கனவே நட்டுச் செல்லவும் எவ்வாறு அனுமதித்தது என்பதைக் காட்டுகிறது.

உழைப்பின் பலன் செல்வஉருவாக்கத்தில் இருக்கும்.செல்வ உருவாக்கத்தின் வெளிப்பாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 1952-ல் 7.91 கோடி யுவானாக இருந்தது, 1978-ல் 39.07 கோடி யுவானாக உயர்ந்தது. வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 5.9% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. பொருளாதாரக் கட்டமைப்பு 1955-ல் 50%க்கும் அதிகமாக இருந்த விவசாயப் பங்கு, 1978-ல் குறைந்து, தொழில்துறையின் பங்கு கணிசமாக உயர்ந்தது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில தனியார் தொழில்துறை மட்டுமே அடையாளமாக இருந்த நிலையை மாற்றி புதிய தொழிற்துறைக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 1949-ல் 363 மட்டுமே; 1978-ல் 3,731 ஆக உயர்ந்தது (10 மடங்கு வளர்ச்சி) மொத்த தொழில்உற்பத்தி மதிப்பு 1952-ஐ விட 16.7 மடங்கு உயர்ந்து, 1978-ல் 33.9 கோடி யுவானை எட்டியது. புதிய தொழில்கள் இரும்பு, எஃகு, நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம், இயந்திரங்கள், ஜவுளி, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட நவீன தொழில்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் படை மற்றும் சின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமானப் படையின் (XPCC) வீரர்கள், தங்கள் ஊதியத்தைச் சேமித்து, முதல் நவீன தொழிற்சாலைகளைக் கட்டுவதில் முன்னணியில் இருந்தனர்.

 

தானிய உற்பத்தி 1949-ல் 8.48 லட்சம் டன்னிலிருந்து 1978-ல் 37.00 லட்சம் டன்னாக உயர்ந்தது (3.4 மடங்கு வளர்ச்சி) நீர்ப்பாசன வசதிகள் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் பசுமைப் பாலைவன வேளாண்மை (Oasis agriculture) விரிவுபடுத்தப்பட்டது. இருப்புப்பாதை 1962-ல் லான்ஜோ-சின்ஜியாங் இருப்புப்பாதை உரும்கியை வந்தடைந்தது. இது சின்ஜியாங்கின் வரலாற்றில் முதல் இருப்புப்பாதை ஆகும். தொடர்ந்து, தெற்கு சின்ஜியாங் இருப்புப்பாதையின் (துர்பான்-கோர்லா பகுதி) கட்டுமானம் தொடங்கியது.

சாலைப் போக்குவரத்து நீளம் 1949-ல் 3,361 கிமீ-லிருந்து 1978-ல் பல மடங்கு விரிவடைந்து, உரும்கியை மையமாகக் கொண்ட நவீன சாலை அமைப்பு உருவானது. நகர்ப்புற குடும்பத்தலைமைக்கான (Per Capita) வருமானம்1978-ல் ஆண்டுக்கு 319 யுவான் கிராமப்புற குடும்பத்தலைமைக்கான நிகர வருமானம் 1978-ல் ஆண்டுக்கு 119 யுவான் (1949-ல், பெரும்பாலான விவசாயிகள் பட்டினியின் விளிம்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது). ஒரு நபருக்கான சராசரி தானிய அளவு 1949-ல் 195.62 கிலோவிலிருந்து 1978-ல் 300.09 கிலோவாகவும், ஒரு நபருக்கான சராசரி பருத்தி அளவு 1949-ல் 1.18 கிலோவிலிருந்து 1978-ல் 4.46 கிலோவாக உயர்ந்துஒரு நபருக்கான சராசரி இறைச்சி அளவு 1949-ல் 11.68 கிலோவாகவும், 1978-ல் 7.83 கிலோவாகவும் இருந்து, 1978 ஆம் ஆண்டு இந்த முப்பது ஆண்டுக் கால முன்னேற்றத்தின் உச்சக்கட்டம் மட்டுமல்ல, சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிப்படையான கொள்கைகளின் தொடக்கப் புள்ளியும் ஆகும். அதன்பிறகு, சின்ஜியாங்கின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுத்தது.

அ.பாக்கியம்

வியாழன், மே 14, 2026

72 இஸ்லாம் : உய்குர் மக்களின் பூர்வீக மதமா ?

 



சீனா நீண்ட காலங்களாக பல்வேறு மதங்களைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. மத விதிமுறைகளின் படி கட்டமைக்கப்பட்ட முக்கிய மதங்களைவிட அதிகமான அளவிற்கு நாட்டுப்புற நம்பிக்கைகளும், மூதாதையர்களின் வழிபாடுகளும் நிரம்பி இருக்கக்கூடிய நாடு சீனாவாகும். மேற்கண்ட நாட்டுப்புற வழிபாடுகள் தவிர, தாவோயிசம் சீனாவில் உருவான மதமாகும். மற்ற மதங்கள் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்குள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஜின்ஜியாங்  உய்குர் தன்னாட்சி பிரதேசம், பல மத அமைப்புகளை கொண்ட பிரதேசமாகும். இங்குள்ள மதங்கள் கலப்பு ஏற்பட்டதன் மூலமாகவும், சகவாழ்வுகளால் இணைந்தும்  இருக்கின்ற அமைப்புகள் ஆகும். பல மதங்கள் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஒன்று அல்லது இரண்டு மதங்கள்தான் சில குறிப்பிட்ட காலங்களில் செல்வாக்கு மிக்கதாகவோ ஆதிக்கம் செலுத்தக் கூடியதாகவோ இருந்திருக்கிறது.

ஜின்ஜியாங்கில் மதங்களின் பரிணாம நிலைகள்

ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தில் மதங்களின் பரிணாமங்களை நான்கு அம்சங்களாக குறிப்பிடலாம்.ஒன்று, பழமையான மதத்தின் நிலைகள். இரண்டு,புத்த மதத்தை பிரதானமாகக் கொண்ட பல மதங்களின் பரிணாம நிலை, மூன்றாவது, இஸ்லாம் மற்றும் புத்த மதத்தை பிரதானமாகக் கொண்ட பல மதங்களின் சகவாழ்வான நிலைமைகள். நான்காவது, இஸ்லாத்தை பிரதானமாக கொண்ட பல்வேறு மதங்களின் வளர்ச்சி நிலைபாடுகள் என்று வகைப்படுத்தலாம்.

பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜின்ஜியாங்கில் பழமையான மதங்கள் மட்டும்தான் பரவலான முறையில் மக்களிடம் காணப்பட்டது. பொ.ஆ.மு முதல் நூற்றாண்டில் பௌத்தம் இந்தியாவிலிருந்து பட்டுப்பாதைகள் வழியாக ஜின்ஜியாங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொ.ஆ. 4ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டுகள் வரை ஜின்ஜியாங் பிரதேசத்தில் பௌத்தம் மிகப்பெரும் செல்வாக்கு பெற்று உச்சத்தில் இருந்தது. அதே நேரத்தில் ஜோராஸ்ட்ரியனிசம் ஜின்ஜியாங்  முழுவதும் பரவி இருந்தது. ஜோராஸ்ட்ரியனிசம் (Zoroastrianism) என்பது பண்டைய பாரசீகத்தில் (ஈரான்) தோன்றிய உலகின் மிகப் பழமையான, ஏகத்துவ (ஒரே கடவுள்) என்பதில் நம்பிக்கை கொண்ட மதங்களில் ஒன்றாகும்.

