Pages

செவ்வாய், ஜூன் 02, 2015

முட்டையா? முட்டிக்கு முட்டி தட்டுவோம்.


         மத்தியபிரதேச மாநிலத்தின் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அம்மாநிலத்தின் பூர்வகுடி மக்கள் வாழக்கூடிய அலிராஜ்பூர், மாண்ட்லா,ஹோஷ்hங்கார் பகுதி குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்பட்டு மரணமடைகின்றனர். 

     எனவே காலை உணவில் அவித்த முட்டை கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தது. முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான் இதை மறுத்துவிட்டார். பணம் இல்லாமலோ, முட்டை கிடைக்காமலோ அல்ல. முதல்வர் சுத்த சைவம். 

         ஏழைக்குழந்தைகளின் உயிரைவிட அவர்களுக்கு சைவக் கொள்கைதானே முக்கியம். ஏற்கனவே மத்திய பிரதேச அரசு சைவக் கொள்கை என்ற பெயரார் மதிய உணவிலிருந்து குறிப்பிட்ட சமுகத்தின் நிர்பந்தத்தால் முட்டையை நீக்கிவிட்டது.
         
             
முட்டை விற்போரையும் முட்டிக்கு முட்டி தட்டுவோம் என்று சட்டம் கொண்டுவந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோழர் கா. சின்னையா தென் சென்னை கட்சி அமைப்பின் அடித்தளம்.

                                     அஞ்சலி    1966 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகி...