Pages

வியாழன், மார்ச் 12, 2026

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?


அ.பாக்கியம்

இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும். நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வியை பல தோழர்கள் கேட்கிறார்கள்.  பொதுவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் குதித்து இருப்பது போல் சீனாவும் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இந்தக் கேள்விகள் எழுப்பப்படுகிறது. உண்மையில் அமெரிக்காவினுடைய நோக்கத்திற்காகத்தான் அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவாகத்தான் இஸ்ரேல் யுத்தம் நடத்துகிறது என்ற மிக முக்கியமான புரிதல் தேவைப்படுகிறது.

சீனாவும் ஈரானும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிக விரிவான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது 25 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் அனைத்து தகவல்களும் பொதுதளத்தில் கிடைக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் ராணுவ ஒத்துழைப்பு என்ற அம்சமும் அடங்கும்.

சீனா உலகில் இன்று பெரிய சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த உலகை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது. எனவே அமெரிக்கா போன்ற ஒரு ஆக்கிரமிப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது அல்ல. அதே நேரத்தில் யுத்தம் தொடராமல் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் சீனா முன்னுரிமை அளிக்கிறது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலின் அத்துமீறல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் இல்லை. ஈரான் என்ற நாடு இன்று இஸ்ரேல், அமெரிக்கா என்ற பெரும் சக்திகளை எதிர்த்து நிற்கிறது என்றால் உலகளாவிய ராணுவ ஒப்பந்தங்களுக்கு உரிய சட்டத்தின் அடிப்படையில் சீனா உட்பட சில நாடுகள் செயல்படுவதன் வழியாகத்தான்.

ஈரான் நாட்டின் இந்த தாக்குப் பிடிக்கும் தாக்குதல்களில் சீன ஒப்பந்தமும் அடங்கி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களின் தளங்களின் மீது இப்படிப்பட்ட தாக்குதல்களை இதுவரை சந்தித்தது இல்லை. இஸ்ரேலின் அனைத்து பெரிய சிறிய நகரங்களும் அதன் ராணுவ முகாம்களும் குறி வைத்து ஈரானால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் ஒரு விஷயத்தை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய உத்திகளைக் கொண்டிருக்கவும் இல்லை, இடம் சார்ந்த பாதுகாப்பையும் வலுவாக வைத்திருக்கவில்லை என்பது வெளிப்பட்டது. ஈரானின் இந்த தாக்குதல்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ தளபதி அலுவலகம், விமானப்படை கட்டளை தளங்கள், வணிக தங்கள், ராணுவத்திற்கு உதவி செய்யும் தொழிற்சாலைகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது.

ஈரானின் இந்த எதிர் தாக்குதல் திடீரென்று நிகழவில்லை, நீண்ட காலமாக தயாரித்து வந்த ஒரு திட்டத்தின் வெளிப்பாடு. ஈரானின் உச்ச தலைவர், பாதுகாப்பு அமைச்சர், மற்றும் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டிருந்த நிலையிலும் இதுபோன்ற தாக்குதல்களை தொடர முடிகிறது என்றால் அதன் ராணுவ சக்தியை அறிந்து கொள்ள முடியும். இஸ்ரேலியர் ராணுவ தளவாடங்களையும் அமெரிக்க ராணுவ தளவாடங்களையும் தாக்கப்பட்டிருக்கிறது என்றால் இதன் உத்திகளை புரிந்து கொள்ள முடியும்.  ரஷ்யாவும் சீனாவும் ஒப்பந்த சரத்துகளின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு ஆதரவாக உதவி செய்கிறார்கள். அமெரிக்காவின் சட்ட விரோத தடைகளுக்கு எதிராக பொருளாதார ஆதரவை வழங்குவது, ஈரானின் ராணுவ தொழில்துறை உற்பத்திக்கு தொழில்நுட்ப பொருட்களையும் ஆதரவையும் வழங்குவது, ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றிக் கொடுப்பது போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கும். இவை அனைத்தும் மற்ற நாடு தாக்குவதற்கு அல்ல ஈரான் தன் நாட்டை பாதுகாப்பதற்காக என்ற அடிப்படையில் சீனா ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கிறது

ஆக்கிரமிப்பின் அஸ்திவாரம் தான் அமெரிக்க ராணுவம்

அமெரிக்க ராணுவம் உலகம் முழுவதும் 860 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களையும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் அமர்த்தி இருக்கிறது. உலகத்திலேயே அதிகமான அளவு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது அமெரிக்க ராணுவம்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க விசுவாசிகள், அமெரிக்க ரசிகர்கள் அல்லது ஜனநாயகம் பேசக்கூடிய கனவான்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சுருக்கமான பட்டியலை தருகிறேன் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அமெரிக்கா மற்ற நாடுகளில் தலையிட்ட நிகழ்வுகள் இங்கே கொடுக்கப்படுகிறது

 

ஈரான்: 1946 சீனா: 1946 - 1949 கிரீஸ்: 1947 - 1949இத்தாலி: 1948 பிலிப்பைன்ஸ்: 1948 – 1954 கொரியா: 1950 – 1953 ஈரான்: 1953 வியட்நாம்: 1954 குவாத்தமாலா: 1954 லெபனான்: 1958 பனாமா: 1958 ஹைட்டி: 1959 காங்கோ: 1960 வியட்நாம்: 1960 – 1964 கியூபா: 1961 கியூபா: 1962 லாவோஸ்: 1962 ஈக்வடார்: 1963 பனாமா: 1964 பிரேசில்: 1964 வியட்நாம்: 1965 – 1975 இந்தோனேசியா: 1965 காங்கோ: 1965 டொமினிகன் குடியரசு: 1965 லாவோஸ்: 1965 - 1973கானா: 1966 குவாத்தமாலா: 1966 – 1967 கம்போடியா: 1969 – 1975 லாவோஸ்: 1971 – 1973 சிலி: 1973 கம்போடியா: 1975 அங்கோலா: 1976 – 1992 ஈரான்: 1980 லிபியா: 1981 எல் சால்வடார்: 1981 – 1992 நிகரகுவா: 1981 – 1990 லெபனான்: 1982 – 1984 கிரெனடா: ​​1983 ஹோண்டுராஸ்: 1983 – 1989 ஈரான்: 1984 லிபியா: 1986 பொலிவியா: 1986 ஈரான்: 1987 – 1988 லிபியா: 1989 பிலிப்பைன்ஸ்: 1989 பனாமா: 1989 – 1990 லைபீரியா: 1990 ஈராக்: 1990 – 1991 ஈராக்: 1991 – 2003 ஹைட்டி: 1991 சோமாலியா: 1992 – 1994 யூகோஸ்லாவியா: 1992 – 1994 போஸ்னியா: 1993 – 1995 ஹைட்டி: 1994 – 1996 குரோஷியா: 1995 ஜயர் (காங்கோ): 1996 – 1997 லைபீரியா: 1997 சூடான்: 1998 ஆப்கானிஸ்தான்: 1998 ஈராக்: 1998 யூகோஸ்லாவியா: 1999 மாசிடோனியா: 2001 ஆப்கானிஸ்தான்: 2001ஈராக்: 2003 ஈராக்: 2003-தற்போது வரை ஹைட்டி: 2004 சிரியா: 2011-தற்போது வரை உக்ரைன்: 2014-தற்போது வரைவெனிசுலா: 2026 ஈரான்: 2026

சீன ராணுவமும் அதன் கட்டமைப்பும்

சீன மக்கள் விடுதலைப்படை தனது நாட்டு பாதுகாப்பை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட ராணுவம் ஆகும். அமெரிக்க ராணுவ வரலாறு என்பது ஆக்கிரமிப்புக்காகவே உருவாக்கப்பட்ட ராணுவம் ஆகும். இன்றைய சீனாவை சுற்றி 30க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அமெரிக்கா அமைத்துள்ளது. அதாவது சீனாவை சுற்றி இருக்கக்கூடிய தீவுகளில் இந்த ராணுவ தளங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு தீவு சங்கிலி வலை அமைப்பு என்று பெயர். குறிப்பாக ஜப்பான் தென்கொரியா குவாம் பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட ராணுவ தளங்கள் சீனாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஆகும். சீனாவின் கடல் சார் செல்வாக்கை கட்டுப்படுத்த முதல் தீவு சங்கிலியாக ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள ராணுவம் செயல்படுகிறது. இரண்டாவது தீவு சங்கிலியாக குவாம், பலாவ் தீவுகள் இருக்கின்றது. இந்த தளங்கள் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

சீன ராணுவம் அமெரிக்காவைப் போல் உலகை ஆக்கிரமிப்பதற்காக அல்லாமல் தனது நாட்டைச் சுற்றி இருக்கக்கூடிய அமெரிக்க படைகளை எதிர்கொள்வதற்கு தேவையான வலுவான வன் பொருட்களை சுற்றி அதன் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக  தனது இராணுவத்தை முழு சக்தியுடன், அமெரிக்கா உட்பட எந்த சக்தி தாக்கினாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான நவீன திறன்களுடன் சீன ராணுவம் தகவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானை தாக்குவதற்காக அமெரிக்கா அந்த பிராந்தியங்களில் தளங்களை அமைத்தது, தளவாட அமைப்புகளை உருவாக்கியது. வெடி மருந்து கிடங்குகள், எரிபொருள் கிடங்குகள், வான்வழி தாக்குதல் போன்ற திட்டங்களை அமெரிக்கா அமைத்துக் கொண்டது. இதே பிராந்தியத்தில் அரசியல் ரீதியாக சவுதி அரேபியா, ஜோர்டான், பஹரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு ஈராக்,சிரியா போன்றவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

இதை தடுக்க வேண்டும் என்றால் இதற்கு சமமான அளவில் பிராந்திய முழுவதும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சீனா தன் நாட்டு மக்களை பட்டினியில் தள்ளி, உலகத்தை பதட்டமாக வைத்திருக்கும் ராணுவ போட்டிக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது இல்லை .சீனாவின் வெளியுறவு கொள்கை இப்படி உருவாக்கப்பட்டதல்ல.அமெரிக்காவை போல் சீனாவும் செய்யுமானால் ஒரு மோசமான நாடாகத்தான் இருக்க முடியும்.

