அ.பாக்கியம்
மனித
நாகரீகத்தின் வளர்ச்சியில் வறுமை என்பது பல்வேறு சமூக வடிவங்களிலும் பல்வேறு காலகட்டத்திலும்
வெளிப்படுகின்ற ஒரு நிலையான பொருளாதார நிகழ்வாக இருந்து வருகிறது. வறுமையை ஒழிப்பதற்கான
முயற்சிகள் வரலாறு முழுவதும் நடந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய உலகிலும் வறுமை என்பது
குறிப்பிடத்தக்க அளவிற்கான உலகளாவிய சவாலாக உள்ளது. இதன் காரணமாக வறுமையை குறைப்பதற்கான
செயல்கள் உலகம் முழுவதும் ஒரு முக்கிய கவலையாக மாறி உள்ளது. அதே நேரத்தில் வறுமையைப்
பற்றிய ஆய்வுகளும் இக்காலத்தில் பல்வேறு விதமான கோணங்களில் நடந்து கொண்டே இருக்கிறது.
அதிகமாகியும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் சபை 2030ம் ஆண்டு நிலையான வளர்ச்சிக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் என்ற தலைப்பில் சிறப்புத்
திட்டத்தை அறிவித்தது இத்திட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் எல்லா
இடங்களிலும் இருக்கின்ற தீவிர வறுமையை ஒழித்து விட வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்தார்கள்.
அனுபவத்தின் உறைவிடமாக சீன கம்யூனிஸ்ட்
கட்சி:
புராதன
சமுதாயத்திற்கு முன்பு இயற்கையை போதுமான அளவிற்கு மனிதன் தன் வசப்படுத்த முடியாத காரணத்தினால்
வறுமை மனித குலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. உணவு சேகரிப்பது மிகப்பெரிய சவாலாக
இருந்த காலத்தில் வறுமை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. சமுதாயம் வர்க்கங்களாக பிளவுண்ட
பிறகு மனிதகுலம் வறுமையில் வாடுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகப் பிரதான காரணம்
என்பது சுரண்டல் முறை ஆகும். வர்க்க சமுதாயத்தின் வரலாறு நெடுகிலும் வறுமை என்பது வர்க்கங்களின்
சுரண்டலினால் மேலோங்கி ஆதிக்கம் செலுத்தியது. வர்க்க சமுதாயத்தை வீழ்த்தி வர்க்கமற்ற
சமுதாயத்தின் துவக்கமாக அமைந்த உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தில் வறுமை ஒழிக்கப்பட்டது.
இங்கும் கூட அதிகாரத்தை இழந்த சுரண்டல் வர்க்கம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு
வறுமையில் மக்களை வாடச்செய்தனர். இந்த வரலாற்று பின்னணியில் தான் வறுமைக்கு எதிரான
போராட்டத்தில் சீனாவின் முன் முயற்சிகளும் வெற்றிகளும் உலகளாவிய வலிமை ஒழிப்பிற்கு
புதிய உத்திகளையும் நுணுக்கமான அறிவுகளையும் வழங்கி உள்ளது.
சீனாவில்
சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு தீவிர வறுமையை முற்றிலும் ஒழித்து
விட்டது என்பது இன்றைய உலகில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த வறுமை ஒழிப்பை எவ்வாறு
நடத்தினார்கள் என்பதை பற்றிய ஏராளமான தரவுகள் இருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையும் இந்த
வறுமை ஒழிப்பை உலகின் மிகப்பெரிய அனுபவமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய பகுதியில்
சீனாவில் வறுமை ஒழிப்பு சம்பந்தமாக ஒரு பொதுவான முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருந்த இனச்
சிறுபான்மையர் மத்தியில் வறுமையை எவ்வாறு ஒழித்தார்கள், எடுத்த புதிய முயற்சிகள்
என்ன என்பதையும், என்ன விதமான இடர்பாடுகளை சந்தித்தார்கள் என்பதுதான்
மனித குலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஆகும்.
