Pages

வியாழன், செப்டம்பர் 06, 2018

UPA- நெய் NDA- கை


         
        ஊரான் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே என்று கிராமத்து பழமொழி உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய பிரதமர் கைதேர்ந்தவர். இந்த ஆண்டு(2018) செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து பேசும்போது இப்படித்தான் சொந்தம் கொண்டாடி உள்ளார்.  UPA  அரசாங்கம் இருந்த 2013-ம்  ஆண்டைபோல் பணிகள் நடைபெற்றால் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இன்னும் பல பத்தாண்டுகள் ஆகி இருக்கும் என்று பேசினார். 

         ஆனால்  UPA  ஆட்சியில் இருந்த 2005-06 முதல் 2013-14 1,08,280 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 12,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.  ஏழு ஆண்டுகளில் இது நிகழ்த்தப்பட்டுள்து. மீதமுள்ள 18,374 கிராமங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்க மோடியின் என்டிஏ அரசு 4 ஆண்டுகள் எடுத்துவிட்டது. 

            அதாவது ஆண்டுக்கு 4,600 கிராங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். கோட்டை மீது ஏறி கொடியேற்றுவது மட்டுமல்ல புளுகு மூட்டைகளை கொட்டுவதும் பிரதமர் வேலையாகி விட்டது.

திங்கள், செப்டம்பர் 03, 2018

சுகாதாரம்: மோடி சொல்ல மறுத்த கதை:


        கிராமபுற வளர்ச்சி பற்றி பாரத பிரதமர் வாய்கிழிய  பேசுகின்றார். ஆனால்  சமுதாய சுகாதார மையங்கள் 30 சதம் பற்றாக்குறையும், ஆரம்ப சுகாதார மைய்யம் 22 சதம் பற்றாக்குயையும், சுகாதார துணை மைய்யங்கள் 19 சதம் பற்றாக்குறை உள்ளது. 

        ஆரம்ப சுகாதார மைய்யத்தில் 46 சதம் பெண் மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறையும், 60 சதம் ஆண் மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குயையும் உள்ளது.  அலோபதி மருத்துவ துறையில் டாக்டர்கள் பற்றாக்குறை 12 சதம் உள்ளது.

     இவ்வளவு சுகாதார நெருக்கடிகள் இந்தியாவின் கிராமபுறத்தில் இருந்தபோதும் தேசிய சுகாதார மிஷ்ன் ஒதுக்கிய நிதியில் கடந்த 5 ஆண்டுகள் 2016 வரை 29 சதவிகிதத்தை செலவழிக்கவில்லை என்று இந்திய தணிக்கை துறை கண்டித்துள்ளது. 

      மேலும் துணை சுகாதார மைய்யங்களில் 73 சதம் கிராமங்களில் இருந்து 3 கி மீட்டர் தள்ளி உள்ளது. இதில் 28 சதம் போக்குவரத்து வசதி இல்லை, 17 சதம் பராமரிப்பற்று உள்ளது என்று தணிக்கைத்துறை  தெரிவித்துள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

பாஜக அரசின் மின்சார புளுகு?

 
     
    வளர்ச்சி வல்லரசு புதிய இந்தியா என்று மோடி வருடந்தோறும் செங்கோட்டையில் ஏறி நின்று வாய்கிழிய பேசுவதுடன் மட்டுமல்லாமல் பொய்மூட்டடைகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார். ஆனால் உண்மைநிலை வேறு என்பதை நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். சமீபத்திய இந்தியா ஸ்பென்ட்(ஆக.29,2018 )ஆய்வுகள் உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

       இந்தியாவில் மொத்தம் 6,40,932 கிராமங்கள் உள்ளன. இதில் 43,324 கிராமங்களில் மக்கள் வாழவில்லை. 5,97,608 கிராமங்களில் மக்கள் வாழ்கின்றனர். இவற்றில் 2,92,000 கிராமங்களில் வாழக்கூடிய 2 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இதில் உபி-யில் மட்டும் 1 கோடியே 20லட்சம், அஸ்ஸாமில் 19 லட்சம்,ஒடிசாவில் 18 லட்சம் குடும்பங்களும் அடங்கும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 18,374 கிராமங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளன. இவற்றில் 1425 கிராமங்களில் மட்டுமே அதாவது 8 சதவிகித கிராமங்களில் மட்டுமே  அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

        பாஜக அரசு ஆட்சிபீடம் ஏறியவுடன் 2014 நவம்பர் மாதம் கிராமபுறங்களை மின்மயமாக்குதற்கு தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா என்ற திட்டத்தை துவக்கி 43033 கோடி நிதிஒதுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் கடந்த மூன்று ஆணடுகளில் (2015-18) 30 சதவிகித நிதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

          சுதந்திர இந்தியாவில் 4 கோடி குடும்பங்குளுக்கு மின்இணைப்பு இல்லை என்று முழங்கிய பிரதமர் இலக்கில் சரிபாதியை கூட எட்டமுடியவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் (2005-2012 ) 1,04,496 கிராமங்கள் மின்மயமாக்கப்ட்டது. இக்காலத்தில் 2 கோடியே 10 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது.இதில் 1 கோடியே 90 லட்சம் இணைப்புகள் இலவச இணைப்பாகும். 

ஆனால் பிரதமர் செங்ககோட்டையில் ஏறிநின்று கண்ணாடி கூண்டு இல்லாமல் இலக்கை எட்டமுடியாவிட்டாலும் அனைத்து கிராங்களுக்கும் வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கிவிட்டதாக அண்டபுளுகை அவிழ்த்துவிடுகிறார்.  


வியாழன், ஆகஸ்ட் 30, 2018

மோடியின் பயனற்ற பணமதிப்பு நீக்கம்



                பலகோடி மக்களை படுபாதாளத்தில் தள்ளி நுற்றுக்கும் மேற்பட்ட மக்களை வரிசையில் நிற்கவைத்து பழிவாங்கிய மோடியின் பணமதிப்பு நீக்கம் எந்தவித பயணும் தரவில்லை என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் வருடாந்திர அறிக்கை(ஆக.29) தெரிவித்துள்ளது.
2016 ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி இரவு எட்டுமணிக்கு 1000 ருபாய் 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார், கறுப்பு பண்ம் பிடிபடும், கள்ளப்பணம் மறையும், ஊழல் அழியும், தீவிரவாதம் ஒழியும் என்று மார்தட்டினார் மோடி. 50 நாட்களில் இது நடக்கவில்லை என்றால் என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கேளுங்கள் என்றார், இதில் எதுவும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல முன்பைவிட அதிகமாகி உள்ளது.
பணமதிப்பு நீக்கம் அறிவிப்பின்போது புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகளில் மதிப்பு 15.44 லட்சம் கோடிகள் ஆகும். இதுவரை ரிசர்வ் பாங்க ஆப் இந்தியாவிற்கு திரும்பி வந்த்து 15.31 லட்சம் கோடிகள் ஆகும். இது மோடி அரசு எதிர்பார்த்த்தைவிட 10 லட்சம் கோடிகள் அதிமாகும்.  அதாவது 99 சதவிகிதம் பணங்கள் திரும்பிவந்துவிட்டது.
நோட்டுகளின் புழக்க மதிப்பு ஏற்கனவே இருந்த்தைவிட 37.7 சதம் அதிகமாகி 2018 மார்ச் கணக்குபடி 18.03 லட்சம் கோடியாக உயந்துவிட்டது. அரசு எதிர்பார்த்த அளவிற்கு மின்ன்னு பண பரிமாற்றம் உயரவில்லை.
  • ·         100 க்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
  • ·         தீவிரவாதம் குறையவில்லை அதிகமாகி உள்ளது,
  • ·         ஊழல் குறையவிலை நோட்டுக்கள் அச்சடிப்பதிலும்    பரிமாற்றத்திலும்    அதிமாகி உள்ளது,
  • ·         கள்ளநோட்டுகள் 7,62,072 மட்டுமே வங்கியில் கண்டறியப்பட்டுள்ளது, இது 20,4 சதம் மட்டுமே அதிமாகும்.
  • ·         2018 நிதியாண்டு ஏப்ரல் ஜுன் மாத காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5,7 சதமாக குறைந்துள்ளது. கடந்த முன்றாண்டுகளில் இதுவே குறைவானதாகும்.
  • ·         நோட்டுக்கள் அச்சடிக்க 2015/16ம் ஆண்டைவிட 2016/17 ல் இரட்டிப்பாகி உள்ளது, அதாவது ரு 3420 கோடியிலிருந்த ரு 7965 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கிக்கு திரும்பாத ரு 8,900 கோடியைவிட சற்று குறைவானதாகும்.
  • ·         இக்காலத்தில் ஆர்பிஐ வருமானம் 23.56 சதம் குறைந்து செலவுகள் 107.84 சதம் அதிகரித்துள்ளது.
  • ·         பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு பொதுத்துறை வங்க்கிகளில் வாராக்கடன்  பலமடங்கு அதிகமாகி உள்ளது. முதலீடு குறைந்துள்ளது,
  • ·         2017 ஜனவரி ஏப்ரல் மாத்த்தில் 15 லட்சம் பேர்கள் உடனடியாக வேலை இழந்தனர்.
  • ·         மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்கம் படுதோல்வி அடைந்த்து மட்டுமல்ல இன்றளவும் இந்திய மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
  • அ.பாக்கியம்
  •  


சனி, ஜூலை 14, 2018

மோடி அரசின் 4 ஆண்டு சாதனை?


         2015-ம் ஆண்டில் இந்தியாவில் 75 சதமான குடும்பங்கள் . ரூ 5000 மாதம் வருமானத்தில் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. ஆனால், மோடியின் இந்த 3 ஆண்டு ஆட்சியில் 1 சதம் பணக்கார குடும்பங்கள் சொத்து 48 % லிருந்து  58% ஆக உயர்ந்துள்ளது.

           2017 டிசம்பர் வரை அதானியின் சொத்து மதிப்பு 124. 6% உயர்ந்துள்ளது. இதே காலத்தில் 2015-16 மற்றும் 2016_17-ல் பாஜக வின் சொத்து மதிப்பு 81. 18%. அதிகரித் ள்ளது. அதாவது 570.86 கோடியிலிருந்து 1034. 27 கோடியாக உயர்ந்துள்ளது.

82 உய்குர்- கட்டாய கருத்தடை,கட்டாய உழைப்பு,மசூதிகள் இடிப்பு?

  அ.பாக்கியம் சின்ஜியாங் பற்றிய மேற்கத்திய நாடுகளிலும் அதன் ஊடகங்களிலும் சில பொய்கள் மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்தப் பொய்களு...