Pages

சனி, ஏப்ரல் 30, 2011

6 கடிதமே பிரகடனமாய்


        புறச்சூழல் பொருத்தமாக இருந்தால் ஒரு சிறு தீப்பொறியும் காட்டுத்தீபோல் மள மள என பற்றிக் கொள்ளும் என்பதற்கு இளம் இத்தாலி சிறந்த உதாரணம்.போராட்ட சூழலில் ஒரு கடிதம் ஏற்கப்படாதபோது அதுவே போர் பறையாய் போராட்டத்தையே கொழுந்துவிட்டு எரிய செய்யும் என்பதற்கு மாசினியின் கடிதம் ஒரு உதாரணமாகும். 1931-ல் சார்டினிய அரசின் புதிய அரசராக சார்லஸ் ஆல்பர்ட் என்பவர் பதவியேற்றார்.  இவர் கார்போரிய இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இவ்வியக்கத்தில் இவருடன் கலந்துகொண்ட மாசினி அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். 

               க்கடிதத்தில் ஒன்றுபட்ட இத்தாலி உருவாக்குவது பற்றி அதை எப்படி அடைய முடியும் என்பது பற்றியும் அதற்கான திட்டத்தினையும் முன்வைத்திருந்தான். அந்த மன்னனோ இக்கடிதத்தை அலட்சியப்படுத்தினான்.பதிலும் இல்லை,பரிசீலனையும் இல்லை. இதனால் இளம் இத்தாலிய அமைப்பினர் அக்கடிதத்தை பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும்  விநியோகம் செய்தனர். தேசப்பற்றின் உணர்ச்சி பிழம்பாய் எழுதப்பட்ட அக்கடிதம் இளைஞர்களையும், பொதுமக்களையும் சாரை,சாரையாக அணிதிரட்டியது. அரசனுக்கோ இந்தக் கடிதம் அச்சத்தை ஏற்படுத்தியது, ஆத்திரமூட்டியது.

              மாசினி பிரான்சிலிருந்ததனால் அவனை கைதுசெய்யக்கோரி நிர்பந்தம் செலுத்தினான். ஆனால் பிரான்சு அரசோ மாசினியை கைது செய்யாமல் மீண்டும் ஸ்விட்சர்லாந்திற்கு நாடுகடத்தியது. இக்கடிதத்தை விநியோகம் செய்த இளைஞர்கள் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்கடிதமே இளம் இத்தாலியின் கொள்கை பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர் எழுச்சிகள்
      கைதுகளும், நாடுகடத்தலும், தண்டனைகளும் இளைஞர்களின் எழுச்சிக்கு தடைபோட முடியவில்லை. எழுச்சிகள் தொடர்ந்தது மட்டுமல்ல பரவியும் சென்றது. 1833-ம் ஆண்டு அலெக்சான்டரியா, டூரின், ஜெனோவா, சாம்பிரி ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கி கலகம் செய்தனர். அரசு படைக்கும், இளைஞர்களுக்கும் வீதியில் கடும் மோதல் ஏற்பட்டது.

          அரசு அடக்குமுறையின் உச்சகட்டத்திற்கே சென்றது.இந்த எழுச்சியில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டது. மாசினி தலைமறைவாக இருந்தாலும் அவருக்கும் மரணதண்டனை என அறிவிக்கப்பட்டது. இந்த எழுச்சி தோல்வியில் முடிந்தாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களின் பார்வை இத்தாலியை நோக்கி திரும்பியது.

      ளம் இத்தாலி அமைப்பின் இளைஞர்கள்  தோல்வி கண்டு துவளவில்லை. 1834-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி ஸ்விட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற இளைஞர்கள் அங்கே ஒன்று கூடினர். அங்கிருந்து பியன்மன்ட் நகர் மீது பெரும் தாக்குதல் தொடுத்தனர். மறுபுறத்தில் இளம் இத்தாலிய சங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு கரிபால்டி ஜெனோவா நகரை தாக்கினான்.  

                தனால் கோபமடைந்த சுவிட்சர்லாந்து அரசு 1834-ம் ஆண்டு மே மாதம் மாசினியை நாடுகடத்தியது. போராட்டமும் நசுக்கப்பட்டது. பாரிசுக்கு தப்பிச்சென்ற மாசினியை சார்டினிய அரசின் நிர்பந்தத்தால் அவ்வரசு கைது செய்து சிறையிர் அடைத்தது.மேற்கண்ட இரு எழுச்சிகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலால் இளம் இத்தாலிய அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.நான்காண்டுகால இடைவெளிக்கு பின்னர் 1838-ம் ஆண்டு லண்டனில் ஒன்றுகூடி இளம் இத்தாலியை மீண்டும் புதுப்பித்தனர்.
 
             ந்த புனரமைப்பு புதிய தாக்குதலுக்கு புத்துயிர்ரூட்டியது.1841-முதல் 1845 வரை சிசிலி, அப்ரூசி, டஸ்கன், லம்போர்டி, வெனீசியா, ரோமக்னா ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் தொடர் எழுச்சிகளை ஏற்படுத்தினர். மேலும் சில நகரங்களில் இளம் இத்தாலியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்த சில இளைஞர் குழுக்கள் அரசிற்கெதிராக கலகம் செய்தனர்.  