 

பொ.ஆ.5ஆம் நூற்றாண்டில் தாவோயிசம் பிராந்தியத்தில் பரவியிருந்தது மட்டுமல்ல குறிப்பாக டர்பன் பகுதியிலும் ஹாமி பகுதிகளிலும் பெரும்பாலான மக்களால் இந்த மத நம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டன. பொ.ஆ 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் திபெத்திய பௌத்தம் ஜின்ஜியாங் முழுவதும் பரவிடவில்லை என்றாலும், வடக்கு ஜின்ஜியாங்கில் செழித்து வளர்ந்திருந்தது. பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டில் மணிச்சேயிசம் ஜின்ஜியாங்கில் நுழைந்தது. மணிச்சேயிசம் (Manichaeism) என்பது கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் (ஈரான்) மானி (Mani) என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பழங்கால மதமாகும். இது ஒரு காலத்தில் மத்திய ஆசியா முதல் சீனா வரை பரவியிருந்த ஒரு முக்கிய சமயக் கோட்பாடாக இருந்தது. இது நன்மை (Light/ஒளி) மற்றும் தீமை (Darkness/இருள்) ஆகியவற்றுக்கு இடையேயான போராட்டத்தை மையமாகக் கொண்டது. இதே காலத்தில் நெஸ்டோரியனிசம் ஜின்ஜியாங் பகுதியில் நுழைந்தது. பத்தாம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை உய்குர் மக்களும்  வேறு சில இனக்குழுக்களும் இந்த மதத்தை தழுவியதால் நெஸ்டோரியனிசம்  செழித்து வளர்ந்தது. நெஸ்டோரியனிசம் (Nestorianism) என்பது இயேசு கிறிஸ்துவில் மனிதத் தன்மையும், தெய்வீகத் தன்மையும் தனித்தனி நபர்களாக (two distinct persons) இணைந்திருப்பதாகக் கூறும் ஒரு கிறிஸ்துவ இறையியல் கொள்கையாகும்

ஜின்ஜியாங்கில் இஸ்லாத்தின் வருகையும் திணிப்பும்

பொ.ஆ.9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 10ஆம்எநூற்றாண்டின் துவக்க காலத்திலும் துருக்கிய காரா-கானிட்- கானேட்(ஆட்சி பிரதேசத்தை குறிப்பது) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது. தற்போது ஜின்ஜியாங் பிரதேசத்தில் இருக்கக்கூடிய காஷ்கர் (Kashgar) பகுதியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த துருக்கிய வம்சம் தான் இது. தாரிம்படுகையில் தற்போதைய ஜின்ஜியாங்பகுதியில் இருந்த பண்டைய பௌத்தன் கோட்டான் ராஜ்ஜியத்தின் மீது துருக்கிய இஸ்லாமிய வம்சம் தாக்குதலை நடத்தியது. இதற்கு அவர்கள் ஜிஹாத் அதாவது புனித போர் என்று பெயர் சூட்டினார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல் 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரம் அடைந்து 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பொ.ஆ.1006 முடிவுக்கு வந்தது பௌத்த ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்து இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டினார்கள்.

16ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பல மதங்கள் ஜின்ஜியாங்கில் இணைந்து வாழ்ந்தன. இஸ்லாம் பெருமளவு செல்வாக்கு செலுத்தியது. இக்காலத்தில் ஜோராஸ்ட்ரியனிசம், மணிச்சேயிசம், நெஸ்டோரியனிசம் மறைந்து, புத்தமதம் மற்றும் தாவோயிசம் ஓரளவு செல்வாக்குடன் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒயிட் மங்கோலியர்கள் திபெத்திய பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர். இந்த ஒயிட் மங்கோலியர்கள் அல்லது மோங்குர் மக்கள் அழைக்கப்படக் கூடியவர்கள் மங்கோலியாவிற்கு வெளியே ஜின்ஜியாங், கிங்காய், கான்சு போன்ற மாகாணங்களில் வசிக்கக் கூடிய இனக்குழுக்கள் ஆகும். இதேபோன்று 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளின் படையெடுப்புகளை தொடர்ந்து புராட்டஸ்டன்டிசம், கத்தோலிக்கம் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை ஜின்ஜாங்கில் பரவியது.

