இது வேறெங்கும்இல்லை இந்தியாவில்தான்.சிறு மாற்றங்கள் நடந்தாலும் பெரும் முன்னேற்றம் இல்லை என்பது தான் உண்மை.உலக குழந்தை தொழிலாளர் உழைப்பு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கும் இக்காலத்தில் இந்தியாவில் 5 வயது முதல் 14 வயது வரை 1.26 கோடி குழந்தை தொழிலா ளர்கள் உள்ளனர்.
பருத்தி உற்பத்தியில் 4 லட்சம் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம்.கட்டுமானத்தில் 2.8 லட்சம் குழந்தைகள் பணிபுரிகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களில் 69.9 முதல் 83 சதம் வரை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.குழந்தை தொழிலாளர் தடை சட்டத்தில் தற்போது உள்ள மோடி அரசு திருத்தம் கொண்டு வந்ததால் மேலும் பின்னோக்கிச்செல்ல நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்த திருத்தத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குடும்ப தொழிலுக்கு, வனப்பகுதி பணிகள், வீடுசார்ந்த தொழில்கள், பொழுதுபோக்கு தொழில்கள், விளையாட்டு துறைசார்ந்த பணிகளில் ஈடுபடுத்தலாம் என்றும், இதை பள்ளி துவங்கும் முன் அல்லது பள்ளிக்கூடம் முடிந்த பிறகு இச்சிறுவர்களை பயன்படுத்தலாம் என்று மோடி அரசு திருத்தத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்த திருத்தம் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்வி அடிப்படை உரிமை என்ற சட்டத்தை மறுக்கிறது.
பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து விடுபடுதல் இந்தியாவில் 63.5 சதமாக உள்ளது.வீடு சார்ந்த பணிகள்தான் பெண்கள் இந்த அளவு விடுபடக்காரணமாகும். சட்டத்தை திருத்தினால் இவை மேலும் அதிகமாகும்.
18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது. விபத்து போன்ற வற்றில் சட்டப்படியான நலன்களை பெறமுடியாது.
குறைந்த கூலி என்பதால்தான் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்துகின்றனர். போர்வை தயாரிக்கும் தொழிலில் குழந்தைகளுக்கு 1மணி நேரத்திற்கு 10 ருபாய் கொடுக்கப்படுகிறது.
குடும்பத் தொழில் என்று அனைவரும் தப்பித்துக்கொள்ள மோடி அரசு வழிவகுத்துள்ளது.
மோடியின் சட்ட திருத்தம் சாதிய குல தொழிலையும், நவீன முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு பட்டாளத்தையே உருவாக்கும்.மேலும் குழந்தை தொழிலாளிகளின் ஏண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்..
பதிலளிநீக்கு