4. பொய் மட்டுமே உண்மை!
மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா ஆகஸ்ட் மாதம் லக்னோவில் பேசுகிற பொழுது சட்டம் மற்றும் ஒழுங்கின் பாதுகாப்பதில் உத்தரபிரதேசத்தை
"முதல் இடத்திற்கு" கொண்டுசென்ற ஆதித்யநாத் நிர்வாகத்தை பாராட்டினார். இவர் பேசிய அடுத்த ஒரு மாதத்தில் தேசிய குற்றவியல் ஆவண
கழகம் இந்தியாவில் குற்றசம்பவங்கள் பற்றிய 2020-ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கை உள்துறை அமைச்சர் பொய் மட்டுமே சொல்கிறார்
என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்கு ஆதாரமாக அமைகிறது.
உத்தரபிரதேசத்தில், இந்திய குற்றவியல் சட்டப்படி
2018-ம் ஆண்டு 3,42,355, குற்றப்பதிவுகள், 2019-ம்
ஆண்டு 3,53,131 குற்றப்பதிவுகள் 2020-ம் ஆண்டு 3,55,110குற்றச்செயல்கள் படிப்படியாக
அதிகரித்திருப் பதை தேசிய குற்றவியல் ஆவண கழக
அறிக்கை வெளிச்சம் போட்டுகாட்கிறது.
இவைத்தவிர சிறப்பு மற்றும் உள்ளூர்
சட்டப்படி(SLL) நடைபெற்ற குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இந்தகாலத்தில்
உத்தரபிர தேசத்தில் அதிகமாகி உள்ளது. இந்தச் சட்டத்தின்படி 2018-ல் 24,280 குற்றங்கள், 2019-ம் ஆண்டு 27,547 குற்றங்கள்,
2020-ம் ஆண்டு 32,815 குற்றங்கள் என அதிகரித்துக்கொண்டே
வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்ககூடிய என்.சி.ஆர்.பி. அறிக்கைக்கு
மாறாகவே அதனுடைய உள்துறை அமைச்சர் பொய் பேசுகிறார்.
உத்தரபிரதேசத்தில் தேசிய
சராசரியை விட அதிகமான அளவிற்கு கொலைகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 3779 கொலைகள்
நடந்துள்ளது. இதேபோன்று கடத்தல் 12,913 நடைபெற்றுள்ளது. சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்
குறைந்திருந்தாலும் சிறார்களின் குற்றச்செயல்கள் 23% உத்தரப்பிரதேசத்தில் அதிகமாகியிருக்
கிறது இதற்கு காரணம் பொதுமுடக்கம் காலத்தில் கல்வி, வேலைவாய்ப் பின்மைதான் காரணம்
என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவை தவிர "மாநிலத்திற்கு
எதிரான குற்றங்கள்" என்ற தலைப்பில் அதிகமான வழக்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவுசெய்யப்
பட்டுள்ளது. போராட்டம் நடத்தக் கூடிய மக்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றங்களை சுமத்தி,
பொதுச்சொத்துசேதம் விளைவித்த சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகளும் வழக்குகளையும்
கண்மூடித்தனமாக உத்தரபிரதேச அரசு கொடுத்து வந்தது.
2020-ம் ஆண்டு நாடு முழுவதும்
5613 வழக்குகள் "மாநில அரசுக்கு எதிராக" ( offences against the state ) என்ற தலைப்பில்
பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 80.6 சதவிகிதம் அதாவது 4524 வழக்குகள் பொது சொத்தை
சேதப்படுத்திய சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து 14.2 சதவிகிதம்
796 வழக்குகள் உபா(UAPA) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும்
95 சதமான வழக்குகள் பொதுச்சொத்து சேதப்படுத்துதல் என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் குடியுரிமைச்திருத்தச் சட்டத்தை
எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்காகும்.
அதேபோன்று 72 வழக்குகள் உபா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவினை கிளர்ச்சிகள் நடைபெறாத ஒரு மாநிலத்தில்
வேறு எங்கும் இல்லாத அளவு அதிகமாக உபா சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆதித்யநாத்
ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்கள் போராட்டம் உட்பட மாநில அரசுக்கு எதிராக தேசவிரோத குற்றமாக
பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பட்டியலின மக்களுக்கு எதிரான
குற்றங்கள் இந்தியாவில் இக்காலத்தில் அதிகமாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு 45,935 குற்றங்களி
லிருந்து 2020-ம் ஆண்டு 50,291 என்று உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் 9.4சதவிதம் அதிகரித்துள்ளது.
அமித்ஷா பெருமை பீற்றிய உத்தரபிர தேசத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 12,714 என்ற எண்ணிக்கையில் நாட்டிலேயே
அதிகமாக 25.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கொலை, கொள்ளை, சிறார் குற்றங்கள்,
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல், தேசத்துரோக வழக்குகள், பட்டியலின மக்களுக்கு எதிரான
குற்றச்செயல்கள், என உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப் படாமல் சீர்கெட்டு
கிடக்கிறது, ஆனால் நமது நாட்டின் உள்துறை அமைச்சர் உண்மைக்கு மாறாக பொய் பேசுகிறார்.
பொய் பேசுவது மட்டுமே உண்மையாக இருக்கிறது.
பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக