Pages

வியாழன், அக்டோபர் 21, 2021

2.பொய் மட்டுமே உண்மை /பாக்கியம்

 

2.பொய் மட்டுமே உண்மை


ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா 16.10.2021 கோவா மாநிலத்தில் பாஜகவின் ஊழியர்கள் மத்தியில் பேசுகிறபொழுது, இந்திய நாட்டின் கடவுச்சீட்டுக்கு(பாஸ்போர்ட்) மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று மார்தட்டியுள்ளார்.

"இப்பொழுதெல்லாம் இந்தியாவின் கடவுச்சீட்டை பார்க்கிற வெளிநாட்டு அதிகாரிகள் முகத்தில் சிரிப்பைக் காணமுடிகிறது. நீங்கள் மோடியின் நாட்டிலிருந்த வருகிறீர்களா? என முகமலர்ச்சியுடன் கேட்கிறார்கள்" என்று கதையளந்துள்ளார். இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் இல்லை. பொய் சொல்வது மட்டுமே பிழைப்பாக, கொள்கையாக கொண்டுள்ள எவருக்கும் ஆதாரங்கள் தேவையில்லை.
                      "நாம் யாருடைய மனதை மாற்றுவதற்காக பொய்பிரச்சாரங்களை செய்கிறோமோ அவர்களுக்கு நாம் சொல்லித்தான் அனைத்தையும் நம்புகிறார்கள் என்ற நினைப்பே வராமல் தாங்களாகவே சுயமாகவே தான் சிந்திக்கிறார்கள் என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பரப்புரை மிகச் சிறப்பாக வேலை செய்யும்" என்று ஹிட்லரின் பிரச்சாரகர் ஜோசப் கோயபல்ஸ் பேசியுள்ளார்.

               பாஜகவின் தலைவர்கள் எதை சொன்னாலும் அவையெல்லாம் உண்மை தான் என்ற நிலைக்கு பாஜகவின்  ஊழியர்களை ஏற்கனவே கொண்டு வந்துவிட்டார்கள். ஆகவே தான் இப்படி பொய்களை மட்டுமே சொல்ல முடிகிறது.

 

 உண்மையில் இந்திய கடவுச்சீட்டின் நிலைமை என்ன. கடச்சீட்டு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது.

                கடவுச்சீட்டு மதிப்பீடு செய்வதில் இரண்டு விதமான அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள் . பயணம் செய்யக்கூடிய நாடுகள் எண்ணிக்னை, விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து அளவீடு செய்யகூடிய முறை ஒன்றாகும்.

                      தேசிய வருமானத்தில் மூலதன கட்டணங்கள், ஊதிய செலவுகள் மற்றும் வரிகளில் சமமான பங்கீடு, தனிநபர் வருமானம், வளர்ச்சி விகிதம் மற்றும் உற்பத்தி செயல்பாட்டின் அளவுகள் ஆகியவற்றை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

                  ஹென்லி & பார்ட்னர்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் குடியிருப்பு ஆலோசனை நிறுவனம், சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ), உலகின் விமான நிறுவனங்களுக்கான வர்த்தக சங்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தரவரிசைகளை தீர்மானிக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வுகள் சுமார் 290 விமான நிறுவனங்கள் அல்லது மொத்த விமான போக்குவரத்தில் 82% பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காலாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட இந்த குறியீட்டில் 199 வெவ்வேறு பாஸ்போர்ட்டுகள் மற்றும் 227 பயண இடங்கள்  உள்ளடக்கி தரவரிசை வெளியிடப்படுகிறது.


                இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் 82வது இடத்திலிருந்து 2021-ஆம் ஆண்டு 90-வது இடத்திற்கு சென்றுள்ளது. எட்டு இடங்கள் பின்தங்கி உள்ளது. 2014- ம் ஆண்டு மோடி பதவியேற்ற போது இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு 76-வதுஇடத்தில் இருந்து தற்போது 90 ஆவது இடத்திற்கு சென்று இருக்கிறது. இந்த வீழ்ச்சியைத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதிப்பு உயர்ந்திருக்கிறது என்று தலைகீழாக பேசியுள்ளார். வீழ்ச்சி அனைத்தையும் வளர்ச்சி என்று கருதும், நம்பும் தலைவர்களாக தான் சங்க்பரிவார தலைவர்கள் இருக்கிறார்கள்.

 

         இந்த மதிப்பீட்டின்படி இந்திய கடவுச்சீட்டு 58 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதாவது 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். மேற்கு ஆப்பிரிக்கா தஜகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்திய கடவுச்சீட்டின் மதிப்பு இருக்கிறது.ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள்தான் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ஜெர்மனியும் தென்கொரியாவும் 190 நாடுகளுக்கு பயணிக்கலாம்  இரண்டாமிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் மட்டும்தான் வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில் 116 வது இடத்தில் உள்ளது.


                          நமது உள்துறை அமைச்சர் பெருமை பீற்றிக் கொள்ளக்கூடிய கடவுச்சீட்டின் மதிப்பு எங்கே உயர்ந்திருக்கிறது என்று இப்போது புரிகிறதா?
எப்படி படுத்து புரண்டாலும் இந்திய கடவுச்சீட்டில் மதிப்பு வீழ்ந்து உள்ள நிலையில் கடவுச்சீட்டு மதிப்பு மோடி ஆட்சியில் உயர்ந்திருக்கிறது என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது பொய் என்பதுதான் உண்மை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...