அமெரிக்கா தற்பொழுது ரஷ்யா மீதும் சீனா மீதும் நேரடி போரை நடத்த முடியாது. எனவே தான் ஈரான் மீது தன்னுடைய நேரடி போரை நடத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா சீனாவைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது. அதன் பொருளாதார வளர்ச்சி நிலை கூட ராணுவ ரீதியிலான சதிகள் என்று முத்திரை குத்த தொடங்கியிருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் போஸ்ட் ஒரு விரிவான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பு அமெரிக்காவில் இருக்கக்கூடிய 19 ராணுவ தளங்களுக்கு அருகாமையில் சீனா சொந்தமாக விவசாய நிலங்களை வாங்கி குவிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று எழுதியுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வாய் வரை உள்ள 19 இராணுவ தங்களை அடையாளப்படுத்தி வரைபடங்களுடன் அந்தப் பத்திரிக்கை செய்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பல ராணுவ தளபதிகள் இது மூலோபாய இடங்களுக்கு அருகாமையில் இருப்பதால் ஆபத்தானது என்று இப்பொழுது அறத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்க ராணுவத் திறன்கள், இயக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்வதற்காக சீனர்கள் இந்த விவசாய நிலத்தை பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்துவார்கள் என்று பிதற்றுகி றார்கள். சீனர்கள் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்ட தான் இந்த விவசாய நிலங்களை வாங்குகிறார்கள். தைவானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நகர்ந்தால் அவற்றை அறிந்து கொள்ள கூடிய அளவில் சீனாவின் இந்த நிலங்கள் பயன்படும் என்று தெரிவிக்கிறார்கள். நிலம் வாங்கியவர்கள் எல்லாம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சீனர்கள் காற்றாலை பண்ணையாக நிலத்தை பயன்படுத்து கின்றனர், உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள தரவுகளின் படி அமெரிக்க விவசாய நிலத்தில் சீன முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பது 3,49,442 ஏக்கர் மட்டுமே. அமெரிக்காவில் வெளிநாட்டுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சீனர்களின் மொத்த பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த அமெரிக்காவையே வாங்கி விட்டதாக அலறுகின்றனர். முப்பதாயிரம் ஒற்றர்கள் உள்ளே புகுந்து விட்டார்கள், உழவு பலூன்களை பறக்க விடுகிறார்கள் அதிக பணம் கொடுத்து ராணுவ தளங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களை வாங்குகிறார்கள் என்று சீனாவுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் சோவியத்தில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் உலகப் பொருளாதார அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் அரசியல் செல்வாக்கின் காரணமாக சோவியத் ஒன்றியத்தை விட இன்னும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று சீனாவை இலக்கு வைத்து தாக்குதலை கொடுத்திருந்தனர்.

எது எப்படியோ சோவியத் நாட்டின் அடிப்படையில் சீனா இல்லை என்பதையும் சீனாவின் உத்திகள் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவற்றை ஒழிக்க நினைக்கும் அமெரிக்காவை எதிர்த்த புதிய உத்திகள் மூலம் எதிர்கொள்வது என்பதை வெளிப்படுத்துகிறது. நான் மேலே குறிப்பிட்ட நிலப்பிரச்சனை ஒரு சிறு பகுதி மட்டும்தான். இன்னும் ஏராளமான செய்திகள் இதற்குள்ளே இருக்கிறது. எனவேதான் அமெரிக்காவின் இலக்கு சீனாவும் ரஷ்யாவும் என்பதை இந்த யுத்தத்தின் மூலமாக புரிந்து கொள்ள முடியும். சீனா ஹாங்காங் பகுதியை பிரிட்டனின் ஆக்கிரமிப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு கடைப்பிடித்த அதே த்தியை சீனா மீண்டும் கடைப்பிடிக்கும் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள் என்பது திட்டவட்டமானது.

ரஷ்யாவும் சீனாவும் முடிந்தவரை தங்களின் சொந்த திறன்களை மிக வேகமாக விரிவுபடுத்தி வருகிறார்கள். அமெரிக்கா உலகை எளிய வகையில் கபளீகரம் செய்து விடலாம் என்பதை டுத்து வருகிறார்கள். இதற்கு உக்கரைன், தைவான் போன்ற நாடுகளை குறிப்பிட்டாலும் ஈரானின் எதிர் தாக்குதல் சாட்சியமாக இருக்கிறது.

எனவே சீனா வேடிக்கை பார்க்கிறது நேரடி யுத்தத்தில் இறங்க வேண்டும் என்பதெல்லாம் அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாகத்தான் சென்று முடியும் என்ற அம்சத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அ.பாக்கியம்

 

தலாய் லாமா ஒரு நிலப்பிரபு

 

நேர்காணல் : பீட்டர் துரைராஜ்

காக்கைச் சிறகினிவே பிப்ரவரி 2026


அ.பாக்கியம்

வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை, நானே மகத்தானவன் போன்ற நூல்களை எழுதியுள்ள அ.பாக்கியம், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். சீனா பற்றி, tamilmarx.org என்ற இணையதளத்தில், 52 வாரங்கள், ஒரு தொடரை எழுதி முடித்துள்ளார். 'சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடும்' என்ற நூல் வெளிவர உள்ளது. சீனாவின் பல பரிமாணங்களை அதில் தொகுத்துள்ளார். பேரரசு காலத்தில் சீனா, அந்நியப் படை எடுப்புகள், திபெத் வரலாறு, தொழில் வளர்ச்சி, வறுமை ஒழிப்பில் சீனாவின் சாதனை போன்ற பலவற்றை நம்மிடம் பேசினார். எந்தக் குறிப்புகளும் இன்றி, மடை திறந்த வெள்ளம் போல அவர் பேசியதை இந்த நேர்காணலில் பீட்டர் துரைராஜ் பதிவு செய்துள்ளார்.

கே:  சீனா பற்றி எழுதவேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?

ப : இந்தியா - சீனா ஒப்பீடு என்பது. தற்போதைய காலக்கட்டத்தில் அவசியமான ஒன்று. சீனாவில் சேரிகளே இல்லை என்ற ஒரு செய்தியை இணையத்தில் படித்தேன். இதனைத் தொடர்ந்து சீனாவில் ரியல் எஸ்டேட் பிரச்சினை, வீட்டு வசதி போன்றவைகள் குறித்து ஓரிரு கட்டுரைகள் எழுதினேன். அதைப் படித்த tamilmarx.org இணையத்தின் ஆசிரியர், சீனா பற்றி, ஒரு தொடரை எழுதவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக எழுத வேண்டி நேரிட்டது.

கே: சீனா பற்றிய விவரங்களை மிக விரிவாக எழுதி இருக்கிறீர்களே! இதற்கான விவரங்கள் எப்படி கிடைத்தன?

ப: மாவோ, கலாச்சார புரட்சி, சன் யாட் சென், நெடும் பயணம் என சீனாவின் நவீன வரலாறை ஏற்கெனவே படித்து இருக்கிறேன். 1971ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலாளராக ஹென்றி Aஸ்ஸிங்கர் இருந்த காலத்தில் சீனாவோடு அமெரிக்க உறவுகள் மேம்பட்டது. ஹென்றி கிஸ்ஸிங்கர் பலநாடுகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர். ஆனால் சீனாவின்

 

சந்தை மற்றும் அரசியல் ரீதியாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டார். அவர் எழுதிய 'சீனாவைப் பற்றி' (On China) என்ற புத்தகத்தைப் படிக்கத் துவங்கி அடுத்தடுத்த புத்தகங்களை நோக்கி நகர்ந்தேன். சீனாவின் பண்டைய வரலாறை சுவாரசியமாக விவரித்து இருப்பார்.

சீனாவின் மீது எந்த நாடுகளும் போர் தொடுத்ததில்லை. அதே போல சீனாவும் மற்ற நாடுகளை ஆக்கிரமிப்பு செய்ததில்லை. சீனா தனித்தே செயல்பட்ட நாடு. எனவே தமது தேவையைத் தாமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய தேவை சீனாவிற்கு ஏற்பட்டது. இதனால் சாதகங்களும் உண்டு பாதகங்களும் உண்டு. இவையெல்லாம் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்தபின்பு, சீனாவின் பண்டைய வரலாறை படிக்க ஆரம்பித்தேன். எழுத்து, பட்டு, நீர் இறைக்கும் இயந்திரம், வெடி மருந்து எனப் பல கண்டுபிடிப்புகளுக்குத் தாயாக சீனா இரு இருந்திருக்கிறது. அதன்பிறகு தொடரை எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. உடனடியாக எழுத ஒப்புக்கொண்டு விட்டேன்.

கே : சீனாவை நீங்கள் எப்படிடபார்க்கிறீர்கள்?

கிரேக்க நாகரிகம் எனப் பழம்பெரும் சுமேரிய நாகரிகம் எகிப்து நாகரிகம், நாகரிகங்களோடு மஞ்சள் நதி நாகரிகம் இருந்திருக்கிறது. சீனாவிடம் பெரிய கப்பல்கள் இருந்திருக்கின்றன. மற்ற நாடுகளுக்கு சீனா பொருட்களை விற்று அல்லது நன்கொடையாகக் கொடுத்து உறவைப் பேணியுள்ளது. அதன் தொடர்ச்சிதான் இன்றும் அங்கு நிலவுகிறது. அங்கு மத மோதல் இல்லை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நிலவுகிறது. சீனாவில் 58 தேசிய இனங்கள் உள்ளன. அதில் 90% மக்கள் ஹான் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். மற்ற 55 க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைச் சார்ந்த 10 % மக்கள் உள்ளன. சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை மதிப்பது என்பது அவர்களின் ஒரு திட்டமாக உள்ளது. எனவே அங்கு மக்களிடையே மோதல் இல்லை மாவோ நெடும்பயணம் சென்றபோது பல்வேறு இன மக்களைச் சந்தித்து, நம்பிக்கையூட்டி அவர்களை உள்ளடக்கியே வெற்றி பெற்று இருக்கிறார். 99 % நாடுகள் அமைதியாகவே இணைந்தன.சிறு தேசிய இனங்கள், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை சீனா கவனத்துடன் மதிக்கிறது. சீனா பெரிய நாடு, அதன் எல்லைக்கோட்டில் இந்தியா, நேபாளம், தாய்லாந்து, பர்மா, வட கொரியா, மங்கோலியா, வியத்நாம் போன்ற 14 நாடுகள் உள்ளன. எனவே புவிசார், அரசியலில் சீனா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடு.

கே: சீனாவின் வறுமை ஒழிப்புத் திட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

:பொருளாதார வளர்ச்சி ஏற்படும்போது ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பது தவிர்க்க இயலாது என்று மற்ற நாடுகள் சொல்லி வருகின்றன. இது பொய் என்பதை சீனா நிரூபித்து உள்ளது. சீனா வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும், திறப்புக் கொள்கையை (Open door policy) கடைபிடித்ததும் மக்கள் நகரங்களை நோக்கி வந்தார்கள். எனவே நகரம் - கிராமம் இடைவெளி ஏற்பட்டது. 1986 இல், வறுமை ஒழிப்புத் திட்டம் தொடங்கி, பத்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிறகு அதனை ஆய்வு செய்து 1994 முதல் 2000 வரை ஒரு திட்டம், அதற்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு நடந்தது. பிறகு 2011 - 2020இல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.

உணவு, உடை, மருத்துவம், கல்வி, இருப்பிடம்,அனைத்தும் இருக்க வேண்டும். 2011 ல் ஒரு வேலைவாய்ப்பு, இணைய வசதி என நபருக்கு 2300 யுவான் மாதம் கிடைத்தால் வறுமைக்கோட்டிற்கு மேலானவர் என வரையறை செய்தனர். (ஒரு யுவான் என்பது 13 ரூபாய்க்குச் சமம் வறுமைக் கோட்டிற்கான அளவீட்டை வசதிகளுக்கு ஏற்ப, அவ்வப்போது உயர்த்துகின்றனர். வறுமை ஒழிப்பிற்கான அளவுகோல்களை அந்தந்த மட்டங்களில் உள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் சீனாவில் வறுமை இல்லைஎன்பதை ஐநா அவை அங்கீகரித்துள்ளது

கே: திபேத் பிரச்சினையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ப: உலகத்தின் கூரை என்று சொல்லப்படும் திபெத் சீனாவில் ஜீசாங் தன்னாட்சி பிரதேசம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. சுமார் 15,000 அடி உயரத்தில் இருக்கிறது. 20க்கும் மேற்பட்ட ஆறுகள் இங்கிருந்து உற்பத்தி ஆகின்றன. பத்து நாடுகளுக்கு மேல் 100 கோடி மக்களுக்கு நீராதாரம் இங்கிருந்துதான் கிடைக்கிறது. திபெத்தை ஆசியாவின்நீ கோபுரம் என்று அழைப்பார்கள். எனவே புவிசார் அரசியலில் திபெத் முக்கிய இடமாக ககுதப்படுகிறது. இடம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அங்கு இயற்கை, கனிம, நீர் வளங்களும் உள்ளன. இந்தியாவில் பாயும் பிரம்மபுத்ரா நதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. எனவே நீர்மின்சாரம் அதி அளவில் உற்பத்தி ஆகிறது; இதனால் கரிமத்தினால் ஏற்படும் மாசு தடுக்கப்படுகிறது. செமிகண்டக்டர் உருவாக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் இங்கு கிடைக்கிறது. திபெத்தில் இருந்து ஷாங்காய் வரை நெடுஞ்சாலை போட்டுள்ளனர். பயணிக்கும் போது உயிர்வாயு (oxygen), இரயில் வண்டியில் இருக்கும்.

கே: தலாய் லாமா இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து இருக்கிறாரே?

ப : தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல; அவர் ஒரு நிலப்பிரபு. தலாய்லாம் இருந்தது ஒரு அரண்மனையில்தான் அங்கு 10,000 உடைகள் இருந்தன. அவள் குடும்பத்திற்கு பார்லி, பால் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள் ஓராண்டுக்கு 12 கிடைத்தது. அங்குள்ள மக்களில் 95% பண்ணை அடிமைகள் அங்குள்ளமடாலயங்களிலும், நிலப் பிரபுகளிடமும் எந்த உரிமைகளும் இன்றி வேலை செய்தவர்கள். அரண்மனையில் இருந்த பொருட்களை, புரட்சிக்குப் பிறகு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்கள். அதில் அடிமைகளுக்கு தண்டனை வழங்கிய விநோதமான ஆயுதங்களும் இருந்தன. புரட்சி நேரத்தில், 1950 களில், 17 அம்ச திட்டம் போட்டு, பேசி திபேத்தை இணைத்தார்கள். அங்குள்ள மக்கள் போன் என்று சொல்லும் பூர்வீக மதத்தை கடைபிடித்தனர்.திபெத்திய பெளத்தம் இதர பௌத்தப் பிரிவுகளிலிருந்து வேறுபட்டது. மதம் சார்ந்த விஷயம் என்பதால் அரசாங்கமும் தொடர்ந்து நிதானமாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பொழுது அங்குள்ள மக்கள் நன்றாக உள்ளனர்.

திபேத்தின் எல்லைகளாக நேபாளம், பூடான், இந்தியா, மியான்மர் ஆகிய நாடுகள் உள்ளன. எனவே திபேத்தில் அரசியல் செய்வதன் மூலம் சீனாவிற்கு நெருக்கடி தரலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதனால்தான், தலாய் லாமாவிற்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஆண்டுதோறும் 1,80,000 டாலர் கொடுத்தது. இந்த வெளிநாட்டு நன்கொடை பற்றி இந்தியாவும் கேட்கவில்லை. உலகில் பௌத்த மதத்தை கடைபிடிக்கும் இலங்கை, மியான்மர் மங்கோலியா போன்ற நாடுகள் கூட தலாய்லாமாபற்றிக் கவலைப் படுவதில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் திபேத் விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு இதுபற்றி எந்தப் புகாரும் இல்லை. அங்கிருந்து வெளியேறிய திபெத்தியர்கள் அங்கு திரும்பி வருகின்றனர்.

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் தலாய்லாமா. ஒரு ஆன்மீக தலைவர் என்ற முறையில் நேரு அனுமதி அளித்தார். அதற்கு அடுத்து மைசூருக்கு அருகே உள்ள பைலே குப்பை என்ற இடத்தில் சுமார் 15,000 ஏக்கரில் தலாய்லாமா உடன் வெளியேறியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு சில பிரிவுகளும் மோதல்களும் உண்டு, இவர்களையும் சீன எதிர்ப்புச் சக்திகள் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

திபேத் சீனாவின் ஒரு பகுதி என்பதை அதிகாரப்பூர்வமாக பெரும்பாலான நாடுகள் மறுக்கவில்லை. 1230ஆம் ஆண்டுகள் யுவான் திபேத் சீன ஆட்சியின்கீழ் இருந்து வருகிறது வம்ச ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து 1622ஆம் ஆண்டு ஐந்தாவது தலாய்லாமாவிற்கு அப்போதைய அரசர் சிறப்புப் பட்டத்தையும் வழங்கி உள்ளூர் அரசு தலைவராகவும் அனுமதித்தார். பதின்மூன்றாவது தலாய்லாமா (1878 - 993) காலகட்டத்தில் சீனாவில் மஞ்சு வம்சம் பலவினமடைந்த பொழுது தன்னை தனி அரசராக அறிவித்துக் கொண்டார். மீண்டும் 1911 ஆம் ஆண்டு சன்னியாட்சன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு தலாய்லாமாவின் அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டு சீனாவுடன் இணைக்கப்பட்டது. உள்ளூர் அரசாங்கத் தலைவர் தலாய் லாமா என்ற பதவி மட்டும் தொடர்ந்தது. பிரபலமான வரலாற்று ஆசிரியர் எழுத்தாளர் திபேத்திற்கு 1959ஆம் ஆண்டு பயணித்த அண்ணா லூயிஸ் ஸ்ட்ராங் தனது புத்தகத்தில் (when serf stood up in Tibet) எழுதியுள்ளார்.

1954 நேரு சீனாவிற்ச்கு சென்று வந்த பிறகு பஞ்சசீலக் கொள்கையிலும் சரி, 1988ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி சீனாவிற்குச் சென்றது. 2003ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் சீனாவிற்குச் சென்று திபேத் சீனாவின் பகுதி என்பதை எழுத்துப் பூர்வமாகக் கையெழுத்துப் போட்ட நிகழ்வும் நடந்துள்ளது. 'திபேத் : தாலய் லாமா முதல் ஜி ஷின் பிங் வரை' என்ற வரவிருக்கிற எனது நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.

கே : சீனாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப : சோவியத் ஒன்றியம் போல, மற்ற நாடுகளின் விவகாரங்களில், சீனா நேரடியாகத் தலையிடுவதில்லை. வெற்றி வெற்றி என்ற அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்து, அதன் மூலமாக நல்லெண்ணத்தைப் பெற நினைக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளோடு வர்த்தக உறவு நன்றாக வைத்துள்ளனர். ஈராக் நாட்டிற்கு பள்ளி, மருத்துவமனைகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இதனால் சீன எதிர்ப்புக் குறையும் என்று நினைக்கின்றனர். இப்போது சீனாவில் சீ ஜிங்பிங் தலைவராக இருக்கிறார். இந்தியா-

 

குவைத்- ஐரோப்பா வழியாக, 150 நாடுகளை இணைக்கும் நெடிய சாலை (Belt and Road போட்டு வருகின்றனர். டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கி அதற்கு விடுக்கும் வரியைத் தயக்கமின்றி எதிர்க்கின்றனர். ஆதரவு அளிக்கிறது.

கே: சீனாவின் தொழில் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப:சீனாவில் போடப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலக்கெடுவில் முடிக்கிறார்கள். உலகின் முக்கியமான 10 துறைமுகங்களில், ஏழு சீனாவில் உள்ளன. தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் முதல் இடத்தில் உள்ளனர். அடுக்குமுறை விவசாயம் என்பதன் மூலம் ஒரே இடத்தில் பல அடுக்குகளில், சூரியஒளி மூலம் விவசாயம் நடக்கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சம்பளம் தருகிறார்கள். அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் சீனா செல்கிறார்கள். போடப்படும் திட்டங்களின் அமலாக்கத்தை கவனிக்க 56 இலட்சம் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. போராட்டங்கள் நடத்தவும் அனுமதி உண்டு.

கே : அரசியல்வாதியான உங்களுக்கு, குத்துச்சண்டை வீரன் முகமது அலியைப் பற்றி எழுத வேண்டும் ஏன் தோன்றியது?

