Pages

வெள்ளி, நவம்பர் 25, 2022

யார் இந்த லச்சித் போர்புகான்?

 


யார் இந்த லச்சித் போர்புகான்?

 

நவம்பர் 24 அன்று, புகழ்பெற்ற அசாமிய தளபதி லச்சித் போர்புகான் 400 வயதை எட்டுகிறார். ஆண்டு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாட்டங்களை நடத்தியது.

பிப்ரவரியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், நவம்பர் 23 முதல் 25 வரை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அசாம் மாநில பாஜக அரசு தேசம் முழுவதும்  உள்ள பத்திரிக்கைகளில் லச்சித்  போர்புகானின் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளது. லச்சித் பொர்புகான் முகலாயர்களை வீழ்த்திய  இந்து மன்னன் என்ற சாயத்தை பூசித்தான் இந்த விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். பாஜகவினர் மதத்தை பயன்படுத்தி தரம் தாழ்ந்த அரசியலுக்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. தமிழகத்தின் திருவள்ளுவரையே காவி சாயத்துக்குள் கவிழ்த்தவர்கள்.

சத்ரபதி சிவாஜிக்கு நாடு வழங்கிய அதே கண்ணியத்தைப் பெறாதஅஹோம் ஜெனரலுக்குசரியான மரியாதைக்குரிய இடத்தைஉறுதி செய்வதற்காகக் கொண்டாட்டங்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார் .

1671 ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயப் படைகளைத் தோற்கடித்த போர்புகன் என்ற வீரராகவே அசாமில் எப்போதும் போற்றப்படுகிறார். அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. சர்மா, "முஸ்லிம் படையெடுப்பாளர்களை" தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாராட்டியுள்ளார் .

"இது 2016 மாநிலத் தேர்தலை 'சராய்காட்டின் கடைசிப் போர்' என்று பாஜக முத்திரை குத்தியது. இதில் காங்கிரஸை முகலாயர்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தது. அசாமியர்கள் காவி கட்சியுடன் நெருக்கமாக இருக்குமாறு பாஜக வலியுறுத்தியது.        

2021 ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்கு முன்பு, BJP இன்னும் வெளிப்படையான இந்துத்துவாவைத் தூண்டியது. மேலும் காங்கிரஸும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சட்டவிரோத குடியேறிய  முஸ்லீம்களை ஆதரிப்பதாக முதல்வர் சர்மா பிரச்சாரம் செய்தார். சமீபத்தில், அவர் முகலாயர்களை தோற்கடித்ததால் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் போர்புகானை புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.

 

 

அஹோம் இராச்சியம்

அஹோம் இராச்சியம் (​​1228–1826)அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் வரலாற்றின் இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்தது. வடகிழக்கு இந்தியாவில் முகலாய விரிவாக்கத்தை வெற்றிகரமாக எதிர்த்து சண்டைபோட்டது.  சுமார் 600 ஆண்டுகள் அதன் இறையாண்மையை அது தக்க வைத்துஆட்சிசெய்தது.  மோங் மாவோவின் (இன்றைய யுன்னான் மாகாணம், சீனா) தை (TAI) இளவரசரான சுகபாவால் நிறுவப்பட்டது. இது 16 ஆம் நூற்றாண்டில் சுஹுங்முங்கி ஆட்சியின் கீழ் விரிவடைந்து.

முழு பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இனங்களின்  தன்மைகளை கொண்ட அரசாக மாறியது. மோமோரியா கிளர்ச்சியின் எழுச்சியுடன்(அதிகார போட்டி) இராச்சியம் பலவீனமடைந்தது. பின்னர் அஸ்ஸாம் மீது பர்மாவின் தொடர்ச்சியான படையெடுப்பைத் தொடரந்து தொ அஹோம் அரசு வீழ்ச்சியடைந்தது.  முதல் ஆங்கிலோ-பர்மியப் போருக்குப் பிறகு பர்மியர்களின் தோல்வி அடைந்தனர்.  1826 ல் யாண்டபோ உடன்படிக்கையின் மூலம், இராச்சியத்தின் கட்டுப்பாடு கிழக்கிந்திய கம்பெனியின் கைகளுக்குச் சென்றது. இதுதான் இந்த அஹோம்  ராஜ்ஜியத்தின் கதை.

லச்சித் போர்புகன் (24 நவம்பர் 1622 - 25 ஏப்ரல் 1672) தற்போதைய அஸ்ஸாமில் அமைந்திருந்த  அஹோம் இராச்சியத்தில் தளபதி மற்றும் போர்புகன் ஆவார். போர்புகான என்றால் அமைச்சர்  என்று பொருள்படும். லச்சித் டெக்கா  பின்னர் லச்சித் போர்புகானாக மாறினார்.அஹோம் ராஜ்ஜியத்தில் 5 போர்புகன்களில் ஒருவராக  இந்த லச்சித் போர்புகான் இருந்தார். இந்த முறையை அஹோம் மன்னர் பிரதாப் சிங்கவால் உருவாக்கப்பட்டது.

அஹோம் ராஜ்ஜியத்தின் அதிகார வரம்புடன், இந்த பதவி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரங்களை உள்ளடக்கியது.  போர்புகானின் தலைமையகம் கலியாபோரிலும்1681 இல் இட்டாகுலி போருக்குப் பிறகு குவஹாத்தியில் உள்ள இடகுலியிலும் அமைந்திருந்தது.  அஹோம் தலைநகரில் இருந்து தொலைவில் இருந்ததால்  சக்தி வாய்ந்ததாகவும் சுதந்திர சாயலை கொண்டதாகவும் இருந்து செயல்பட்டது.கலியாபோரின் கிழக்கே உள்ள பகுதி லச்சித் போர்புகனால் ஆளப்பட்டது.

அஹோம்கள் 1615-1682 வரை ஜஹாங்கீரின் ஆட்சியில் இருந்து அவுரங்கசீப்பின் ஆட்சி வரை தொடர்ச்சியான மோதல்களில் ஈடுபட்டனர். ஆரம்பகால இராணுவ மோதல் ஜனவரி 1662 ல் நடைபெற்றது. முகலாயர்கள் ஒரு பகுதியில் வெற்றிபெற்று  அசாமின் சில பகுதிகளையும், அஹோம் தலைநகரான கர்கானின் சில பகுதிகளையும்  கைப்பற்றினர்.

இழந்த அஹோம் பிரதேசங்களை மீட்பதற்கான எதிர்த்தாக்குதல் அஹோம் மன்னர் ஸ்வர்கதேயோ சக்ரத்வாஜ சிங்காவின்  தலைமையில் தொடங்கியது. அஹோம்கள் சில ஆரம்ப வெற்றிகளை பெற்றனர். அவுரங்கசீப் 1669 ல் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த ஜெய்ப்பூரின் ராஜா ராம் சிங்  தலைமையில் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக அனுப்பினார். இறுதியில் 1671 ல் சராய்காட்  என்ற இடத்தில போர் நடந்தது.

மொகலாயர்கள் தங்கள் பாரிய படைகளுடன் திறந்தவெளியில் போரிட வந்தனர்.  லச்சித் போர்புகன் கெரில்லா தந்திரங்களை  பயன்படுத்தி யுத்தம் செய்தார். லச்சித் பெரிய முகலாய முகாம்களிலும், நிலையான நிலைகளிலும் சேதத்தை ஏற்படுத்தினார்.  சராய்காட் யுத்தத்தில் லச்சித் தலைமையிலான அகோம் படைகள் வெற்றி பெற்றது.

இதற்காக லச்சித் போர்புகன் அசாம் மக்களால் எப்போதும் போற்றப்படுகிறார்.  1930ம் ஆண்டிலிருந்து  தளபதி  லச்சித் பிறந்த நாள் விழா அசாம் மக்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னால் அசாமில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு கௌஹாத்தியிலுள்ள பிரமபுத்திரா பகுதியில் 35 அடி உயரமுள்ள லச்சித் சிலையை அமைத்தது.  1999 ஆம் ஆண்டு முதல்  தேசிய பாதுகாப்பு அகடமி தேர்ச்சி பெற்ற வீரர்களுக்கு  லச்சித் பெயரில் தங்கப்பதக்கம்  வழங்கப்படுகிறது.

1930ம் ஆண்டு கொண்டாடப்படுகிற விழாக்களில் லச்சித் ஒரு மதம்சார்ந்தவராக அடையாளப்படுத்தப்படவில்லை. சராய்காட் போரும்  மதம் அடிப்படையில் பார்க்கப்படவில்லை. அவ்வாறு நடைபெறவும் இல்லை. மன்னராட்சி சாம்ராஜ்யங்களின் விரிவாக்கத்தை எதிர்த்த போராகவே அது இருந்தது.

