Pages

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

மோடி ஜியின் மான்-கி-பாத்தும் மெகா வங்கி கடனும்


           விவசாயிகளுக்க பேச்சும் போதனைகளும் பெருவணிக குழுமங்களுக்கு வங்கிகடன் என்பதைதான் பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சி வெளிப்படுத்துகிறது. 

           2016-ம் ஆண்டில் மட்டும் 615 பேர்களுக்கு 59,000 கோடி வங்கி கடனை வாரி வழங்கி உள்ளனர். 60 சதம் விவசாயிகளுக்கு பிரதமர் மான்கி பாத் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ஏமாற்ற மடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உத்திர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பாஜக அரசு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கடன் ரத்து செய்து விவசாயிகளை வேதனைப்டுத்தியது. 

        அரசு வங்கிகள் 2016-ம் ஆண்டு 615 பேர்களுக்கு 58,561 கோடிகள் கடன் அளித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் சராசரி 95 கோடி நிதி வழங்கி உள்ளது. 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சில முன்னுரிமை துறைக்கு குறிப்பிட்ட அளவு கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டி உள்ளது. விவசாயம், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி கடன், கல்வி, வீட்டுவசதி, சமுக கட்டமைப்பு, சூரிய மின் ஆற்றல் போன் துறைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பணித்துள்ள. இதற்கு முன்னுரிமை துறை கொள்கை (யீசiடிசவைல ளநஉவடிச டநனேiபே (ஞளுடு) என்று பெயர். இந்த கொள்கைப்படி  மொத்த கடன் அளிப்பில் விவசாயத்திற்கு 18 சதம் அளிக்க வேண்டும்.

       விவசாயக்கடன் இதர கடன்களிலிருந்து மாறுபட்டது. அதாவது வட்டி குறைவாவும், விதிமுறைகள் எளிதாகவும் இருக்கும். இது சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்கு 4 சதம் வட்டி மட்டுமே. 

       அம்பானி, அடானி வகையறாக்கள் ரிலையன்ஸ் பிரஷ் கடைவைப்பதற்கும், கிடங்குகள் கட்டுவதற்கும் தொழில் நடத்தவும் விவசாயிகளின் கடனை கொள்ளையடிக்கின்றனர். விவசாயக்கடன், அடிப்படை கட்டமைப்புகள், இதற்கான ஆதரவு நடவடிக்கைகள் என்ற மூன்று தலைப்புகளில் வழங்கப்படுகிறது. இதைகாரணமாக வைத்து அனைத்து கடன்களையும் பெரும் வணிக நிறுவனங்கள் சுருட்டி விடுகின்றனர்.

        எஸ்பிஐ வங்கி மும்பை சிட்டி கிளை மூன்று பேருக்கு 29.95 கோடி விவசாயக்கடன் வழங்கியுளளது. மேலும் 27 கோடிகளை 9 பேருக்கு வழங்கியுள்ளது.  வங்கிகள் லாபத்iதை கருதிதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 100 கோடி கடன் விவசாயின் பெயரில் ஒருவருக்கு கொடுப்பது எளிது. இதையே உண்மையான் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமானால் 200 பேர்களுக்கு கொடுக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காது. 

                பாஜக அரசு 2014-ம் ஆண்டு விவசாய கடன் அளிப்பு 8.5 லட்சம் கோடி என்று இருந்ததை 2018-2019-கு 11 லட்சம் கோடி என்று இலக்கு தீர்மானித்துள்ளது. இவை அனைத்தும் பெரு வணிக குழுமங்களுக்கு மற்றும் தொழில் துறைக்கு  கொடுப்பதற்காகவே உயத்தியுள்ளது. 

           2012-ல் 698 பேர்களுக்கு 55,504 கோடிகளும், 2013-ல் 665 பேர்களுக்கு 56,000 கோடிகளும் கடன் வழங்கி உள்ளன. 2014-ல் 60,156 கோடிகளும், 2015-ல் 52,143 கோடியை 604 பேர்களும்,  கடனை பெற்றுள்ளனர். வங்கிகள் முழவிவரத்தையும் கொடுக்க வில்லை. கொடுத்தால் நிலைமைகள் வேறுவிதமாக மாறும்.

      https://thewire.in/agriculture/modi-govt-gave-agricultural-loans-worth-rs-59000-crore-to-615-accounts-in-one-year

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

  மத நம்பிக்கை ச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்வ...