Pages

வியாழன், ஆகஸ்ட் 03, 2023

மக்கள் டிவி முடித்து வைக்கப்பட்ட வழக்கும் 85 தோழர்களும்:

             இரு நாட்களுக்கு முன்பாக தோழர் டி கே சண்முகம் மக்கள் டிவி வழக்கு முடித்து வைத்தது பற்றி முகநூலில் செய்தி வெளியிட்டு இருந்தார். மாநிலத் தலைவர்கள் கே பாலகிருஷ்ணன், ப.செல்வசிங் மற்றும் அப்போதைய மாவட்ட செயலாளர் டி கே சண்முகம்,க. பீமராவ் உட்பட 85 தோழர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தார். இது பாராட்டுக்குரியது. தோழர் ஊரா வரதராசன் பற்றியும் போராட்டத்தின் சாரத்தையும் அதில் சிறப்பாக எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருந்த நான்கு தோழர்களை தவிர மற்ற 81 தோழர்களை பற்றி இந்தப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன். அந்த 81 தோழர்களில் மூத்த தோழர்கள் உட்பட பல பொறுப்புகளில் தலைவர்களாக இருந்தவர்கள் தற்போது தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்து பதிவிடுகிறேன். சுமார் 16 நாட்கள் சிறையிலும் நிபந்தனை ஜாமீனிலும் இருந்தவர்கள் தங்களது வருமானத்தை இழந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையில் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் பதிவிடுவது தேவையாக இருக்கிறது.



நுங்கம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் திருமண மண்டபத்தில் வைத்திருந்து
இரவு 8 மணிக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பி வைக்கும் பொழுது இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. புழல் சிறைக்கு சென்ற பொழுது அங்கு இடமில்லை என்று ஒரு மணி நேரம் காக்க வைத்து 12 மணிக்கு புறப்பட்டு மூன்று மணிக்கு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டோம்.  அப்போதைய வேலூர் மாவட்ட செயலாளராக  இருந்த தோழர் நாராயணன் தலைமையில் செயற்குழு தோழர்கள் சிறை வாசலில் காத்திருந்து தேவையான சில உதவிகளை செய்து சிறைக்குள் அனுப்பி வைத்தார்கள். தென் சென்னையிலிருந்து 58 தோழர்களும் வடசென்னையில் இருந்து 25 தோழர்களும் மாநில தலைவர்கள் இருவரும் இதில் அடங்குவார்கள்.

அனைத்து தோழர்களும் ஒரே நீளமான அறையில் அடைக்கப்பட்டோம். வாய்ப்புள்ள நேரங்களில் அரசியல் உரைகள் சில தலைப்புகளில் பேசப்பட்டது. தென் சென்னை நமச்சிவாயபுரம் அண்ணாமலை தோழர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினார். 15 நாள் காவல் என்றாலும் எட்டு நாட்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.85  தோழர்களும் திருச்சியில் தங்கி  புதூர் காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. சிறைச்சாலையில் கட்சியின் தோழர்கள், உறவினர்கள், தென்சென்னை வட சென்னையிலிருந்து தினசரி வந்தார்கள். அதே நேரத்தில் வேலூர் மாவட்ட கட்சி தோழர்கள் தினசரி வந்து செல்வது தேவையான உதவிகளையும் செய்து கொண்டு இருந்தார்கள். 8 நாட்களுக்குப் பிறகு விடுதலை பெற்று பகல் 12 மணியளவில் வேலூர் சிறையில் இருந்து வெளியில் வந்த பொழுது வேலூர் தோழர்கள் கூடி நின்று வரவேற்றனர். அவர்களிடையில் தோழர் கே பாலகிருஷ்ணன் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு அவரவர் சென்னைக்கு திரும்பி இரவோடு இரவாக திருச்சிக்கு புறப்பட்டு சென்று அடுத்த நாள் கையெழுத்து போடும் பணியை துவக்கினோம். திருச்சி மாவட்ட தோழர்கள் மாநில குழு உறுப்பினர் தோழர் ஸ்ரீதர் தலைமையில்  85 தோழர்களையும் தங்க வைப்பது,உணவு ஏற்பாடுகளை செய்வது, கையெழுத்து போடுவதற்கான ஏற்பாடுகளை செய்வது என அனைத்து பணிகளையும் இன்முகத்துடன் செய்து முடித்தனர். தினசரி கையெழுத்து போடுவது நடந்து கொண்டிருந்த பொழுது வழக்கறிஞர்கள் 8வது நாள் நீதிமன்றத்தில் வாதாடி நிபந்தனை ஜாமினை தளர்த்தி உத்தரவு வாங்கிய பிறகு சென்னைக்கு திரும்பினோம். திருச்சியில் இருந்த பொழுது சில கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது உட்பட நடைபெற்றது. மொத்தமாக 16 நாட்கள் 85 தோழர்களில் கூட்டு வாழ்க்கை பெரும் அனுபவத்தை கொடுத்தது. வியாபாரம் நடத்தியவர்கள், சுய தொழில் செய்தவர்கள் முறைசாரா தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் சிறைக்கு வந்து விட்டார்கள். இந்த நாட்களில் அவர்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தோழர்கள் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சிறையில் இருந்தார்கள். சிறையில் இருந்த தோழர்களின் வீடுகளுக்கு சென்று கட்சித் தோழர்கள் விவரங்களை எடுத்துச் சொன்னார்கள். பலரும் போராட்ட களத்தில் நடக்கும் என்ற உணர்வுடன் ஏற்றுக் கொண்டனர். இயக்கத்தோடு அதிகம் தொடர்புள்ளதாக ஒரு சில வீடுகளில் கடுமையாக எதிர்வினை ஆற்றினார்கள். ஆகவே தான் அந்த 85 தோழர்களையும் மாவட்டம் முழுவதும் அறிமுகம் இல்லாவிட்டாலும் அடிமட்ட தோழர்களின் கடைக்கால் பணிகளால் கட்டிடம் உயர்ந்து நிற்கிறது என்பதின் புரிதலோடு இந்த பெயர்களை இங்கு பதிவிடுகிறேன். அவர்களில் பெரும்பாலோர் இன்றைக்கும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள்.

வட சென்னையில் டி கே சண்முகத்துடன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்த, தற்போது மாநில குழு உறுப்பினராக இருக்கக்கூடிய  எம்.ராமகிருஷ்ணன், மற்றும் ஒன்றுபட்ட மாதவரம் பெரம்பூர் பகுதி குழுவின்  செயலாளராகவும்,மாவட்ட குழு உறுப்பினராகவும்  பணியாற்றிய தோழர் அரிகிருஷ்ணன், கொளத்தூர் பகுதி செயலாளராக பிற்காலத்தில் பணியாற்றிய தோழர் கோடீஸ்வரன், பெரம்பூர் பகுதி செயலாளராக பணியாற்றி தற்போது, மாவட்ட குழு உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவராகவும் இருக்கக்கூடிய தோழர்.M.ராஜ்குமார், வியாபாரிகள் சங்கத் தலைவர் ப.தேவராஜ் , நம்மாழ்வார் பேட்டை ஓவியர், போக்குவரத்து தொழிலாளி கொளத்தூர் பகுதி செயலாளராக பணியாற்றிய தோழர். மதிவாணன் , இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் எம்.என். குமார், சாலையோர கடை வியாபாரி வியாசர்பாடி அரி என்கிற அறிவழகன், கொசப்பேட்டை சுப்பிரமணி, வீ. கே. கிருஷ்ணமூர்த்தி, ஓட்டேரி அங்காளன், எஸ் எஸ் புரம் எஸ்.சுரேஷ், கலைச்செல்வன்,புரசைவாக்கம் ஜி கார்த்திக், வி ராமச்சந்திரன், திருவிக நகர் ரமேஷ் முகப்பேர் வே. டி குமார், கே பி பார்க் இ.அன்பு, ஆர். ஆறுமுகம், கே.முருகன், கொடுங்கையூர் பகுதி மூத்த தோழர் சேது, மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றிய கே.விஜய் பி அண்ட் சி தொழிற்சாலையில் ஊழியர் சங்க தலைவராக பணியாற்றிய தோழர்.லோகையா என வட சென்னை சேர்ந்த 25 தோழர்களும போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்று விடுதலையானார்கள்.