            பிரௌன் பிரான்ஸ்கோ என்ற இளம் இத்தாலியன் சிசிலியில் 1848-முதல் 1856-வரை தீரமிகு போராட்டங்களை நடத்தி தனது 36-வது வயதில் மரணமடைந்தான். இவன் 1848-ல் பிரெஞ்சு படைகளை எதிர்த்து பாலிமோர் பகுதிகளை விடுதலைசெய்ததில் முக்கிய பங்காற்றினான். இவனது தீர செயல்கண்டு இராணுவத்தில் சேர்ந்திட அரசு கொடுத்த அழைப்பை நிராகரித்து இளம் இத்தாலிய அமைப்பில் இணைந்து செயல்பட்டான். 

   பிரெஞ்சு படைகள் மீண்டும் பாலிமோரை கைபற்றியபோது பிரெஞ்சு படைகளையும், உள்ளூர் அரசையும் எதிர்த்து 1850-முதல் இளைஞர்களை அணிதிரட்டி புரட்சி செய்தான். இதனால் 1853-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 1856-ல் அவன் விடுதலையானபோது சிறைவாழ்க்கை அவனது விடுதலைவேட்கையும் கனவுகளும் மேலும் உரமேறி உறுதிபட்டிருந்தது.எனவேதான் விடுதலையானவுடன் இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டி அரசுக்கெதிரான தாக்குதலை முன்னிலும் தீவிரமாகத் தொடுத்து

   1856 டிசம்பர் 20-ல் யுத்தக்களத்தில் வீரமரணம் அடைந்தான். அவனின்  வரலாற்றை அரசு மறைக்க முயன்றது. ஆனால் 1860-ல் கரிபால்டி சிசிலியை கைபற்றியவுடன் இவனது உடலை தோண்டி எடுத்து சொந்த மண்ணில் அடக்கம் செய்து, நினைவு ஸ்தூபியை உருவாக்கினான்.
 தேபோன்று பாண்டிரா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட 33 வயது நிரம்பிய அட்டிலோ , 25 வயது நிரம்பிய எமிலோ இருவரும் இளம் இத்தாலிய அமைப்பின் உதவியால் நேப்பில்ஸ் நகர கப்பற்படை மீது தாக்குதலை நடத்தினர். அந்நகரத்தின் சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தனர்.

       ரசு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 8 இணைஞர்கள் இறந்தனர். 1844-ல் அட்டிலோ, எமிலோ மற்றும் ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட்டு ஜீலை 23-ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு இளைஞன் கார்லோ பிசாகானே, இவன் 39வது வயதில் யுத்த களத்தில் இறந்தான். 

  நெபபோலியனின் படையிலிருந்த இவன் இளம் இத்தாலியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு 1847-ல் இவ்வமைப்பில் இணைந்தான். மாசினி உருவாக்கிய மிலான் நகர எழுச்சிக்கு தலைமையேற்று பெரும் தாக்குதலை நடத்தி கைதிகளை விடுவித்தான். இவன் புருதோனின் அராஜகவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான்.  துப்பாக்கி முனை ஆயிரம் புத்தகங்களைவிட அதிக பிரகாசமானது என்றும் , செயல்கள் மட்டுமே சிறந்த கருத்துப்பிரச்சாரம் என்றும் பேசினான். 1853-ல் ஏற்படுத்திய மிலான் எழுச்சி பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகியது. பல பிரதேசங்களில் இளம் இத்தாலி அமைப்பு வேட்டையாடப்பட்டு, பெரும் பின்னடைவை சந்தித்தது.

   ளம் இத்தாலியில் குறிப்பிடவேண்டிய மற்றொருவர் ஜோசப் வெர்டி இவர் தனதுசேர்ந்திசை மற்றும் மேடை நாடகத்தின் மூலமாக இளம் இத்தாலிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இளைஞர்களை திரட்டினார்.  மறுபுறத்தில் கரிபால்டி இளம் இத்தாலி பலவீனப்பட்டிருந்தாலும் அவர் தனியாக படையமைத்து இத்தாலியின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தார்.

   1870-ம் ஆண்டு சிசிலி எழுச்சியின்போது மாசினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நிலை பாதிப்பால் அதே ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாசினி 1872-ல் பைசா நகரில் மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான ஜெனோவாவில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்றனர்.

    1872-ல் இளம் இத்தாலியின் கனவான ஒன்றுபட்ட இத்தாலி உருவாகியது. ஆனால் அவர்கள் கருதிய சுதந்திர குடியரசு உருவாகவில்லை. காரணம் பிற்போக்கு அரசுக்கு எதிராகவும் , ஆஸ்திரிய, பிரெஞ்சு அரசுக்கெதிராகவும் பிரபலமான எழுச்சிகள் மூலம் மட்டுமே ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிவிடலாம் என்று மாசினி நம்பினார்.

    சுதந்திர குடியரசிற்கு இதுமட்டும் சாத்தியமல்ல. செயல்கள், எழுச்சிகள், துப்பாக்கிகள் மூலமாக தானாக கருத்துக்கள் பரவிவிடுமென நம்பினர். இதே கருத்துக்கள் 1920ம் ஆண்டுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர் அமைப்புகளிலும் காணக்கிடந்தது. இளம் இத்தாலி என்ற இளைஞர் அமைப்பு ஒன்றுபட்ட இத்தாலிக்கு அடித்தளமிட்டது. பல தியாகங்களை செய்தது. 

   வ்வமைப்பின் தாக்கத்தால் 1840-களில் இளம் ஸ்விட்சர்லாந்து , இளம் ஜெர்மனி, இளம் பிரான்சு, இளம் அயர்லாந்து என பல அமைப்புகள் உருவாகி இளம் ஐரோப்பா என்ற அமைப்பாக வடிவமெடுத்தது. இவ்வமைப்பின் தாக்கம் பிற்காலத்தில் இளம் துருக்கியர் அமைப்பு உருவாகிட தூண்டுகோலாக அமைந்தது. இளம் இத்தாலி என்ற அமைப்பின் வேர்களும் , விழுதுகளும் ஐரோப்பாவையும் கடந்து துளிர்க்கஆரம்பித்தது.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

5.செயலே சிறந்த பிரச்சாரம்


        1833-ம் ஆண்டு ஆஸ்திரிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இளம்இத்தாலியிலஉறுப்பினரானகண்டுபிடிக்கப்பட்டால்உடனடியாகமரணதண்டனை நிறைவேற்றப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அந்த அளவிற்கு இளம் இத்தாலியின் செயல்பாடு ஆஸ்திரிய நாட்டு ஆட்சிபீடத்தை ஆட்டம்காண செய்தது. இந்த அமைப்பின் செயல்பாடு இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளம் இத்தாலி என்ற இவ்வமைப்பு உருவாகிய காலத்தில் ஐரோப்பாவை போர்களும்போராட்டங்களும்கலகங்களும்தான்ஆட்சிசெய்துகொண்டிருந்தன. 

    அப்போது இத்தாலி பிரான்சிடமும், ஆஸ்திரியாவிடமும் பலகூறுகளாக  பிளவுபட்டுக்கிடந்தது. 1831-ம் ஆண்டு மார்செயில் என்ற இடத்தில் இளம் இத்தாலி என்ற அமைப்பை ஜோசப்மாசினி (ழுரளளநயீந அயண) என்ற 25 வயது நிரம்பிய இளைஞன் ஆரம்பித்தான். மாசினி  ஒரு இளைஞன்  மட்டுமல்ல கவிஞன்,எழுத்தாளன்,எழுச்சிமிகுபேச்சாளன்,அமைப்பாளன்,களம்கண்டபடைநடத்தும் தளபதி என பன்முகத்தன்மை கொண்டவன். 

    1821-முதல் கார்போரி என்ற ரகசிய இயக்கத்துடன் இணைந்து இத்தாலி விடுதலைக்காக போராடினான். அவ்வியக்கத்தில் இருந்தபோது 1830-ல் அவன் கைது செய்யப்பட்டு கடற்கரையின் தனிமை சிறையில்  அடைக்கப்பட்டான். பரந்த வானமும் விரிந்த கடலும் , இரவும்,பகலும் மட்டுமே அவனுடன் உறவாடின. அவனது மூளையோ எதிர்கால இத்தாலியை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இனி கார்போரி இயக்கத்தினை நம்பி பயனில்லை என்ற முடிவிற்கு வந்தான் மாசினி. இத்தாலிய இளைஞர்களின் உள்ள குமுறல்களுக்கு உருவம் கொடுக்க நினைத்தான். 

   ஆறு மாதம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு குக்கிராமத்தில்தா வாழவேண்டும் என்று அரசு கட்டளையிட்டதஇத்தாலியின் உருவாக்கத்திற்கும் எதிர்கால கனவிற்கும்  இக்கிராம வாழ்க்கை உதவாது என முடிவிற்கு வந்தான்.வேறுஎங்கும் குடியிருக்க கூடாது என்ற அரசின் எதேச்சதிகார உத்திரவால்  ஸ்விட்சர்லாந்து நாட்டில் குடியேறினான் 

          மாசினியின்  வாழ்விடத்திற்கு வேலி அமைக்கலாம் ஆனால் சிந்தனைக்கும் விடுதலை வேட்கைக்கும் வேலியிட முடியுமா?அந்த நாட்டிலும் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராடிக்கொண்டிருந்தனர். இதற்கு மாசினி உதவி செய்ததால் அங்கிருந்து வெளிறேவேண்டும் என்று உத்தரவிட்டது ஸ்விட்சர்லாந்து அரசு.நாடுகடத்தப்பட்ட அவன் பிரான்சின் மார்செயில் சென்று குடிபுகுந்து அங்குள்ள இத்தாலி இளைஞர்களை திரட்டித்தான் இளம் இத்தாலி என்ற அமைப்பை உருவாக்கி களத்தில் இறக்கினான். 

    1848-ம் ஆண்டு மார்க்சும், எங்கெல்சும் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிடும்வரை ஐரோப்பா முழுவதும் அறியப்பட்டவனாக இளைஞர்களை ஆகர்ஷிக்கக்கூடியவனாக மாசினியும், அவனது இளம்இத்தாலி என்ற இளைஞர் அமைப்பும் இருந்தது. குறிப்பாக அன்றைய நடுத்தரவர்க்க சிந்தனை ஓட்டத்தின் பிரதிநிதியாக மாசினியும் அவனது இளம் இத்தாலி என்ற அமைப்பும் இருந்தன.
   ஒன்றுபட்ட இத்தாலி, அதுவும்  சுதந்திர குடியராக இருக்க வேண்டும் என்பவையே இளம் இத்தாலியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட இத்தாலி ஒரு புவியியல் மாயை என்று அன்றைய ஆஸ்திரிய அமைச்சர் மெட்டர்னிச் ஏளனம் செய்தான் ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது. இளம் இத்தாலியர்கள் அதை உருவாக்கி காட்டுவார்கள் என்று பதிலடி கொடுத்தான் மாசினி. 

