Pages

வெள்ளி, நவம்பர் 27, 2020

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல்-3

 

     இந்தியாவில் நகர்மய அவதாரங்கள்                                                          அ.பாக்கியம்


                     முதல் பதிப்பு ஜனவரி 2018

              வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          1980ம் ஆண்டுகள் வரை திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படை நோக்கமே சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவதுமக்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது என்பதுதான் திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையாக இருந்தது. இவை முழுமையாக அமலாக்கப்பட்டதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால்சந்தை இந்த திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது. நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை இலக்காக கொண்டிருந்தது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தோட்டம் மேலோங்கி இருந்ததால் ஓரளவு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

          1990ம் ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தார். உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்றபடி தீவிர சீர்திருத்தங்களை அமலாக்கினார். 1990ம் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் சதவீதமாக இருந்தது. இக்காலத்தில் தீவிர நகர்மயமாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தியது. 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002- 2007) மொத்த  உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக உயர்ந்தது. இதே போன்று 11வது ஐந்தாடு திட்டத்தில் (2007 2012) மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதமாக உயர்ந்தது. இக்காலத்தில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பெருநகரங்களின் பங்கு 62 சதவீதமாக இருந்தது. நகரத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். நகர்மயம்தான் மத்திய அரசின் திட்டத்தில் முக்கிய இலக்காக மாறியது. 2005 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி  ஜவஹர்லால் நேரு தேசிய  நகர்புற புனரமைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டிற்குள்  இந்த திட்டத்தை நிறைவேற்றிட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின்முன்னுரையில் நகரங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் விசை (நபேநேள டிக நஉடிடிஅஉ பசடிறவா) என்று குறிப்பிடப்பட்டது. இந்த நகர்மய திட்டத்தை வேகப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக அடைந்திட வேண்டுமென்று இலக்கை நிர்ணயித்தார்கள். இந்த நகர்மய திட்டத்திற்கு ஏற்ற வகையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை (2012-2017) உருவாக் கினார்கள். இத்திட்டத்தில் நகர்மய விரிவாக்கம் மற்றும் அதன் தேவைகளை சவாலாக எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று வரையறை செய்தனர்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு- ஓர் அலசல்-2

 

          சீர்திருத்தமாமாற்றமா?         

அ.பாக்கியம்

முதல் பதிப்பு ஜனவரி 2018

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          நாம் வாழும் சமூகம் வர்க்க பேதங்கள் நிறைந்த  சமூகமாகும். உழைப்பாளி மக்களிடம் இருக்கிற இந்த வர்க்க வேறுபாடுகளை பயன்படுத்தி கொண்டு பெருமுதலாளி வர்க்கம் சுரண்டல் அமைப்பை தீவிரப்படுத்திக் கொள்கிறது. பொருளாதார சுரண்டலை பாதுகாப்பதற்கு சமூக ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி கொள்கிறது. முதலாளி என்ற முறையில் அவர் மூலதனத்தின் அவதாரமே. அவரது ஆன்மா மூலதனத்தின் ஆன்மாவே என்று காரல் மார்க்ஸ் தனது மூலதன நூலில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளியின் நிலையிலிருந்து இந்த கருத்தை முன்வைப்பார். முதலாளித்துவம் நெருக்கடிகளை சந்திக்கிறபோதும்தனது லாப வேட்டை சுருங்குகிற போதும் புதிய புதிய முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும். தொழில்களை நவீனமயமாக்குவதுகுறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை தேடுவதுசட்டப் பாதுகாப்பற்ற தொழிலாளர் கூட்டம்கட்டுப்பாடற்ற சந்தைநிலம் என அனைத்து வகையிலும் இந்த முயற்சிகள் இருக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

          தற்போது மூலதனத்தை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும்தொழில் ஆரம்பிப்பதற்கும் குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை பெறுவதற்கும் நிலம்நீர்மின்சாரம்சந்தைபோக்குவரத்து என அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் அமைத்துக் கொண்டு குறைவான முதலீடுஅதிகமான லாபம் என்ற கொள்கைக்கு ஏற்ற இடமாக பெருநகரங்களை உருவாக்குகின்றனர். இதற்காக உலக வங்கி உட்பட சர்வதேச நிதி மூலதன அமைப்புகள் கட்டமைப்பு - சீரமைப்பு (ளவசரஉவரசயட யனதரளவஅநவே) என்ற திட்டத்தை உருவாக்கி 98 நாடுகள் மீது திணித்து அமலாக்கின. இதன் அடிப்படை நோக்கமே தேசிய அரசுகளின் பலத்தை குறைத்துநிதி மூலதனத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கிபெரும் நகரங்களை சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதாகும். சேமநல அரசு (றுநடகயசந ளுவயவந) என்பதை தகர்த்துபெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வணிக இழப்புகளை அரசு ஈடுகட்டுவதாகவும்அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு முழுமையாக உதவி செய்யக்கூடிய வகையிலும் அரசின் தன்மைகளை மாற்றியமைத்தனர்.

          இதன் விளைவு மூலதன ஈர்ப்பை பெறுவதற்கு பெரு நகரங்களிடையே போட்டிகள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் மூலதன குவியல்களின் மையமாக (சுநபஅநள டிக யஉஉரஅரடயவடி) மாறியது. இந்த மாற்றங்கள் பற்றி பொருளாதார அறிஞர் டேவிட் ஹார்வி 1989-லும் 2005லும் தனது ஆய்வின் அடிப்படையில் கீழ்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். நவீன தாராளமயம் மூலதன திரட்சிசுதந்திர சந்தை உருவாக்கதிற்கு வழிவகுத்தது. நிதி சந்தையின் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்கியது. இதனால் உலகின் பல பகுதிகளில் பொருளதார கட்டமைப்பில் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களால் நிதி மூலதன நடமாட்டத்தில் தேசிய அரசுகளின் கட்டுப்பாடு குறைந்தது. நகரங்கள் சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்பட்டன. மூலதனத்தை ஈர்க்கும் போட்டிக்கு நகரங்கள் தள்ளப்பட்டன. குறைந்த செலவு அதிக லாபம் என்ற முறையில் மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிந்தது என்று விவரித்துள்ளார். இந்த பின்னணியில்தான் நிலம்மின்சாரம்தண்ணீர்வரிச்சலுகைகள் என அனைத்தும் பெருநகரங்களில் மையப்பகுதிகளில் அதன் சுற்றுவட்டாரத்திலும் அரசுகளால் வாரிவழங்கப்பட்டன. நகரங்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கும்நவீன தாராளமயக் கொள்கைக்கும் அவசியமாக இருந்தது. இதற்கு அவர்கள் நகர்மய சீர்திருத்தம் (ரசயெ சநகடிசஅள) என்று பெயரிட்டார்கள். உண்மையில் அது சீர்திருத்தம் அல்ல நகர்மய மாற்றம் (ரசயெ உயபேந). அதுதான் நடைபெறுகிறது. அதாவது தங்களது லாபவேட்டைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதாகும்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல் 1

 


அ.பாக்கியம் 

                               முதல் பதிப்பு ஜனவரி 2018

                               வெளியீடு : பாரதி புத்தகாலயம்

    வன்முறை பற்றிய நமது பொது புத்தியின் புரிதல் மேலோட்டமானது. தனி நபர் கொலைகள்கூட்டு வன்முறைகலவரங்கள்தீவைப்புபொருட்சேதம்உயிர்சேதம் என வன்முறையின் விளைவுகளிலிருந்து மட்டும் வன்முறை பற்றிய கருத்துக்கள் கட்டமைக்கப்பபட்டுள்ளது. ஒரு வர்க்க சமூகத்தின் பொருளியல் உற்பத்தியின் அடிப்படையிலிருந்து சட்டங்களும்ஒழுக்க நியதிகளும் உருவாக்கப்படுகின்றன. வன்முறை பற்றிய பார்வைகளும் இதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இதுநாள் வரை பெண்கள் மீதான வன்முறை ஆணாதிக்கப் பார்வையிலிருந்து நியாயப்படுத்தப்பட்டது. சாதியமதவெறி கட்டமைப்பில் இன்றும்கூட பெண்கள் மீதான வன்முறை எழுதப்படாத சட்டமாக நியாயப்படுத்தப்படுகிறது. எனினும் நவீன காலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் வன்முறை என்ற பார்வை மேலோங்கியுள்ளது. இந்த வகையில் வன்முறை பற்றிய பொது புத்தி கூர்மையடைந்து வருகிறது. வன்முறை பற்றிய விசாலமான பார்வையும்அதுகுறித்த விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

வன்முறையின் பல வடிவங்களை பற்றிய ஆய்வுகளை பல சர்வதேச அமைப்புகள் வரையறை செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆள் பலத்தையும்அதிகார பலத்தையும் பயன்படுத்தி ஒரு நபருக்கோ அல்லது மற்றொரு நபருக்கோஒரு குழுவிற்கோஒரு சமூகத்திற்கோ காயம்மரணம்பொருட்சேதம்உயிர்சேதம் ஏற்படுத்துதல் மற்றும் பயமுறுத்தல்இருத்தலுக்கெதிரான அச்சுறுத்தல் வன்முறையாகும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 133 நாடுகளில் வன்முறைகளை பற்றி ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் வன்முறை பற்றிய விரிவான விவரங்கள் உள்ளன. இவற்றில் தனிநபர் வன்முறைகூட்டு வன்முறைசுய வன்முறை (தற்கொலை) என வன்முறையின் பல வடிவங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிகாரத்தை பயன்படுத்திய (ரளந டிக யீடிறநச) வன்முறைதான் உலகில் அதிகமாகவும்பரவலாகவும் நடைபெற்று வருகிறது என்ற விவரங்களும் வெளிப்பட்டுள்ளன.

          யுத்தம்எல்லை விரிவாக்கம்ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான அடக்குமுறைதனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதுஅடிப்படை உரிமைகளை மீறுவது என இந்த அதிகார வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. நவீன தாராளமய கொள்கைகள் உலகின் நியதிகளாக மாற்றப்படுகிற இக்காலத்தில் குடியிருப்புகளை அகற்றுவதில் அதிகார வன்முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இவை பரவலாக நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லை விரிவாக்கத்திற்காக செவ்வந்தியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அதிகாரத்தை பயன்படுத்திய வன்முறை ஆகும். அதுமட்டுமல்லவளர்ச்சி என்ற பெயரிலும்நாகரீக மனிதர்களுக்கும்நாகரீகமற்றவர்களுக்குமான யுத்தம் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறை ஆகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு இந்த அதிகார வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இந்த அதிகார வன்முறையின் ஊடாகத்தான் இந்தியாவில் நகர்மயமாக்கலின் விளைவுகளை காணவேண்டியுள்ளது. நகர்மய விரிவாக்கத்தில் குடிசைபகுதி மக்கள்நகர்புற ஏழைகள்நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஆவணமற்ற குடியிருப்புவாசிகள் ஈவிரக்கமற்ற முறையில் நகரைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்த வன்முறை, "வளர்ச்சி" என்ற முகமூடி அணிந்து நடத்தப்படுவதால் நமது பொது புத்தியில் இது வன்முறையல்ல என்ற கருத்து வலுவாக பதியப்படுகிறது.

    வளர்ச்சி என்பது அவசியமானது தவிர்க்க முடியாததும்கூட. அந்த வளர்ச்சி யாருக்கானதுஎன்பதுதான் முக்கியமான கேள்வி. நகர்மயமாக்கல் சகாப்தத்தில் இடப்பெயர்வும்வெளியேற்றமும் பெருமளவில் நடைபெறுவதை வளர்ச்சியின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நகர்மயமாக்கல் என்பது அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்துவதும் நகர்புற மக்களின் சுகாதார வாழ்விட வசதிகளை மேம்படுத்துவதுமாகும். ஆனால்நவீன தாராளமய கொள்கைகளில் நகர்புறத்தில் குடியிருக்கிற 30 சதத்திற்கு மேற்பட்ட நகர்புற ஏழைகள் மற்றும் வருமானம் குறைவான தொழிலாளர்கள்நடுத்தர பகுதியினர் என 60 சதத்திற்கு மேல் உள்ளவர்களை புறக்கணித்துவிட்டுபுறநகருக்கு விரட்டிவிட்டு வளர்ச்சி என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்வசதி படைத்த ஒரு சிறு பகுதியினரின் வாழ்க்கைக்கு ஏற்ற முறையிலும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகள் குறைந்த கூலிக்கு சுரண்டல் களத்தை உருவாக்குவதற்கு ஏற்ற வகையிலும் நகர்மயம் மாற்றியமைக்கப்படுகிறது. மேற்கண்ட மாற்றங்களை சென்னை நகரில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும்.

சனி, மே 02, 2020

மே தினம், இனியொரு விதி செய்வோம்!

அறிவியல் பார்வையற்ற அரசு அச்சத்தின் பிடியில் மக்கள்

WHO மீது TRUMP- தாக்குதல் சரியா?

பொய் செய்திகளை கூட உண்மையாக மாற்றுவோம் "அமித்ஷா"

இனி 8 மணி நேரம் வேலை செய்தவர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமா???

