Pages

வெள்ளி, ஜூன் 12, 2015

ரோசனை நல்ல ரோசனைதான் ஆனா.. ..



’’வறட்சியால் ஏற்படும் சவால்கனை வாய்ப்பாக கருத வேண்டும்.’’இந்திய விவசாயிகளுக்கு நாட்டின் பிரதமர் அருளியுள்ள அருள்வாக்கு.

தண்ணீர் குடிக்கமால் இருக்க வாய்ப்பு !


குளிக்கமால் இருக்க வாய்ப்பு !!

வற்றிய உடலில் வேர்வையே         வெளிவராமல் இருக்க வாய்ப்பு !!!

வற்றிய வயிரோடு பட்டினியால் வாடிட   வாய்ப்பு !!!!

தற்கொலை செய்து கொள்ளாமல் தானாகவே மாண்டுபோகும் வாய்ப்பு.!!!!!

    விவசாயத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதத்திறகுள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய மோடி அரசு.அதாவது 11657 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தனர்,
       
       தேசிய கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய  34,500 கோடி நிதியை விட குறைவாக 28,699 கோடி ஒதுக்கீடு செய்து (பழைய  நிலுவையையும் சேர்த்தால் 34699 கோடி ) வாய்பினை பறித்த மோடி அரசு,
6576 பிளாக்குகளில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை 2500 பிளாக்குகளாக குறைத்திட திட்டமிட்டு வாய்ப்பை பறித்த மோடி அரசு,

     பாசன மற்றும் இயற்கை விவசாயத்திற்கு நிதிஒதுக்கீட்டை வெறும் 5600 கோடி ஒதுக்கீடு செய்து அதாவது மாவட்த்திற்கு 9 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து வாய்ப்பை பறித்த மோடி அரசு

      கடந்த ஓராண்டில் விவசாயிகள் தற்கொலைகள் 26 சதம் அதிகமாவதற்கு வாய்ப்புகளை உருவாக்கிய மோடி அரசு, 2015-ம் ஆண்டு மட்டும் பிஜேபி ஆட்சி செய்யும் மராட்டிய மாநிலத்தில் 1088 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

       ஆனால் மாநில அரசு 545 பேர்ககளை  மட்டுமே  அங்கீகரிக்கப்பட்ட  தற்கொலை யாக அறித்துள்ளது. காரணம் மற்றவர்கள் பெயரில் நிலங்கள் இல்லை (குடும்பத்தில்  மனைவி இறந்தால் கூட ) என்று அறிவித்துள்ளது.




1 கருத்து:

  1. உலக நிதிமூலதனத்தின் இந்திய பிரதி மோடி இந்திய முதலாளிகளின் அடிவருடியாக மேற்கண்ட வாறு பொதுநிதியை குறைத்து வருகிறது ...

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...