ப: நான் சிறுவயதில் கால்பந்து, கைப்பந்து விளையாடி இருக்கிறேன். 1982ஆம் ஆண்டு முதல் தவறாது, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி பார்த்து வருகிறேன். குத்துச்சண்டை வீரன் முகது அலி இறந்தவுடன், Jacobin.com என்ற இதழில் முகமது அலியின் மறைக்கப்பட்ட வரலாறு என்ற கட்டுரையை வாசித்தேன். வெள்ளை இன வெறிக்கு எதிராகக் குத்துச்சண்டையை முகமது அலி பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் விளைவாகத்தான் 'நாளே மகத்தானவன்' நூலை எழுதினேன். இந்த நூலுக்கு நிறைய விமர்சனக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. பாராட்டப்பட்டு வருகிறது.

கட்டுரையாளர்: எழுத்தாளர்

 

 

 

 

மார்க்சிச நோக்கில் மதங்களும், சீன அணுபவங்களும்


வே.மீனாட்சிசுந்தரம்

 

தோழர் பாக்கியமெழுதிய ”சீன சோசலிசத்தில் மதங்களும் வழிபாடுகளும் என்ற புத்தகம், திரும்ப, திரும்ப படிக்கவேண்டிய புத்தக பட்டியலில் வைக்க வேண்டிய ஒன்றாகும்,.ஏன்?

இந்த புத்தகத்தின் துவக்கத்தில் “ சீன கம்யூனிஸ்ட் கட்சி  மதம்: மார்க்சிய நோக்கும், அமுலாக்கமும்” என்ற பகுதியை வாசிக்கிற ஒவ்வொரு முறையும் ஆதி மானுடத்தின் கற்பனைத் திறனையும்  கடவுள் கோட்பாடுகளின் விசித்திரங்களையும் மேலும், மேலும் அறிய ஆர்வம் பிறக்கிறது. 

ஒரு கட்டத்தில் மக்களுக்கு ஏக்க பெருமூச்சாகவும், அடிமை புத்தியை (பக்தி உணர்வை) மக்களுக்கு புகட்ட மன்னர்களுக்கு உளவியல் ஆயுதமாகவும்  இருந்த மதம் ,முதலாளித்துவ கட்டத்திலே உழைக்காமலே சொத்துகுவிக்கும் முறையை புனிதமாக கருதவைக்கும் பண்பாட்டை புகுத்தியது, சோசலிச கட்டத்தில் உழைக்காமல் சமூக உழைப்பு சக்தி உருவாக்குபவகளை சொந்தமாக்க முயலும் திருட்டு பண்பாட்டிற்கு  எப்படி அடக்குமுறை சட்டமில்லாமலே முடிவு கட்டப்படுகிறது என்பதை இப்புத்தகம் கச்சிதமாக பதிவு செய்கிறது.

            கடவுள் கோட்பாடுகள் நாட்டுக்கு நாடு வேறுபடலாம், ஜெருசிலேத்தில் பிறந்த யூத,கிருத்துவ .இஸ்லாமி மார்க்கங்கள் இந்தியாவில் பிறந்த பவுத்தம் இந்த நான்கு மட்டுமே உலகளவில் பரவின. . இவைகள் சீனாவில் பரவியது பற்றியும் சீன மண்ணில் உதித்த 4 மார்க்கங்கள் பற்றியும்    “சீனப்பண்புகளும், மதமும்” என்ற தலைப்பில் உள்ளவைகள்  பிற மத கோட்பாடுகளுக்கும் சீன மார்க்கங்களுக்கும் உள்ளவேறுபாட்டை காட்டுகிறது.  சீனக் கடவுள்களுக்கென கோவில்கள்  கிடையாது. வந்தேறிய மதங்களே  தொழுகை இடங்கள் கட்டின. வந்தேறிய மதங்கள் கட்டிய தொழுகை இடங்களை  கம்யூனிஸ்ட்கட்சி ஆட்சி எப்படி பேணிவருகிறது என்பதை வாசிக்கிற பொழுது   தொழுகை இடங்கள் அந்நியமென்று இடிக்கிற பண்பு இந்தியாவைத் தவிற வேறு எங்குமில்லை என்ற உண்மை நம் மனச்சாட்சியை உறுத்துகிறது   வரலாற்று தடையங்களாக அரசே பேணுவது  வர்த்தக நோக்கில் இவைகளை பயன்படுத்தும் முயற்சிக்கு நல்ல தடையாகும்.

1949ல் சீன புரட்சிக்குப் பிறகு மதங்கள் பற்றிய பார்வை மார்க்சிச- லெனினிச பார்வையோடு உருவாக்கப்படுகிறது..  மதங்களின் பழமை பண்பாடு, சம்பிரதாயம் பழக்க வழக்கமென 4 அம்சங்களில்  காலத்திற்கு ஒவ்வாதவைகளையும் பேண வேண்டிய மரபுகனையும் தீர்மாணித்து ஒரு கலாசார புரட்சிக்கு இளம் தலைமுறையினரை கட்சி தயார் செய்து மகத்தான வெற்றி பெற்றதை கடைசி பகுதி விளக்குகிறது. ஒரு சமூகத்தில் சுயலமும், பொதுநலமும் முரன்படாமல் இருக்க வேண்டுமானால் தனி மானுடத்தின் ஒத்துழைக்கும் பண்பாடு பேணப்படவேண்டும்,அதற்கு கலாசார புரட்சி அவசியம் என்பதை சீன அணுபவம் உணர்த்துகிறது

இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன்,  காலத்திற்பேற்ப மாற மறுக்கும் தெய்வங்களை சோம்பேறியாக கருதும் இந்து மார்க்கங்கள் ஒரு அறிவியல் பார்வை கொண்ட கலாசார புரட்சி மூலமே பிற மதங்களைப்போல்  தன்னை சீர்திருத்திக் கொள்ளும், அதற்கு அவசியமான இளம் கம்யூனிஸ்ட் படைய திரட்ட இப்புத்தகம் கையேடாகும்.

63 இனக் கல்வியின் மாற்றமும் முன்னேற்றமும்


அ.பாக்கியம்

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற புதிய ஜனநாயக புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு தோழர் மாசேதுங் தலைமையில் நிறுவப்பட்டது. அதுவரையில் இருந்த இனச் சிறுபான்மையினருக்கான கல்வி முறை என்பது, மத கருத்துக்களாலும், மத நிறுவனங்களின் ஆதிக்கத்தாலும் நடத்தப்பட்டது. ஆட்சியில் இருந்த நிலப்பிரப்புத்துவ அரசமைப்புகளும் தங்களது நலன்களுக்கு ஏற்ற வகையிலும், தங்களது சித்தாந்தங்களை உயர்த்தி பிடிக்கக் கூடிய முறைகளிலும் சிறுபான்மை மக்களின் கல்வி கட்டமைப்பை உருவாக்கியது மட்டுமல்ல பயன்படுத்தவும் செய்தார்கள்.

ஒருங்கிணைப்பின் முகவராக இனக்கல்வி

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டவுடன் நாடு முழுவதும் கல்வி முறையை ஒழுங்குபடுத்தியதின் ஒரு பகுதியாக இனச் சிறுபான்மை மக்களின் கல்விக்கும் அதிக முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே  கொடுத்தது. அதற்கான நிறுவன அமைப்புகளை வலுவான முறையில் ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில நூற்றாண்டுகளாக தொடர்ந்து சீன இனச் சிறுபான்மை மக்களின் கல்வியில் ஆதிக்கம் செலுத்தி வந்த மத அடிப்படையிலான கல்வி முறைகள் செல்வாக்கு இழக்க ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை இந்த செல்வாக்கு இருந்ததும், அதன் பிறகு படிப்படியாக சீன மக்கள் குடியரசின் முயற்சியினால் கல்வி மதச்சார்பற்ற கல்வியாக மாற்றப்பட்டது என்பதையும் அறிய முடியும்.

இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கான முயற்சியின் மூலமாக,  அது வரையிலான, தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல்களை தவிர்ப்பதும், வரலாற்று ரீதியாக தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்த இனக் குரோதங்களை குறைப்பதும் கல்வியின் நோக்கமாக மாற்றினார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் பெரும்பான்மை இனமான ஹான் இனத்திற்கும் இனச் சிறுபான்மை மக்களுக்குமான ஒற்றுமை மேலோங்கியது. இந்த ஒற்றுமையின் மிகப்பெரும் முகவராக கல்வி செயல்பட்டது. தற்காலம் வரை கல்வி என்பது இன சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கை உருவாக்கிய பொழுது மேலே குறிப்பிட்ட அம்சங்களுடன் கல்வி என்பது எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதற்கான மிக முக்கியமான கருவியாகும் என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி வழிநடத்துகிற புரட்சிகரமான செயல்முறைகளுக்கும் சோசிலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்கும் கல்வி வழி வகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சீன மக்கள் குடியரசு கல்விக் கொள்கையை வடிவமைத்தது.

மதிப்பீடுகளும் முதற்கட்ட முயற்சிகளும்.

இனச் சிறுபான்மை கல்விக்கான தேசிய மாநாடு நடத்துவதற்கு முன்பான சில முயற்சிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. நிலைமைகளை முதற்கட்டமாக ஆய்வு செய்து இனச் சிறுபான்மை கல்விக்கான மூன்று முக்கிய அம்சங்கள் இருப்பதை அறிந்து கொண்டார்கள்.

முதலாவதாக, ஹான் இனம் தவிர மற்ற 55 இன சிறுபான்மையினர்கள் சீனாவில் இருந்தது மட்டுமல்ல, ஒவ்வொரு இனச் சிறுபான்மையினருக்கும் அதன் சொந்த கலாச்சார பண்புகள் வேரூன்றி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்தார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அதிகமாக வாழுகின்ற இனச் சிறுபான்மையினர் மத்தியில் வேறு பல சிறிய இனக்குழுக்களும் வாழுகின்றனர். குறிப்பாக ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் இன இஸ்லாமிய மதத்தை வழிபடக்கூடிய மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அதே நேரத்தில் இந்த மாகாணத்தில் 13-க்கும் மேற்பட்ட சிறிய இனக் குழுக்கள் வேறுபட்ட கலாச்சாரம், மொழிகள், மதங்கள் ஆகியவற்றுடன் நீண்ட காலமாக வாழ்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்தார்கள். குறிப்பாக இங்கு வாழக்கூடிய இனக்குழுக்களில் ஏழு இனக்குழுக்கள் முஸ்லிம் மதத்தை கடைபிடிக்க கூடியவர்கள். இந்த ஏழு இனக் குழுக்களில் ஐந்து இனக் குழுக்கள் துருக்கிய மொழியை பேசுவார்கள். மூன்று இனக் குழுக்கள் சீனாவின் மேன்டரின் மொழியை பேசக்கூடியவர்கள். ஒரு நாடு அல்ல, ஒரு நாட்டில் உள்ள மாகாணமே பன்மொழி பேசக்கூடிய மக்களைக் கொண்ட இனச் சிறுபான்மை மாகாணமாக இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்தனர்.