வியாழன், ஏப்ரல் 09, 2020

கோவிட் 19


கோவிட் 19  வைரஸைஎதிர்த்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காரணம் இந்தியாவில் 5 கோடி சர்க்கரை நோயாளிகளும் 5 கோடியே 40 லட்சம் இதய நோயாளிகள் உள்ளனர் உலகில் வேறு எங்கும் இப்படி இல்லை தாக்குதல் தீவிரமாக முன் தற்காப்பு தீவிரமாக வேண்டும்.
@
2018 ஆம் ஆண்டு சுவாசக்கோளாறு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவே இவையும் கடினமான சூழலை உருவாக்கும்.
@
உலகில் 10.2 மில்லியன் அளவில் உள்ள நெஞ்சத நோயாளிகளில் இந்தியாவில் 2.8 மில்லியன் நெஞ்சை நோயாளிகள் இருக்கிறார்கள் உலகிலேயே அதிக நெஞ்சக நோய்கள் இருக்கும் நாடு இந்தியா. கொரோன வைரஸ் விரைவில் தாக்கக்கூடிய நோயாளிகள் இவர்கள்.
@
இந்திய அரசு சுகாதாரத் துறைக்கு ஒரு சதவீதம் மட்டுமே மொத்த ஜிடிபியில் ஒதுக்குகிறது. உலகத்திலேயே இதுதான் மிக மிக குறைவான ஒதுக்கீடு.
@
இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் 74% சுகாதார நலன் சார்ந்த சந்தைகளை கட்டுப்படுத்துகின்றனர் ஆனால் அந்த மருத்துவமனைகள் ஒட்டுமொத்தமாக 40 சதவீத  படுக்கைகளை மட்டுமே கொண்டிருக்கிறது.
@
12 கோடி மக்கள் தொகை உள்ள மராட்டிய மாநிலத்தில் 450 வெண்டிலேட்டர் களும் 502 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் மட்டுமே உள்ளன.ம
மூன்று கோடியே 20 லட்சம் மக்கள் தொகை உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் 150 வெண்டிலேட்டர் களும் 25 சிறப்பு பிரிவு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் நமது நாட்டின் பலவீனம்
@
போதுமான அளவு பரிசோதனை கருவிகள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர்,மருத்துவமனை படுக்கைகள், இல்லாத நிலையால் நமது நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளாக நெஞ்சக நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. சராசரியாக 1400 உயிர்களை தினசரி பறிக்கக் கூடிய அளவில் நெஞ்சக நோய் இருக்கிறது.
 இதுதான் காரோனோ வைரஸ் பரவிட ராஜபாட்டை ஆக திகழும் என்று அஞ்சுகிறார்கள்.

Vidya krishnan
foreign affairs 25 March 2020




திங்கள், ஏப்ரல் 06, 2020

இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகள்


-
டி.கே.ராஜலட்சுமிதமிழில் .சுப்பாராவ்
Apr. 01, 2020 at 4:07 pm
FRONTLINE
இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. மார்ச் 19 அன்று மக்கள் மார்ச் 22ம் தேதியன்று  தாங்களாகவே ஊரடங்கிற்கு உள்ளாகிக் கொள்ளவேண்டும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிகளைப் பாராட்டும் வகையில் பால்கனியில் நின்று கைதட்டவேண்டும், மணியடிக்க வேண்டும், பொருட்களைப் பதுக்கக் கூடாது என்றெல்லாம் வேண்டிக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலும் நாட்டின் சுகாதாரத் துறையின் தயார் நிலை பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

பயணம் குறித்த ஆலோசனைகள், விமான நிலையங்களில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான சோதனைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்துதல் ஆகிய அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று ஏற்றாலும், பொது சுகாதார நிபுணர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மிகவும் குறைத்துக் கூறுதல் பற்றி கவலை தெரிவிக்கிறார்கள். மேலும், ஐசிஎம்ஆர் நடத்திய குறைந்த எண்ணிக்கையிலான சாம்பிள்கள் மீதான பரிசோதனைகள் சமூகப் பரவல் நடக்கவில்லை என்று முடிவுசெய்ய போதுமானவை அல்ல என்றும் கூறுகிறார்கள்.

COVID-19 ஆல் தாக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக எங்கும் நடமாடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. மார்ச் 21ல் வெளியான ஐசிஎம்ஆரின்  பரிசோதனை பற்றிய திருத்தப்பட்ட திட்டம் இந்தியாவில் COVID-19 தொற்று பயணம் மூலமாக வருவது, உள்ளூரில் அதுஅவர்களது நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு இறக்குமதி ஆகிறதுஎன்ற அணுகுமறையை வலியுறுத்துகிறது. “இந்த நோயின் சமூகப் பரவல் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. சமூகப் பரவல் ஆவணப்படுத் தப்பட்டதும், மேற்குறித்த பரிசோதனை திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அந்த நிலைக்குத் தகுந்த பரிசோதனைத் திட்டம் உருவாக்கப்படும், என்று அந்த அறிக்கை கூறுகிறது

தற்போதைய பரிசோதனைத் திட்டம், கடந்த 14 நாட்களில் சர்வதேசப் பயணம் மேற்கொண்ட, நோய் அறிகுறியற்ற நபர்கள் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது. அவர்கள் (காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற) நோய் அறிகுறிகள் கொண்டிருந்தால் மட்டுமே பரிசோதிக்கப்படவேண்டும், நோய் உறுதி செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.  பரிசோதனைக்கூடத்தில் உறுதிசெய்யப்பட்ட நபர்களின் அனைத்து அறிகுறிகள் உள்ள தொடர்புகள், அறிகுறிகள் உள்ள சுகாதாரப் பணியாளர்கள்,  காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஆகிய சிரமங்கள் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நோய் உறுதிசெய்யப்பட்டவரின் அதிக ஆபத்து உள்ள அறிகுறி அல்லாத நெருங்கிய தொடர்புகள் ஆகியோரும் அவரோடு தொடர்பு கொண்ட 5ம் நாளும், 14ம் நாளும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. காய்ச்சல், கடும் மூச்சுத் திணறல் ஆகியவற்றிற்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்க வேண்டியதில்லை என்ற அதன் முந்தைய நிலைபாட்டிலிருந்து இது சற்று மாறுபட்டதாகும்.

