Pages

திங்கள், நவம்பர் 05, 2018

படேல் சிலையும் பெட்ரோல் விலையும்.


                            

                     சர்தார் வல்லபாய் படேலுக்கு மோடி அரசு உலகின் மிக உயர்ந்த சிலையை குஜராத்தி அமைத்துள்ளது. இந்த சிலை அமைக்க 3000 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மோடியும், பாதுகாப்பு அமைச்சர் சீதாராமனும் நாடு முழுவதும் இருந்து இரும்பை கொண்டு இந்த சிலையை கட்டியதாக தம்பட்டம் அடித்துக் கொண்டார்கள். பொய் கதை கட்டுவதில் இந்த கும்பல்தான் இன்று உலகிலேயே படேல் சிலையைவிட உயரமாக இருக்கிறது. 
               சிலை கட்டுவதற்கான பணத்தை மக்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. இதோ அதன் பட்டியல்
இந்தியன் ஆயில் கார்பரேசன் - ரூ 900 கோடி
ஓ.என்.ஜி.சி. - ரூ 500 கோடி
பாரத் பெட்ரோலியம் - ரூ 250 கோடி
ஆயில் இந்தியா கார்பரேசன் - ரூ 250 கோடி
கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் - ரூ 250 கோடி
பவர் கிரீட் - ரூ 125 கோடி
குஜராத் மினரல் டெவலப்மெண்ட் கார்பரேசன் - ரூ 100 கோடி
என்ஜினியர்ஸ் இந்தியா - ரூ 50 கோடி
பெட்ரோ நெட் - ரூ 50 கோடி
பால்மர் லாறி - ரூ 50 கோடி
                   

சிலைக்கு பணம் கொடுத்த பெரும்பாலான நிறுவனங்கள் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களே. ஒரு பக்கம் பெட்ரோல் விலையை ஏற்றி கொள்ளையடித்து மறுபுறம் படேல் சிலைக்கு பணத்தை கொடுத்துள்ளனர்.
(கிரீஷ் குபேர் ழுசைiளா மரநெச லோக்சக்தா என்ற மராத்தி பத்திரிகை எழுதிய கட்டுரையிலிருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...