லச்சித் போர்புகன் இந்து மதத்தைச்சேர்ந்தவர் அல்ல. தை( ) மொழிபேசும் பழங்குடி மதத்தைசேர்ந்தவர். அஹோம் அரச பகுதிகள்  இந்து மதம்சார்ந்த பகுதியும் இல்லை. மன்னர் சிப் சிங் [1714-1744] ஆட்சியின் போது மட்டுமே இந்து மதம் பிரதான மதமாக மாறியது. லச்சித்தின் கீழ் இருந்த பல வீரர்கள் பழங்குடியின மதத்தைச் சேர்ந்தவர்கள்

அஹோம் ராணுவத்தில் முஸ்லிம்களும் முக்கியப் பதவிகளை வகித்தனர். உதாரணமாக, பாக் ஹசாரிகா என்றும் அழைக்கப்படும் கடற்படை ஜெனரல் பதவியை வகித்தவர்  இஸ்மாயில் சித்திக் என்ற முஸ்லீம் ஆவார்.

லச்சித் போரிட்ட முகலாய தளபதி அம்பரைச் சேர்ந்த ராஜா ராம் சிங் கச்வாஹா [ஒரு ராஜபுத்திரர்] என்பதால் அதற்கு எந்த மதக் கோணமும் இல்லை. ஔரங்கசீப்பின் படையில், பல இந்து வீரர்கள் இருந்தனர்.

போர்புகானின் புராணக்கதை முதன்மையாக அவரது வீரம் மற்றும் கடமை உணர்வு பற்றி பாடப்பட்டது. போரின் போது அவர் போராடிய மிக உயர்ந்த கடமை உணர்வின் காரணமாக பாராட்டப்பட்டார் தவிர மதத்தின் சிறப்பால் அல்ல.

400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வடகிழக்கின் வரலாற்றைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கான ஒரு வழி என்ற அளவில் பாக்கப்பட வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

அஸ்ஸாமில் உள்ள வரலாற்றாசிரியர்கள் போர்புகானின் கதை வகுப்புவாதப்படுத்தப்பட்ட விதம் மற்றும் அஹோம் ராஜ்ஜியத்திற்கும் முகலாய சாம்ராஜ்யத்திற்கும் இடையிலான போரை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான போராக  மாற்றுகிற மததுவேஷ வேலை களை பாஜக செய்வதை கண்டிக்கின்றனர்.

அசாமில் பிஜேபியின் எழுச்சிக்குப் பிறகு, அவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு போர்வீரராகக் காட்ட கட்சி ஆர்வமாக உள்ளது. "முஸ்லிம் படையெடுப்பாளர்களை" தடுப்பதற்காக போர்புகானை அடிக்கடி பாஜக தலைவர்கள் பாராட்டியுள்ளார் .

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மதவெறி அரசியலை நிலை நாட்டுவதற்கு பழங்குடி போர் வீரர்களை இந்து என்ற சாயத்தை பூசி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக மாற்றி கலவரத்தை உருவாக்கி வருகிறது.

இந்திய நாடு முழுவதும் சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் சிங் போன்ற மன்னர்களை இந்து மன்னர்களாக கட்டமைத்து இஸ்லாமியரை எதிர்த்து போராடியவர்கள் என்ற மத வெறி உணர்வை ஊட்டியது. தற்போது அந்தப் பட்டியலில் அசாம் வீரர் லச்சித் போர்புகானை சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது.

பாஜக நினைத்தபடி வரலாற்றை மாற்றி எழுதும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

அ.பாக்கியம்

 

 

 

 

 

 

 

சனி, நவம்பர் 12, 2022

மோடியின் ஆட்சியில் மோர்பி மட்டுமல்ல.......!

o






க்டோபர் 30ஆம் தேதி குஜராத் மாநிலம் மோர்பி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர்கள் மரணம் அடைந்தவர்கள்.


கடிகார கம்பெனியிடம் காண்ட்ராக்ட் கொடுத்ததும், கம்பெனியின் வேலைக்காரர்களை மட்டுமே கைது செய்ததும் ஆட்சியின் அலங்கோல காட்சிகள் ஆகும்.

ஏதோ குஜராத்தில் மட்டும்தான் இது நடந்து விட்டது என்று எண்ணி விடாதீர்கள் மோடி ஆட்சியில் இது தொடர்கதையாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் 9-ம்தேதி கிரேட்டர் மைதாவில் நொய்டாவில் சாலையில் திடீரென்று ஒரு பகுதி உள்ளே சென்றுவிட்டது. பெரும் போக்குவரத்து பாதிப்பாகி நாடு முழுவதும் வைரலாக மாறியது.

மேலும் இதே மாதம் முப்பதாம் தேதி பெங்களூர் பகுதியில் ஏலஹங்கா என்ற இடத்தில் பிரதான சாலை இடிந்து உள்ளே சென்று விட்டது அங்கு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 27 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர்கள் படுகாயம் அடைந்து நான்கு பேர்கள் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குர்கனில் உள்ள துவாரகா விரைவுச் சாலையில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய மேம்பாலம் ஒன்று கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த பொழுது பாலம் இடிந்து விழுந்தது. மூன்று பேர்  பாதிக்கப்பட்டனர். மாநில முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று அகமதாபாத்தில் கட்டப்பட்டு வந்த முமத்புரா மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. 853 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இடிந்து விழுந்தது மாநில முழுவதும் தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது. இந்தப் பாலத்தை கட்டி வந்த நிறுவனம் ஏற்கனவே இருபாலங்களை கட்டிய பொழுது இதே போன்று இடிந்து விழுந்து உள்ளது.

22 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரின் சுல்தான் கஞ்சி பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி, ஏப்ரல் 30ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது இடிந்து விழுந்தது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்து ஒரு முதியவர் பலியானதுடன் லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம மேற்கு வங்காளத்தில் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஷ்நாப் நகரில் பராக்கா தடுப்பணை மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் பொறியாளர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த மாதம் 29ஆம் தேதி காசர்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி காங்கிரீட் ஜல்லி போடுகிற பொழுது இடிந்து விழுந்தது தரமற்ற ஜல்லிகள் பயன்படுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த இடிபாடுகளுக்கு காரணம் ஒன்றிய அரசின் ஊழல் நிறைந்த நிர்வாக நடவடிக்கைகளை காரணம் என்று அனைவரும் அப்பட்டமாக அறிந்த உண்மை.
பாக்கியம்.

http://dhunt.in/EJnmx?s=a&uu=0x8a84b929188e0916&ss=pd

குஜராத் பாலம், நொய்டாசாலை விரைவு சாலை, பீகார் விபத்து. 

வியாழன், நவம்பர் 10, 2022

அமெரிக்காவில் இலாபம் ஈட்டும் தனியார் சிறைகள் மனித உரிமைகளை மீறுகின்றன:

2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.



அமெரிக்க தனியார் சிறைகளில் உள்ள கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளா கின்றனர்.

மேலும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ள தனியார் தடுப்பு சிறைகள் நிலைமை மோசமாக உள்ளது.

  2019 ஆம் ஆண்டில், 1,16,000 ( பிப். 4, 2021 அன்றைய ஐக்கிய நாடுகள் செய்திகள்)   அமெரிக்கக் கைதிகள் தனியாரால் இயக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது மொத்த கைதிகளில் 16 சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.



2021 ஆண்டு செப்டம்பர் வரை மெக்ஸிகோ எல்லையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அமெரிக்க அதிகாரிகள் தடுப்புச் காவலில் வைத்துள்ளனர். 

அவர்களில், 45,000 குழந்தைகள் உட்பட, 80 சதவீதம் பேர் தனியார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தடுப்பு சிறைகள்  தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன.  செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு  குறைந்தபட்ச தரங்கள் இல்லாமல்  கட்டமைக்கின்றன. இதன் விளைவாக மோசமான,  கடுமையான உள் சூழல் ஏற்படுகிறது.

அரசின் கண்காணிப்பு குறைபாடுகளால்  தடுப்பு சிறைகளில் வசதிகள் குறைவாகவும், குழப்பமான நிர்வாகம் நடப்பதற்கும்,மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறுவதற்கும் வழிவகுக்கிறது.

அதே நேரத்தில் கைதிகளுக்கு பல்வேறு அளவு, உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறத.

சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை திங்களன்று வெளியிட்டது. இதில் மேற்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Profit-driven private prisons in U.S. violate human rights: report
https://xhnewsapi.xinhuaxmt.com/share/news?id=667612689260544&showType=3019&utdId=89f79739c7e4ac0d4926bb08bc7e6458&version=3.1.0&projectSource=0&clientMarket=google

வெள்ளி, நவம்பர் 04, 2022

"கழிசடை" கவர்னர்.


இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார்.அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட  கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.


கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.
இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக  எச்சரித்து உள்ளார்.







வியாழன், நவம்பர் 03, 2022

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு.



