Pages

செவ்வாய், அக்டோபர் 26, 2021

3. பொய் மட்டுமே உண்மை / பாக்கியம்

 

3. பொய் மட்டுமே உண்மை

                  "ஸ்ரீ நரேந்திரமோடி ஜி தலைமையில் உள்ள அரசு 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை செலுத்தி உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. எங்களது முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு எனது நன்றி" என்று ஒன்றிய மின்துறை அமைச்சர் ஸ்ரீ லாட்ஜ் கேசிங் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இதற்கு தடுப்பூசி சதம் என்று பெயர் வைத்துள்ளார். இது தடுப்பூசி சதம் அல்ல பொய்களின் சதம் என்று பெயர் சூட்டலாம்.

            இது உண்மை அல்ல. எதற்கெடுத்தாலும் மோடியும் அவரது பரிவாரங்களும் உலகிலேயே முதல், உலகிலேயே முதல் என்று பொய் பேசிப் பேசி பழக்கப்பட்டு, அதையே நம்பத் துவங்கியதின் விளைவு இது.

           இந்தியா தனது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜனவரி 16, 2021 அன்று துவங்கியது. அக்டோபர் 21,2021 அன்று மாலை 5.55மணிக்கு (1,00,57,42,472) அதாவது 100 கோடியே 57 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. இவற்றில் (71,02,98,755)  71 கோடி முதல் தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு தடவை தடுப்பூசி போட்டவர்கள் (29,45,91,727) 29 கோடி பேர்கள் மட்டுமே.

                        உலகில் முதல் முதலாக 100 கோடி தடுப்பூசியை செலுத்திய நாடு சீனா. ஜூன் 19 2021 சீனா 100 தடுப்பூசியை செலுத்தியது. ஆகஸ்ட் 26,2021சீனா 200 கோடியை கடந்து விட்டது. அக்டோபர் 20,2021 வரை சீனா 223 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. உலகில் கொரோனா தொடர்பான ஆய்வுகளை செய்யும் அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தின் தரவுகள் இதை வெளிப்படுத்தி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...