Pages

வெள்ளி, நவம்பர் 27, 2020

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல்-3

 

     இந்தியாவில் நகர்மய அவதாரங்கள்                                                          அ.பாக்கியம்


                     முதல் பதிப்பு ஜனவரி 2018

              வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          1980ம் ஆண்டுகள் வரை திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படை நோக்கமே சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவதுமக்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது என்பதுதான் திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையாக இருந்தது. இவை முழுமையாக அமலாக்கப்பட்டதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால்சந்தை இந்த திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது. நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை இலக்காக கொண்டிருந்தது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தோட்டம் மேலோங்கி இருந்ததால் ஓரளவு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

          1990ம் ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தார். உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்றபடி தீவிர சீர்திருத்தங்களை அமலாக்கினார். 1990ம் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் சதவீதமாக இருந்தது. இக்காலத்தில் தீவிர நகர்மயமாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தியது. 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002- 2007) மொத்த  உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக உயர்ந்தது. இதே போன்று 11வது ஐந்தாடு திட்டத்தில் (2007 2012) மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதமாக உயர்ந்தது. இக்காலத்தில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பெருநகரங்களின் பங்கு 62 சதவீதமாக இருந்தது. நகரத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். நகர்மயம்தான் மத்திய அரசின் திட்டத்தில் முக்கிய இலக்காக மாறியது. 2005 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி  ஜவஹர்லால் நேரு தேசிய  நகர்புற புனரமைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டிற்குள்  இந்த திட்டத்தை நிறைவேற்றிட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின்முன்னுரையில் நகரங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் விசை (நபேநேள டிக நஉடிடிஅஉ பசடிறவா) என்று குறிப்பிடப்பட்டது. இந்த நகர்மய திட்டத்தை வேகப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக அடைந்திட வேண்டுமென்று இலக்கை நிர்ணயித்தார்கள். இந்த நகர்மய திட்டத்திற்கு ஏற்ற வகையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை (2012-2017) உருவாக் கினார்கள். இத்திட்டத்தில் நகர்மய விரிவாக்கம் மற்றும் அதன் தேவைகளை சவாலாக எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று வரையறை செய்தனர்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு- ஓர் அலசல்-2

 

          சீர்திருத்தமாமாற்றமா?         

அ.பாக்கியம்

முதல் பதிப்பு ஜனவரி 2018

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          நாம் வாழும் சமூகம் வர்க்க பேதங்கள் நிறைந்த  சமூகமாகும். உழைப்பாளி மக்களிடம் இருக்கிற இந்த வர்க்க வேறுபாடுகளை பயன்படுத்தி கொண்டு பெருமுதலாளி வர்க்கம் சுரண்டல் அமைப்பை தீவிரப்படுத்திக் கொள்கிறது. பொருளாதார சுரண்டலை பாதுகாப்பதற்கு சமூக ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி கொள்கிறது. முதலாளி என்ற முறையில் அவர் மூலதனத்தின் அவதாரமே. அவரது ஆன்மா மூலதனத்தின் ஆன்மாவே என்று காரல் மார்க்ஸ் தனது மூலதன நூலில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளியின் நிலையிலிருந்து இந்த கருத்தை முன்வைப்பார். முதலாளித்துவம் நெருக்கடிகளை சந்திக்கிறபோதும்தனது லாப வேட்டை சுருங்குகிற போதும் புதிய புதிய முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும். தொழில்களை நவீனமயமாக்குவதுகுறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை தேடுவதுசட்டப் பாதுகாப்பற்ற தொழிலாளர் கூட்டம்கட்டுப்பாடற்ற சந்தைநிலம் என அனைத்து வகையிலும் இந்த முயற்சிகள் இருக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

          தற்போது மூலதனத்தை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும்தொழில் ஆரம்பிப்பதற்கும் குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை பெறுவதற்கும் நிலம்நீர்மின்சாரம்சந்தைபோக்குவரத்து என அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் அமைத்துக் கொண்டு குறைவான முதலீடுஅதிகமான லாபம் என்ற கொள்கைக்கு ஏற்ற இடமாக பெருநகரங்களை உருவாக்குகின்றனர். இதற்காக உலக வங்கி உட்பட சர்வதேச நிதி மூலதன அமைப்புகள் கட்டமைப்பு - சீரமைப்பு (ளவசரஉவரசயட யனதரளவஅநவே) என்ற திட்டத்தை உருவாக்கி 98 நாடுகள் மீது திணித்து அமலாக்கின. இதன் அடிப்படை நோக்கமே தேசிய அரசுகளின் பலத்தை குறைத்துநிதி மூலதனத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கிபெரும் நகரங்களை சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதாகும். சேமநல அரசு (றுநடகயசந ளுவயவந) என்பதை தகர்த்துபெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வணிக இழப்புகளை அரசு ஈடுகட்டுவதாகவும்அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு முழுமையாக உதவி செய்யக்கூடிய வகையிலும் அரசின் தன்மைகளை மாற்றியமைத்தனர்.