    1833-ம் ஆண்டு இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இளம்இத்தாலிய அமைப்பு உருவாகி போராட்டக்களத்தில் குதித்தது. அப்போது அச்சங்கத்தில் 60000-க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். மாசினியின் கவித்துவம் மிக்க எழுத்தும் , உணர்ச்சிபொங்கும் பேச்சும் எழுச்சியூட்டும் செயலும் எண்ணற்ற இளைஞர்களை ஈர்த்தது. 

ஓ.. இளைஞர்களே,  
 மலைகளுக்குச் செல்லுங்கள்   
ஆலைகளுக்கும் ,
 வயல்வெளிகளுக்கும் 
செல்லுங்கள்   
அவர்களுடன் உணவருந்துங்கள்,  
அவர்களது உரிமைகளைப்பற்றி பேசுங்கள்   
அவர்கள் மீதான, எல்லையற்ற 
அடக்குமுறைகளை 
உணரவையுங்கள். 

என்று இளைஞர்களை ஈர்க்கும் முழக்கங்களை எழுப்பினார். தியாகிகளின் குருதி  நீராய் பெருகி  பெருக்கெடுக்கும்போது,  கருத்துக்கள்,  துரிதமாய் வளர்கிறதுஎன தியாகத்தின் அவசியத்தையும், அதன் வலிமையையும் வலியுறுத்தினார்.

 ஓ.. மக்களே,  
 எழுச்சிகளுக்கு இளைஞர்களை
 தலைமையேற்க செய்யுங்கள்,   
அவர்களது உள்ளங்களில் 
உறைந்து கிடக்கும் சக்தியை
நீங்கள் அறியவில்லை,   
இளைஞர்களின் குரலுக்கு 
மக்களிடையே  மந்திர சக்தி   போன்ற மதிப்பிருக்கிறது

என்று அவன் விடுத்த அறைகூவல் இத்தாலி இளைஞர்களை களத்தில் இறக்கியது.மக்கள் செவிமடுத்தனர்.மன்னன் செய்வதறியாது திகைத்தான். 

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

4.வார்ட் பர்க் (wartburg) எழுச்சி


                          ஜெர்மனியில் வார்ட் பர்க் (wartburg)என்ற கோட்டை போன்ற பெரும் கட்டிடத்தில் ஆண்டுதோறும் புதுமையை வரவேற்கும் விழா நடைபெறும் . இந்த கட்டிடத்தில் தங்கியிருந்துதான் மார்டின் லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார் எனவே இக்கட்டிடம் அன்றையஜெர்மானிய தேசீயத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

                          1817-ம் ஆண்டு நடைபெற்ற இந்த புதுமைகளை வரவேற்கும் வார்ட்பர்க் விழாவில் ஏராளமான மாணவர்கள் அணிதிரண்டனர்.உணர்ச்சி பிழம்பாக ஒன்றிணைந்த  அம்மாணவர்களிடையே எழுச்சி பொங்கும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் உத்வேகமுற்ற மாணவர்கள் நெப்போலியனின் சட்டத்தையும், ஹேலரின் (ழயடடநச) மீட்டமைப்பு என்ற நூலையும் கோட்சூபூ என்ற கவிஞன் எழுதிய ஜெர்மானிய வரலாறு என்ற நுலையும் தீயிட்டு கொளுத்தினர்.

                          இச்சம்பவம் ஜெர்மனி முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரஞ்புரட்சியின்போது நடைபெற்ற  ஜேகோபியன் அராஜகத்துடன் ஒப்பிட்டு அந்நாட்டு அரசுமாணவர்களையும் இளைஞர்களையும் வேட்டையாட துவங்கியது. அந்நாட்டு அரசு மாணவர்கள் அமைப்பின் மீதும், இளைஞர்களின் ரகசிய குழுக்கள் மீதும் தனது பிடியை இறுக்கியது. பல்கலைகழக வகுப்பறையிலேயே அரசின் ஒற்றர்கள் உட்கார்ந்தனர். ஆசிரியர்களிடம் பாடப்புத்தக பட்டியலையும், மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,குடியிருப்பு விபரங்களையும் அரசுக்கு அளித்திடவேண்டுமென உத்தரவு போட்டது. 

                     இந்த எழுச்சிகளினிடையே 1819-ம் ஆண்டு அரசு ஆதரவு கவிஞன் கோட்சூபூ என்பவரை காரல்சான்ட் என்ற மாணவன் படுகொலை செய்தான். இதனால் கோபமடைந்த அரசு அனைத்து மாணவர் அமைப்புகளையும் தடைசெய்து சட்டவிரோதம் என்று அறிவித்தது. காரல்சான்ட் (karl sand) கைது செய்யப்பட்டு ஓராண்டு விசாரிக்கப்பட்டான்.