டாங் மற்றும் சாங் வம்சங்களின் ஆட்சி காலத்தில் உய்குர் மக்கள் பௌத்தத்தை பிரதானமாக பின்பற்றினர். 15ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் பெரும்பாலானோர் பௌத்த மதங்களை தழுவியவர்களாக இருந்தார்கள். யுவான்வம்ச காலத்தில் பல உய்குர்கள்  நெஸ்டோரியனிசத்திற்கு மாறினார்கள். ஜின்ஜியாங்கில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பது அரபுபேரரசின் தோற்றம் மற்றும் இஸ்லாத்தின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்துடன் தொடர்புடையது.10ஆம் நூற்றாண்டில்தான் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை தழுவ ஆரம்பித்தனர். 16ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி உய்குர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். இந்த நிகழ்வுகள் 17ஆம் நூற்றாண்டு வரை நடந்து கொண்டுதான் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உய்குர் மக்களின் பிரதான அடையாளமாக இஸ்லாம் மதம் உருவெடுத்தது. இதற்குப் பிறகு இம்மக்களின் கலாச்சாரம், அவர்களின் அடையாளம் அனைத்திலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்தது. இக்காலத்திலிருந்து இம்மக்கள் அதற்கு முந்தைய பௌத்த மரபு வழியிலான செயல்களை துண்டித்துக் கொண்டனர்.

இஸ்லாத்தின் திணிப்பும் உள்ளுர்மயமாதலும்

உய்குர் மக்கள் இஸ்லாத்திற்கு மாறியது பொதுமக்களின் தன்னார்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் அமையவில்லை. மாறாக மதப்போர்கள் மற்றும் ஆளுவர்க்கத்தால் திணிக்கப்பட்ட அடிப்படையிலேயே அமைந்ததது. ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் செயல்முறைகளில் உய்குர்மக்களும் கசாக் மக்களும் தங்களின் மூதாதையர்கள் நம்பிக்கைகளுடனும், வழிபாட்டு மரபுகளுடனும் ஒருங்கிணைத்தனர். அதே நேரத்தில் பிராந்தியத்தின் உள்பகுதியில் இருந்த பிற இனகுழுக்களின் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டனர். இந்த உள்வாங்கல் மூலமாக சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பழைய முறைபடியே கடைபிடிக்கப்பட்டன. எனவே ஜிஞ்ஜியாங்கில் இஸ்லாம் படிப்படியாக தனித்துவமான உள்ளூர் மற்றும் இன அம்சங்களோடு ஒன்றிணைந்தது.

உதாரணமாக, மரபுவழி இஸ்லாம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அல்லது எதையும் வணங்குவதை அனுமதிக்காது. உய்குர்கள் மற்றும் வேறு சில இனக்குழுக்கள் இன்னும் மசார்களை வணங்குகின்றன. அவை கல்லறைகள் அல்லது சன்னதிகள், பொதுவாக புனிதர்கள் அல்லது குறிப்பிடத்தக்க மதத் தலைவர்களின் கல்லறைகள் ஆகும்.  மசார்வழிபாடு என்பது ஜின்ஜியாங்கில் இஸ்லாத்தின் உள்ளூர்மயமாக்கலுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. மசார்களைச் சுற்றி நீண்ட கம்பங்களை அமைக்கும் நடைமுறை, ஸ்ட்ரீமர்கள் மற்றும் செம்மறி தோல்களால் தொங்கவிடப்பட்டது, போன்ற அம்சங்கள் ஷாமனிசம் மற்றும் பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் செல்வாக்கின் விளைவாகும். மற்றொரு எடுத்துக்காட்டாக, யினிங்கில் உள்ள பைதுல்லா மசூதி மற்றும் உரும்கியில் உள்ள ஷான்சி மசூதி ஆகிய இரண்டும் முதன்முதலில் கிங் வம்சத்தின் போது பேரரசர் கியான்லாங்கின் ஆட்சிக் காலத்தில் (1736-1795) கட்டப்பட்டது. இவை உள்நாட்டுப் பகுதிகளில் பொதுவாகக் காணப்பட்ட பீம்-நெடுவரிசை கட்டுமானத்தால் உள்ளுர் கட்டிடக்கலையாக வகைப்படுத்தப்படுகின் றன. இது இஸ்லாத்தின் உள்ளூர்மயமாக்கலின் ஒரு வடிவத்தை உள்ளடக்கியது.