          இதன் விளைவு மூலதன ஈர்ப்பை பெறுவதற்கு பெரு நகரங்களிடையே போட்டிகள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் மூலதன குவியல்களின் மையமாக (சுநபஅநள டிக யஉஉரஅரடயவடி) மாறியது. இந்த மாற்றங்கள் பற்றி பொருளாதார அறிஞர் டேவிட் ஹார்வி 1989-லும் 2005லும் தனது ஆய்வின் அடிப்படையில் கீழ்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். நவீன தாராளமயம் மூலதன திரட்சிசுதந்திர சந்தை உருவாக்கதிற்கு வழிவகுத்தது. நிதி சந்தையின் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்கியது. இதனால் உலகின் பல பகுதிகளில் பொருளதார கட்டமைப்பில் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களால் நிதி மூலதன நடமாட்டத்தில் தேசிய அரசுகளின் கட்டுப்பாடு குறைந்தது. நகரங்கள் சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்பட்டன. மூலதனத்தை ஈர்க்கும் போட்டிக்கு நகரங்கள் தள்ளப்பட்டன. குறைந்த செலவு அதிக லாபம் என்ற முறையில் மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிந்தது என்று விவரித்துள்ளார். இந்த பின்னணியில்தான் நிலம்மின்சாரம்தண்ணீர்வரிச்சலுகைகள் என அனைத்தும் பெருநகரங்களில் மையப்பகுதிகளில் அதன் சுற்றுவட்டாரத்திலும் அரசுகளால் வாரிவழங்கப்பட்டன. நகரங்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கும்நவீன தாராளமயக் கொள்கைக்கும் அவசியமாக இருந்தது. இதற்கு அவர்கள் நகர்மய சீர்திருத்தம் (ரசயெ சநகடிசஅள) என்று பெயரிட்டார்கள். உண்மையில் அது சீர்திருத்தம் அல்ல நகர்மய மாற்றம் (ரசயெ உயபேந). அதுதான் நடைபெறுகிறது. அதாவது தங்களது லாபவேட்டைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதாகும்.

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல் 1

 


அ.பாக்கியம் 

                               முதல் பதிப்பு ஜனவரி 2018

                               வெளியீடு : பாரதி புத்தகாலயம்

    வன்முறை பற்றிய நமது பொது புத்தியின் புரிதல் மேலோட்டமானது. தனி நபர் கொலைகள்கூட்டு வன்முறைகலவரங்கள்தீவைப்புபொருட்சேதம்உயிர்சேதம் என வன்முறையின் விளைவுகளிலிருந்து மட்டும் வன்முறை பற்றிய கருத்துக்கள் கட்டமைக்கப்பபட்டுள்ளது. ஒரு வர்க்க சமூகத்தின் பொருளியல் உற்பத்தியின் அடிப்படையிலிருந்து சட்டங்களும்ஒழுக்க நியதிகளும் உருவாக்கப்படுகின்றன. வன்முறை பற்றிய பார்வைகளும் இதற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. இதுநாள் வரை பெண்கள் மீதான வன்முறை ஆணாதிக்கப் பார்வையிலிருந்து நியாயப்படுத்தப்பட்டது. சாதியமதவெறி கட்டமைப்பில் இன்றும்கூட பெண்கள் மீதான வன்முறை எழுதப்படாத சட்டமாக நியாயப்படுத்தப்படுகிறது. எனினும் நவீன காலத்தில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தும் வன்முறை என்ற பார்வை மேலோங்கியுள்ளது. இந்த வகையில் வன்முறை பற்றிய பொது புத்தி கூர்மையடைந்து வருகிறது. வன்முறை பற்றிய விசாலமான பார்வையும்அதுகுறித்த விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