உலகின்
பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை இனங்கள் வளர்ச்சி அடையாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரேசில் நாட்டில் வறுமையில் வாழக்கூடியவர்களின் எண்ணிக்கை 7. 5 கோடி மக்களாகும் இவர்களில்
90 சதவீதத்திற்கு மேல் ஆப்பிரிக்க இந்தியர்கள் இந்தியர்கள் கருப்பின
மக்கள் ஆகியோர்களை அடங்குவார்கள். சிறுபான்மை மக்கள் மத்தியில் தான் வறுமை அதிகமாக
இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் பல்வேறு இனங்கள் இருக்கிறது இந்த நாட்டை இன மொசைக்
நாடு என்று அழைப்பார்கள் ஒவ்வொரு தேசிய இனங்களும் தங்களது தனித்தன்மைகளை பாதுகாத்துக்
கொண்டே ஒன்றாக வாழ்வார்கள். இந்த முறைக்கு தான் இன மொசைக் நாடு என்று பெயர். ஆனாலும்
இங்கு வறுமை என்பது பழங்குடி மக்களிடம் தான் மிக மிக அதிகமாக இருக்கிறது. சொர்க்கபுரி
என்று சொல்லக்கூடிய அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் வறுமையில் வாழக்கூடிய
மக்களின் பெரும்பகுதி ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் கருப்பினத்தவர்களும் ஆவார்கள். இந்தியாவிலும்
மதச் சிறுபான்மை இன சிறுபான்மையர் சாதிய அடுக்குகளின் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய
மக்கள் வறுமையில் வதைப்படுகிறார்கள் . உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களால் காலங்காலமாக
சிறுபான்மை மக்கள் வறுமையை வாழ்க்கையாக கொண்டுள்ளனர் இந்த நீண்ட கால போக்கை மாற்ற வேண்டும்
என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் முடிவெடுத்தது.
ஆய்வுகளே திட்டத்தின் அடிப்படை:
சீனாவில்
எந்த ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பும் அவற்றை அமுலாக்குவதற்கு முன்பாகவும் அது
பற்றிய விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவார்கள். அந்த ஆய்வுத்
திட்டத்தின் படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுகளில் இருந்து கிடைக்கும் உண்மை நிலைகளின்
அடிப்படையிலேயே திட்டங்களை உருவாக்குவார்கள். இது ஆரம்ப காலத்தில் இருந்து சீன கம்யூனிஸ்ட்
கட்சி தனது செயல்பாட்டிலும் சில மக்கள் குடியரசு உருவான காலத்திலும் இந்த முறைகளை கடைப்பிடித்து
வருகிறார்கள்.
1978 ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசாங்கமும் சீர்திருத்தம் மற்றும்
பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்தினார்கள் இதன் விளைவாக கிராமப்புறங்களில் பொருளாதாரத்தின்
வளர்ச்சி மிக வேகமாக மாற்றமடைந்தது. இந்த அதிவேக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 1978 இல் கிராமப்புறத்தில் 25 கோடி மக்கள் வறுமையில் வாழ்ந்த
நிலை மாறி 2008 ஆம் ஆண்டு 4 கோடியாக குறைந்தது.
ஆனால் தனது ஆய்வுகள் மூலம் இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமை ஒழிப்பு
போதுமான அளவிற்கு முன்னேறவில்லை என்று கண்டுபிடித்தார்கள். சீனாவின் தேசிய இன விவகார
ஆணையம் (NEAC) 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில்
கிராமப்புறத்தில் வறுமையில் வாழக்கூடிய மக்கள் தொகையில் 52.3
சதவீதம் இனச் சிறுபான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். இவை அனைத்தும் இனச் சிறுபான்மையுருக்கான
தன்னாட்சி பிரதேசங்களில் இருந்தது.
இந்த
தரவுகளின் உண்மையான அர்த்தம் சீனாவின் வறுமையில் வாழும் மக்கள் இனச் சிறுபான்மை பகுதிகளில்
குவிந்து இருக்கிறார்கள் என்பது ஆகும். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இனச் சிறுபான்மையினர்
வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது
சுயமாக பல்வேறு அறிவு ஜீவிகளும் களத்தில் இறங்கினார்கள். பல அறிஞர்கள் இந்த ஆய்வுகளை
மூன்று கட்டமாக தொகுத்து அளித்தார்கள். 1978 முதல் 2012 வரை முதல் கட்டமாகவும் 2013 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரண்டாவது கட்டமாகவும் 2020 ஆம் ஆண்டு முழுமையாக வறுமை ஒழிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த
ஆய்வுகளை மூன்றாவது கட்டமாக பிரித்து ஆய்வு செய்து தரவுகளை வெளியிட்டார்கள். இவற்றைக்
கணக்கில் எடுத்துக் கொண்டு சீன மக்கள் குடியரசு இன சிறுபான்மை பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கான
வரையறைகளை உருவாக்கினார்கள்.
சீனாவின்
சமதளப் பகுதிகளில் வறுமைகளை ஒழிப்பதற்காக அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டது. அவற்றை எட்டு
தர அளவுகோல்கள் அடிப்படையில் தீர்மானித்தார்கள்.
1.வருடாந்திர தனிநபர் தானிய உற்பத்தி
2.தனிநபரின் பண வருமானம்
3.போதுமான வசதி இல்லாத வீடுகளின் சதவீதம்
4.குடிநீர் வசதி கிடைக்காத வீடுகளின் சதவீதம்,
5.நிரந்தரமாக மின்சார வசதி இல்லாத இயற்கை கிராமங்கள்
6.மாவட்ட தலைநகர உடன் சாலைகளால் இணைக்கப்படாத கிராமங் களின் சதவீதம்
7.நீண்ட காலமாக சுகாதார வசதி கிடைக்காத பெண்களின் சதவீதம்
8.தகுதி இருந்தும் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் சதவீதம்
மேற்கண்ட
அளவுகோலின் அடிப்படையில் தான் வறுமை ஒழிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதே
முறையில் சிறுபான்மை தேசிய இனங்கள் வாழக்கூடிய பகுதிகளில் வறுமையை அடையாளம் கண்டு அதற்கான
அளவுகோலை தீர்மானிப்பதில் நிர்ணயிப்பதில் பலவீனம் இருந்தது என்பதை கண்டுபிடித்தார்கள்
எனவே இனச் சிறுபான்மை பகுதிகளில் வறுமை நீடிப்பதற்கான காரணங்களை வரலாற்று ரீதியாகவும்
புவியியல் சார்ந்தும் மற்ற அனைத்து முனைகளிலிருந்தும் ஆய்வுகளின் மேற்கொண்டு முடிவுக்கு
வந்தார்கள்
ஆய்வு தரவுகளின் முடிவுகள்
இனச்
சிறுபான்மை மக்கள் மத்தியில் வறுமைக்கான காரணங்களை ஆய்வு செய்த பொழுது அவை பல தனித்துவமான
பண்புகளைக் கொண்டிருந்தது. மிக நீண்ட காலமாக வறுமையிலேயே வாழ்ந்து வந்ததால் வறுமையே
ஒரு கலாச்சாரமாக மாற்றப்பட்டு இருந்தது. இந்தப் பகுதியில் அறிவுக்கான வாய்ப்புகள் இருந்த
பொழுதும் அவை தடுக்கப்பட்டு விட்டதால் மனித வளர்ச்சியின் சதவீதம் குறைவாக இருந்தது.
