Pages

செவ்வாய், ஜூன் 28, 2022

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போவாரா?



என்ற  பழமொழிக்கு பழமொழிக்கு பொருத்தமானவர் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர்  திரௌபதி முறுமு.

உள்ளாட்சி கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மாநில கவர்னர் என உயர் பதவிகளில் பொறுப்பு வகித்த பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் பழங்குடி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றாலும், தனது சொந்த கிராமத்திற்கு மின்சாரம் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.


பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் சொந்த கிராமம் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உப்பெர்டா கிராமத்திற்கு உட்பட்ட டுங்குர் சாஹி  என்ற குக்கிராமம்.


3,500 மக்கள்தொகை கொண்ட உபர்பேடா கிராமத்தில் இரண்டு குக்கிராமங்கள் உள்ளன. படாசாஹி குக்கிராமம் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது, 


அதே நேரத்தில்  துங்குர்சாஹியில் 20 வீடுகலுக்கும் இன்னும் மின்சாரம் பெறவில்லை. இங்குள்ளவர்கள் பக்கத்து  கிராமத்தைச் சென்று தங்களது அலைபேசியை ரீசார்ஜ் செய்து எடுத்து வருவார்கள். முர்முவின் மருமகன் பிரஞ்சி நாராயண் துடு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் டுங்குர்சாஹி குக்கிராமத்தில் வசிக்கிறார். அவரது மனைவி கூறுகையில், “எங்கள் டுங்குர்சாஹி குக்கிராமத்திற்கு மின்சாரம் வழங்குமாறு பலரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், யாரும் பொருட்படுத்தவில்லை,'' என்றார்.


திருவிழாக் காலங்களில் மட்டும் திரௌபதி முருமு கிராமத்திற்கு செல்வார். தனது சொந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. 2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் உள்ளூர் எம்எல்ஏ மற்றும் எம்பிக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று உபர்பேடா கிராமத்தில் வசிக்கும் சித்தரஞ்சன் பாஸ்கே கூறினார். மக்கள் இன்னமும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளை ஒளிரச் செய்கிறார்கள், என்றார்.


குக்கிராமத்தில் உள்ள வீடுகள் வன நிலத்தில் கட்டப்பட்டதால் துங்குர்சாஹிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "கிராம மக்களை இருளில் வைத்திருக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஆனால் சில அதிகாரப்பூர்வ அனுமதிகள் இல்லாததால் இது நடந்தது" என்று அந்த அதிகாரி கூறினார்.

      டாடா பவர் நார்த் ஒடிசா டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (TPNODL) அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 38 மின் கம்பங்கள் மற்றும் 900 மீட்டர் கேபிள்கள், கண்டக்டர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் ஒரு டிரக் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களில் உபர்பேடாவை அடைந்தனர். TPNODL இன் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறுகையில், "மின்மயமாக்கல் பணியை முடிக்கவும், முழு உபர்பேடா கிராமத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும் நிறுவனத்தின் மயூர்பஞ்ச் பிரிவுக்கு நாங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளோம்.


சொந்த கிராமத்திற்கு மின்சாரம் இல்லை என்பதை மூர்மூ கவனத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்று சில பத்திரிகைகள் எழுதுவதுதான் கேலிக்கூத்தாக உள்ளது. தனது சொந்த கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில்தான் நீண்டநாட்கள் வசித்திருக்கிறார்.

இவரின் சொந்த மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 500 கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது 1350 கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடையாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி 100% கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி விட்டதாக ஜெர்மனி சென்று சில நாட்களுக்கு முன்பு பேசியுள்ளார்.

இவர்தான் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி என்றால் ஆர்எஸ்எஸின் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே இருக்க முடியும்.

அ.பாக்கியம் 


https://www.indiatoday.in/india/story/nda-presidential-candidate-droupadi-murmu-odisha-electricity-1966930-2022-06-26




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...