வன்முறையின் பல வடிவங்களை பற்றிய ஆய்வுகளை பல சர்வதேச அமைப்புகள் வரையறை செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆள் பலத்தையும்அதிகார பலத்தையும் பயன்படுத்தி ஒரு நபருக்கோ அல்லது மற்றொரு நபருக்கோஒரு குழுவிற்கோஒரு சமூகத்திற்கோ காயம்மரணம்பொருட்சேதம்உயிர்சேதம் ஏற்படுத்துதல் மற்றும் பயமுறுத்தல்இருத்தலுக்கெதிரான அச்சுறுத்தல் வன்முறையாகும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. 2014-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் 133 நாடுகளில் வன்முறைகளை பற்றி ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில் வன்முறை பற்றிய விரிவான விவரங்கள் உள்ளன. இவற்றில் தனிநபர் வன்முறைகூட்டு வன்முறைசுய வன்முறை (தற்கொலை) என வன்முறையின் பல வடிவங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அதிகாரத்தை பயன்படுத்திய (ரளந டிக யீடிறநச) வன்முறைதான் உலகில் அதிகமாகவும்பரவலாகவும் நடைபெற்று வருகிறது என்ற விவரங்களும் வெளிப்பட்டுள்ளன.

          யுத்தம்எல்லை விரிவாக்கம்ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான அடக்குமுறைதனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதுஅடிப்படை உரிமைகளை மீறுவது என இந்த அதிகார வன்முறை பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகிறது. நவீன தாராளமய கொள்கைகள் உலகின் நியதிகளாக மாற்றப்படுகிற இக்காலத்தில் குடியிருப்புகளை அகற்றுவதில் அதிகார வன்முறை அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இவை பரவலாக நடைபெறுகிறது. அமெரிக்காவில் எல்லை விரிவாக்கத்திற்காக செவ்வந்தியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அதிகாரத்தை பயன்படுத்திய வன்முறை ஆகும். அதுமட்டுமல்லவளர்ச்சி என்ற பெயரிலும்நாகரீக மனிதர்களுக்கும்நாகரீகமற்றவர்களுக்குமான யுத்தம் என்ற கருத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறை ஆகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவிற்கு இந்த அதிகார வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. இந்த அதிகார வன்முறையின் ஊடாகத்தான் இந்தியாவில் நகர்மயமாக்கலின் விளைவுகளை காணவேண்டியுள்ளது. நகர்மய விரிவாக்கத்தில் குடிசைபகுதி மக்கள்நகர்புற ஏழைகள்நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஆவணமற்ற குடியிருப்புவாசிகள் ஈவிரக்கமற்ற முறையில் நகரைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். இந்த வன்முறை, "வளர்ச்சி" என்ற முகமூடி அணிந்து நடத்தப்படுவதால் நமது பொது புத்தியில் இது வன்முறையல்ல என்ற கருத்து வலுவாக பதியப்படுகிறது.

    வளர்ச்சி என்பது அவசியமானது தவிர்க்க முடியாததும்கூட. அந்த வளர்ச்சி யாருக்கானதுஎன்பதுதான் முக்கியமான கேள்வி. நகர்மயமாக்கல் சகாப்தத்தில் இடப்பெயர்வும்வெளியேற்றமும் பெருமளவில் நடைபெறுவதை வளர்ச்சியின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நகர்மயமாக்கல் என்பது அடிப்படை கட்டுமானத்தை மேம்படுத்துவதும் நகர்புற மக்களின் சுகாதார வாழ்விட வசதிகளை மேம்படுத்துவதுமாகும். ஆனால்நவீன தாராளமய கொள்கைகளில் நகர்புறத்தில் குடியிருக்கிற 30 சதத்திற்கு மேற்பட்ட நகர்புற ஏழைகள் மற்றும் வருமானம் குறைவான தொழிலாளர்கள்நடுத்தர பகுதியினர் என 60 சதத்திற்கு மேல் உள்ளவர்களை புறக்கணித்துவிட்டுபுறநகருக்கு விரட்டிவிட்டு வளர்ச்சி என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்வசதி படைத்த ஒரு சிறு பகுதியினரின் வாழ்க்கைக்கு ஏற்ற முறையிலும் பன்னாட்டு உள்நாட்டு பெரு முதலாளிகள் குறைந்த கூலிக்கு சுரண்டல் களத்தை உருவாக்குவதற்கு ஏற்ற வகையிலும் நகர்மயம் மாற்றியமைக்கப்படுகிறது. மேற்கண்ட மாற்றங்களை சென்னை நகரில் பட்டவர்த்தனமாக பார்க்க முடியும்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...