Pages

வியாழன், ஜனவரி 08, 2015

4 + 4 = சாக்சி இட்லர் மகராஜா.

                                                                 

                    4  +  4  = சாக்சி இட்லர் மகராஜா.            


 



1935-ம் ஆண்டு தூயஆரிய இனவிருத்தி மையத்தை ((LEBONSBORN) மையத்தை உருவாக்கினான் ஹிட்லர். இதில் ஆரிய இன பெண்கள், ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தனது பாதுகாப்பு தொண்டர்கள் (SS) கட்டாயம்  4 குழந்தைகள் பெற வேண்டும் என உத்தரவிட்டான்.  ஹிட்லர் ஜெர்மனியில் பெண்கள் தங்களது வயிற்றில் ஆரிய குழந்தைகளை சுமக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

         மிகச்சிறந்த ஜெர்மன் சமூகத்தை Ideal German Community)  அமைக்க வேண்டும் என்று பேசினார். ஆரிய தாய்மார்களின் கருக்கலைப்பு தடைசெய்யப்பட்டது. அப்படி செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டது. ஆரியர், ஆரியர் அல்லாதார் திருமணம் தடை செய்யப்பட்டது. நாசிக்கட்சியின் பெண்கள் பிரிவு, மனைவி மற்றும் தாயாக இருப்பதன் பெருமைகளை, முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்தது. பள்ளிக்கூடத்தில் பெண் குழந்தைகளுக்கு, அடக்கமான மனைவி, சிறந்த தாய் பற்றி போதிக்கப்பட்டது. முதலாளித்துவ தாராளவாதம் பெண்கள் உரிமை சமத்துவம் பற்றி சட்டப்படி அதிகம் பேசும். ஆனால் பாசிசம் இதை பகிரங்கமாக மறுத்து, பெண்களை “பிள்ளைபெறும்” இயந்திரமாக மட்டுமே மாற்றியது.
     
     இந்துப் பெண்கள் 4 குழதைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் இந்து மதத்தை பாதுகாக்க முடியும் என முழங்கியுள்ளா  பி.ஜே.பி  எம்,பி, சாக்சி மகராஜா. இவர்களும் சிறந்த தாயாக சிறந்த மனைவியாக மட்டுமே பெண்கள் இருக்க வேண்டும்.அதைக்கடந்து பெண்களுக்கு வேறுஎதுவும் இல்லை என்று போதனையை   செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். 

   இட்லருக்கு யூத எதிர்ப்பு ஆரிய இனவெறி. அவரது சிஷ்ய கோடிகளுக்கோ இந்துமத போர்வையில் பிறமத எதிர்ப்பு வர்ணாசிரம பாதுகாப்பு
.ஆ...ஹா..….. என்ன பொருத்தம் 

                                                                                      

அ.பாக்கியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...