இரண்டாவது அம்சம் இனச் சிறுபான்மை மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்ற விஷயத்தை கணக்கில் எடுத்தார்கள். இவர்களின் வாழ்வாதாரம் கடுமையான இயற்கை அமைப்புகளாலும், தொலைதூர எல்லைப் பகுதிகளில் இருப்பதினாலும், பலவீனமான வரலாற்று தளங்களையும், கல்வி முறைகளுக்காக எந்த கட்டமைப்பும் இல்லாத சூழ்நிலையில் அதாவது பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டனர்.

 

மூன்றாவதாக இனச் சிறுபான்மையினர் இதுவரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சிறிதளவுக்கூட பெறக்கூடிய நிலையில் இல்லை. மேலும் தங்களின் பாரம்பரியமான கலாச்சாரத்தை பாதுகாக்க கூடிய நிலைமையிலும் இல்லாமல் இருந்தனர்.

நான்காவது இங்கு இருக்கக்கூடிய பல இன குழுக்கள் அவர்களுக்கு என்று பேச்சு வழக்கு மொழிகளை பயன்படுத்தினாலும் அவற்றுக்கான வரிவடிவங்கள் இல்லை. கல்வி கற்பதற்கான ஆகப்பெரும் தடையாக இது நீடித்தது.

முதலில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன மக்கள் குடியரசும் பேச்சு வழக்குகளுடன் இருக்கக்கூடிய மொழிகளுக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார்கள். அது மட்டுமல்ல ஏற்கனவே வரிவடிவத்தில் போதுமான அளவிற்கு வளர்ச்சி அடையாத எழுத்துக்களையும் சீர்திருத்தி மேம்படுத்தக்கூடிய பணியில் இறங்கினார்கள்.

இக்காலத்தில் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பொதுவான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். வாய்ப்பு கிடைக்கக்கூடிய முறையில் வாசிப்புகளை மேம்படுத்துவதும், எழுத்தறிவை கற்றுக் கொடுப்பதும், கணிதம், எண் கணிதம் போன்றவற்றை கற்பிக்கக் கூடிய முறையிலும் கல்விப் பணியை தொடங்கினார்கள். இனச் சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் பரந்த மேய்ச்சல் நிலப்பகுதிகளில் வாழ்ந்தார்கள். எனவே இவர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்கு சென்று கல்வி போதிக்கக்கூடிய முறையில் ஆரம்ப கட்ட நடமாடும் பள்ளிகளை உருவாக்கினார்கள். இவற்றுடன் கூடவே குளிர்கால பள்ளிகள் மற்றும் இரவு நேர பள்ளிகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மக்கள் குடியரசும் அமைத்தது. இந்த முயற்சியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அவற்றை ஆய்வு செய்யக்கூடிய முறையிலும் முறையான கல்வியை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி அரசும் கட்சியும் நகர்ந்தது.

முதல் தேசிய மாநாடும் அதன் அமலாக்கமும்.

இனச் சிறுபான்மையினர் கல்வி குறித்த தேசிய மாநாடு 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 9 நாட்கள் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெரிய தேசிய இனங்களைச் சேர்ந்த 126 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதினால் இந்த மாநாடு அதிக முக்கியத்துவத்தை பெற்றது. சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனை அமைப்பின் துணைத் தலைவரும், சீன அறிவியல் அகாடமியின் தத்துவம் மற்றும் அறிவியல் துறையின் கல்வியாளராகவும், 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு முதல் கல்வி அமைச்சராகவும், அதன்பிறகு உயர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய மா லூசுன் இந்த மாநாட்டில் இனச் சிறுபான்மை மக்களுக்கான கல்வி அமைப்பை பற்றிய விரிவான தீர்மானங்களையும், திட்டங்களையும் முன்மொழிந்தார்.

இவரது அறிக்கையின்படி இனச் சிறுபான்மையினருக்கான கல்வி முறையில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனை என்பது, போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாதது, தேசத்தின் மறு கட்டமைப்பை உருவாக்கக்கூடிய முயற்சியில் தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள் இல்லாததும், அதைவிட மேலாக தொழிலாளி வர்க்க குழந்தைகளின் கல்வியை தடுக்கக்கூடிய முறையில் அமைந்திருந்த தொடக்கப் பள்ளிகள் ஆகியவையே இனச் சிறுபான்மை மக்கள் கல்வி பெறுவதில் உடனடி தடையாக உள்ளது என்றார். அது மட்டுமல்ல புதிய கல்வி முறைகள் இனச் சிறுபான்மையினர் மத்தியில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும், அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவையும் உருவாக்கக்கூடிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்றும் மாநாடு முடிவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து இனச் சிறுபான்மை மக்களுக்கான கல்விப் பணியை பலப்படுத்துவதற்காக நிர்வாக அமைப்புகள் விரிவுபடுத்தப் பட்டது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய முறையில் பயிற்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. இங்கே மிகவும் முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களை உரிய மரியாதையுடனும் அவர்களுக்கு கல்வியின் மீதும், நாட்டின் மீதும் நம்பிக்கை ஏற்படக்கூடிய முறையில் அணுக வேண்டும் என்று வழி காட்டப்பட்டது. அதே நேரத்தில் தேசிய இனங்களுக்கான சிறப்பு அம்சங்களை, மொழி, கலாச்சாரம், அவர்களின் பொருளாதார உற்பத்தி போன்றவற்றை வளர்க்க வேண்டும் என்றும் செயல் திட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

 

இந்த மாநாட்டின் முடிவின் மங்கோலியர், கொரியர், உய்கூர், கசாக், திபெத் ஆகிய இனக்குழுக்கள் மத்தியில் உள்ள எழுத்து வடிவம் கல்வி கற்பதற்கு தேவையான அளவில் இருந்தது. இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப் பகுதிகளில் தொடக்கநிலை பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும் அனைத்து பாடங்களையும் அவர்களின் தாய் மொழியிலேயே கற்பிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஜின் ஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பாகவும், முதல் கல்வி மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவும் உள்ளூர் மொழியிலேயே கல்வி கற்பிக்கக் கூடிய நடவடிக்கையில் இறங்கினார்கள். இத்துடன் கூடவே புதிய கல்வி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற முறையில் நெகிழ்வான கொள்கையாக அமலாக்கப்பட்டது. இந்த பன்மைத்துவ மொழிக் கொள்கை இனச் சிறுபான்மை மக்களால் வெகுவாக வரவேற்கப்பட்டது. இக்காலத்தில் உலகிலேயே மிகவும் நெகிழ்வான கொள்கையாகவும் இந்த கல்விக் கொள்கை கருதப்பட்டது.

சீன மக்கள் குடியரசின் இடைக்கால அரசியல் அமைப்பின் 53வது பிரிவில் இனச் சிறுபான்மை கல்வி குறித்த கீழ்க்கண்ட வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டது. இனச் சிறுபான்மை பகுதிகளில் உள்ளூர் சுயாட்சி முறைகளை உருவாக்குவது மட்டுமல்ல சிறுபான்மை இன குழுக்கள் தங்கள் மொழிகளை வளர்த்துக் கொள்ளவும், தங்களின் மரபுகள், பழக்க வழக்கங்களையும், மத நம்பிக்கைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும் அல்லது சீர்திருத்திக் கொள்ளவும் முழு சுதந்திரம் இருக்கிறது என்ற அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் இன சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு புதிய நிர்வாகத்தையும் நிறுவியது மட்டுமல்ல புதிய சமூகத்தை உருவாக்குவதற்கான இலக்கையும் தீர்மானித்தார்கள்.

இரட்டைப்பள்ளி அமைப்புகள்

ஒரே மாகாணத்தில் பல்வேறு இன குழுக்கள் வாழும் இடங்களில் இரட்டை பள்ளி அமைப்புகளை உருவாக்கினார்கள். முதல் வகை தேசிய இனப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டது. இவை இனச் சிறுபான்மை மக்களின் தாய் மொழியை பயிற்று மொழியாக கற்பிக்கின்ற பள்ளிகளாகும். இந்தப் பள்ளிக்கூடங்களில் சிறுபான்மை மக்களின் இலக்கியம், அவர்களின் பாரம்பரிய வரலாறு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது. இதற்கான பாட புத்தகங்களை உருவாக்குவதற்கான சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் பாடபுத்தகங்களை வெளியிட்டது. இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாட புத்தகங்களில் சிறுபான்மையினரின் கதைகள், புராண கதாபாத்திரங்கள், வரலாற்று நாயகர்களின் வீரசெயல்கள் போன்றவற்றை அறிமுகப்படுத் தினார்கள்.

இரண்டாவது வகை ஹான்சியாவோ என்று அழைக்க கூடிய பள்ளியாகும். இந்தப் பள்ளிக்கூடத்தில் சீன மொழி மூலமாக பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இனச் சிறுபான்மை மக்கள் இந்த மொழியின் மூலமாக பாடங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தப் பள்ளியிலும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஒட்டுமொத்த சீன தேசத்தையும் அதன் கல்வி அமைப்புகளிலும் ஒரு பகுதியாக இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்களை உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளாக இது அமைந்தது.

