Pages

வெள்ளி, நவம்பர் 04, 2022

"கழிசடை" கவர்னர்.


இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார்.அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட  கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.


கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.
இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக  எச்சரித்து உள்ளார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...