                விசாரணையின்போது எனது விருப்பத்தையும்,எனது புனிதத்தையும்எனது உறுதியையும்அவன் நசுக்கினான். சுத்தமான துய்மையான, சுதந்திரமான இளைஞர் உலகை ஊழல்நிறைந்த அரசு சீரழிக்கிறது. எனவே நான்  இந்த காரியத்தை செய்தேன் நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த, உயரிய காரணத்திற்காகத்தான் சாவேன். விரைவான வெற்றி இளமையில் மரணம் என்பதே என் விருப்பம் என்றான். விசாரணைக்கு பிறகு 1820-ம் ஆண்டு பொது இடத்தில் அவனது தலை துண்டிக்கப்பட்டது. அமைப்பு  ரீதியான இயக்கத்தின் முதல் தியாகி காரல்சான்ட் ஆவான்.
                              காரல்சான்ட் தலை துண்டிக்கப்பட்டாலும் இளைஞர் இயக்கம் புதிய துடிப்புடன் எழுந்தது . ஜெர்மனியின் மற்றொரு பல்கலைகழகமான ஜிசன் பல்கலைகழகத்திலிருந்து காரல் ஃபாலன் (kari fallen) என்ற மாணவன் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்றான். எந்த வழியிலாவது நாம் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்றால் நாம் நிபந்தனையற்ற குழக்களாக மாறவேண்டும் என்றான். பொதுநலத்திற்காக வாழ்வது மட்டுமல்ல சாவதும் பொதுநலத்திற்காகவே  இருக்கவேண்டும் என்று அறைகூவி அழைத்தான். 

                இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தலைவனாக வலம் வந்தான். ஜெர்மனி அரசு கைது செய்ய முயற்சித்தபோது சுவிஸ்நாட்டிற்கு தப்பித்து சென்றான்.அங்கும் அரசின் அடக்குமுறையால் 1821-ல்  அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டான். இந்த மாணவர் சங்கம் 1848-ம் ஆண்டுவரை செயலூக்கத்துடன் தொடர்ச்சியாக பல்வேறு நடைவடிக்கைகளில் ஈடுபட்டது. இதே காலத்தில் அர்மேனிய மாணவர்சங்கம் என்ற கிருஸ்துவ பழமைவாத மாணவர் அமைப்பும் ஜெர்மானிய பல்கலைகழங்களில் பரவலாக செயல்பட்டது.

                          1830-ம் ஆண்டுகளில் இளம் ஜெர்மானியர்கள் என்ற பெயரில் இலக்கியம், பத்திரிகை சுதந்திரம், அறிவுத்துறை ஆகியவற்றில் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டனர். 1770-முதல் 1831 வரை வாழ்ந்த ஹெகல் என்ற தத்துவஞானியை பின்பற்றியவர்கள் இளம் ஹெகலியவாதிகள் என்றழைக்கப்பட்டனர். ஹெகல் இயக்கவியலை விரிவாக்கம் செய்தார். 

                     இது இயக்கவியல் பொருள்முதல்வாதம் தோன்ற அடிப்படையாக அமைந்தது. 22 வயது நிரம்பிய காரல்மார்க்ஸ் உட்பட பலர் இளம் ஹெகலியவாதிகளாக அக்காலத்தில் செயல்பட்டனர். சிலர் ஹெகலின் இயக்கவியல் குறைபாடுகளை முன்னிறுத்தி ஜெர்மனியில் முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை நிலைநிறுத்த மதத்துடன் இயக்கவியலை பொருத்த முயற்சித்தனர்.

      மார்க்சும், எங்கெல்சும் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினர். மார்க்ஸ் 26வது வயதில் புனித குடும்பம் என்ற நூலையும் , 27வது வயதில் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலையும் எழுதி தனது கருத்துக்களை நிறுவினார். 38 பகுதிகளாக பிரிந்து கிடந்த ஜெர்மனியில் இளைஞர்கள் ஜெர்மனியின் ஒன்றுமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் கலகம் செய்தார்கள். இயக்கங்களாகவும் பரிணமித்தார்கள், எழுச்சியும் பெற்றார்கள்.

3.உலைக்களங்களில் இளம் ஜூவாலைகள்

                  ற்ற நாடுகளைவிட ஜெர்மனியில் இளைஞர்களுக்கும்.அடுத்த தலைமுறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தி வருகின்றனர்.இதற்கான காரணத்தை தேடிய சமூக அறிஞர்கள் ஜெர்மானியில் கலகங்களும் எழுச்சிகளும் தொடர்ச்சியாக நடந்து வந்ததை கண்டுணர்ந்தனர்.இதுதான் இளைஞர்கள் மீது அந்நாடு  தொடர்ந்து கவனம் செலுத்த காரணம் என்ற முடிவுக்கு வந்தனர். 

                    இளைஞர் இயக்கங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நாடுகளில் ஜெர்மனி, பிரதானமானது. 1770-ம் ஆண்டுகளிலேயே அன்றைய அரசுக்கு எதிராக இளைஞர்கள் மலை ஏறும் போராட்டங்களை துவக்கினர். மலை ஏறியவர்கள் இறங்வில்லை.அவர்களின் போராட்டத்தை ஆதிரித்து நகரங்களில் இயக்கம் நடைபெற்றது. இப்போராட்டங்கள் பல ஆண்டுகள் நீடித்தது. அதைத்தொடர்ந்து 1815- ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தில் ஜெர்மனியின் உரிமைகளை உரிய முறையில் பெறாமல் விட்டதற்கு தங்களது முன்னோர்களும்.ஆளுவோர்களும் தான் காரணம் என்று  தாராளவாத இளைஞர் பிவுகளும் , இளம் ஹெகலியவாதிகளும் கடுமையாக சாடினர்.

                  இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர்.ஜெர்மணி முப்பத்தி எட்டுக்கும்மேற்பட்ட பகுதிகளாக பிரிந்துகிடந்து.பிரெஞ்சு,இத்தாலி ஆஸ்திரிய நாடுகளுக்கு பல பகுதிகள் அடிமையாக இருந்தன. ஏனவே ஒன்றுபட்ட ஜெர்மனி என்ற கோஷம் முன்னுக்கு வந்தது. 1871-ம் ஆண்டுகளில் தான் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவானது என்றாலும் இதற்கான போராட்டம் 1815-லேயே துவங்கிவிட்டது. 

