Pages

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட விபரங்களின் கோர வடிவங்கள்


ஹிம்சா கொள்கையை உலகுக்கு அளித்த மகாத்மா காந்தியின் சொந்த மாநிலம் குஜராத் என்று அறியப்பட்ட காலங்கள் கரைந்து போய்விட்டது. இப்போது குஜராத் முரண்பாடுகளும், மோதல்களும், வெறுப்பு நிறைந்த வாழ்வும், குரோதங்கள் நிறைந்த அரசு கட்டமைப்பும் என மாற்றம் அடைந்துவிட்டது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பிஜேபி ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல, மோடியின் தலைமையில் கார்ப்ரேட் கொள்கை 2001-ல் ஆட்சிக்கு வந்ததுதான் அடிப்படை காரணமாகும். 2002-ம் ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டன. இந்த வகுப்பு வெறியின் விளைவுகளை விளக்கி பல புத்தகங்கள், கட்டுரைகள், குறும்படங்கள் வெளிவந்து விட்டன. 
        னினும், ரானா அயூப்-ன் குஜராத் கோப்புகள் என்ற புத்தகம் புதிய உணர்வலைகளை உருவாக்கி உள்ளது. வகுப்புவாத வன்முறைகளில் ஈடுபட்ட பாஜக மற்றும் சங்பரிவார தலைவர்களின் மூளைக்குள் சென்று இதயத்தின் வழியாக வந்த வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார். உள்துறை செயலாளரிலிருந்து காவல்துறையின் பலமட்ட அதிகாரிகளை சந்தித்து உண்மைகளை சேகரித்துள்ளார். படிப்படியாக மோடியின் இடத்திற்கே சென்று பேசும் அளவிற்கு கடுமையாக உழைத்துள்ளார். ரானா அயூப் இதற்காக பல வருடங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். கடுமையான கட்டுப்பாடுகளையும் பரிசோதனைகளையும் கடந்து பாதுகாப்பு வளையம் நிறைந்த மனிதர்களிடம் ஊடுருவியுள்ளார். 
      மோடியின் பொதுக்கூட்டத்தில் பொது மக்களை அவர் எப்படி நரவேட்டைக்கு தூண்டி விடுகிறார் என்பதில் துவங்கி நம்மை குஜராத்தினுள் அழைத்து செல்கிறார். உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா அனைத்தையும் ஆட்டிப்படைத்தார் என்பதை சிங்கால் என்ற அதிகாரி மூலம் அம்பலப்படுத்துகிறார். மேலும் மோடியை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் குஜராத்தின் ரப்பர் ஸ்டாம்ப்புகளாகத்தான் இருந்தார்கள் என்பதையும் இந்த அதிகாரி தெரிவிக்கிறார். போலி என்கவுண்டர் நடைபெற்ற காலத்தில் சுமார் 65,000 பேர்களுக்கு மேல் உளவுப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். விசாரிக்கப்பட்டுள்ளார்கள். 

     இதில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிஜேபி கட்சியிலேயே மோடியை எதிர்ப்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகளும் அடங்குவர். மோடி மற்றும் அமித்ஷா-ன் வாய்வழி உத்தரவை அமுல்படுத்தாத அதிகாரிகள் பழிவாங்கப்பட்டார்கள். மோடிக்கு வேண்டப்பட்ட அகமதாபாத் கமிஷனர் பி.சி.பாண்டே உள்துறை செயலாளரின் உத்தரவை கூட ஏற்று கலவரத்தை அடக்காமல் அதற்கு ஆதரவாக செயல்பட்ட சம்பவங்கள் பல விவரிக்கப்பட்டுள்ளது.
      குஜராத்தில் ஹரேன் பாண்டே என்ற உள்துறை அமைச்சராக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டதில் உள்ள மர்மங்களை எல்லாம் இப்புத்தகம் சம்மந்தபட்டவர்கள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளது. இவரது கொலை வழக்கு ஒரு எரிமலை போன்றது. நியாயமாக விசாரணை நடந்தால் குஜராத் முதல்வர் வீட்டுக்கு போகமுடியாது, சிறைக்குத்தான் செல்ல வேண்டுமென உயர் அதிகாரியே பேசும் சம்பவங்கள் அரசு நிர்வாகமும் ஆட்சியும் யாரிடம் சிக்கியுள்ளது என்ற கோபம் வருகிறது. 
   ரானா அயூப்-ன் இந்த உழைப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலும் அதில் சொல்லி இருக்கக் கூடிய முறைகள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது. அவர் பணிசெய்த நிறுவனம்தான் இப்படி ஒரு புலனாய்வு தகவல்களை சேகரிக்கும் திட்டத்தை கொடுத்தது. 
   

       அதை நிறைவேற்றிய பிறகு அந்த உண்மைகளை வெளியிட முன்வரவில்லை. எனவே ரானா அயூப் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். விற்பனைக்கு எண்ணற்ற இடையூறுகள் வந்துகொண்டே இருக்கிறது. எனினும், உண்மையை, வலிமையை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த புத்தகம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. இதன் விளைவு தற்போது குஜராத்தில் தொடங்கியுள்ளது. அனைவரும் வாசிப்பதின் மூலம் இந்த தொடக்கம் வகுப்பு வெறி சக்திகளின் முடிவாக அமையும்.

2 கருத்துகள்:

  1. பல்லாயிரம் பாராட்டுதல்களுக்குறியவர் ரனா அய்யூப். அதிகார வர்க்கதின் கோர முகத்தை அறிந்து வைத்துக்கொண்டே இதை செய்திருப்பது அபாரம்

    பதிலளிநீக்கு
  2. பல்லாயிரம் பாராட்டுதல்களுக்குறியவர் ரனா அய்யூப். அதிகார வர்க்கதின் கோர முகத்தை அறிந்து வைத்துக்கொண்டே இதை செய்திருப்பது அபாரம்

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...