Pages

புதன், நவம்பர் 02, 2022

"யாரையும் விட்டு விடாதீர்கள்."




இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் "யாரையும் விட்டு விடாதீர்கள்".

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.

உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும்  670 மில்லியன் மக்கள்  பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக "யாரையும் விட்டு விடாதீர்கள்" என்பதை தேர்வு செய்துள்ளது.

உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.

மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது. 

சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது. 

சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.

சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.

அதே  நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.

சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.

உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது. 140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.

சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள். 

சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெ்டேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு  2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.

 அ.பாக்கியம்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...