சீனாவின் வளர்ச்சி மாதிரியை மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யாது, மற்ற நாடுகளிலிருந்து மாதிரிகளை இறக்குமதி செய்யாது;  மற்ற நாடுகள் தங்கள் மாதிரிகளை சீனா மீது திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்;  ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கலுக்கு அதன் சொந்த வழியை ஆராய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சன் யெலி கூறினார்.


சீன நவீனமயமாக்கல் என்பது அமைதியான வளர்ச்சியின் நவீனமயமாக்கலாகும்.  நாங்கள் போர், காலனித்துவம் மற்றும் கொள்ளை போன்ற பழைய பாதையில் நடக்கவில்லை. ஆனால் அமைதி, வளர்ச்சி மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் நடந்து கொள்கிறோம்," என்று சன் கூறினார், ஒவ்வொரு நாடும் அமைதியான வளர்ச்சி மாதிரியை தொடர முடியும் என்று சீனா நம்புகிறது.


உலகம் கோவிட்-19, பொருளாதார மந்தநிலை மற்றும் மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.  வளர்ந்து வரும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில், சீனா உலகத்துடனான தனது உறவுகளை  மேம்படுத்தி வருகிறது.


"மனிதகுலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் கைகோர்த்து செயல்பட தயாராக உள்ளனர்" என்று ஜி கூறினார்.


கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய மொத்த நாடுகளின் எண்ணிக்கை172 லிருந்து 181 ஆக அதிகரித்துள்ளது.


"நாங்கள் 113 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளோம்.உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி, உலகளாவிய கூட்டாண்மை வலையமைப்பை ஏற்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.


   கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐந்து கண்டங்களில் உள்ள 69 நாடுகளுக்கு 42 முறை விஜயம் செய்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை உள்நாட்டி ல் சந்தித்து சீனாவின் கூட்டாண்மைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.


சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) ஒரு சர்வதேச பொது முன்முயற்சியாகவும்,  உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான தளமாகவும் மாறியுள்ளது.


தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, ஜூலை 2022 இறுதிக்குள், சீனா 149 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் 200க்கும் மேற்பட்ட BRI ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு முன்வைத்த Global Development Initiative (GDI) ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் ஏற்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு  செப்டம்பர் 21, 2021 அன்று ஐநா பொதுச் சபையில் மெய்நிகர் உரையில் சீன அதிபர் ஜி முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.  ஜி தனது அறிக்கையில் உறுதியளித்தது போல், "நாம் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வேண்டும் மற்றும் மிகவும் வலுவான, பசுமையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை தொடர வேண்டும்."


நிலையான வளர்ச்சிக்கான  ஐநா சபையால் முன்மொழிக்கப்பட்ட  திட்டத்தை  விரைவுபடுத்த உதவும் முதன்மை முயற்சியாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சிக்கான முயற்சி என்ற திட்டம் உதவி செய்யும். முன்னுரிமைப் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு, COVID-19 தடுப்பூசிகள், வளர்ச்சிக்கான நிதி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மேம்பாடு, தொழில்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். 


GDI ஆரம்பம் முதல் சர்வதேச சமூகத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறது.  100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. அதே நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோர் ஜனவரி 2022 இல் ஐநாவில் சீனாவால் தொடங்கப்பட்ட GDI நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.


சீனாவும், சர்வதேச பங்காளிகளும் இணைந்து விவசாயம், கல்வி, கோவிட்-19 எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பிற்காக நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.


ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பர் 21, 2022 அன்று, நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை அமர்வை ஒட்டி நடைபெற்ற GDI நண்பர்கள் குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேலும் ஏழு நடைமுறை நடவடிக்கைகளை அறிவித்து வெளியிட்டார்.  GDI திட்டக் குழுவின் முதல் பட்டியல், 50 உறுதியான ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் 1000 மேலும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்படுகின்றன.

புதன், நவம்பர் 02, 2022

"யாரையும் விட்டு விடாதீர்கள்."




இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் "யாரையும் விட்டு விடாதீர்கள்".

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.

உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும்  670 மில்லியன் மக்கள்  பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக "யாரையும் விட்டு விடாதீர்கள்" என்பதை தேர்வு செய்துள்ளது.

உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.

மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது. 

சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது. 

சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.

சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.

அதே  நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.

சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.

உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது. 140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.

சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள். 

சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெ்டேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு  2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.

 அ.பாக்கியம்







சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...