இந்த மாகாணங்களில் வாழுகின்ற பெரும்பான்மை ஹான் சீனர்கள் சிறுபான்மை மக்களின் மொழியை கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இனச் சிறுபான்மை தேசிய பள்ளிகளிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கும் இணைந்து வாழ்வதற்குமான ஒரு சூழலை இது உருவாக்கியது. சீனப் பள்ளியில் படிக்கும் இனச் சிறுபான்மையினர் வெளியில் சென்று பணியாற்றுவதற்குமான வாய்ப்பு கிடைத்தது. இவை தவிர இனச் சிறுபான்மை வாழக்கூடிய மாகாணங்களில் சிறப்பு கல்வி நிறுவனங்களையும் இன பல்கலைக்கழகங்கள் அல்லது தேசிய இனங்களுக்கான பல்கலைக்கழகங்கள் போன்றவற்றையும் ஆரம்பித்தார்கள்.

சிறுபான்மை மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேர்வதற்காக முன்னுரிமைக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. சிறுபான்மை மாணவர்கள் வாங்கி இருக்கக் கூடிய மதிப்பெண்களில் கூடுதல் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு உயர்கல்விக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இனக் கல்வியின் முதல் பொற்காலம்

1949 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை சீனாவின் இனச் சிறுபான்மை மக்களின் இனக் கல்விக்கான முதல் பொற்காலம் என்று அழைக்கிறார்கள். 1949 ஆம் ஆண்டு 12 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மத்தியில் கல்வி அறிவு பெற்றவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தனர். 1957ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் முதல் 40 சதவீத வரை அதிகரித்தது.

1950ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மை மாகாணங்களில் 45 தொடக்கப் பள்ளிகளும் எட்டு இடைநிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தது. இது மிக மிக குறைவான எண்ணிக்கை ஆகும். 1965 ஆம் ஆண்டு அதாவது 16 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மூன்று மடங்காகவும் மேல்நிலைப்பள்ளி சேர்க்கைகளில் 8.5 மடங்கும் அதிகரித்தது. கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நான்கு மடங்கை விட அதிகமாக இருந்தது. இதே காலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இனச் சிறுபான்மையினர் தேசிய நிறுவனங்களும் நிறுவப்பட்டது.

1947ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெறுவதற்கு இரண்டு ஆண்டு களுக்கு முன்பு உள்  மங்கோலியா (மங்கோலியாஎன்பது தனி நாடு) தன்னாட்சி பகுதி நிறுவப்பட்டது. 1947ஆம் ஆண்டில் முழு பிராந்தியத்திலும் 4 இனச் சிறுபான்மை நடுநிலைப் பள்ளிகளும், 377 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. மேற்கண்ட 4 நடுநிலைப் பள்ளிகளிலும் 524 மாணவர்களும் 26 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். 377 தொடக்க பள்ளிகளில் 22,600 மாணவர்களும் 912 இன சிறுபான்மை ஆசிரியர்களும் இருந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் மக்களிடம் சென்று களப்பணியில் ஈடுபட்டு மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 1956 ஆம் ஆண்டு இன சிறுபான்மை தன்னாட்சி பிரதேசமான உள் மங்கோலியாவில் மட்டும் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1449 என்ற அளவில் உயர்ந்தது. அதாவது 2.8 மடங்கு அதிகரித்தது. நடுநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு 2.5 மடங்கு அதிகரித்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.

1966ஆம் ஆண்டில் இனச் சிறுபான்மையினர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை உள் மங்கோலியாவில் 2805 என்று அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 1956-ஐ விட 93.6 சதவீதம் அதிகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையும் 2,23,400 என்ற அளவில் அதிகரித்தது இது மேற்கண்ட ஆண்டுகளுடன் ஒப்பிடுகிற பொழுது 82.2 சதவீதம் அதிகமாகும். இனச் சிறுபான்மையினரின் இடைநிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 4.1 மடங்கு உயர்ந்து 72 என்ற அளவில் இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கையும் 26,300 என உயர்ந்தது. இனச் சிறுபான்மை தொடக்கப்பள்ளி  ஆசிரியர்களின் எண்ணிக்கை 1651 ஆகவும், இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 12 000 என உயர்ந்தது. 1956 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிற பொழுது 2.2 மடங்கு மற்றும் 1.45 மடங்கு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

சீனப் புரட்சிக்குப் பிறகு, நீண்ட கால வரலாற்றில் இனச் சிறுபான்மை மக்கள் கற்று வந்த கல்வியில் அடிப்படை மாற்றங்கள் உருவானது. மதசார்பற்ற கல்வியும், அறிவியல் பூர்வமான கல்வியும் முன்னிலைப்படுத்தப்பட்டு பிற்போக்குத்தனமான அம்சங்கள் பலவீனப்படுத்தப்பட்டது.

அ.பாக்கியம்

வியாழன், மார்ச் 05, 2026

தோழர்.தயா உங்கள் வாழ்வும் மரணமும் ஒரு படிப்பினை தான்


 


,----------------------

35 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்த இயக்கப் பயணம், கனிவான நட்பு, உறவுகளைக் கடந்த குடும்ப இணைப்புகள் என அத்தனையும் ஒரு நொடியில் அறுந்து போனது. எங்களை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்து மறைந்து போனாயே

தோழர் அய்யலு அவர்களின் இளைய புதல்வன் விஜயசாரதியின் மரண அதிர்வலைகள் எங்கள் நெஞ்சங்களில் இருந்து நீங்கும் முன்பாக இடியாய் இறங்கி மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டாயே...

மரண ராஜ்ஜியவாசிகளுடன் உரையாடுவது பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதுதான். ஆனால் உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அது ஒரு வடிவம் என்பதால் உன்னோடு உரையாட விரும்புகிறேன்...

ஜனவரி 17ஆம் தேதி நாம் சந்திப்பதினால் நான் எழுதி வெளிவர இருந்த சீன சோசலிசத்தில் மதங்களும் மத வழிபாடுகளும் என்ற புத்தகத்தை எடுத்துவரச் சொன்னீர்கள். நானும் எடுத்து வந்தேன். கலந்துரையாடிவிட்டு மாலை கடந்து சென்றாய் ....

18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி, அதன் பிறகு அறுவை சிகிச்சை சென்னையில் செய்ய வேண்டும் என்ற செய்தியும் கவலை அளிப்பதாக இருந்தாலும், அறுவை சிகிச்சையின் மூலம் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நகர்ந்தேன்...

உங்களின் குடும்பமும் உறவினர்களின் விருப்பப்படி சென்னையில் உள்ள எம் ஜி எம் மலர் மருத்துவமனையில் 22 ஆம் தேதி பரிசோதனை முடித்து, 27 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28ஆம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, பிப்ரவரி 3ஆம் தேதி வீட்டிற்குச் சென்று பிப்ரவரி 10ஆம் தேதி செக்கப் வருகை புரிந்து மிக விரைவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களும் நமது தோழர்களும் மகிழ்ச்சியாக அறிந்து கொண்டு சென்றார்கள்.

எம்ஜிஎம் மலர் மருத்துவமனை தோழர்கள் தென் சென்னை மாவட்ட குழு உறுப்பினர், மயிலாப்பூர் பகுதி செயலாளர் மலர் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் ரவி அவர்களும், தற்போதைய செயலாளர் இன்பரசி மற்றும் விஜியா, இமானுவேல் போன்ற தோழர்களும், தோழமையும் பாசமும் நிறைந்த முறையிலே உங்களை கவனித்துக் கொண்டதை நீங்கள் உணர்வு பூர்வமாக தெரிவித்தீர்கள்.....

 அறுவை சிகிச்சை முடித்த பிறகும் நமது தோழர் விஜயா பணியாற்றக்கூடிய ஏழாவது தளத்திலேயே உங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் தோழர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

மலர் தோழர்கள் குறிப்பாக ரவி உட்பட பணத்திற்கு என்ன செய்வார்கள், இருவரும் முழுநேர ஊழியர்கள் என்று பலரும் உங்களிடம் கேட்காத ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார்கள்.

 அறுவை சிகிச்சை நடந்தால் தோழர் சங்கரி அவர்களும் சுகி அவர்களும் எங்கு தங்குவார்கள், அருகாமையிலே தங்க வேண்டும் என்ற தேவையுடன் அங்கு இருக்கக்கூடிய லாட்ஜை அணுகிய பொழுது பணம் அதிகமாக இருப்பதால் தோழர் ரவி அவருடைய இல்லத்தில் தோழர் சுகி அவர்களையும், மருத்துவமனையின் அருகாமையில் இருந்த தோழர் இமானுவேல் இல்லம் சிறியதாக இருந்தாலும் அங்கு தோழர் சங்கரியையும் தங்க வைத்து கவனித்துக் கொண்டார்கள்.

 காலையும் மாலையும் தோழர் ரவி அவர்கள் உடன் இருந்தார். இது போன்ற தோழர்களின் ஆதரவு பலருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்று என்னிடம் தெரிவித்தாயே தோழா....

தோழர் ராஜப்பா பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கடினமான சூழலில் அங்கு அனுமதிக்கப்பட்ட குணமடைந்தார்.தோழர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு அங்கே இந்த அறுவை சிகிச்சை நடத்தி அதற்கான உதவிகளையும் இந்த தோழர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களின் பாசமும் தோழமையும் நிறைந்த அந்த உணர்வு எல்லையற்றது....

அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிகமான தோழர்களை அனுமதிக்க கூடாது என்பதில் நானும் உறுதியாக இருந்தது மட்டுமல்ல தோழர் ரவி அங்கிருந்து முடிந்தவரை அதை அமலாக்கினார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எஸ் குமார் மற்றும் பத்திரிகையாளர் பெருமாள் போன்றவர்கள் அடிக்கடி வந்த பொழுதும் அவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை.

மாநில குழு உறுப்பினர் தோழர் வனஜா அவர்கள் பல தோழர்களுடன் வந்த பொழுதும் அவர்களை எல்லாம் நிறுத்திவிட்டு வனஜா அவர்களை மட்டும் அனுமதித்தார்.... நீங்கள் அறையில் இருந்த பொழுது உங்களை பாதுகாப்பதில் மருத்துவமனை தோழர்கள் கண்ணும், கருத்துமாக இருந்தார்கள்....

பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 12 மணிக்கு நான் மரண செய்தியை கேட்டவுடன் ரவி அவர்களுக்கு தெரிவித்தேன். அவரும் எழுந்து அதிகாலையில் என்னுடன் வந்து விட்டார். அதன் பிறகு மருத்துவமனை தோழர்கள் மரணத்தை அறிந்து கொண்டு பார்த்து பார்த்து சிகிச்சை அளித்தோமே, பாதுகாப்பாக பார்த்துக் கொண்டோமே இப்படி ஆகிவிட்டது என்று  உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

சிறந்த முறையில் அறுவை சிகிச்சை, தோழர்களின் கவனிப்பும் உங்களை அதிவேகமாக குணமடைய செய்தது. அதுவே உங்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக நம்பிக்கை அளித்து உங்கள் உயிரைப் பறித்து விட்டது. அதீத நடை பயிற்சியும் விரைவில் பணிகளில் இறங்க வேண்டும் என்று உங்கள் ஆர்வமும் எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டது? உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் உங்கள் இணையர் தோழர். சங்கரி அவர்களுக்கும் அந்த நம்பிக்கை வந்தது மட்டும் அல்ல, மற்ற சிலருக்கும் அப்படிப்பட்ட நம்பிக்கை வந்திருப்பதை நான் அறிந்தேன். விரைவான குணமடைதல், அதன் மீது ஏற்பட்ட அதே நம்பிக்கையும் உங்களை எங்களிடமிருந்து பிரித்து விட்டது...

நீங்கள் எந்த அளவு களப்பணியாற்றும் தோழர்களின் உணர்வுகளில் கலந்து இருக்கிறீர்கள் என்பதை உங்களின் இறுதி நிகழ்ச்சி சாட்சியமாக அமைந்தது. பல தோழர்களின் அழு குரல்களை கேட்க முடிந்தது மாவட்ட அளவிலான தோழர்கள் தங்கள் துக்கத்தை அடக்க முடியாமல் வெளிப்படுத்திய வண்ணமே இருந்ததை பார்த்தேன்....

நீங்கள் தோழர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதும், அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதும், அதை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதும், எண்ணற்ற தோழர்களை உங்களை நோக்கி ஈர்த்துள்ளது... கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கான அடையாளமாக உங்ளது பணியை இருந்துள்ளது.இதை நீங்கள் அறியாமல் நாங்கள் அறிய முடிந்தது.

நான் மட்டுமல்ல இன்னும் பல தோழர்கள் நெருக்கடிகளை சந்தித்த பொழுது நியாயத்தின் பக்கம் நின்று எடுத்த நிலைப்பாடுகள் பலரைப் மனபலத்தை பாதுகாத்து உள்ளது...

மைசூரில் குடியிருக்கும் குடியாத்தம் ரமேஷ் குடும்ப மங்களுர் சென்று இருந்த தால்வர முடியவில்லை என்று என்னிடம் கதறி அழுது விட்டார்கள்....

 திருவண்ணாமலை மாவட்டம் தோழர் குமரேசனின் தங்கை மகள் பிருந்தா காலதாமதமாக செய்தி கிடைத்தாலும் பெங்களூரில் இருந்து ஓடி வந்து விட்டார்...

 1990 ஆம் ஆண்டுகள் மத்தியில் சென்னையில் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்தை ஒட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு இரவு லாரி விபத்தில் சிக்கி தனது மனைவியையும், மகளையும் கண்ணெதிரே பறிகொடுத்தது மட்டுமல்ல தனது இரண்டு கால்களையும் இழந்த தோழர் ஜெயக்குமார், அவர்களின் குடும்பத்தை சந்தித்தேன். தற்போது பக்கவாதத்தால் படுத்து கொண்டிருப்பவர். கட்டிலோடு என்னை தூக்கிச் செல்லுங்கள் என்று கதறி அழுவதை தெரிவித்த பொழுது நான் கலங்கி விட்டேன்.

சேலத்தில் இருந்து தோழர் தங்கவேல் அவர்களும், குழந்தைவேலு சண்முகராஜா செய்தி கேட்டு தொலைபேசியிலேயே கதறி அழுதுவிட்டார்கள்.

இது போன்று எத்தனை குடும்பங்களோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாமலே போய்விட்டது.....

பல நேரங்களில் நாம் அஞ்சலி கூட்டங்களில் கலந்து கொள்கிற பொழுது நமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தது உங்களது அஞ்சலி நிகழ்வில் நினைவுக்கு வந்து தொலைந்தது..... ஆனால் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் உணர்ச்சி பிழம்புகள் உணர்வுகளை வாட்டி எடுத்தது......

நூறு முறைக்கு மேல் ரத்த தானம் செய்து குருதி கொடை வள்ளலாக வாழ்ந்தீர்கள், வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர், இடைக்கமட்டி நிர்வாகி, மாவட்ட செயலாளர,மாநில துணை நிர்வாகி, இளைஞர் முழக்கம் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவராக, வாலிபர் சங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட உடன் வேலூர் மாவட்டத்தில் முதல் ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர், அதன் பிறகு கட்டுமான சங்கம் அமைக்கப்பட்டு அதன் மாவட்டச் செயலாளர்,விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, மாநில நிர்வாகியாக, கட்சியின் மாவட்ட குழு, மாவட்ட செயற்குழு, மாவட்ட செயலாளர் என்று பல்வேறு களப்பணிகளான அனுபவங்களோடு உங்களது இயக்க பயணம் தொடர்ந்தது... இந்த அனுபவம் அரிதாக கிடைக்கப்படக்கூடியதாகும்..... .

பல தோழர்களும் நீங்கள் கட்சியின் மாநில குழுவில் இல்லையே என்று ஆதங்கப்பட்ட பொழுது அவையெல்லாம் இயக்கத்திற்கான அளவுகோல்கள் அல்ல களப்பணிகள் மட்டும்தான் உயர்ந்த அளவுகோல் என்று புறம் தள்ளிவிட்டு களம் கண்ட காட்சிகள் எல்லாம் கண்முன்னே வந்து செல்கிறது தோழா....

நான் உட்பட பல தோழர்கள் மாவட்டங்களுக்கு இயக்கப் பணிகளுக்காக வருகின்ற பொழுது உங்கள் வீட்டிலே தான் தங்க வைக்கப்பட்டோம். ஆரம்பத்தில் போதுமான வசதி இல்லாத காலத்தில் இது நடந்தது தோழர் சங்கரி அவர்களின் உபசரிப்பும் உங்களது சகோதரர் சுகி எண் பணிகளும் வந்த தோழர்களை பெரும் மகிழ்வாக அமைந்திருக்கும்....

கணவன் மனைவி இருவரும் முழுநேர ஊழியராக எந்தப் பின்னணியும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் பயணிப்பது எளிதான விஷயம் அல்ல..... பொருளாதார ரீதியாக எந்தப் பின்புலமும் இல்லாமல் ஒரு (இன் செக்யூரிட்டி) பாதுகாப்பற்ற உணர்வுகளிலேயே அனைத்தையும் எதிர்கொள்வது எவ்வளவு கடினமானது என்பதை அனுபவித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விவாதித்து இருக்கிறோம்..

 பிழைப்பு வாதமோ சந்தர்ப்பவாதமோ யாரிடம் வந்தாலும் உங்களிடம் வந்து விடக்கூடாது என்பதற்கான போராட்டத்தை வலுவாக கடைசி வரை நடத்தினீர்கள்.....

மூன்று முறை மாவட்ட செயலாளர் ஆக இருந்து நான் மேலே சொன்ன அத்தனை அமைப்புகளையும் பொறுப்பு வகித்து அனுபவத்தின் தொகுப்பாக இருந்து செயல்பட்டீர்கள். உங்களுக்குப் பிறகு தோழர் சங்கரி அவர்களும் மாவட்டச் செயலாளரான பிறகு உரிய முறையில் உங்களது பணியை தொடர்ந்தீர்கள்

குணமடைந்த பிறகு உங்களுடைய பூர்வீக கிராமமான கோனே பால்ஸ் அருகில் உள்ள ஸ்ரீராமபுரம் செல்ல வேண்டும் என்ற உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளாமலே சென்று விட்டீர்களே...

ஊத்துக்கோட்டை வட்டம் வள்ளியூரில் பத்தாவது படிக்கிற பொழுது முதல் மாணவனாக வந்ததினால் இன்றுவரை அந்தப் பள்ளியின் பெயர் பலகையில் உங்களது பெயரையும் தாங்கி நிற்கிறது என்பதை ஒரு முறை கூட பெருமையாக எங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் சென்று விட்டாயே.....

நானும் ரவீந்திரனும் அதற்கு முன்பு அகத்தியலிங்கமும் உங்கள் மாவட்டத்தில் இயக்கப் பணிகளுக்காக வந்திருக்கிறோம். மாவட்ட பொறுப்பு என்ற முறையில் மிகக் கூடுதலான முறையில் இயக்கம் கட்டக்கூடிய பணியில் உங்களோடு இணைந்து பயணித்திருக்கிறேன்....

1987 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட ஆற்காடு மாவட்ட மாநாடு நடைபெற்ற பொழுது வழக்கறிஞர் தோழர் சம்பத்குமார் மாவட்ட தலைமை பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மறைந்த தோழர் ரங்கராஜன் தலைவராகவும் நீங்கள் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்.  இவரைச் செயலாளராக மாற்றி விட்டால் யாரு சுவரெழுத்துக்களை எழுதுவது என்று ஒரு தலைவர் கேட்ட பொழுது இரண்டையும் செய்வார் என்று நான் பதிலளித்தேன். நீங்கள் பக்கத்தில் நின்று கொண்டு சிரித்துக்கொண்டிருந்தீர்கள்.

அவர் கேட்டதற்கு காரணம் உண்டு. உங்களின் சுவரெழுத்துக்கள் மக்கள் மனதில் பதியப்பட்டவை. உங்களது தூரிகைகள் மூலம் இடதுசாரி சிந்தனைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் நடந்த அகில இந்திய மாநாடு மட்டுமல்ல, அடுத்தடுத்து நடைபெற்ற அரசியல் மாநாடுகளும், தேர்தலிலும் உங்களுடைய தூரிகை இல்லாமல் இருந்ததில்லை. ஓவியக் கலைஞனாகவும் வளம் வந்தீர்கள்.

உங்களின் வருகைக்குப் பிறகு நகர்ப்புறங்களில் குறிப்பாக வேலூரைச் சுற்றி பல கிளைகளை உருவாக்க முயற்சி எடுத்தீர்கள். அந்த முயற்சியின் ஒருவனாக நானும் பங்கு பெற்றேன். அப்பொழுது பிள்ளையார் கோவில் தெருவில் இடதுசாரி இயக்கத்தின் அலுவலகம் இருந்தது . 1

988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மாநாட்டில், ஆரணியின் சேவூரிலிருந்து வறுமையின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருந்த தோழர் வீரபத்திரன் இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு வட ஆற்காடு மாவட்டத்தின் தலைவராகவும், நீங்கள் செயலாளராகவும் பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்கள்.