இதனால் சமூக பாதுகாப்பு பற்றியும் சந்தை பொருளாதாரத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது
சாத்தியமற்றதாக இருந்தது. தனிநபர்களின் விலை நிலங்கள் போதுமானதாக இல்லை அதன் விளைவாக
தானிய உற்பத்தி மிக மிக குறைவாக இருந்தது. அதே நேரத்தில் உற்பத்தி முறைகள் மிகவும்
பழமையானதாக இருந்தது மட்டுமல்ல மக்களிடம் பழமை வாத மனநிலை இருந்ததால் தனி நபர்களின்
மேம்பாட்டுத்திறன் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. விவசாயிகளுக்கான
சந்தை மிகத் தொலைவில் இருந்ததால் இவர்களின் பண வருமானத்திற்கு பாரம்பரியமான உற்பத்திகளை
மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதாயிற்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான பொருட்களின்
விலை மிக அதிகமாக இருந்தது இம்மக்களிடமிருந்த ஒரே பொருளான கால்நடைகளை விற்பனை செய்கிற
பொழுது மிகக் குறைந்த விலையே கிடைத்தது. இனச் சிறுபான்மை பகுதியில் உள்ள இந்தக் காரணங்கள்
அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாத வகையில் பிணைந்து இருந்தது. இதன் காரணமாக
வறுமை தொடர்ந்து நீடிப்பது மட்டுமல்ல இவர்களின் வாழ்க்கை கலாச்சாரமாகவே மாறி இருக்கிறது
என்பதையும் இந்த ஆய்வுகளின் தரவுகள் வெளிப்படுத்தியது.
மேற்கண்ட
தரவுகளையும் விவரங்களையும் நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து சீன கம்யூனிஸ்ட் கட்சியும்
சீன மக்கள் குடியரசும் எந்தெந்த துறைகளில் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதிகளில்
எவ்வாறு கவனம் செலுத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களையும் உருவாக்கி அமலாக்கினார்கள்.
முதலாவதாக, இனச் சிறுபான்மை பகுதிகளில்
வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் பண்டபொருளாதரத்தின் முக்கிய பங்கு தேவை என்பதை உணர்ந்ததுடன்
வறுமை நிலையை மாற்றுவதற்கான அடிப்படை காரணியாகவும் பண்ட பொருளாதரத்தை அமைத்திட வேண்டும்
என்று முடிவு செய்தார்கள். இதற்காக சந்தை செயல்பாட்டை மேம்படுத்தி பல்வேறு பொருளாதாரத்
துறைகளில் பண்டங்களின் எண்ணிக்கைகளையும் அதிகப்படுத்துவது என்று முடிவாக்கினார்கள்.
நிதி உதவி சார்ந்த வறுமை ஒழிப்பு உடனடி காரணியாக இருந்தாலும் தொழில்துறை சார்ந்த வறுமை
ஒழிப்பு ஒரு முக்கிய உத்தியாக முன்வைக்கப்பட்டது. உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்டு
சிறப்பியல்பு உள்ள தொழில்களின் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் வேலை குடும்பங்களுக்கு
செல்வத்தை தேடும் உந்துதலை ஏற்படுத்த முடியும் என்று முடிவெடுத்து அமலாக்கினார்கள்.
உதவி சார்ந்த வறுமை ஒழிப்புகளுடன் வளர்ச்சி சார்ந்த வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
அளிக்கின்ற வகையில் நிதி நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கடன் சேவைகளை விரிவுபடுத்துவது
வீடுகளின் சுயசார்பு மேம்பாட்டுத்தலனே அதிகப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில்
அதிகாரம் பெற்ற அமைப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று முடிவாக்கினார்கள்.
இரண்டாவதாக, வறுமை ஒழிப்பு என்பது அடிப்படையில் அறிவியல்
மற்றும் தொழில்நுட்பத்தின் கணிசமான முன்னேற்றத்தை சார்ந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தார்கள்
இதன் காரணமாக தொழில்நுட்பத்தின் அவசியத்தை அங்கீகரித்து அவற்றின் மூலமாக விரைவான வளர்ச்சியை
ஏற்படுத்துவது. குறிப்பாக வறுமை ஒழிப்பிற்கான புதிய பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குவதில்
இணைய தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை அமலாக்குவது.
மூன்றாவதாக, கலாச்சார ரீதியிலான தலையீட்டை அதிகப்படுத்தி
செயல்படுத்துவது. தலைமுறை தலைமுறையாக வறுமை கலாச்சாரத்தில் வாழக்கூடிய நிலைமைகளை மாற்றுவது.
