இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி
போட்டதின் சாதனையை விளக்கி பிரதமர் மோடி அவர்கள் தேசத்திற்கு உரையாற்றினார். 100 கோடி தடுப்பூசி
போட்டது சாதனை அல்ல அவை அனைத்தும் இலவசமாக போடப்பட்டுள்ளது என்பதுதான் சாதனை என்று
பேசி உள்ளார், ( (India has
not only administered 100
crore
vaccine doses to its citizens but has also done that free of cost),"
இது போன்ற பேச்சுக்கள்
முதல் தடவை அல்ல. இதற்கு முன்பு ஒன்றிய சுகாதார
மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Mansukh Mandaviya) மோடி பிறந்தநாள்
அன்று அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்று அறிவித்தார். செப்டம்பர் 17 அன்று 2.28 கோடி தடுப்பூசி
போடப்பட்டதாகவும் அறிவித்தார்.
பிரதமரின்
கூற்று தவறானது. பொது மற்றும் தனியார் துறைகளால் செலுத்தப்பட்ட மொத்த
தடுப்பூசிகளின் முழுமையான அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை
என்றாலும்,
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், செப்டம்பர் 23, 2021 அன்று, மே 1 முதல் செப்டம்பர் 22, 2021 வரை 6% தடுப்பூசிகள் தனியார்
மருத்துவனைகளில் செலுத்தப்பட்டதாகக் கூறியிருந்தார்.
இவர்கள்
ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்க தயாராக இல்லை. உற்பத்தியாவதில் ஒன்றிய அரசு 50% தடுப்பூசிகளை
கொள்முதல் செய்யும் என்றும், மீதமுள்ள 50 சதவீதங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே
விநியோகிக்கப்படும் என்று கூறினார்கள். பின்னர்,மே 31,2021அன்று, உச்சநீதிமன்றம் 18-44 வயதிற்குட்பட்டவர் களுக்கான தடுப்பூசி கொள்கை "தன்னிச்சையானது
மற்றும் பகுத்தறிவற்றது" என்று சாடியது. தடுப்பூசி விலை நாடு முழுவதும்
ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூறியது.
உச்சநீதிமன்றம்
தலையில் கொட்டியது. மாநில அரசுகள் ஒன்றிய அரசின் கார்பொரேட்களுக்கு
உதவிசெய்யும் கொள்கையை கடுமையாக விமர்சித்தன. இதன்விளைவாக ஜூன்7,2021 அன்று தேசமக்களுக்கு
உரையாற்றிய பிரதமர்,
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து 75% மருந்துகளை மத்திய அரசு வாங்கும், மாநில ஒதுக்கீட்டில் 25% மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும், தனியார் மருத்துவமனைகள் 25% தடுப்பூசிகளை ஒரு டோஸுக்கு 150 ரூபாய் என்ற விலையில் தொடர்ந்து வாங்கலாம் என்றும் அவர்
கூறினார். இப்போது இலவசம் பற்றி மார்தட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஜூலை1,2021 அன்று ஒன்றிய சுகாதார
மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், "அனைத்து
குடிமக்களும் அவர்களின் வருமான நிலையைப் பொருட்படுத்தாமல் இலவச தடுப்பூசிக்கு
போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. மேலும் பணம் செலுத்தும் திறன் உள்ளவர்கள்
தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம் என்றும் தனியார் மருத்துவமனைகள் ஒரு டோஸுக்கு
அதிகபட்சமாக ரூ.150 வரை சேவைக்
கட்டணமாக வசூலிக்கலாம் என்று அறிவித்தார்கள்.
ஒன்றிய அரசு இதுவரை
தனியார் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எத்தனை என்பதை அதிகாரபூர்வமா
அறிவிக்கவில்லை. ஆனால் தடுப்பூசிகளை
செலுத்துவதற்கான அதிகாரபூர்வ வலைதளங்கள் தற்போது, 91,055 உள்ளது. இவற்றில்
88,462 அல்லது 97% அரசு சுகாதார
மையங்களாகவும்,
2,593 அல்லது 2.8% தனியார் சுகாதார
மையங்களாகவும் உள்ளன. மேலும், தனியார்
மருத்துவமனைகளில் உள்ள மூன்று தடுப்பூசிகளுக்கான கட்டணமாக கோவிஷீல்டுக்கு ரூ.780,
கோவாக்சின் ரூ.1,410 மற்றும் ஸ்புட்னிக் ரூ.1,145 என விலையும் நிர்ணயித்துள்ளது.
எனவே நமது பிரதமர் பேசி
இருப்பது 100 சதம்
உண்மையல்ல. செப்டம்பர் வரையிலும் 6 சதம் தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளன.
அதன் பிறகும் தனியார்கள் செலுத்தியுள்ளனர். உச்சநீதிமன்றம் கடுமையாக ஒன்றிய அரசை கேள்விக்குள்ளாக்கிய
பிறகுதான் இதுவரை செலுத்திய இலவசமும் கிடைத்தது. இல்லையேல் கார்பொரேட்களுக்கு
கொடுத்திருப்பார்கள். 100 கோடி இலவசம்
என்ற பொய் மட்டுமே உண்மை.
India spend
https://www.factchecker.in/fact-check/no-all-100-crore-covid-19-vaccine-doses-werent-given-for-free-in-india-782799
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக