இந்தியாவின் கருப்பு பண விவகாரத்தில் கேள்வியும் ஒன்று, பதிலும் ஒன்றுதான்.ஆனால் வாய்தான் வேற.. வேற….. ..
அந்நிய நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் கருப்பு பணம் 120 லட்சம் கோடி என்று அசோசெம்(assocham)
மதிப்பீடு செய்திருந்தது.இருகட்சிகளும் மாறி மாறி கேள்விகேட்டனர்.
2011- ல் பிஜேபி—..கருப்பு பணத்தை திருப்பி கொண்டுவாங்க..
2014-ல் காங்கிரஸ்.. கருப்பு பணத்தை திருப்பி கொண்டுவாங்க.
2011-ல் பிஜேபி -வெளிநாட்டில் சட்டவிரோதமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பெயரை வெளியிடுங்கள்?
2014-ல் காங்கிரஸ்.. வெளிநாட்டில் சட்டவிரோதமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பெயரை வெளியிடுங்கள்.
2011-ல் பிஜேபி -100நாள் கடந்து விட்டது.நீங்கள் அளித்த வாக்குறுதிபடி கருப்பு பணம் எங்கே?
2014-ல் காங்கிரஸ்.. 100நாள் கடந்து விட்டது.நீங்கள் அளித்த வாக்குறுதிபடி கருப்பு பணம் எங்கே?
2011-ல் பிஜேபி -இந்த அரசு கருப்பு பண விஷ்யத்தில் மக்களை திசைதிருப்புகிறது.
2014-ல் காங்கிரஸ்.. இந்த அரசு கருப்பு பண விஷ்யத்தில் மக்களை திசைதிருப்புகிறது.
2011-ல் காங்கிரஸ்.. கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடமுடியாது.அது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
2014-ல் பிஜேபி ..கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடமுடியாது.அது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும்.
2011-ல் காங்கிரஸ்.. கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது அல்ல பிரச்சனை எப்படி எப்போது வெளிடுவது என்பது தான் பிரச்சனை.
2014-ல் பிஜேபி ..கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவது அல்ல பிரச்சனை எப்படி எப்போது வெளிடுவது என்பது தான் பிரச்சனை
2011-ல்- உச்ச நீதி மன்றம் – மன்மோகன் அரசை பார்த்து கருப்பு பணத்தை கொண்டுவர நீங்கள் எந்த முயற்சிகளும் செய்யவில்லை.?
2014-ல் உச்ச நீதி மன்றம் – மோடி அரசை பார்த்து… கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்பவர்களை , நீங்கள் ஏன் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்?
கருப்பு பண கண்ணாமூச்சி விளையாட்டில் மக்கள் வாழ்வுதான் வீண்.
சூனா பானா மோடி பானாசூனா மன்மோகன் சிங்
பதிலளிநீக்குசூனா பானா மோடி பானாசூனா மன்மோகன் சிங்
பதிலளிநீக்கு