இனச் சிறுபான்மை பகுதிகளில் சுற்றுலா மற்றும் கலாச்சார சுற்றுலா போன்றவற்றை நடத்தி
வருமான வாய்ப்புகளை அதிகப்படுத்துவது. இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் சுய வளர்ச்சி
திறன்களை மேம்படுத்துவதற்கும் ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கும்
இவற்றை பயன்படுத்துவது. சுற்றுலாவில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவது.
தனித்துவம் வாய்ந்த சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக சுற்றுச்சூழல்
பாதுகாப்பையும் அதிகப்படுத்த முடியும். இன விழாக்கள் இன கலாச்சாரம் வணிக கலாச்சாரம்
பாரம்பரிய தொழில் மயமாக்கல் ஆகியவற்றின் மூலமாக கலாச்சாரத்தை சுற்றுலா உடன் இணைப்பது
போன்ற நடவடிக்கைகளை வறுமை ஒழிப்பின் ஒரு பகுதியாக மாற்றுவது.
நான்காவது கல்வியை மேம்படுத்துவதன் மூலம்
வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை செயல்படுத்துவது எளிமையாக இருக்கும் என்ற முடிவுக்கு
வந்தார்கள் வறுமையை எதிர்த்து போராடுவதற்கான திறவுகோலாக கல்வி இருக்கும் என்பதை கண்டறிந்து
அவற்றுக்கான திட்டத்தை உருவாக்கினார்கள் கல்வியின் அணுகல்களை அதிகப்படுத்துவதன் மூலமாக
ஏழை மக்களின் மனித வளத்தை மேம்படுத்துவது போன்ற செயல்களை சாத்தியப்படுத்தினார்கள்.
இனச் சிறுபான்மை பகுதிகளில் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்கள்
முழு பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான வடிவங்களை முன்வைத்து கல்வியை சீர்திருத்தம் செய்து
மேம்படுத்தி வறுமை ஒழிப்புக்கு கல்வி பயன்படுத்தப்பட்டது.
ஐந்தாவதாக
இனச் சிறுபான்மை
வாழக்கூடிய பகுதிகளில் வறுமைக்கும் பேரிடர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு மிக நீண்ட
காலமாக உள்ளது என்பதை அறிந்து கொண்டார்கள். இயற்கை பேரிடர்களால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும்
வாழ்விடங்களையும் இழந்து வறுமையில் தள்ளப்பட்டார்கள். வறுமை அதிகம் ஆவதற்கு பேரிடர்
ஒரு முக்கிய காரணமாக இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்தது என்பதை அறிந்தார்கள்
எனவே வறுமையை குறைக்க பேரிடர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. அதே நேரத்தில்
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட வுடன் மீட்பு நடவடிக்கைகளை அதற்கான ஒருங்கி ணைப்புகளை பலப்படுத்
துவதன் மூலமாக வறுமையின் கீழ் செல்லக்கூடிய மக்களை பாதுகாக்க முடியும் என்ற திட்டத்தை
உருவாக்கினார்கள்.
ஆறாவதாக சமூக பொருளாதார வளர்ச்சியின்
இன சிறுபான்மை பகுதி தனிமைப்பட்டு இருந்தது. பரந்த தேசிய பொருளாதாரத்துடன் பிராந்திய
நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல் இருந்தது அதே நேரத்தில் தங்கள் உள்ளூர்
நலனுக்காக சொந்த வளங்களை திறம்பட பயன்படுத்த முடியாத நிலைமைகளும் நீடித்தன. இந்த நிலைகளுக்கு
மூடிய இரட்டை கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் பெயர் கொடுத்தார்கள். இந்த இரண்டு விதமான
கட்டமைப்புகளையும் உடைக்க வேண்டும் என்பது வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக
மாற்றப்பட்டது.
இந்த
முடிவுகளை அமலாக்கி எவ்வாறு வெற்றிகண்டார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
அ.பாக்கியம்,




