Pages

செவ்வாய், டிசம்பர் 19, 2023

சீனாவின் மின்னணு (EV) கார்: அலறும் அமெரிக்கா.


உலகில்  நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் 2035 ஆம்


ஆண்டு புதிய கார் உற்பத்தியில் மின்னணு கார்கள் 50 சதவீதம் உற்பத்தி ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு புதிய கார்களின் உற்பத்தியில் மின்னணு  கார்களின் உற்பத்தி 18 சதவீதமாகும். 


2023 தரவுகளின் படி, உலகில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஒன்பது முக்கிய கார் நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. டெஸ்லா மாடல் Y ,டெஸ்லா மாடல் 3 அமெரிக்காவை சேர்ந்த இரு நிறுவனங்கள் முதல் இடத்தில் உள்ளது. BYD Atto 3 / யுவான் பிளஸ்,

 BYD டால்பின், GAC Aion S , Wuling HongGuang Mini EV , GAC Aion Y , ஐயா ஆகிய சீனாவின் ஐந்து நிறுவனங்கள் அதற்கு அடுத்து உள்ளது. எட்டாவது இடத்தில் ஜெர்மனியின்VW ஐடி.4 நிறுவனமும்,மீண்டும் ஒன்பதாவது இடத்தில் சீனாவின் BYD சீகல் நிறுவனமும் உள்ளது.


 சீனாவின் வளர்ச்சி வேகத்தை கண்டு அமெரிக்கா தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட மற்ற நாடுகளை மிரட்டும் போக்கை கடைபிடிக்கிறது. 


மெக்சிகோ நாட்டில் சீனா தனது 3 மின்னணு கார் நிறுவனங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்களை போட்டு சுமார் 200 கோடி டாலர் முதலீடு செய்துள்ளது. சீனாவில் உற்பத்தி செய்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்வதை விட, மெக்சிகோ நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவக்கூடிய முறையில், வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய வகையில் இந்த தொழிற்சாலையை அங்கு நிறுவுவதாக சீன நாடு தெரிவித்துள்ளது.


அமெரிக்கா தனது அண்டை நாடான மெக்ஸிகோவை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற கூடாது என்றும், ரத்து செய்ய வேண்டும் என்றும் மிரட்டி வருகிறது. காரணம் தனது நாட்டு கார் கம்பெனிகளின் வீழ்ச்சியை கண்டு பயப்படுகிறது. 


சீனாவின் மின் கார்களின் தரம் உயர்ந்ததாகவும், புதிய செயல் திறன் கொண்டதாகவும், விலை குறைவாகவும் உள்ளது. சந்தை விதிகளின்படி போட்டிக்கு தயாராக இல்லாத அமெரிக்கா , படைபலம் மூலமாக மிரட்டி வருகிறது.சீனக் கார்கள் ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 


சீனா மெக்சிகோவில் கால் ஊன்றுவதன் மூலம் மெக்சிகோ சந்தையை பிடிப்பது  மட்டுமல்ல , அமெரிக்க சந்தையிலும் நுழைந்து விடும் என்ற அச்சம் உருவாகி இருப்பதினால மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. 


இது மட்டுமல்ல உலக அளவில் மின்னணு கார்களுக்கான பேட்டரி தயாரிப்புகளில் சீனா செல்வாக்கு செலுத்துகிறது. முதல் இடத்தில் உள்ளது.


 உலகமயத்தை பேசிய அமெரிக்கா தற்போது  வணிக விதிகளை எல்லாம் மீறி  பாதுகாப்பு (Productionism) கொள்கையை தனது நாட்டிற்கு அமுலாக்குகிறது. மற்ற நாடுகள் இதை செய்த பொழுது அந்த நாடுகளை மிரட்டி உலக மயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அமலாக்க வைத்தது.


அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரே நோக்கம் ஆயுத பலத்தையும், வணிகத்தையும் தனது சுரண்டலுக்கு பயன்படுத்துவது மட்டும்தான். மற்ற நாடுகளில் வேலை வாய்ப்பு உருவாக்குவது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவது என்பதெல்லாம் போலியானது.

அ.பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...