இந்தியாவில் தற்போது 6 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். சட்டங்ளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குழந்தை தொழிளாளர் எண்ணிக்கை குறையவில்லை.
2011-ம் ஆண்டு கணக்கின்படி மொத்த உழைப்பாளர்களில் 11.8 சதவீதம் 5 முதல் 19 வயதுரையிலான குழந்தைதொழிளாலர்கள்.
தற்போது 1.3கோடி 5முதல் 14 வயது வரை உள்ளவர்கள். 3.2கோடி 15 முதல் 19 வயதுவரை உள்ளவர்கள்.
நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்தியார்த்தி குறைத்து மதிப்பிட்டாலும் ஆறுகோடி குழந்தை உழைப்பாளிகள் உள்ளனர் என்கிறார். பெரும்பாலான குழந்தைகள் விவசாயம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களில் சுரண்டப்படுகின்றனர்.
உற்பத்தி சார்ந்த குடிசைத்தொழில் 15.4 சதவீதம். விவசாயதொழிலாளர்கள் 15.4 சதவீதம் உற்பத்திதுறையில் 10.8, விவசாயத்தில் 10.7, ஓட்டல் மற்றும் உணவக விடுதிகளில் 10.5, கட்டுமான துறையில் 9.9, சுரங்கம் மற்றும் கல்குவாரிகளில் 8.3, வணிகவளாகங்களில் 8.1 சதவிகிதம் பணியமர்த்ப்ப டுகின்றனர்.
தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தக்கூடாது என 1986ம் ஆண்டே சட்டம் வந்தாலும் நிலைமையில் மாற்றம் இல்லை.
புகையிலை விவசாயத்தில் பணிபுரியும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 30 வரை கூலி தரப்படுகிறது.செருப்பு தைக்க ஒரு ஜோடிக்கு ரூ2தரப்படுகிறது.ஒரு ஜோடி ஜீன்ஸ் பட்டன் தைக்க 40 காசுகள், மடித்து அட்டைபெட்டியில் வைத்திட 75 காசுகள் என குறைந்த கூலிக்கு சுரண்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக