Pages

புதன், மார்ச் 02, 2011

உணவுச்சட்டம்:பம்மாத்து பரிந்துரைகளும் பாசாங்கு மறுப்புரையும் !


                                      ஏ.பாக்கியம்             
(பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது)

         உலகமக்கள்தொகை1970ம்ஆண்டுகளில்இருந்ததைவிடஇரட்டிப்பாகிஉள்ளது.ஆண்டுதோறும் 8கோடி பேர்கள் இணைகிறார்கள். இன்று இரவு உலகின்சாப்பாட்டுமேசையில்219000வாய்கள்நம்முடன்இணைவார்கள்.அவர்களில்பெரும்பாலோர் காலியானதட்டுக்களால் வரவேற்கப்படுவார்கள்.நாளை மேலும் 219000 வாய்கள் நம்முடன் இணையும்.இந்த வளர்ச்சி  விவசாயிகளின் திறமைக்கும் நிலம் மற்றும் நீராதாரத்திற்கும் கடும் சுமையாக அமையும்.
  பொருளாதார செயல்கள் மற்றும் மனித செயல்பாட்டின் காரணமாக மீளமுடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும் உணவுநெருக்கடியை உற்பத்திசெய்துள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.எது எப்படி இருந்தாலும் மனிதகுலம் இந்த  நெருக்கடியை துரிதமாக சந்தித்து தீர வேண்டும்.இதை விவாதிப்பதிலேயே பல ஆண்டுகள் வீணாகிவிட்டது. அதிக நச்சுவாயுக்களை வெளியிடும் அமெரிக்கா உலமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க மறுக்கிறது.அவர்கள் முன்வைக்கிற தீர்வுகள் அனைத்தும் பணக்காரர்களையும், வளர்ந்த நாடுகளை சார்ந்துமே இருக்கிறது.
    கோதுமை, சோயாபீன்ஸ், சோளம்,அரிசி,தானியங்கள், பருப்பு வகைகள் தான் உலக சத்துணவின் அடித்தளமாகும், இவை பருவநிலை மாற்றத்தால் கடுமையான அளவு பாதித்துள்ளது. சேமிப்பை மீண்டும் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு குறைந்து வருவது உலகில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.பலநாடுகளில் பிரச்சனைகளை தீவிரமாக்கி நிலையற்ற தன்மையை ஏற்படுததி உள்ளது. 80க்கும் மேற்பட்ட மூன்றாம் உலக நாடுகள்  பட்டினி சாவை எதிர்நோக்கி உள்ளது.2008-விட 2011ம் ஆண்டு உலகம் கடும் உணவு நெருக்கடியை சந்திக்கும் என்று பன்னாட்டு அமைப்புகள் 
தெரிவித்துள்ளது.          
                                                         ( பிடல் காஸ்ட்ரோ-கிரான்மா, ஜன.19,31-2011)



உணவு பாதுகாப்பு பற்றி பேசும் இந்தி ஆட்சியாளகள் மேற்கண்ட அம்சங்கள்ளை கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் மத்தியஅரசு அனைவருக்கும் உணவுகிடைக்கும்வகையில்உணவுப்பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல்வாக்குறுதியை கொடுத்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் வரவே, அரசு மற்றும் அரசுசாரா நிபுணர்களைக்கொண்டு உணவு பாதுகாப்புச்சட்டம் உருவாக்க ஆலோசனை வழங்கிட தேசிய ஆலோசனைக்குழுவை சோனியா காந்தி தலைமையில் அமைத்தது.
  இக்குழுக்கூடி ஏற்கனவே ஒரு ஆலோசனையை கொடுத்தது. அந்த ஆலோசனைக்கு  பரவலாக எதிர்ப்புகள் வரவே, மீண்டும் ஆறு சுற்றுக்குமேல் விவாதித்து, கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். இந்த பரிந்துரைகள் உணவு பாதுகாப்பிற்கா?அல்லது கொடுத்த வாக்குறுதிகளை ஒப்பேத்துவதற்காக என்பது புரிபடவில்லை!
  நாட்டு மக்களை முன்னுரிமைப்பிரிவு, பொதுப்பிரிவுமற்றும் விலக்கல்(நுஒஉடரனநன) என்று பிரிதுள்ளது. இந்த விலக்கல் பிரிவில் கிராம புறத்தில் உள்ள பத்துசதம் மக்களும்,  நகர்புறங்களில் உள்ள 50 சதம் மக்களும் அடங்குவர். அதாவது மொத்தம் 25 சதம் மக்கள்.  மீதியுள்ள 75 சதம் மக்களை முன்னுரிமை, பொது என்று பிரித்து  அவர்களுக்கு உணவு பாதுகாப்பை சட்டப்படி உத்திரவாதப்படுத்தலாம் என்று பரிந்து ரைக்கப் பட்டுள்ளது.
   அதாவது 2011-12ல் முன்னுரிமை பிரிவில் கிராமப்புறத்தில் உள்ள 46 சதம் மக்களையும், நகர்புறத்தில் 28 சதம் மக்களையும் குறிவைத்து  அவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி ரூ.3/- க்கும், கோதுமை ரூ.2/- க்கும்  தினைவகைகள் (கேழ்வரகு/கம்பு) ரூ.1/-க்கும் கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை கூறியுள்ளது. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு கிராமப்புறத்தில் 44 சதம் மக்களுக்கும், நகர்புறத்தில் 22 சதம் மக்களுக்கும் மாதம் 20 கிலோ அரிசியை அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையில் (அளயீ) 50 சதத்திற்கு மிகாமல் கொடுக்கவேண்டும், என்று கூறியுள்ளனர். மேற்கண்டவற்றை 2011-12 மற்றும் 2013-14 ல்  நிறைவேற்றிட வேண்டும் என கால அளவை பரிந்துரைத்துள்ளது. இதற்காக 55.59 மில்லியன்  டன் உணவு தானியங்களும் 79931 கோடி மானியமும் தேவைப்படும் என்று தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.  இந்த பரிந்துரை களைத்தான் பிரதமர் நியமித்த நிபுணர்குழு இது சாத்தியமில்லை என்று மறுத்துள்ளது. முதலில் இந்த ஆலோசனைகள் பற்றிய விஷயங்களை காண்போம்.

   உரிமையா?வாக்குறுதியா?
     முதலில்,  அனைவருக்கும் உணவு சட்டப்படியானதாக மாற்ற வேண்டும் என்பதை இந்த பரிந்துரைகள் கவனத்தில்கொள்ளவில்லை. அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு, விரும்பும் வகையில், பாதுகாப்பான முறையில், சத்துநிறைந்த, சுறுசுறுப்பும், நலமும் நிறைந்த, வாழ்வு நடத்த தேவையான உணவை அளிப்பதுதான் உணவு பாதுகாப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை உணவுபாதுகாப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி அரசியல் சட்ட பிரிவு 21-ல் உள்ள வாழ்வதற்கான உரிமை  என்பது  உயிருடன் வாழ்வது மட்டுமல்ல சுயமரியா தையுடன் வாழ்வது என்பதும், அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவைக ளுடன் வாழ்வது என்பதுதான் வாழ்வதற்கான உரிமைஎன்பதற்கு அர்த்தம் என்று விளக்கமும், தீர்ப்பும் அளித்துள்ளார். மேற்கண்ட வற்றை அப்படியே  அமலாக்கவேண்டும் என்று நாம் ஆசைப்பட வில்லை. இதில் அடிப்படையாக இருக்கிற பட்டினிச்சாவை தடுக்ககும், உணவை அனைவருக்கம் வழங்கிட பரிந்துரைக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். இதைவிடுத்து, மக்களை கூறுபோட்டு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் உணவுப்பாதுகாப்பு என்பது இச்சட்டத்தின் நோக்கத்தை  அடிப்படையையே தகர்ப்பதாகும். நீர்த்துப்போகச்செய்யும். இந்தியாவில் மட்டுமா இந்தப்பிரச்சனை ? இல்லை. ஏற்கனவே 24 நாடுகளுக்குமேல் இந்த உணவு பாகாப்பை அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். ஏன் அரசியல் சட்டத்திலேயே சேர்த்துள்ளனர். ஞிபல நாடுகளில் ஊட்டச்சத்தையும், வாழ்க்கைத்தரத்தையுமே சட்டமாக்கி உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பெருமாள் அல்ல பெத்தபெருமாள்!
    இரண்டாவதாக , தேசிய ஆலோனைக்குழுவின் பரிந்துரைகள்  புதிதல்ல. ஏற்கனவே, மத்திய அரசு வறுமைக்கோட்டிற்கு(க்ஷஞடு) கீழே என்றும், மிகவும் வறுமையில் வாழ்வோருக்கு அந்தோதயா அன்னதான திட்டம் (ஹஹலு) என்றும் வறுமை கோட்டிற்கு மேலே (ஹஞடு) என்று மூன்றாக பிரித்து முதல் இரண்டு பிரிவிற்கு மட்டுமே மானியத் தில் உணவு  வழங்கியது. வறுமையாளர் எண்ணிக்கை யையும் மத்திய அரசே தீர்மானித்தது. இதற்கான  உணவு தானியங்களை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கனர். ஹிதனால் பெரும் சுமையை மாநில அரசு ஏற்கவேண்டி இருந்தது. தற்போது இந்த தேசிய ஆலோசனைக்குழு  இதையே முன்னுரிமை, பொதுப்பிரிவு என்று பெயர் மாற்றி உள்ளது. பெருமாள், பெத்தபெருமாள் ஆன கதையாக பிபிஎல் முன்னுரிமை என்றும் ஏபிஎல் என்பதை பொதுப்பிரிவாக மாற்றி உள்ளது. இடையில் தொலைந்து போனவர்கள்  அந்தோதயா அன்னதான திட்டப்பயனாளிகள் 2.05 கோடி குடும்பங்கள் ஆகும்.
   மூன்றாவதாக, தேசிய ஆலோனைக்குழுவின் உண்மையான நோக்கம்  வறுமைக்கோட்டிற்கு  கீழே உள்ளவர்களுக்கு  மட்டுமே பொதுவினியோக முறையை செயல்படுத்துவதாகும். காரணம் 2004-05 புதிய மதப்பீட்டின்படி சுரேஷ் டெண்டுல்கர் குழு திட்டக்குழுவிற்கு சமர்ப்பித்த ஆய்வில் கிராமப்புறத்தில் 41.8 சதமும், நகர்ப்புறத்தில் 25.7 சதம் மக்களும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்று அறிக்கை சமர்பித்துள்ளனர். இதை மத்திய அரசின்  உணவு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு நடடிவக்கை எடுக்கபடும் என்று அறிவித்து விட்டது. சோனியா தலைமையிலான குழு கொடுத்துள்ள முன்னுரிமை பிரிவு கிராமப்புறத்தில் 46 சதம், நகர்புறம் 28 சதம் என்பதும் இதற்குச் சமமானதே. ஊணவு அமைச்சகம் அமுலாக்கலாம் என்று முடிவெடுத்ததை மீண்டும் பரிந்துரைப்பதுதான் உணவு பாதுகாப்புச்சட்டமா? என கேட்கத்தோணுகிறது. இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஏற்கனவே அந்தோதயா அன்னதான திட்டத்தில்  2 கோடியே 5 ஆயிரம் குடும்பங்கள் ரூ.2/-க்கு 35 கிலோ உணவு தானியங்களை  வாங்கினர். தற்போது அவர்களும் ரூ.3/- விலை கொடுத்து வாங்கவேண்டும் என்பதுதான்  ஒரே வேறுபாடு.

கொடுப்பது இருக்கட்டும் இருப்பது என்ன?
   நான்காவதாக,  தற்போது 75 சதம் மக்களளுக்கு இந்த பரிந்துரைகள் உள்ளடக்கியதாக இருக்கிறதே இது நல்ல பரிந்துரை தானே என்று கேட்கலாம்? உண்மை என்ன? 1996-ம் ஆண்டு மத்திய அரசு பிபிஎல் / ஏபிஎல் என் சட்டத்தைக்கொண்டுவந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அனைவருக்குமானபொதுவிநியோக முறையை கைவிடாமல் அமல் படுத்திவருகின்றனர். தற்போது சுமார் 11 கோடியே 30 லட்சம் பிபிஎல் குடும்ப அட்டைகள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சுமார் 60 சதமான மக்கள் பயன் அடையக்கூடியதாகும். தேசிய ஆலோசனைக்குழு முன்வைத்துள்ள முன்னுரிமை பிரிவில் 9 கோடியே 80 லட்சம் குடும்பங்களே பயனடைய முடியும். ஏற்கனவே 60 சதமான பயனாளிகள் பயனடையும் நிலையில் கூடுதலாக 15 சதம் மக்களை சேர்ப்பது மட்டும் உணவுபாதுகாப்மை உத்திரவாதப்படுத்த உதவாது.
     ஐந்தாவதாக, அனைவருக்குமான உணவு பாதுகாப்பை பற்றி கவனத்தில் கொள்ளாதது மட்டுமல்ல, பல அறிஞர்கள், அமைப்புகள் வலியுறுத்திய குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உணவு பாதுகாப்பை பரிந்துரைகளில் தேசிய ஆலோசனைக்குழு சேர்க்காதது மிகப்பெரிய பலவீனமாகும்.
     ஆறாவதாக, தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ள முன்னுரிமைப் பிரிவு, பொதுப்பிரிவு என்று வகைப்படுத்தி கணக்கெடுப்பது கடினமானது ஆகும். ஏற்கனவே, நமது நாட்டில் கணக்கெடுப்பது குழப்பமானது. துல்லியம், தோராயம் என்ற வரம்புக்குள் அடங்காத பல கணக்குகள் உள்ளன. உதாரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் கணக்குமுறையில் நான்குவிதமான புள்ளி விபரங்கள் உள்ளது. நான்கு விதமான கணக்குழுகளை எடுத்ததும் அரசு நிறுவனங்கள்தான். மத்திய அரசு 28சதம், தேசிய மாதிரி ஆய்வு மையம் 40 சதம், ஊரக வளர்ச்சித்துறை 50 சதம், அர்ஜீன்சென்குப்தா 77 சதம் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். மேலும் கிராமப்புறத்தில் 10 சதம் மக்களையும், நகர்புறத்தில் 50 சதம் மக்களையும் விலக்குவதன் மூலம் எவ்வளவு நிதியை மிச்சம்பிடிக்கப்போகிறார்கள்? இப்படி கூறுபோடுவதன் நோக்கமே பெரும்பகுதி மக்களை பயனாளிகள் வட்டத்திலிருந்து வெளியேதள்ளுவதுதான்.ஏழை மக்களுக்கு உணவளிப்பதாக கூறிக்கொண்டு பெரும்முதலாளிகளுக்கும். வர்த்தக சூதாடிகளுக்கும் சந்தையை விட்டுவிடும் நோக்கம் இதில் உள்ளது.

அனைவருக்கும் உணவு பாதுகாப்பும் - எர்னஸ்ட் எங்கல்ஸ் விதியும்.
மாறாக அனைவருக்குமான பொது விநியோக முறையை அமலாக்கினால், தேசிய அலோசனைக்குழு பரிந்துரைத்துள்ள 25 சதம் மக்களைவிட அதிகமான மக்கள் பொருட்களை வாங்காமல் இருக்கலாம். உதாரணமாக கேரளாவில் குறிப்பிட்ட மக்களுக்கான பொது விநியோகமுறை (கூஞனுளு) அமலாகும் முன்பு  அனைவருக்குமான பொது விநியோகமுறை இருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவு வருமானம் இருந்தவர்கள் பொது விநியோக முறையை 71 சதம் பயன்படுத்தினர். ரூ.3000/-க்குமேல் வருமானம் இருந்தவர்கள் 6 சதம் மட்டுமே பொது விநியோக முறையை பயன்படுத்தினர். தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை வாங்குவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். (வாங்காதவர்க ளின் பெயர்களில் கணக்கெழுதி ஆளும் கட்சியினர் அரிசி கடத்துவதற்கு  அப்பாவி மக்கள் எப்படி பொறுப்பேற்கமுடியும்).
   பொருளாதார அறிஞர் எர்னஸ்ட் எங்கல்சின் கோ-எஃபிசியன்ட் விதியின் அடிப்டையில் ஒருவரின் வருவாயில் 30சதத்திற்குமேல் உணவிற்கு செலவிட்டால் அது நெருக்கடியான வாழ்வு என்கிறார்.தென்கொரியாவில் இது 2010ம் ஆண்டில் ஒருவரின் வருவாயில் உணவுக்கான செலவு 13.3 சதமாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவே அதிகம் என்று விபரம் கூறுகிறது. சீனாவில் இது 37 சதம் என்ற நிலை உள்ளது. அமெரிக்காவில் ஒருவரின் வருவாயில் 20 சதம் பொழுதுபோக்கிற்காக செலவிடப்படுகிறது. இந்தியாவில் 90 சதமான மக்கள் தங்கள் வருவாயில் 90 சதத்தை உணவிற்காக செலவிடுகின்றனர். கல்வி,மருத்துவம்.இருப்பிடம்.உடை அனைத்தும் மீதி பத்து சதத்தில் எப்படி சாத்தியம்? இங்கு உணவு பாதுகாப்பு குறிப்பிட்ட மக்களுக்கு என்று எப்படி கணக்கு எடுக்க முடியும்? இந்தியா விவசாய நாடு, விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம். பழங்குடி மக்களும், கூலி விவசாயிகளும், முறைசாரா தொழிலாளர்களும் மக்கள் தொகையில் கணிசமான பகுதி ஆகும். எனவேதான் இது ஏழை நாடல்ல, ஏழைகளின் நாடு என்பர். இங்கு அனைவருக்கு மான உணவுப் பாதுகாப்பை சட்டப்பூர்வமாக உத்திரவாதப் படுத்துவதுதான் உரிய மக்கள் பயனடைய உதவும். இதற்கு மாறாக வகைப்படுத்தி பிரித்திட எடுக்கும் முயற்சி இந்த சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் நோக்கம் கொண்டதாகும். இதையேதான் இந்தக் குழுவில் இருந்து மாற்றுக்கருத்துக்கொண்ட பொளாதார அறிஞர் உணவு பாதுகாப்பை எளிய முறையில் அமலாக்க கிடைத்த வாய்ப்பு தவறவிடப்படுகிறது என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

காலுக்கு செருப்பா? செருப்புக்கு காலா?
மேற்கண்ட பரிந்துரைகளைத்தான் அமலாக்கம் குறித்து ஆய்வு நடத்திட பிரதமர் நியமித்த நிபுணர்குழு இது சாத்தியமில்லை என்று மறுத்துள்ளனர். தேசிய ஆலோசனைக்குழு கூறியுள்ளபடி இதற்கு 55.59 மில்லியன் டன் தானியங்கள் போதாது. 63.98 மில்லியன் டன் தானியங்கள் தேவை. இத்துடன் மற்ற திட்டங்களுக்கு 8 மில்லியன் டன்னும், அத்தியாவசிய இருப்புக்கு 2 மில்லியன் டன்னும் மொத்தம் வருடத்திற்கு 73.98 மில்லியன் டன் தேவைப்படும். இந்த அளவு கொள்முதல் செய்தால், பொதுச்சந்தை குலைந்துவிலையேற்றம் ஏற்படும், மேலும் இதற்காக 92,060 கோடி மானியம் கொடுக்க வேண்டும், இது நிதிச்சுமையை உருவாக்கும் என்று இக்குழு தலைவர் ஆர்.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மற்றொரு உறுப்பினர் தற்போதைய கொள்முதல் நிலையை கணக்கில் எடுத்தால் (2011-12ல் 56.35 மில்லியன் டன், 2013-14ல் 57.61 மில்லியன் டன்) 2039ல் தான் இந்த தேசிய ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க இயலும் என்று கூறி உள்ளார். எனவே, குழு பரிந்துரைத் துள்ள முன்னுரிமை பிரிவை மட்டும் அமலாக்கலாம் என்று கூறியுள்ளனர். அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் உணவு பாதுகாப்பு, மற்றவர்களுக்கு சந்தையோ? சவக்குழியோ? என்று அறிவிப்புதான் மிச்சம்.
    அதிகம் கொள்முதல் செய்வதால் விலைகள் உயரும் என்று கூறுவது, மக்களையும், ஊடகங்களையும் குழப்புவதற்கான நடவடிக்கையே. கொள்முதல் செய்ததை கிடங்குகளில் வைத்தாலோ அல்லது பதுக்கிவைத்தால் தானே விலை உயரும். விநியோகம் செய்தால் பொதுச்சந்தையிலும் விலை கட்டுக்குள் இருந்ததாகத்தானே வரலாறு நிருபித்துள்ளது. தற்போது கொள்முதல் செய்வதை கூடுதலாக்குவது சாத்தியமில்லை என்பதும் தவறான வாதமாகும். தற்போது  அதிகபட்சமாக 6 கோடி டன்வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உணவு தானிய உற்பத்தியில் 30 சதம் மட்டுமே ஆகும். மேலும் இரண்டு கோடி கொள்முதல் செய்வதை தடுப்பது எது? உணவு பாதுகாப்புச்சட்டம் என்றால் உணவு உற்பத்தியை பெருக்குவது, கொள்முதலை அதிகரிப்பது, பொவிநியோகத்தை மேம்படுத்துவதுடன் தொடர்புடையது. இதைவிடுத்து உணவு இல்லை எனவே இது சாத்தியமில்லை என்பது செருப்புக்கு ஏற்றவகையில் காலை வெட்டுவதுநிபுணர்குழுவின் யோசனையாக உள்ளது.

பணம் இல்லையா?
நிதிச்சுமை அதிகமாகும் என்று கூறுவது உண்மைதான், ஆனால் அது தாங்கமுடியாத பெரும் தொகை அல்ல. பல செலவுகளுடன ஒப்பிட்டால் இத்தொகை மிகமிக சிறியதுதான். இதற்காக 92060 கோடி ஒதுக்குவது  அதிகம் என்று நிபுணர் குழு கூறுகிறது.இந்தியாவில் நடைபெற்றுள்ள  மெகா ஊழல்களுடன் ஒப்பிட்டால் இது கடுகினும் சிறியது. சுவீஸ் வங்கியில் உள்ள 21 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் இது பூதக்கண்ணாடிவைத்து பார்க்கும் அளவு சிறியது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த 5 லட்சம்கோடி சலுகைகளை வைத்துப்பார்த்தால் இது கண்ணுக்குத் தெரியும் கடலை பருப்பு அளவுதான்.
    பொது விநியோக முறைக்கு என்று ஒதுக்கப்படுகிற மானியம், அதாவது நுகர்வோர் மானியம் தற்போது விலைபொருட்களுக்கான ஆதார விலைக்கும், கொள்முதலுக்கும், சேமிப்பு கிடங்கிற்கும் செலவிடப்படுகிறது. இந்த மானியத்தை பெரும் செலவாக மொத்தமாக கூறுவது அபத்தம். நுகர்வோருக்கான மானியத்தை நுகர்வோருக்கு பயன்படுத்த வேண்டும்.
    எனவே, இந்தியா உணவு உற்பத்தியை பெருக்கிட, விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும், அதற்கு அரசின் முதலீட்டை விவசாயத்தில் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய மக்களின் உயிர்களை பாதுகாக்க ஆரோக்கியம் நிறைந்த மனிதவளத்தை பாதுகாத்திட, அனைவருக்குமான உணவு பாதுகாப்புச்சட்டத்தை தாமதமின்றி கொண்டு வந்து,நிறைவேற்றிஅமலாக்கிடவேண்டும்.                                                                                                                    

                                                                                                                                   ஏ.பாக்கியம்           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...