                  இப்போராட்டத்தின் பலதரப்பட்ட மக்கள் இருந்தாலும்  முன்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் இருந்தனர்.ஜெர்மானிய தேசிய உருவாக்கத்தை யொட்டியே இளைஞர் மாணவர்கள்  எழுச்சிகளும் இயக்கங்களும் தோன்றின. 1815-ல் ஜீனா(துநயே) என்ற பல்கலைகழகத்தின்  மாணவர்கள் மாணவர் சங்கம் (ளுவரனநவே ஹளளடிஉயைவடி) என்ற அமைப்பை முதன் முதலாக தொடங்கினர். 

                     இதுதான் வரலாற்றில் முதல் மாணவர் அமைப்பாககுறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பல்கலைகழகத்தில்தான் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளான கெதே, சில்லர் போன்ற பல அறிஞர்கள் பேராசிரியர்களாக பணியாற்றினர். இந்த மாணவர் சங்கத்தினர் ஜெர்மானிய ஒற்றுமை , ஜனநாயகம், சுதந்திரம் , ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தங்களது போராட்டங்களை நடத்தினர்.     

                 எங்களது சுதந்திரத்தை யாரும் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை.     அப்படி அத்துமீறி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயமானதே   என்று பிரகடனப்படுத்தினார்கள்.

            தங்களது சுதந்திரத்திற்கும், செயளுக்கும் தடையாக இருக்கும் நிகழ்கால சட்டங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று நினைத்தனர்.இளைசக்தி ஒன்றல்ல இரண்டல்ல பலஆயிரம் இணைகிறபோது மடைதிறந்த வெள்ளம்போல் இவ்வியக்கம் ஜிசன்,மார்பக், எர்லான்சன், ஹைடல்பர்க், பெர்லின், என எட்டுக்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களுக்கு பாய்ந்தோடியது. 

      அரசின் கொள்கைக்கு எதிராக இம்மாணவர்சங்கங்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. பொறுக்கமுடியாத அரசு ராஜதுரோக நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்ணாக பல்கலைகழகங்கள் இருக்கிறது என்று அன்றைய அரசு அறிவித்தது. மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

வியாழன், ஏப்ரல் 14, 2011

உலக இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்-2 (1815 - 1890)


                                                      2 தோற்றப் பின்னணி   

                       இளைஞர் இயக்கங்கள் உருவாவதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன? எந்த இயக்கமும் தோன்றுவதற்கு அக்காலத்தின் சமூகப் பொருளாதார,  அரசியல் காரணிகள் அடிப்படையாக விளங்கும். இளைஞர் இயக்கங்களுக்கும் அதுவிதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வரலாற்று வளர்ச்சிப் போக்குகளில் தலைமுறை இடைவெளியும்,  தீர்க்கமுடியாத வாழ்வாதார முரண்பாடுகளும் ஏற்பட்டபோது இளைஞர்இயக்கங்கள் உருவாகின. இந்த முரண்பாடுகளின் வழியே சுயஉணர்வு பெற்ற,  குறிப்பிட்ட வயதினர்,  நிகழ்கால சமூக அமைப்பை நிராகரித்து ஒன்று சேர்ந்து மாற்றம் காணும் பாதையைத் தேடியபோது இளைஞர் அமைப்புகள் தோன்றியது. 

          அதுவும் மாற்றங்களின் மகுடமாகத் திகழ்ந்த ஐரோப்பாவில்தான்  இவ்வமைப்புகள் முதன் முதலில் உருவாகத் தொடங்கின. அதற்கான சமூக அரசியல் பின்னணியின் களமாக பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் திகழ்ந்தது. இன்று நம்மால் அறியப்படுகிற,  நன்கு அமைப்பு ரீதியாத் திரட்டப்பட்ட இளைஞர் அமைப்புகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் ஐரோப்பாவில்    உருவாகியது.  இதற்கு ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இளைஞர்களுக்கான பிரச்சனைகள் உருவாகின. அப்பிரச் சனைகளுக்கான போராட்டங்கள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கின.
                         பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. மக்கள் தொகை வளர்ச்சி,  சராசரி வாழ்நாள் உயர்வு,  கிராமம்,  நகரம் என இடப்பெயர்வுகள்,  அரசியலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வேகமாகவும் பரவலாகவும் தோன்றின. 1750ல் 12.5 கோடியாக இருந்த மக்கள் தொகை 1800-ல் 20.8 கோடியாக உயர்ந்தது. 1750-ல் சராசரி வாழ்நாள் 30 முதல் 40 வரையிலிருந்து 1800-ல் 55வயதாக உயர்ந்தது. 1750-க்குப் பிறகு மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் குழந்தை இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது. பிரெஞ்சு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகியது. 
                  