பரிசோதித்தல், சிகிச்சையளித்தல், தடம் காணுதல் (Test, Treat, Trace)
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சமீபத்திய செய்திநாடுகள் தனிமைப்படுத்தவேண்டும், பரிசோதிக்க வேண்டும், சிகிச்சை அளிக்க வேண்டும், தொற்றின் தடம் காணவேண்டும்என்று சொல்கிறது. இதை இந்திய அரசாங்கம் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
இந்தியாவின் மோசமான பொது சுகாதார அமைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதமாக மிகக் குறைவான தொகையே பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கவலைகள் எழுகின்றன. மிக முன்னேறிய பொதுச் சுகாதார அமைப்பும், சேவைகளும் கொண்ட மேற்கத்தியப் பொருளாதாரங்களில், அவற்றை மீறி COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இந்தியாவின் சுகாதார அமைப்பு, சேவைகளின் தயார்நிலை குறித்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட அளவில் கூடுதலான பரிசோதனை வசதிகள், ஏழை, எளியோருக்கு அதிக சமூக, பொருளாதார ஆதரவு ஆகியவற்றிற்கு பதிலாக. தாமே சொந்தமாகப் பார்த்துக் கொள்ளுதல், தனிமைப்படுதல், ஒதுங்கியிருத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. திடீர் தொற்றுத் தாக்குதல்களைக் கண்டுபிடித்து, அவற்றிற்கு வினையாற்றுவதற்காக 2004ல் உருவாக்கப்பட்ட Integrated Disease Surveillance Project (IDSP) திட்டத்தின் செயல்திறன் பற்றியும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கரோனா தொற்றுப்பரவல் பற்றி எழுதியுள்ள சத்தீஸ்கரின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பொது மருத்துவரான யோகேஷ் ஜெயின், தடயங்கள் இல்லை என்பது இல்லை என்பதற்கான தடயம் இல்லை என்று பிரண்ட்லைனிடம் கூறினார். மிகக் குறைந்த அளவே பரிசோதிக்கப்படுவதால் இந்தியா குறைந்த எண்ணிக்கையைக் காட்டுகிறது என்றார் அவர். இந்தியாவில் ஒரு மாறுபட்ட நோய்த் தொற்று அறிவியல் இல்லை என்பதால், சமூகப் பரவல் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றார் அவர். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படவேண்டும், அந்தத் தரவுகள் மக்களிடையே பகிரப்பட வேண்டும் என்றார். .சி.எம்.ஆர். தான் நோய் அறிகுறிகளைக் கவனிப்பதற்கான மையங்களை வைத்திருப்பதாகவும், அங்கிருந்தே மாதிரிகளை எடுத்ததாகவும் கூறுகிறது. ஆனால் ஒரு பத்து மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து நிமோனியா சோதனை செய்தாலும்கூட, நமக்கு ஒரு தெளிவு கிடைத்துவிடும். ஐரோப்பிய நோய் விரிவாக்க வளைவில் நாம் ஓரிரு வாரங்கள் பின்தங்கி இருக்கிறோம் என்பதால் மட்டுமே, இங்கு அது நிகழாது என்பதல்ல என்கிறார் அவர். சமூகப் பரவல் இருந்தால் மட்டுமே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதுபைத்தியக்காரத்தனம்என்கிறார். உலக சுகாதார நிறுவனம் சில நாடுகள் வேகமாக செயல்பட வேண்டும் என்று மறைமுகமாக கோடிட்டுக் காட்டியுள்ளது.

குறைவான அளவு சோதனை நடத்துவதற்கு, சோதனை உபகரணங்கள் பற்றாக்குறையை பல காரணங்களுள் ஒன்றாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பொது சுகாதார நிபுணர்கள், இந்தப் பிரச்சனையை அரசாங்கம் முன்னதாகவே தீர்த்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். IDSயின் கீழ் சுமார் 168 ப்ளூ சோதனை மையங்கள் உள்ளன. உண்மையில் அடிக்கடி ஏற்படும் வைரஸ் கிருமித் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார ஆய்வுத் துறை முக்கியமான வைரஸ் தொற்றுகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வதற்காக ஐசிஎம்ஆரின் கீழ் வைரஸ் ஆய்வு மற்றும் கண்டறியும் ஆய்வுக்கூடங்களை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட சுமார் 85  ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை COVID – 19 ற்காக சோதனைகள் செய்கின்றனவா என்று தெரியவில்லை. ”ரகசியமாக செயல்படுவது போல் தெரிந்தால், மக்கள் எல்லாவிதமான முடிவுகளுக்கும் வந்துவிடுவார்கள், என்கிறார் ஜெயின்.

சீனா,  ஊஹான் பகுதியைத் தனிமைப்படுத்துவதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தியாவில் அதிக மக்கள்தொகை நெருக்கத்தின் காரணமாக இது நடைமுறை சாத்தியமில்லை. “நோய்த் தொற்று இருப்பதாக சோதனை முடிவு வந்தாலும் கூட, மக்கள் கவலைப்படாமல், சமூகத்தில் இணைந்து நடமாடுகிறார்கள்,” என்கிறார் ஜெயின். சீனாவில் ஊஹானில் எல்லோரும் வெளியில் செல்வதற்கான தேவை இன்றி, வீட்டிலேயே இருப்பதற்காக அரசாங்கம் அனைத்தையும் பார்த்துக் கொண்டது.  COVID – 19ஆல் பாதிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 10 சதத்தினரையாவது ஐசியுவில் வைக்க நேரும், வெண்டிலேட்டரில் வைக்க நேரும் என்கிறார் அவர். ஆனால் வெண்டிலேட்டர்களின் பற்றாக்குறை, முழுமையான வசதிகள் கொண்ட ஐசியுக்களின் பற்றாக்குறை ஆகியவை நமக்கு பெரிய சவால்கள்.
வெண்டிலேட்டர்
சதீஸ்கரில் 32 மில்லியன் மக்களுக்கு 156 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு இரண்டு லட்சம் பேருக்கும் ஒன்று என்ற விகிதத்தில். “நோய்ப் பரவல் ஒருசதவிகிதத்தினருக்கு என்றாலும் கூட, ஆயிரம் பேருக்கு நோய் தொற்றியிருக்கும். அதில் நூறு பேருக்கு வெண்டிலேட்டர் தேவைப்படும், ஆனால், ஒருவருக்குத் தான் வெண்டிலேட்டர் கிடைக்கும்,” என்கிறார் அவர்.

சமீபஆண்டுகளாக, உலக சுகாதார நிறுவுனங்கள் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவாத, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களான புற்றுநோய். நீரிழிவுநோய், நுரையீரல் அடைப்பு நோய் போன்றவற்றில் தமது கவனத்தைத் திருப்பிவிட்டன. இப்போது தொற்று நோய்கள் மீண்டும் பெருமளவில் பரவுவது ஒரு புதிய சவாலை விடுத்துள்ளது. இந்திய சுகாதார ஆய்வுத் துறையின்படி, இந்தியா இதுபோன்ற சவால்களை நிபா, (2001, 2007, 2018) ஏவியன் இன்ஃபுளுயன்ஸா H5N1, (2006) சிக்கன்குனியா, (2006)  பெரும்தொற்று இன்ஃபுளுயன்ஸா, (2009) எபோலா, (2013), ஜிகா, (2016) என்று பலமுறை சந்தித்திருக்கிறது.
இந்திய பொதுச் சுகாதார தரநிலையின் வழிகாட்டுதல்களின்படி அதிக முன்னுரிமை மாவட்டங்களில் 2020 வாக்கில் மருத்துவர்கள், மருத்துவத் துணை ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், கடும் மருத்துவ செலவுகள் செய்யும் குடும்பங்களின் விகிதத்தை 2025 வாக்கில் 25 சதவிகிதமளவிற்குக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை அரசாங்கம் வைத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 1.15 சதமாக உள்ள தனது சுகாதாரத்திற்கான செலவினத்தை 2025 வாக்கில் 2.5 சதமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

COVID – 19 பரவலால் அமெரிக்காவும், பிரிட்டனும் வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற ஐசியு வசதிகளின் பற்றாக்குறைகளைச் சந்தித்துள்ளன. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைகள் என்ற வகைளில் மிக உயர்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட நாடுகள். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசாங்கம் நோய்த் தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரோடு தொடர்புடையவர்களை தேடிக் கண்டுபிடிக்காது, மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவபவர்களுக்கு சிகிச்சை மட்டுமே தரும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் எண்ணிக்கை அதிகரித்ததும், தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டார்.

தொற்று நோய்கள் விடும் சவால்கள்

2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி, இந்தியாவில் சராசரியாக 10926 நபர்களுக்கு ஒரு அரசாங்க அலோபதி மருத்துவர் இருக்கிறார். சுமார் 8.6 லட்சம் துணை செவிலியர், பிரசவ தாதிகள், சுமார் 20 லட்சம் பதிவு யெற்ற செவிலியர் உள்ளனர். 130 கோடி மக்கள்தொகைக்கு வெறும் 25,778 அரசு மருத்துவமனைகளும், 7,13,986 படுக்கைகளும்தான் உள்ளன. தொற்றுநோய்கள், இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான நிதிஒதுக்கீடு எந்த ஆண்டிலும் ரூ.100 கோடியைத் தாண்டியதில்லை. உண்மையில் 2016லிருந்து இதற்கான செலவு 50 முதல் 60 கோடி வரை ஆகிறது.  நெருக்கடிகால மருத்துவ உதவி, நெருக்கடிகால மருத்துவ சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறைப் பேரழிவுத்  தயார் நிலை மற்றும் நிர்வாகத்திற்கான, 2018-19 பட்ஜெட் மதிப்பீடு ஒதுக்கீடு, 2016-17 ஒதுக்கீட்டில் பாதியாகக் குறைக்கப்பட்டது. (2016-17ல் 30 கோடி, 2018 – 19 மதிப்பீட்டில் 16.85 கோடி)