 அதன் பிறகு நீங்கள் இருவரும் வாலிபர் சங்கத்தின் அந்த மாவட்டத்தின் பெரும் அடையாளமாக மாறிவிட்டீர்கள்.

மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது மறைந்த சக்திவேல் தலைவராகவும் நீங்கள் செயலாளராகவும் பணியாற்றினீர்கள்.

மாநில நிர்வாகிகள் யாராக இருந்தாலும் கிளை அளவில் உறுப்பினர் சேர்ப்பதும், கிளைகளை உருவாக்குவதும், சென்ற ஊர்களில் கிடைக்கும் இடங்களில் தங்கி விட்டு வாய்ப்பிருந்தவற்றை சாப்பிட்டுவிட்டு இயக்கம் கட்டிய காலம். களத்திற்கு செல்வது மட்டுமே மிகப்பெரும் இயக்கப் பணி கலாச்சாரமாக அன்றைய தினம் இருந்தது.

அதன் தொடர்ச்சியாக உங்களின் மூலமாக மாவட்டத்தின் முழுவதும் களத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அந்த இடங்களும் முன்னணி தோழர்களும் பெயர்களும் மறக்காமல் இருக்கிறது என்று சொன்னால் நடைமுறை கற்றுத் தந்த பாடமாகும். இதோ சில உதாரணங்கள்......

வேலூரில் சத்துவாச்சாரி உடற்பயிற்சி கூடத்தின் மூலமாக உருவான வாலிபர் சங்க கிளைகள், சைதாப்பேட்டை விருப்பாச்சிபுரம், காட்பாடி, பெருமுகை போன்ற பகுதிகளிலும், மேல்மோணவூர் பகுதிகளில் தோழர் பரசுராமன் மூலமாக அமைக்கப்பட்ட கிளைகள் நடைபெற்ற இயக்கங்கள்...

அரக்கோணம் ரயில்வே காலனியில் செம்மலர் சீனிவாசன், தாமோதரன், சிவக்குமார் போன்றவர்களும் ஏற்கனவே இயக்கம் இருந்த மங்கம்மாள் பேட்டையில் தோழர்கள் வேணு, நகரத்தில் சிட்டிபாபு, தற்போது சிட்கோவில் குடியிருக்க கூடிய அன்பழகனின் சகோதரரும் அன்பழகனும் செய்த பணிகள் அவர்களோடு நீங்கள் என்னை இணைத்த இயக்கங்கள்...

ஆற்காட்டில் வாலிபர் சங்கத்தின் அடையாளமாக பணியாற்றிய தோழர் சந்திரன், ஆடழரசு, வாலாஜாவின் கோவர்தனன், மணி அனைவரும் மாற்றுத்திறனாளியாக இருந்து தீக்கதிரை விநியோகித்து வந்த தோழர் கிட்டப்பாவின் கடைகளில் இருந்து இயக்கப் பணிகளை தொடங்கிய நிகழ்வுகள்....

காவேரிப்பாக்கத்தில் தோழர் வடிவேலு அவர்களின் மகள் உமா மற்றும் அவர் குடும்பத்தினரும் அருகாமையில் இருந்த பணப்பாக்கம் போன்ற கிராமங்களில் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்களின் மூலமாக நமக்கு கிடைத்த தொடர்புகள்..

குடியாத்தம் நகரத்தில் வலுவான கிளைகள் இருந்த பொழுதும் கிராமங்களில் கிளைகள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தோழர் சம்பத்குமார், உடற்பயிற்சி கூடம் நடத்திய தோழர் முருகானந்தம், நந்தகுமார், குணசேகரன், குழந்தைவேலு, ஆனந்தன், சாமிநாதன், காத்தவராயன்... இன்னும் ஒரு சில தோழர்கள் உதவியோடு கிராமக் கிளைகளை அமைப்பதற்கு அன்றைய சொகுசுப் பயணமான சைக்கிளில் டபுள்ஸ் சென்ற நினைவுகள் முட்டி மோதுகிறது...

 நாம் இருவரும் சென்றது மட்டுமல்ல முதுபெரும் தலைவர் தோழர் ஆர் பரமசிவம் அவர்கள் என்னை ஒரு சைக்கிளில் அமர வைத்தும், உங்களை வேறொரு தோழர் அமர வைத்தும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார்களே அந்த அனுபவங்கள் எல்லாம் உங்களால் எனக்கு கிடைத்த பெரும் அனுபவமாகும்... வேறு யாருக்கு கிடைக்கும் என்று கேள்வியும் எழத்தான் செய்கிறது....

திருச்சி அரசியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதிதாக வந்த வேலூர் நகரத்தில் இருந்த இளைஞர்கள் சென்றார்கள். காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது வேலூர் நகரத்திலிருந்து ஒரு வாலிபர் சங்கத் தோழரும், தோழர் அருள் சீனிவாசன் அவர்களின்  தம்பியும் மரணமடைந்தார்கள். இந்த இரண்டு மரணமும் சங்கத்திற்கு பெரும் சவாலாக மாறியது. தோழர் அருள் சீனிவாசன் அத்தகைய துன்பங்களையும் கடந்து இயக்கத்தில் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் மூலமாக ஆம்பூரிலும், தோழர் சிவாஜி மூலமாக வாணியம்பாடியிலும், ஆலங்காயத்திலும் அமைப்புகள் உருவாகியது. ஆலங்காயத்திற்கு நாம் வேலூரில் இருந்து சென்று வந்த பெரும் பயண நினைவுகள்.....நீங்கதவை

தோழர் வீரபத்திரனுடன் இணைந்து ஆரணியில் வாலிபர் சங்கம் கட்டக்கூடிய பணிகளுக்காக இரண்டு நாட்கள் தங்கி செயலாற்றினோம். தோழர் தாஸ் வீட்டின் திண்ணையில் பல தோழர்கள் படுத்து உறங்கினோம். தாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணவளித்தார்கள். திண்ணையில் உறங்குவதும், பம்பு செட்டில் குளிப்பதும், கூட்டங்களுக்கு செல்வதும் அன்றைய ஒரு சொகுசான வாழ்க்கையாகத்தான் தோன்றியது. காரணம் களத்தில் இளைஞர்களையும் மக்களையும் சந்திக்கிற பொழுது கிடைக்கிற அந்த உற்சாகம் வேறு எதிலும் கிடைப்பதில்லை...

போளூர் நமக்கு இயக்கம் இல்லை. ஆனால் கலசப்பாக்கத்தில் வெங்கடேசன் உட்பட சிலரின் முயற்சியால் வீரபத்திரனும் நீங்களும் நானும் மாவட்ட நிர்வாகிகளும் கலசப்பாக்கத்தில் தங்கி ஆற்றில் குளித்துவிட்டு இரு பக்கத்திலும் இருந்த கிளைகளுக்கும் இயக்கங்களுக்கும் சென்ற நினைவுகள்....

திருவண்ணாமலை நகரத்தில் அரங்கத் தோழர்கள் சிலர் முன் முயற்சி எடுத்தாலும் தோழர் பாலாஜி , கருப்பு கருணா இன்னும் பல தோழர்கள் அமைப்பில் உருவாக்கினார்கள். வீரபத்திரனின் விடாமுயற்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரும்பணியாக அமைந்தது.

செங்கம் தாலுகாவில் சமீபத்தில் மறைந்த புரட்சி நடராஜன் போன்றவர்கள் இடது சாரிய இயக்கத்தை உருவாக்கி வளர்த்திருந்தாலும், வாலிபர் சங்கம் என்பது மூங்கில்துறை பட்டு போகிற வழியில் இருக்கக்கூடிய ராதாபுரத்தில் தான் சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு செங்கம் நகரத்துக்குள் தோழர் குமரேசன், சிவக்குமார், ஷங்கர் இன்னும் சில தோழர்கள் துடிப்போடு வந்து செயலாற்றினார்கள். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு இயக்கத்திலும் நானும் கலந்து கொண்டு இருக்கிறேன்.

திருவண்ணாமலை முதல் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையிலும், இரண்டாவது மாவட்ட மாநாடு செங்கத்திலும் நடந்த பொழுது அதன் பணிகளில் முழுமையாக நானும் வீரபத்திரனும் ஈடுபட்டோம். முதல் மாநாட்டை உருவாக்கிக் கொடுப்பதில் உங்களுடைய பங்கு மகத்தானது. சேத்துப்பட்டு வந்தவாசி போன்ற இடங்களுக்கு நான் கூடுதலாக வரவில்லை. காலப்போக்கில் அங்கேயும் ஏற்கும் மலர்ந்தது.

இவ்வளவு பெரும் களப்பணியில் ஈடுபடுத்துவதற்கு எனக்கான வாய்ப்பு கிடைத்ததற்கு உங்கள அயராத களப்பணிகாரணமாகும். வேலூர் சம்பந்தமான உள்ளூர் வரலாறுகளை எண்ணற்ற கூட்டங்களில் பேசுவதற்கான ஒரு முயற்சி நான் எடுப்பதற்கு இந்த களப்பணிகள் உதவிகரமாக இருந்தது...

இன்னும் முடிவில்லாமல் எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் நீங்கள் முடித்துக் கொண்டு விட்டீர்கள் . உங்களின் பணிகளை இன்னும் விரிவாக எழுதி இயக்கத்திற்கு பயனுள்ள வகையில் கொண்டு வருவதற்கான முயற்சியில் உங்களால் உருவாக்கப்பட்ட தோழர்கள் மேற்கொள்வார்கள்...

 நானும்தான்.

இன்னும் எண்ணற்ற சம்பவங்கள் வந்து மோதினாலும் காலங்கள் இருக்கிறது. முடிந்த வரை பதிவு செய்வேன்...

அ.பாக்கியம்

சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?

அ.பாக்கியம் இந்தக் கேள்விகள் பரவலாக வலைதளங்களிலும் பலரிடமும் கேட்கப்படுகிற கேள்வியாகும் . நானும் பல இடங்களில் செல்கிற பொழுது இந்த கேள்வ...