                ஐரோப்பிய சமூகம் அதிவிரைவாக இக்காலத்தில் நிலப்பிரபுத்துவத்திலிருந்து தொழில்மய சமூகமாக மாறிக்கொண்டிருந்தது. கைவினைக்கூடங்கள் வணிக வர்த்தகத்தோடு இணைந்து தொழில் கூடங்களாக மாறியது. கிராமங்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்து நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகள் வேகமாக நடந்தேறியது. லாக்,  மான்டஸ்க்யூ,  ரூசோ,  போன்றவர் களின் எழுத்துக்கள் அன்றைய சமூக அபத்தங்களுக்கு சவால் விட்டன. 1776-ம் ஆண்டில் முடிவடைந்த அமெரிக்க விடுதலைப் போராட்டமும்,  1791-ல் வெளியிட்ட பிரெஞ்சு நாட்டின் மனித உரிமைப் பிரகடனமும் (குசநஉ னநஉடநசயவடிஅ டிக வாந சபைவள டிக அய) அரசியல் களத்தில் தேசிய வாதத்திற்கும்,  புரட்சிக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

                              இக்காலத்தில் பிரான்சில் தாராளவாதிகள் (டநநெசயடள) அடிப்படை வாதிகள் (சயனஉயடள) புரட்சியாளர்கள் என அரசியல் அரங்கில் அணிதிரட்சி நடைபெற்றது. பல பக்கங்களிலிருந்தும்  எழுச்சிகள் வீறுகொண்டு எழுந்தன. பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கு சளி பிடிக்கும்  என்ற நிலை இருந்தது.
                              
                  வேகமாக மாறிவரும் சமூகத் தளத்திலும்,  அரசியல் தளத்திலும் இளைஞர்கள் தங்களுக்கான இருத்தலையும் எதிர்காலத்தையும்  தேடினர். எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் இளைஞர்களின் தேவைகளையும்,  அபிலாஷைகளையும்,  உணர்வுகளையும்   ஆக்ரோஷமான வடிவங்களில்  வெளிப்படுத்தினர். ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களையும் கட்டி இழுத்த இளம்வெர்தரின் துயரம்,  (ளடிசசடிற டிக லடிரபே எநசவாநச) என்ற நாவலை ஜெர்மனிய மொழியில் 1774-ம் ஆண்டு கெதே (ழுடிநவா) வெளியிட்டார். 

                  அப்போது கெதேவிற்கு வயது 24 மட்டுமே. அகமனதின் வேட்கைக்கும்,  எதார்த்த உலகின் அபத்தங்களுக்கும் நடுவில் தவிக்கும் இளைஞனை இந்நாவல் வெளிப்படுத்தியது.  இளமையின் துடிப்பு,  வாழ்வின் திகைப்பு,  காதலின் பித்து,  தனிமையின் துயரம் என உணர்ச்சி கொப்பளிக்க,  கற்பனை தெறிக்க ஐரோப்பிய இளைஞர்களை இந்நாவல் புயல் போல் புரட்டிப்போட்டது. இதே காலத்தில் பெரும் ஜெர்மானிய கவிஞர் சில்லர் (ளுநாடைடநச) எழுதிய வழிப்பறிக்காரர்கள் (கூந சுடிநெசள) என்ற நாடகம் இளைஞர்களின் கோபக்கனலை தீப்பற்றி எரியச்செய்தது. இந்நாடகத்தில் இரு சகோதரர்கள் எதிரெதிரான சமூகப்பிரிவுகளை கதாபாத்திரங்களாக எதிரொலித்தனர். ஒருவன் பணத்திற்கு அலைந்தான். செல்வச் சுருட்டலை நியாயப்படுத்தினான். மற்றவன் புரட்சிகரமான கருத்துக்களுடன் உடனடித் தீவுக்காக மாணவர்களையும்,  இளைஞர்களையும் செயலிலே இறங்க அறைகூவி அழைத்தான்.
                          நாடகமேடையில் இக்கதாபாத்திரங்களின் உரையாடல் இளைஞர்களின் தேவைகளையும்,  விருப்பங்களின் நியாயங்களையும் கட்டுமீறிய (எடிடநவே நஒயீசநளளடி) உணர்வுகளின் மூலமாக வெளிப்படுத்தியது. நாடக மேடையே ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்தின் அவலங்களை காட்சிப்படுத்தியது. மீட்சிக்கான கருத்துக்களையும் விவாதித்தது.சில்லரின் மற்றொரு நாடகம் வில்லியம் டெல்(றுடைடயைஅ கூநடட) இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது.
                             அரசியல்,  இலக்கியம்,  நாடகம் என பலதுறைகளில் இளமையின் தாக்கம் ஊடுவியது. மொசார்ட்(ஆடிணயசவ) இசைத்துறையில் மதசார்பற்ற இசையைப் பிரபலபடுத்தினான். இசையை அரண்மனைக் குள்ளிருந்தும்,  தேவாலயங்களுக்குள்ளிருந்தும் தெருவிற்கு கொண்டுவந்தான். இசை பற்றிய உயர்வர்க்க பாரம்பரிய விதிகளை ஆட்டம் காணச்செய்தான். தனது 35 வது வயதில் மரணம் அடைவதற்கு முன்பாக 600-க்கும் மேற்பட்ட இசைக் குறிப்புகளைத் தயார்செய்து உலகுக்குஅளித்து சாதனை படைத்தான். இவனே அன்றைய இளைஞர்களை ஆகர்ஷிக்கும்  இளம் நட்சத்திரமாக வலம் வந்தான்.

                சமூகத்தின் சகல துறைகளிலும் ஏற்படுத்திய தாக்கம் அனைத்து இளைஞர்களையும் விழிப்படையச் செய்தது. அரசியலில் பழமை வாதத்திற்கு எதிராகவும்,  நிறுவனப்படுத்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு எதிராகவும்,  பத்தாம்பசலித்தனமான பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராடினர். பல்கலைக்கழகத்தில் குவிந்த மாணவர்கள் அதிகாரிகளையும்,  காவல்துறையினரையும்,  நகரமக்களையும் எள்ளி நகையாடினர்.  அதிக சுதந்திரம் வேண்டும்.  பாடத்திட்டங்களில் மாற்றம் வேண்டும்,  சங்கம் அமைத்துச் செயல்படும் உரிமை வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் நிரம்பினர். வீதிகளே விவாத மேடைகளாகவும். போராட்டக் களமாகவும், எதிர்கால சிந்தனைகளைக் தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது.
                       