2011 மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகையில் 8.3 சதம் மட்டுமே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதே சமயம், 15 முதல் 59 வரையிலான வயதுகளில் 64.7 சதத்தினர் உள்ளனர். தொற்று வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதுகோள் உண்மையல்ல. ஏனெனில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரில் சுமார் 30 சதவிகிதத்தினர் 20 முதல் 44 வயதுகளில் உள்ளவர்கள்தான். எனினும்,மரணங்கள் வயதானவர்களுக்கே நிகழ்ந்துள்ளன. பரவக்கூடிய, கர்ப்பகால, சிசுக்கள், ஊட்டச் சத்துக் குறைபாடுகள் தொடர்பான நோய்கள் 1990க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் 61 சதத்திலிருந்து 31 சதமாக குறைந்தது, பரவாத நோய்களில் இது 30 சதத்திலிருந்து 55 சதமாக அதிகரித்தது பற்றி அரசாங்கம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால், மாநிலங்களுக்கு இடையே பரவாத நோய்களில் இந்த சதவிகிதத்தில் 48 முதல் 75 சதம் வரையிலும் பரவும் நோய்களில் 14 முதல் 43 சதம் வரையிலும் வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் 2019 தேசிய சுகாதார அறிக்கையின்படி, பரவும் நோய்களின் காரணமாக, மொத்த நோய்களில் சுமார் 69.47 சதமான நோய்கள் கடும் மூச்சுத் திணறல் தொடர்பானவைகளாக உள்ளன. தொற்று நோய்கள் காரணமாக, மரணங்களில், 57.86 சதம் நிமோனியா மற்றும் மூச்சுத் திணறல் நோய்கள் காரணமாகவே நிகழ்கின்றன. மரணங்களுக்கான மூன்றாவது பெரிய காரணம் கடும் வயிற்றுப்போக்கு. இது 10.5 சத மரணங்களுக்குக் காரணமாக உள்ளது. 2018ல் மட்டும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9.2 லட்சம். அதற்கு முந்தைய ஆண்டு 7.5 லட்சம்தான். அதேபோல, வைரல் மஞ்சள் காமாலை, வைரல் மூளைக் காய்ச்சல். பன்றிக் காய்ச்சல், கடும் வயிற்றுப்போக்கு. கடும் மூச்சுத் திணறல் ஆகியவை 2018ல் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருந்தன.

குணப்படுத்தும் வழிமுறையாக ஊரடங்கு

பொது சுகாதார நிபுணர்கள் அரசாங்கம் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று எச்சரித்தாலும் கூட, அரசாங்கத்திற்குத் தெரிய வரும் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதை மறுக்கும் போக்கே இப்பொழுதும் உள்ளது. சமூகத்தில் வைரஸ் ஏற்கனவே நுழைந்திருக்கும் வாய்ப்புள்ள இந்த நேரத்திலும், அரசாங்கம், “குணப்படுத்துவதை விட தவிர்ப்பது மேல்என்ற வழியையே கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது. அடிக்கடி சோப் போட்டு கை கழுவுவது, ஆல்கஹால் உள்ள சானிடைசரைப் பயன்படுத்துவது, நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது நோய் பரவலைத் தடுக்கும் என்று சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும் என்பதாக பரவலைத் தடுக்கும் பொறுப்பு அளவிற்கு மீறி மக்கள் மீதே திணிக்கப்படுகிறது.

இந்தியச் சூழலில், கூலி உழைப்பிற்காக நெடுந்தூரம் பயணிப்பவர்கள் அதிகமுள்ள நாட்டில், மக்கள்தொகையின் பெருபகுதியை தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை. ஊஹானில் சீன அரசாங்கம், மக்களுக்கு வீட்டிற்குச் சென்ற உணவு அளிப்பதை உறுதிசெய்தது. அதன் மூலம் நேரடி, சமூகத் தொடர்பு வழியே நோய் பரவுவதைத் தடுப்பதில் வெள்றி பெற்றது. இந்தியாவில் அதுபோன்ற முயற்சிகள் இல்லை.
இந்தியாவில் ஊரடங்கு

