வாய் கிழிந்தது..
செவிப்பறை அறுந்தது..
மக்கள் வாழ்வு சிதைந்தது.. ..

வியாபாரம் 63.9 சதத்திருந்து 62.3 சதமாக அதாவது 2.5 சதம் குறைந்துள்ளது.இது கடந்த ஏப்ரல் 2015-க்கும் மே 2015-க்கும் இடையில் நடந்த ஒரு மாதத்தின் கதை
இவர் ஆடசிபீடம் ஏறிய 2014-மே மாதம் வியாபாரம் +8.2 சதம் ஏறுமுகமாக இருந்தது. 2015 மே மாதம் தற்போது இது -2.5 சதம் இறங்கு முகமாக இருக்கிறது.
மன்மோகன் ஆட்சிகாலத்தில் செயலற்ற காலமாக கருதப்பட்ட 2014 மார்ச் மாதத்தில் வியாபரம் 65.5 சதமாக இருந்தது. இப்போது மோடியின் ஆட்சியில் 2015 மார்ச் மாதம் இது 63 சதமாக குறைந்துள்ளது.
சம்பள உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கும் இதே நிலைதான் . 2014 முதல் காலாண்டில் 38.5 சதமாக இருந்தது.2015 முதல் காலாண்டில் இது 28.1 சதமாக மட்டுமே இருந்தது.
பங்குச் சந்தை மோடி ஆட்சிக்காலத்தில் வேகம் குiந்துள்ளதை வெளிப்படுத்தி உள்ளது. 2013 செப்டம்பரில் முதல் 2014 மே வரை 25 சதம் உயர்வு ஏற்பட்டது. 2014 மே முதல் 2015 மே வரை 11 சதம் மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தொழிற்துறை ஆய்வில் இந்திய பொருளாதார நிலை மோசமாக உள்ளது அல்லது தேக்க நிலையில் உள்ளது என்ற முடிவு வெளியாகி உள்ளது. அதாவது மிகமோசம் என்று 12.9 சதமும், சுமார் என்று 34.1 சதமும் மாற்றமில்லை என்று 53 சதமும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடி ஆட்சியில் குடும்ப நிதிஆதாரம் 3.2 சதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் நுகர்வு சக்தி 3.6 சதம் குறைந்துள்ளது. அதிக வருமானம் உள்ள குடும்பத்தில் நுகர்வு சக்தி 2.8 சதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வரும்முன் குடும்ப நிதிநிலை நன்றாக இருந்தது என்று 50 சதம் பேர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மோடி ஆட்சிக்காலத்தில் 30 சதம் மட்டுமே இக்கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
கடந்த 17 மாத காலத்தில் 2015 ஜனவரி பிப்ரவரி மாதத்தில்தான் வர்த்தக பற்றாக்குறை மிக மோசமாக உள்ளது. ஜனவரி மாதத்தில 8.3 பில்லியன் டாலராக இருந்த இருப்பு பிப்ரவரி மாதத்தில் 6.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
மத்திய அரசு கல்விக்கான ஒதுக்கீட்டில் 14000 கோடியை குறைத்துள்ளது.
பதிலளிநீக்குமத்திய அரசு கல்விக்கான ஒதுக்கீட்டில் 14000 கோடியை குறைத்துள்ளது.
பதிலளிநீக்கு