ஜின்ஜியாங்கில் மதநம்பிக்கை சுதந்திரம்

ஜின்ஜியாங்கில் இப்போது மசூதிகள், தேவாலயங்கள், லாமாக்கள் மற்றும் கோயில்கள் உட்பட 24,800 மத நடவடிக்கைகளுக்கான இடங்கள் உள்ளன, இதில் 29,300 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர். இவற்றில், 24,400 மசூதிகளில் 29,000 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர்; 59 புத்த கோவில்களில் 280 மதகுருமார் பணியாளர்கள் உள்ளனர்; ஒரு தாவோயிஸ்ட் கோவிலில் ஒரு மதகுரு உள்ளார்; 227 புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் (கூட்ட மைதானங்கள்) 26 மதகுருமார் பணியாளர்களைக் கொண்டுள்ளன; 26 கத்தோலிக்க தேவாலயங்கள் (கூட்ட மைதானங்கள்) 27 மதகுருமார் பணியாளர்களைக் கொண்டுள்ளன; மற்றும் மூன்று ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் (கூட்ட மைதானங்கள்) ஒரு மதகுருவைக் கொண்டுள்ளன. ஜின்ஜியாங் இஸ்லாமிய நிறுவனம் மற்றும் ஜின்ஜியாங் இஸ்லாமிய பள்ளி உட்பட எட்டு மதக் கல்லூரிகள் உள்ளன. 112 மத அமைப்புகளும் உள்ளன, அவற்றில், தன்னாட்சி பிராந்திய மட்டத்தில், இரண்டு அமைப்புகள் உள்ளன, அதாவது, இஸ்லாமிய விவகாரங்களுக்கான குழுவுடன் ஒரு இஸ்லாமிய சங்கம் மற்றும் ஒரு புத்த சங்கம்; மாகாணங்கள் மற்றும் மாகாண அளவிலான நகரங்களின் மட்டத்தில் 14 இஸ்லாமிய சங்கங்கள், மூன்று புத்த சங்கங்கள் மற்றும் ஒரு புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்தி இயக்கக் குழு உள்ளன; மேலும் மாவட்ட மற்றும் மாவட்ட அளவிலான நகரங்களின் மட்டத்தில் 88 இஸ்லாமிய சங்கங்கள், இரண்டு புத்த சங்கங்கள் மற்றும் இரண்டு புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்தி இயக்கக் குழுக்கள் உள்ளன.

சீனா, பெரும்பாலான நாடுகளைப் போலவே, அரசாங்கத்தி லிருந்து மதத்தைப் பிரித்து வைக்கும் கொள்கையை கடைபிடிக்கிறது. எந்தவொரு மத அமைப்பும் அரசியல் மற்றும் அரசு விவகாரங்களில் தலையிட அனுமதிக்கப்படவில்லை. நிர்வாகம், நீதித்துறை விவகாரங்கள், கல்வி, திருமணம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் தலையிட, சமூக ஒழுங்கு, பணி ஒழுங்கு மற்றும் வாழ்க்கை ஒழுங்கைத் தடுக்க, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின் சோசலிச அமைப்பை எதிர்க்க, அல்லது இன ஒற்றுமை மற்றும் தேசிய ஒற்றுமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ மதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

மதத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விசுவாசிகளுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்கும் எந்தவொரு செயலையும் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்திய அரசு அனுமதிப்பதில்லை. எந்தவொரு மதத்திற்கும் பாரபட்சம் காட்டவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது. எந்த மதமும் வேறு எந்த மதத்தையும் விட உயர்ந்ததாக இருக்க அனுமதிக்காது. அனைத்து மதங்களுக்கும் சமத்துவத்தை ஜின்ஜியாங் எப்போதும் நிலைநிறுத்துகிறது. சீனாவில் மதங்களின் வரலாறு, சீன சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவை சீன சமூகத்திற்குள் இடமளிக்கப்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.

 

சோசலிச சமூகத்திற்கு ஏற்ப மதத்தை தகவமைப்பது.

சோசலிச சமூகத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சீனாவில் மதங்கள் நல்ல முறையில் வளர்ச்சியடைய முடியும் என்பதையும் காட்டுகிறது. மதச்சார்பற்ற, நவீன மற்றும் நாகரிக வாழ்க்கை முறைகளை நாம் வளர்த்து ஊக்குவிக்க வேண்டும். மேலும் பின்தங்கிய மற்றும் காலாவதியான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும். சீனாவில் மதங்களின் வரலாறு, சீன சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே அவை சீன சமூகத்திற்குள் இடமளிக்கப்பட முடியும் என்பதைக் காட்டுகிறது.

அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்கள் மாநாடுகள் மற்றும் CPPCC குழுக்களில், ஜின்ஜியாங்கிலிருந்து 1,436 மத நம்பிக்கையாளர்கள் பிரதிநிதிகளாகவும் உறுப்பினர்களாகவும் பணியாற்றுகிறார்கள். அரசு விவகாரங்களின் விவாதம் மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமையை நிறைவேற்றுகிறார்கள். கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எழுப்புகிறார்கள் அல்லது அரசாங்கப் பணிகள், குறிப்பாக மதப் பணிகள் குறித்த திட்டங்கள் மற்றும் பிரேரணைகளை சமர்ப்பிக்கிறார்கள்.

மதத் தீவிரவாதம் மனிதத்துவத்கிற்கு விரோதமானது

1970களின் பிற்பகுதியிலிருந்தும் 1980களின் முற்பகுதியிலி ருந்தும், குறிப்பாக பனிப்போர் முடிவடைந்ததிலிருந்த காலத்தில் , உலகம் முழுவதும் மதத் தீவிரவாதத்தின் எழுச்சி ஏற்பட்டது. இவை ஜின்ஜியாங்கில் மதத் தீவிரவாதத்தின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் விளைவாக, சமூக ஸ்திரத்தன்மைக்கும், பிராந்தியத்தில் உள்ள மக்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் பயங்கர வாதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்தன.

பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே பகைமையைத் தூண்டுவது, தேசபக்தி, அமைதி, ஒற்றுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றிற்கு எதிராக களத்தை அமைத்தார்கள். இஸ்லாம் மற்றும் பல மதங்களால் பரிந்துரைக்கப்பட்ட நல்ல செயல்கள் பற்றிய போதனைகளுக்கு எதிராக இயங்கினார்கள். இனப் பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் சித்தாந்த அடித்தளத்தை உருவாக்கும் மதத் தீவிரவாதம், இயல்பிலேயே மனிதத்துவத்கிற்கு விரோதமானது, சமூக விரோதமானது, நாகரிக விரோதமானது மற்றும் மத விரோதமானது ஆகும். இது மதத்திற்கு துரோகம் செய்வதாகும். மேலும் இதை ஒருபோதும் மத விஷயங்களுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. அல்லது மத வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்படவோ அல்லது மன்னிக்கப்படவோ கூடாது. சர்வதேச அனுபவங்களிலிருந்தும், பிராந்தியத்தின் யதார்த்தத்திலிருந்தும் படிப்பினைகளைப் பெற்று, சட்டத்தின்படி பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடவும், பயங்கரவாதம் மற்றும் வன்முறை மற்றும் மத பயங்கரவாதத்தின் பரவலை திறம்படக் கட்டுப்படுத்தவும் ஜின்ஜியாங் உய்குர தன்னாட்சி பிராந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தது . அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. மேலும் பிராந்தியத்தில் சமூக நல்லிணக்கத்தையும் ஸ்திரத்தன்மையையும் பராமரித்து வருகிறது.

அ.பாக்கியம்

76 கல்வியும்-தொழில்கல்வியும் பயங்கரவாதத்தை வீழ்த்திய பேராயுதம்

  அ. பாக்கியம் வறுமை வேலையின்மை மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமல் குறைந்த அளவிலான கல்வி ஆகியவையே வன்முறை தீவிரவாதத்திற்கான பின்னணி காரணங்...