Pages

வியாழன், அக்டோபர் 25, 2018

மோடி ஜி ! பாலியல் துன்புறுத்தலில் இந்தியா வல்லரசாகுமோ?


                 
                 2014-17 இடைப்பட்ட காலததில் மோடி ஆட்சியில் பணித்தளத்தில பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 54 சதவிதிதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆம் ஆண்டு 371 வழக்குகள் பதிவாகி இருந்தது. 2017-ல் 570 வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தினசரி இரண்டு வழக்குகள் வீதம் மொத்தம் 2535 வழக்குள் பதிவாகி இருப்பதாக அரசு 2018 ஜுலை 17-ம் தேதி பாராளுமன்றத்தில் அறிக்கை வைத்துள்ளது. 

          பதிவாகிய வழக்குள்தான் இது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் 70 சதம்பேர்கள் புகார் அளிப்பதில்லை என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டு முதல் 7 மாத்தில் இதுவரை 533 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆட்சியாளர்கள் அறிவிப்பது போல் குறைவதாக தெரியவில்லை.

                   மாநில அளவில் எடுத்துக்கொண்டால் பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்கள் அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளன. பணியிடம் பாலியல் துன்புறுத்தலில் உத்திர பிரதேசத்தில் 726 புகார்கள் அல்லது 29 சதம் 2014-18-ல் அதிகரித்துள்ளது. டெல்லியில் 369 அரியானா 171 மத்தியபிரதேசம் 154 மகாராஷ்டிரா 147 என புகார்கள் நிரம்பி வழிகின்றன.

                              இந்திய தண்டனைச் சட்டம்  354ஏ பிரிவின்படி உடல்தியான தொடர்பு, வேண்டப்படாத அல்லது வெளிப்படையாக ஆபாசமாக பேசுதல், பாலியல் நடத்தைக்கு நிர்பந்திப்பது அல்லது வேண்டுவது, பெண்ணிடம் ஆபாச படங்களை காட்டுவது பாலியல் துன்புறுத்தும் குற்றமாகும் என்று  வரையறுத்துள்ளது. 

                    இந்திய குற்றப்பிரிவு ஆவணக்காப்பகம் (சூஊசுக்ஷ)  பெண்களை அவமானப்படுத்தல்  (“iளேரடவ வடி அடினநளவல டிக றடிஅநn” ) பணியிட பாலியல் குற்றம் என்றும் இது போன்ற நடவடிக்கைகள்  இந்திய தண்டனை சட்டம் 509-கீழ் குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் 2014-ல் 526 வழக்குகளும் 2016-ல் 665 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

                         பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களில் 70 சதம்பேர்கள் புகார் அளிப்பதில்லை என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர். விளையாட்டு துறையில் 23 பேர்கள் தங்களது பயிற்சியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துளளனர்.

                                             பெண்கள் மீது பணியிட பாலியல் வன்முறை (தடுத்தல், தடை, மற்றும் நிவர்த்தி செய்தல்) சட்டம் 2013, Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) Protection of Children from Sexual Offense Act (POCSO Act), 2012. என சட்டங்கள் இருக்கின்றன. 

                                      ஆனால் அவற்றை அமுலாக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்க்கிறது. அல்லது குற்றவாளிகளை பல நேரங்களில் பாதுகாக்கிறது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2017 ஜுலை மாதம் 24-ம் தேதி  பாலியல் குற்றங்களை தடுக்க மின்னஞ்சல் புகார் பெட்டியை Sexual Harassment electronic–Box (SHe-Box)அறிமுகப்படுத்தினார். அறிமுகபடுத்திய இருமாதங்கள் இந்த எண் செயல்படவில்லை. மேலும் இதுவih 107 புகார்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. 
(https://www.indiaspend.com/metooindia-54-rise-in-sexual-harassment-reported-at-workplaces-between-2014-17/)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...