தென் சென்னையிலிருந்து தோழர்கள் க. பீம்ராவ், அ.  பாக்கியம், தென் சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றிய தோழர் நந்தகோபால், தென் சென்னையில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து பணியாற்றிய  மூத்த தோழர்கள் எஸ். குமாரதாசன்,  ஆர்.கிருஷ்ணமூர்த்தி, திருவான்மியூர் பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர் டி. ராமன் போன்ற தோழர்களும், தற்போது  மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய தோழர் எஸ்.குமார் எஸ்.லெனின் மாவட்ட குழு உறுப்பினராக இருக்கின்ற, டி நகர் பகுதி செயலாளர் பணியாற்றிய தோழர் M.ரங்கசாமி, மாவட்ட குழு உறுப்பினராகவும் டி நகர் பகுதி செயலாளர் இருக்கக்கூடிய இ.மூர்த்தி மாவட்ட குழு உறுப்பினராக இருக்கக்கூடிய என். தாமோதரன், அரிகிருஷ்ணன், அன்றைய தினம் மாவட்ட செயற்குழுவில் இருந்து பணியாற்றிய தோழர் க.மாதவ் மற்றும் தற்பொழுது மத்திய சென்னை மாவட்ட செயற்குழுவில் இருக்கக்கூடிய தோழர் முருகேஷ், உட்பட்ட தோழர்களும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர். அம்பிகாபதி, ஆட்டோ சங்கத் தலைவர் ஹரி நாராயணன் ஆட்டோ ஓட்டுநர் E.ராமன், நமச்சிவாயபுரம் அண்ணாமலை, பருவா நகர் ஆட்டோ தொழிலாளி மோகனரங்கம், எம்.முரளி புஷ்பா நகர் எம்.மணிகண்டன் போன்ற ஆயிரம் விளக்கு பகுதி தோழர்களும், பல்லாவரம் பகுதியிலி ருந்து அனகாபுத்தூர் விஸ்வநாதன்,  பாலன, மாதவன், குரோம்பேட்டை போக்குவரத்து தொழிலாளி ரவிக்குமார், சிட்லபாக்கம் வி. சீனிவாசன், பொழிச்சலூர் எம் கோபால், பழைய பல்லாவரம் பி செல்வராஜ், குளத்து மாநகர் சிவா , அனகை பகுதி செயலாளராகவும் மாவட்ட குழு உறுப்பினராகவும் பணியாற்றிய மறைந்த தோழர் பி. குமார் ஆகியோர்களும், மதுரவாயில் பகுதியிலி ருந்து ராமாபுரம் பாலசுப்பிரமணியன், ஏ.முருகன் பி. சரவணன் ஜி.ரவிச்சந்திரன் ஜி.கே.யுவராஜ் ஆலப்பாக்கம் P. V. ராஜேந்திரன்,போரூர் எம் ராஜா, நெற்குன்றம் ம.வை.ரகுபதி, ஏ.முருகன் எஸ்.பழனி என்.சேட், போரூர் பகுதி செயலாளராக இருந்து மறைந்த தோழர் இளையராஜா போன்றவர்களும், அண்ணா நகர் பகுதியில் தோழர் லெனின் தாஸ், இ பழனி மா.உதயகுமார் ஓசாங்குளத்தை சேர்ந்த ஆர் குமார் எல்.உசேன், விருகம்பாக்கம் பகுதியிலி ருந்து சௌந்தர பாண்டியன், மூத்த தோழர் பன்னீர்செல்வம், சிவலிங்கபுரம் ஜி.ரவி குப்புசாமி, தி.நகர் பகுதியிலிருந்து ஆட்டோ தொழிலாளி நந்தகுமார், ஈவீஆர். ரமேஷ், மு.இளங்கோவன் மயிலை பகுதியிலிருந்து பகுதி குழு உறுப்பினராக பணியாற்றி தற்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகியாக இருக்கும் பி.ஆர்.முரளி சேப்பாக்கம்  பகுதியிலிருந்து ஆசை தம்பி உட்பட தோழர்கள் சிறைச்சாலையிலும் நிபந்தனை ஜாமினிலும் வேலூர் மற்றும் திருச்சியில் இருந்தனர்.

இந்தப் போராட்டம் இரண்டு மாவட்ட குழுக்களாலும் உடனடியாக அறைகூவல் விடப்பட்டு நடத்தப்பட்ட போராட்டம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பிறகும் தோழர்கள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட பொழுது எந்தவித தயக்கமும் இல்லாமல் சிறைச்சாலைக்கு வந்தனர். சிறைக்குள்ளேயும் எந்த சோர்வுமின்றி சுறுசுறுப்பான முறையில் சிறையினுடைய பல்வேறு விஷயங்களை கேட்டு அறிந்து தெரிந்து கொள்ள வாய்ப்பை பயன்படுத்தினர். அத்துடன் பல்வேறு அரசியல் கேள்விகளை வந்திருந்த தலைவர்களிடம் நெருக்கமாக விவாதிப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தினர்.

இந்தப் போராட்டம் காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்ட ஒரு போராட்டமாக இல்லை என்பதும், மார்க்சிஸ்ட் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட தொடர் அவதூறுகளை எதித்த போராட்டம் என்ற வகையிலும் 16 முதல் 20 நாட்கள் வரை தங்களது சொந்த தொழிலை விடுத்து,  சிறை சென்றார்கள் என்பதாலும் இந்தத் தோழர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டி உள்ளது. பல நேரங்களில் தலைமை தோழர்களின் பெயர்களோடு மற்றும் பலர் என்று முடிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்று உள்ளது. அவற்றையெல்லாம் தொடர்புடைய தோழர்கள் பதிவு செய்வது என்பது அடிமட்ட தோழர்களின் அர்ப்பணிப்புகளை அங்கீகரிப்பதாக மாறும். தலைவர்களின் தியாகங்களில் ஆரம்பித்து அனைத்தும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
அ.பாக்கியம்
03.08.23



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...