                   பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்தான் இப்படிப்பட்ட எழுச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பட்டது.அதற்கு முன்னால் அதிககால இடைவெளியில் ஆங்காங்கே சில இளைஞர் கலகங்கள் நடைபெற்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் 1297-ம்ஆண்டில் புனித மத்தேயூ திருவிழாவின்போதும்,  1354-ல் மற்றொரு புனிதர் தினத்திலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,  நகர மக்களுக்கும் இடையில் கலவரம் வெடித்தது. வன்முறைத் தாக்குதல்கள்,  சொத்துக்கள் அழிப்பு,  உயிர்ச்சேதங்கள் என கடுமையான சேதாரங்கள்  இக்கலவரத்தில் நடந்தேறியது. 

                                  இக்கலவரத்தை டவுன் மற்றும் கவுன் கலவரம் (கூடிற யனே ழுடிற சடிவள) என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். நீண்ட அங்கி(ழுடிற)அணிந்த உயர்வர்க்க மாணவர்கள்  நகரத்தின் அடிமட்ட உழைப்பாளிகள் இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்பாடே இந்த மோதல். மத்திய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இப்போராட்டங்கள் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக நடந்தது.  பல குழுக்கள் உருவாகி இப்போராட்டங்களை நடத்தியது.  அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அமைப்பு ரீதியான இளைஞர் இயக்கங்கள் உருவாகி சமூக இயக்கங்களாகப் பரிணமித்தன. 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1815-ல் வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டது,  
                  
                            வரலாற்றில் புதிய  திருப்பத்தை ஏற்படுத்தியது. யுத்த முடிவில் ஏற்பட்ட வியன்னா ஒப்பந்தத்தால்  ஐரோப்பா மீண்டும் ஒருமுறை கூறுபோடப்பட்டது. தனிமனித உரிமை,  தேசப்பற்று,  பொதுமொழி,  கலாச்சாரப் பாரம்பரியம்,  தேசிய அரசு என்ற சிந்தனையும் செயல்வடிவங்களும் மேலோங்கியது. வளர்ந்து வந்த தொழில் முதலாளிகளுக்கு தங்களது லாபவேட்டைக்குப் பெரிய தேசமும்,  தேசீயஅரசும் தேவைப்பட்டது. இதனால் ஒன்றுபட்ட தேசத்திற்கான போராட்டங்கள் தீவிரமடைந்தன. மறுபுறத்தில் தொழிலாளி வர்க்க அணிதிரட்டலும், அதன் சிந்தாந்தங்களும் அரசியல் களத்தில் செல்வாக்குப் பெறத்துவங்கியது. 1789-ல் பிரஞ்சு தேசிய சட்டமன்றத்தில் கட்சிகள் அமர்ந்திருந்ததை ஒட்டி அவர்களது கொள்கைகள் அடையாளப்படுத்தப்பட்டன. சபாநாயகரின் வலதுபுறம் பழமைவாதிகளும்,  நடுவில் தாராளவாதிகளும்,  இடது புறம் புரட்சியாளர்களும் அமர்ந் திருந்தனர்.
                   
                             பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இவற்றை வைத்தே அரசியல் இயக்கங்கள் வலது இடது என அடையாளப்படுத்தப்பட்டது.  தொழில் முதலாளிகளின் செல்வம் பலமடங்கு இக்காலத்தில் பெருகியது. மறுபுறத்தில் செல்வக் குவிப்பின் விளைவாக  வேலையின்மையும்,  வறுமையும்,  அதிகமாகியது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முறையில் பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகியது. தொழில்மய தீமைகள்,  ஊழல்,  சர்வாதிகாரம்,  வறுமை,  ஆகியன சமூகத்தை ஆட்சிசெய்ய ஆரம்பித்தது. இவற்றை எதிர்த்து கற்பனாவாத சோசலிசத்தை முன்வைத்த செயின்ட் சைமோன்,  பியூரியர்,  ராபர்ட் ஓவன் ஆகியோரின் கருத்துக்ளை  நோக்கி இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். மார்க்ஸ்,  ஏங்கல்ஸ் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் மேலும் புதிய சிந்தனைப் போக்கையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது. இளைஞர்களில் மேல்தட்டுவர்க்க இளைஞர்கள்,  உழைப்பாளிவர்க்க இளைஞர்கள் என இரு பிரிவுகளாக அணிதிரள ஆரம்பித்தனர். 
                  
                        இந்தப் பின்னணியில் 1848-ம் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சியில் பிரான்சு,  ஜெர்மனி,  இத்தாலி,  அயர்லாந்து,  ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் மாணவர்களும்,  இளைஞர்களும் அதிக அளவில் பங்கெடுத்துக் கொண்டனர். மேற்கண்ட அரசியல் பொருளாதாரப் பின்னணிதான் ஐரோப்பாவில் பல நாடுகளில் இளைஞர் மாணவர் இயக்கங்கள் உருவாகி புதிய எழுச்சியையும்,  தாக்கத்தையும்,  மாற்றத்தையும் ஏற்படுத்தக் காரணமாகின. 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...