அ.பாக்கியம்
ஒரு தனி நபரால் மற்றொருவர் சுரண்டப்படுவது
முடிவுக்கு வரும் விகிதத்தில் ஒரு தேசம் மற்றொரு நாட்டை சுரண்டுவதும் முடிவுக்கு வரும்”
மார்க்ஸ்
சீன
மக்கள் குடியரசு 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து சீனாவில் இருக்கிற 55 சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக் காக தொடர்ந்து சோஷலிச கொள்கையின் அடிப்படையில்
திட்டங்களை அமலாக்கி வருகிறது. 55 சிறுபான்மை தேசிய இனங்களில்
2 கோடி முதல் 50 லட்சம் வரை மக்கள் தொகை
உள்ள சுமார் 9 தேசிய இனங்கள் உள்ளன. இவற்றில் 9.64 கோடி மக்கள் தொகை உள்ளனர். இவை தவிர 50 லட்சம் முதல்
3 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட 18 இனக்குழுக்களும்,
மூன்று லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக 28 இனக்குழுக்களும்
உள்ளன. இவை தவிர சுமார் 8.53 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரே இடத்தில்
கூட்டமாக வாழாமல் பரவலாக இருக்கக்கூடிய இன மக்கள் உள்ளனர்.
சீன
மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன் தேசிய இனங்கள் தொடர்பான கொள்கைகளையும் நிறுவியது.
பொதுவாக சிறிய இனக்குழுக்களாக உள்ள இனங்களுக்கு அரசின் திட்டங்களும் , சலுகைகளும் சென்றடைவதில்
பலவீனம் இருந்தது என்பதை அரிசின் ஆய்வுகள் முலம் அறிந்து கொண்டார்கள். இந்தியாவில்
கூட இடஒதுக்கீடு அமுலாக்குகிற பொழுது அவற்றில் விளிம்பு நிலை மக்களுக்கு பயன்கள் சென்றடையவில்லை
என்ற பிரச்சனை உருவானது. இந்த குறைபாடுகள் நீடித்ததன் காரணமாகவே இட ஒதுக்கீட்டிற்குள்
ஒரு உள் ஒதுக்கீடு கொள்கை தேவை என்ற கோரிக்கை உருவானது. சீனாவில் சிறுபான்மை மக்களுக்கான
கோட்பாடுகளையும் திட்டங்களையும் அமலாக்கி வந்ததை பரிசீலனை செய்கிறபொழுது சிறிய மக்கள்
தொகை கொண்ட இனக்குழுக்களுக்கு உரிய முறையில் பலன்கள் கிடைக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.
எனவே சிறிய மக்கள் தொகையின் இனக் குழுக்களை எப்படி சமநிலைக்கு கொண்டு வருவது என்ற பிரச்சனைகளை
ஆய்வு செய்து திட்டத்தை உருவாக்கினார்கள். இந்தத் திட்டம் இனக்குழு தொடர்பான கோட்பாடுகளில்
ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. காரணம் இனக் கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசு வளர்ச்சியை
முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த இன திட்டத்தை அமல்படுத்துகிறது. இவற்றை அமுலாக்குகின்ற
பொழுது இனக்குழுக்கள் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளை ஆய்வு செய்து
நிவர்த்தி செய்கின்றனர்.
சீர்திருத்தக் கொள்கையும் சிறிய
இனக்குழுக்களும்
1978ஆம் ஆண்டு சீனா சீர்திருத்தக் கொள்கைகளையும், திறந்தவெளி
கொள்கைகளையும் அமுல்படுத்த ஆரம்பித்த காலத்தில் சிறிய இனக்குழுக்கள் இதனால் பாதிப்பு
அடைந்தனர். இவற்றை தீர்ப்பதற்காக அரசு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை உருவாக்கியது.
சீர்திருத்த கொள்கையும் திறந்தவெளி கொள்கையும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து
விடக்கூடாது என்பதற்காக புதிய சூழலுக்கான திட்டங்களை உருவாக்கினார்கள்.
முதல்
நடவடிக்கையாக, சிறிய இனக்குழுக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகல் உருவாக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு தேசிய மக்கள் காங்கிரசிற்கும்
உள்ளூர் மக்கள் காங்கிரசிற்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான புதிய தேர்தல் சட்டத்தை
வெளியிட்டது. இந்த சட்டத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை இன குழுக்களுக்கு
கண்டிப்பாக அதிகார நிர்வாகத்தில் ஒரு துணைத் தலைவர் பொறுப்பை ஒதுக்க வேண்டும் என்று
சட்டரீதியான உத்தரவாதத்தை வழங்கினார்கள்.
இவற்றை
அமலாக்குவதற்காக இனக்குழு தன்னாட்சி பிரதேசங்களிலும் இதர மாநிலங்களிலும் சிறிய இனக்குழுக்கள்
வாழக்கூடிய பகுதிகளை மையப்படுத்தி இன நகரங்களை தனியாக உருவாக்க வேண்டும் என்று 1983 ஆம் ஆண்டு சட்டம்
வெளியிடப்பட்டது.
இரண்டாவதாக, சிறிய மக்கள் தொகை கொண்ட
இனக்குழுக்கள் வசிக்கும் பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான
திட்டங்களை உருவாக்கினார்கள். 1979 ஆம் ஆண்டு மத்திய அரசு ஜோடி
உதவி கொள்கை என்ற ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம்
பிராந்தியங்களுக்கு இடையிலான வளர்ச்சி மற்றும் ஏற்றத்தாழ்வை குறைப்பது ஆகும்.
இதன்
நீட்சியாக சிறிய சிறுபான்மை இனக்குழுக்களின் பகுதிகளுக்கு மத்திய அரசின் உதவியோடு வளர்ச்சி
அடைந்த மாநிலங்கள் இந்த இனக்குழுக்களின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அறிவிப்பை
வெளியிட்டு அமலாக்கியது. இந்தத் திட்டம் சிறிய இனக்குழுக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தனர். இந்தத் திட்டத்துடன்
இணைத்து 1986 ஆம் ஆண்டில் நாடு தழுவிய முறையில் திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய
அளவிலான வறுமை ஒழிப்பு மேம்பாட்டு திட்டத்தை அமுலாக்கினார்கள். இந்தத் திட்டத்தின்
மூலம் வறுமையில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.
1978 ஆம் ஆண்டு 25 கோடி மக்கள் வறுமையில் இருந்தனர். இத்திட்டத்தின்
மூலம் 1992 ஆம் ஆண்டு ஏழை மக்களின் எண்ணிக்கை 8 கோடியாக குறைந்தது. இதே காலத்தில் இன சிறுபான்மை பகுதிகளுக்கு வளர்ச்சி அடைந்த
மாநிலங்கள் குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு பிராந்தியங்களுக்கு வளர்ச்சிக்கு உதவ வேண்டும்
என்று சீனத் தலைவர் டெங் ஷியோ பிங் அறிவித்தார்.
1999 ஆம் ஆண்டு தேசிய அளவிலான இரண்டாவது இன பணி மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில்
அதிக மக்கள் தொகை கொண்ட சிறுபான்மை இனங்களின் வளர்ச்சி என்பது வேகமாக நடைபெற்று உள்ளது
என்றும், சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களின் வளர்ச்சி அதே
வேகத்தில் நடைபெறவில்லை என்றும் இதற்காக மேலும் கவனம் செலுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதே காலத்தில் சீனாவில் புகழ்பெற்ற சமூகவியலாளர், மானிடவியலாளர்
திரு. பீசியா வோடாங் ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களுக்கான
திட்டத்தை பத்தாவது ஐந்தாண்டு திட்டத்துடன் இணக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதன்முறையாக சிறிய இனக்குழுக்களின் வளர்ச்சி தேசிய திட்டங்களுடன் இணைக்கப்பட்டது.
சிறிய இனக்குழுக்களை துல்லியமாக கணக்கெடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி 2000 ஆண்டுக்கான அதன் வேலை திட்டத்தில் ஒரு குழுவை நியமித்து பணியில் இறக்கியது.
இதன்
மூலம் 22
இனக்குழுக்கள் அடையாளம் காணப்பட்டது. இனக்குழுக்களின் வாழ்க்கை நிலைமைகளை பற்றிய கணக்கெடுப்பை
மிக விரிவான அளவில் நடத்தினார்கள். இந்த ஆய்வுகள் மூலம் சிறிய இனக்குழு மக்களுக்கான
வளர்ச்சித் திட்டங்களையும் தேவைகளையும் தகவமைத்து தேசிய இன விவகார ஆணையத்திற்கு அளித்தார்கள்.
மேற்கண்ட
முயற்சிக்குப் பிறகு சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களுக்கான சிறப்புத் திட்டமிடலை
சீன மக்கள் குடியரசு உருவாக்கியது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகள் தனித்துவமான நிர்வாக
இலக்கை தீர்மானித்து அமலாக்கினார்கள். மக்கள் தொகையின் அளவை பொருட்படுத்தாமல் எந்த
ஒரு இனக்குழுவும் பின்தங்கி இருக்கக் கூடாது என்ற முறையில் அரசு தன்னுடைய முழு கவனத்தையும்
செலுத்தி திட்டத்தை அமலாக்கியது. சிறிய இனக்குழுக்களுக்கான வளர்ச்சி திட்டம் என்பது
சீன மக்கள் குடியரசின் அதிகாரப்பூர்வமான திட்டமாக மாறியது. ஆண்டுதோறும் பரிசீலனை செய்து
ஐந்தாவது ஆண்டில் புதிய முடிவை எடுத்தார்கள். சிறிய இனக்குழுக்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்
காக மூன்று சிறப்பு திட்டங்கள் என்று அழைக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கினார்கள்.
மூன்று சிறப்பு திட்டங்கள்
முதல் சிறப்பு திட்டம்
2005 முதல் 2010 வரை அமலாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 22 இன சிறுபான்மை
குழுக்களை தேர்ந்தெடுத்தார்கள். இந்த இனக்குழுக்களில் மொத்தம் 6,30,000 ஆயிரம் மக்கள் தொகை இருந்தனர். இந்த மக்கள் தொகை இனர் 10 தன்னாட்சி பகுதிகளில் உள்ள 640 கிராமங்களிலும் 238 நகராட்சிகளிலும் 86 மாவட்டங்களிலும் குடியிருந்தனர்.
இலக்கு தீர்மானிக்கப்பட்டு இங்கு திட்டங்கள் அமலாக்கப்பட்டது. திட்டத்தின் பிரதான இலக்கு
உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, பொருளாதார நடவடிக்கைகளை அதிகப்படுத்துவது,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு முன்னுரிமை வழங்குவது போன்ற
முடிவுகளை அமலாக்கினார்கள்.
இரண்டாவது சிறப்பு திட்டம்
2011 முதல் 2015 வரை அமலானது. இந்தத் திட்டத்தின் படி மூன்று
லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 28 இனக்குழுக்கள் தேர்வு
செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் கீழ் 16 லட்சம் மக்கள் இருந்தனர்.
இவர்கள் 2019 நிர்வாக கிராமங்களில் 71 இன
நகரங்கள் 16 தன்னாட்சி மாவட்டங்களுக் குள்ளும் 13 மாகாணங்களிலும் வாழ்ந்தார்கள். இந்தப் பகுதியை நோக்கி இரண்டாவது சிறப்புத்திட்டம்
அமலானது. இந்தப் பகுதியில் தேவையான சாதகமான தொழிலை உருவாக்கினார்கள். சேவை தொழிலை அதிகப்படுத்தினார்கள்.
மனித
வள மேம்பாட்டை கூடுதலாக்குவது நடைபெற்றது. இதற்கும் மேலாக இன ஒற்றுமைகளை மேம்படுத்துவதற்கான
கூட்டங்களை நடத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடத்தியது மட்டுமல்ல இன ஒற்றுமை
கூட்டம் நடத்துவதற்கான அரங்கங்களையும் ( வீடுகள்)உருவாக்கினார்கள்.
மூன்றாவது சிறப்பு திட்டம்
2016 ஆம் ஆண்டு 13வது ஐந்தாண்டு திட்டத்துடன் இணைத்து மூன்றாவது
சிறப்பு திட்டத்தை உருவாக்கி அமலாக்கினார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் 10,000 க்கு மேற்பட்ட இயற்கை கிராமங்கள் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதியை மையமாக
வைத்து உருவாக்கப்பட்டது. சிறிய இனக்குழுக்கள் உட்பட அனைத்து குழுக்களுக்கும் மிதமான
செழிப்பை அடைகின்ற வாழ்வை உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப பொருளாதார
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் கூடவே கலாச்சாரங்களை ஊக்குவிப்பது மனிதவள
மேம்பாட்டை வலுப்படுத்துவது போன்றவற்றையும் முன்னெடுத்தார்கள். இதன் மூலம் சிறிய மக்கள்
தொகை கொண்ட இனக்குழுவினர் பொருளாதார ரீதியாகவும், சமூக அடிப்படையிலும்,
அரசியல் அதிகாரத்திற்கும் முன்னேற முடிந்தது.
சிறப்பு திட்டத்தின் விளைவுகள்
2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடையில் அரசு மொத்தம் 3.751 பில்லியன் (RMB) யுவான்களை (513 மில்லியன் USD)முதலீடு செய்தது. இந்த நிதியின் மூலம்
சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்கள் வாழும் பகுதிகளில் 11,168 திட்டங்களை செயல்படுத்தினார்கள். 2012 முதல் 2015 வரை மத்திய அரசும் உள்ளூர் அரசாங்கம் இணைந்து 6.607
பில்லியன் யுவான்களை(RMBஅல்லது 905 USD) முதலீடு செய்து 9,356 திட்டங்களை தொடங்கினார்கள். 2016 முதல் 2018 வரை மத்திய அரசு சிறப்பு ஆதரவு நிதி என்ற
பெயரில் 2.1 பில்லியன்யுவான்களை (RMBஅல்லது288
USD) முதலீடு செய்தார்கள். இந்த முதலீடுகள் மூலம் சிறிய மக்கள் தொகை
கொண்ட இனக்குழுக்கள் வசிக்கும் பகுதிகளின் உள்கட்டமைப்பு பெருமளவு மேம்பட்டது. இது
சமூக மாற்றத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சேவைகள் மேம்பாட்டையும் விரைவான வளர்ச்சியையும் இந்தப் பகுதியில் சாத்தியமாக்கியது.
2018 ஆம் ஆண்டில் சிறிய மக்கள் தொகை கொண்ட இனக் குழுக்கள் வசிக்கும் 2390 நிர்வாக கிராமங்களில் ஒரு விவசாயிக்கு ஆண்டு நிகர வருமானம் 8387.63
(RMB) யுவான்களாக இருந்தது. அதாவது 1148 டாலருக்கு
சமம். 2003 ஆம் ஆண்டில் இருந்த அவர்களின் வருமானத்தை விட 9.49 மடங்கு வருமானம் அதிகரித்தது. 2014ஆம் ஆண்டில் இந்தப்
பகுதியில் வறுமையில் வாடியவர்களின் எண்ணிக்கை 9,38,000 லட்சமாக
இருந்தது. இவை 2018 ஆம் ஆண்டு 1,22,100
லட்சமாக குறைந்தது. இது மிகப்பெரிய மாற்றமாகும். ஏழை கிராமப்புற குடும்பங்களுக்கு போதுமான
அளவு உணவு, உடைகள், கட்டாய கல்வி,
அடிப்படை மருத்துவ பராமரிப்பு, பாதுகாப்பான வீட்டு
வசதி ஆகிய அரசாங்கத்தின் கொள்கைகள் மூலமாகவும் நிதி ஒதுக்கீடு மூலமாகவும் இந்த வறுமை
ஒழிக்கப்பட்டது.
இதே
காலகட்டத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட இனக்குழுக்களின் கல்வியிலும் கவனம் செலுத்தப்பட்டு
முன்னேற்றம் அடைந்தனர். 2000 முதல் 2010 வரை ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களின் சராசரி
கல்வி காலம் அதாவது கல்வி கற்பது இடைநிற்காமல் தொடர்ந்தது அதிகமாகிறது. இதனால் தொடக்க
கல்வியை மட்டும் கற்றவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைய ஆரம்பித்தது. அனைவரும் தொடர்ந்து
படிக்க ஆரம்பித்தார்கள். உயர்நிலை கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும், பள்ளியில் டிப்ளமோ பட்டம் பெற்றவருடைய எண்ணிக்கையும் இக்காலத்தில் அதிகமாகியது.
இக்காலத்தில் சிறிய இனக்குழுவை சேர்ந்த மக்களில் 9.44% பேர் உயர்கல்வியை
பெற்றார்கள். இது தேசிய சராசரியை விட சற்று அதிகமாக இருந்தது. 28 சிறிய இனக்குழுக்களில் அனைத்து குழுக்களிலும் முதுகலை பட்டம் பெற்றவர்களும்
முனைவர் பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.
அ.பாக்கியம்