மக்கள் தம் கைகளை சோப் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பத் திரும்பச் சொல்லும் அறிவுரையை குடிக்க, குளிக்க மற்றும் இதர சுகாதாரத் தேவைகளுக்கு சுத்தமான நீர் கிடைக்கும் வாய்ப்புகளோடு பொருத்திப் பார்க்க வேண்டும். தேசிய சுகாதார அறிக்கை 2018ன்படி, நாட்டில் 43.5 சதவிகித குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருக்கிறது. அதிலும் 32 சதம்தான் சுத்திகரிக்கப்பட்டது. சுமார் 33.5 சத குடும்பங்கள் அடிபம்புகளை நம்பியுள்ளன. 11 சத்த்தினர் கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர். இதில் 9 சதம் திறந்த கிணறுகள். 46.6 சத குடும்பங்களுக்கு மட்டுமே வீட்டிற்குள்ளேயே குடிநீர் வசதி இருக்கிறது. 35.8 சதத்தினருக்கு வீட்டிற்கு அருகே குடிநீர் கிடைக்கிறது. 17.6 சதத்தினருக்கு வீட்டிற்கு சற்று தூரத்தில்தான் குடிநீர் கிடைக்கிறது.

மாநிலங்களுக்கு இடையிலும் இவ்விஷயத்தில் பரந்த வேறுபாடுகள் உள்ளன. கேரளாவில் 77.7 சத குடும்பங்களுக்கு வீட்டிற்கு உள்ளேயே குடிநீர் கிடைக்கும் அதே வேளையில் சத்தீஸ்கரில் இந்த சதவிகிதம் 26.5 மட்டுமே. 10379 கிராமக் குடியிருப்புகள் பாதுகாப்பான குடிநீர் இன்றி இருக்கின்றன. அந்த நீரில் ஃபுளூரைடின் அளவு அதிகமாக உள்ளது. சுமார் 16279 குடும்பங்களின் குடிநீரில் ஆர்சனிக் கலந்துள்ளது. 46.9 சத குடும்பங்களுக்குதான் கழிப்பறை வசதி உள்ளது. 53.1 சத வீடுகளில் வீட்டினுள் கழிப்பறை கிடையாது. சுமார் 48.9 சத வீடுகளுக்கு சாக்கடை வசதி கிடையாது. 42 சத வீடுகளில்தான் குளியலறை உள்ளது. 55.8 சத வீடுகளுக்குத்தான் சமையலறை வசதி உள்ளது. 31.8 சத வீடுகளில் சமையலறை தனியாக கிடையாது.

எனவே, குழாயில் வந்துகொண்டே இருக்கும் சுத்தமான நீர் என்ற வசதி இல்லாத சூழலில், சோப் வைத்து கை கழுவுவது, சானிடைசர் பயன்படுத்துவது என்பதெல்லாம் இந்தியச் சூழலில் மிக ஆடம்பரமான விஷயங்கள். COVID – 19 அச்சம் அதிகரிக்கும் போது, முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றை நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் அதிகமாக வாங்க ஆரம்பிக்கும்போது, வியாபாரிகள் அவற்றிற்கு அதிக விலை வைக்கிறார்கள். ஊரடங்கு பயத்தில் பலரும் உணவு, மருந்து அகியவற்றை தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ளும்போது, கடைகளில் இவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. காய்கறி விலைகளும் ஏறுகின்றன. சில மக்கள் இதை வாய்ப்பாகப் பயன்படுத்துவதை தாமதமாக உணர்ந்த நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், மார்ச் 21 அன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1950ன் கீழ் முகக்கவசம், சானிடைசர்களின் விலையை ஒழுங்குபடுத்தும் உத்தரவை இட்டது. இதன்படி., இரண்டு குறிப்பிட்ட ரக முகக்கவசங்களுக்கு கடைக்காரர்கள் ரூ8 மற்றும் ரூ10ற்கு மேல் விலை வைக்க முடியாது. அதே போல, 200மிலி சானிடைசரின் விலை ரூ100 மட்டும்தான். எனினும், இப்படி விலை குறைக்கப்பட்டாலும் கூட, சானிடைசரை வாங்குவதற்கு பலருக்கும் வசதி இல்லை. வாங்க இயலாதவர்களுக்கு இவற்றை இலவசமாக வழங்க அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதிமொழியும் இல்லை.

COVID – 19ஆல் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை எதிர்கொள்ள பெரிதும் தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள இந்திய சுகாதார அமைப்பு தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த தொற்றுப்பரவல், அரசாங்கம் பொது சுகாதாரத்தின் மீது அக்கறை செலுத்தி, தனியார்களை நம்பி இருப்பதைக் குறைத்துக் கொண்டு, மக்கள் ந்லனுக்காக பொதுத் துறை மருந்து உற்பத்தித் துறையை பலப்படுத்தி, அதில் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Rajalakshmi's team win IWPC elections | The Indian Awaaz

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...