ஊரான் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே என்று கிராமத்து பழமொழி உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய பிரதமர் கைதேர்ந்தவர். இந்த ஆண்டு(2018) செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து பேசும்போது இப்படித்தான் சொந்தம் கொண்டாடி உள்ளார். UPA அரசாங்கம் இருந்த 2013-ம் ஆண்டைபோல் பணிகள் நடைபெற்றால் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இன்னும் பல பத்தாண்டுகள் ஆகி இருக்கும் என்று பேசினார்.
ஆனால் UPA ஆட்சியில் இருந்த 2005-06 முதல் 2013-14 1,08,280 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 12,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளில் இது நிகழ்த்தப்பட்டுள்து. மீதமுள்ள 18,374 கிராமங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்க மோடியின் என்டிஏ அரசு 4 ஆண்டுகள் எடுத்துவிட்டது.
அதாவது ஆண்டுக்கு 4,600 கிராங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். கோட்டை மீது ஏறி கொடியேற்றுவது மட்டுமல்ல புளுகு மூட்டைகளை கொட்டுவதும் பிரதமர் வேலையாகி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக