Pages

வெள்ளி, அக்டோபர் 27, 2017

குடியாட்சியிலிருந்து முடிவற்ற கும்பல் ஆட்சிக்கு?


- அ.பாக்கியம





  கஸ்ட் 19 பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 71வது சுதந்திரதின கொடியேற்றி வழக்கம்போல் எழுச்சியுரையாற்றி மூன்றே நாட்கள் முடிந்தநிலையில்அ ந்தக்கொடுரம்அரங்கேறியது.. ..ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கன்ஞ் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் தலைமுடிகத்தரிக்கப்பட்டசம்பவத்திற்காக அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தஒருபெண்ணையும்அவரதுமகனையும்கொடூரமாகதாக்கி அப்பெண்ணை அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாகடித்துள்ளனர்.ஜார்கண்ட்மாநிலத்தில் இது முதல் தடவை அல்ல. வாரத்திற்கு முன்னால் சிறுவன் ஒருவனை திருடன் என சந்தேகப்பட்டு கும்பல் அடித்துக் கொன்றது. இந்த சம்வங்கள் எதை வெளிப்படுத்துகிறது? இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியும் குடியாட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதைத்தான். 

        இந்திய அரசியல் சட்டமும் இதர சட்டங்கள் அனைத்தும் நடுநிலையானது, அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற பிரமை என்றைக்குமே இருந்தது இல்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ள இவை அனைத்தும் அடிப்படையில் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க கூடியதுதான். எனினும் இவற்றில் உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க அல்லது அடுத்த கட்ட உரிமைகளை பெற்றிட பல அம்சங்சங்கள் உள்ளன. இந்த உரிமைகளும் உழைப்பாளி மக்களின் உதிரம் சிந்திய போராட்டத்தால் கிடைக்கப்பெற்றதும் பாதுகாக்கபட்டதும் ஆகும். தற்போது ஆட்சிபீடத்தில் உள்ள மோடி தலைமையிலான சங்பரிவாரங்களின் அரசு தீவிர சுரண்டலுக்கு தேவையான கொள்கைகளை கையாள்வதால் முழுமையற்ற இந்த உரிமைகளை பறிக்கிற பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது.  கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

                சூழ்ச்சிக்கலையின் பிதாமகன் - அவசரசட்டங்களின் அவதாரம்:
மோடி அரசு சங்பரிவாரங்களின் இலக்கை அப்பட்டமாக அமுல்படுத்தி வருகின்றது. பாராளு மன்ற ஜனநயாகத்திற்கு வேட்டு வைப்பது. அதன் செயல்பாட்டை வெட்டிச்சுருக்குவது. அரசு இயந்திரத்தில் இந்துத்துவா வாதிகளை அம்ரவைப்பது. அரசியல் சட்டத்தை திருத்தி சங்கபரிவாரங்களின் கொகைக்கு ஏற்ப மாற்றி அமைப்பது. நாடு முழுவதும் இந்துத்வா வன்முறைபடைகளை உருவாக்குவது.

        
   முதலாவதாக, பாராளுமன்ற அவை அதிகாரங்களையும், வரம்புகளையும் மீறி சூழ்ச்சிகளால் சட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதை சீத்தாராம் யெச்சூரி அம்பலப்படுத்தியுள்ளார். “இந்த நிதி சட்ட முன்வடிவு குறித்து நான் மிகவும் சங்கடத்திள்கு உள்ளாகி உள்ளேன். உண்மையில் இதை நிதி சட்ட முன்வடிவு என்று என்னால் கருத முடியவில்லை. மாறாக இது நிதி அடாவடித்தனம். இதற்குள் நிதிக்கு சம்பந்தமற்ற 40 புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இவை மக்களையில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்படலாம்.” என்று பேசினார். இந்த சட்டத்திற்குள் திணித்துதான் ஆதார் கட்டாய சட்டம், தீர்ப்பாயங்கள் தொடர்பான சட்டங்கள், கம்பெனிச்சட்டங்கள் ஆகியவற்றையும் இந்த சூழ்ச்சியின் மூலமாகவே நிறைவேற்றி உள்ளனர்.

   இரண்டாவதாக, பாராளுமன்றத்திற்கு வெளியே அவசரசட்டத்தின் மூலமாகவே ஆட்சி நடத்துகின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவில் 29 அவசர சட்டங்ளை பிறப்பித்துள்ளனர். 2014-ல் 4 அவசர சட்டத்தையும், 2015-ல் 12 அவசர சட்டத்தையும், 2016-ல் 8 அவசர சட்டத்தையும் 2017-ல் 5 அவசர சட்டத்தையும் கொண்டுவந்தனர்.  2014-ல் மே மாதம் 26-தேதி பதவி ஏற்றவுடன் 28-ம் தேதி தனக்கான ஒரு அதிகாரியை நியமித்துக் கொள்வதற்காக முதல் அவசர சட்டம் கொண்டு வந்தார். விவசாயிகளின் நிலத்தை பறித்து கார்பொரேட்களுக்கு கொடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம், தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிட ஆதார் அட்டைக்காக சட்டம் ,  சரக்கு மற்றும் சேவை வரி விதித்திட சட்டம், நீட் தேர்வை திணித்திட சட்டம்  என அனைத்தும் அவசர சட்டங்களால் ஆட்சிநடத்தி மக்கள் பிரதிநிதிகளின் பாராளு மன்றத்iத் முடக்கினார். 

     மூன்றாவதாக, அரசியல் அமைப்புச் சட்டங்களைவிட வேதம் உயர்வானது, பாராளுமன்றத்தைவிட தர்மம் உயர்வானது, எனவே தர்மத்தை தேர்தல் மூலமாக தீர்மானிக்க முடியாது என்பதை கொள்கையாக கொண்டுள்ள சங்பரிவாரங்கள் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.  இந்த நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகள் முடக்கப்பட்டு இவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்று நிர்வாகம் கட்டமைக்கப்படுகிறது.

பசு குண்டர்கள்
 
      பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள் என்னும் பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ இன்றைய மத்திய ஆட்சியாளருக்கு அப்படியே பொருந்தக் கூடியதாகும். நரவேட்டையாளர்களை நடுவண் அரசின் நாயகர்களாக இருப்பதனால் சாதாரண மக்கள் அடித்துக் கொல்லப்படும் காட்சிகள் அன்றாடம் அரங்கேறி கொண்டே இருக்கிறது. தவறுகள் நடந்தால் புகார் செய்வது, வழக்கு பதிவு செய்வது,விசாரணை நடத்துவது, நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்குவது என்ற சட்டத்தின் ஆட்சிக்கு சமாதி கட்டி சனாதன கொள்கைகளை சிங்காரித்து சிம்மாசனத்தில் வைத்து விட்டனர். இதன் விளைவு தேசத்தின் தெருக்களில் வன்முறை கும்பல் வலம் வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்விடங்கள், தெருக்கள் கொலைக்கூடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.  ஒருசிலர் சேர்ந்து ஒருவரை சாகடித்தால் அது கொலை. ஒரு கும்பல் சேர்ந்து ஒருவரை சாகடித்தால் அது தேசப்பற்று என்று இந்த சங்பரிவாரங்களின் “கும்பல் வன்முறையாளர்கள்” புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக பசு பாதுகாவலர்கள், மத பாதுகாவலர்கள், கலாச்சார படை என பல வன்முறை குழுக்களை உருவாக்கி வளர்த்து வருகின்றனர். தேசம் முழுவதும் இந்த வன்முறை கும்பல்களுக்கு மிகப்பெரும் ஆயுதமாக இருப்பது பசு பாதுகாப்பு என்ற போலி பிரச்சாரமாகும். பசு குண்டர்கள் தொடர் கொலைகளில் அரசின் ஆதரவோடு செயல்படுகின்றனர். 

            வன்முறை கும்பல்களுக்கு பகைவெறியூட்டப்பட்டு பணம் பெரும் வாய்ப்பும் கிடைத்துவிட்டால் தொழில்முறை வன்முறையாளர்களாக மாறிவிடுகின்றனர்.   71 வது ஆண்டு சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி பெரும்பாலும் இந்துஸ்தான் என்றுதான் பயன்டுத்தினார். இது அவர்களின் விருப்பபடி இந்துஸ்தானாக மாறுகிறதோ இல்லையோ வேகமான முறையில் லிஞ்சிஸ்தானாக (டுலnஉhளைவாயn) "அடித்துக் கொல்லும் நாடாக" மாற்றி வருகின்றனர்.  பண்டைய ரோமாபுரியில் ஆம்பி தியேட்டரில் மிருகங்களையும் அடிமைகளையிம் மோதவிட்டு கூட்டம் ஆர்பரிக்கும். அங்குகூட சில சட்டவிதிகள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதையெல்லாம் மீறி கும்பல் ஆட்சிதான் இந்தியாவில் கோலோட்சுகிறது. சங்பரிவாரங்கள் இதை திட்டமிட்டு கட்டமைக்கிறது.
        
   மோடி ஆட்சிபீடம் ஏறியவுடன் அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் அமோகமாக அரங்கேற்றப்படுகிறது.சில வன்முறை சம்பவங்கள் தேசத்தையே உலுக்கியது. பெகுலு-கான் (ஞநாடரமாயn) என்பவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த பால் உற்பத்தி செய்யும் விவசாயி. இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை சந்தைக்கு எருமை மாடு வாங்க சென்றுள்ளார். சந்தையில் அதிக அளவு பால் கறக்கும் பசு மாட்டை கண்டவுடன் அதை வாங்கியுள்ளார். வாங்கிய பசுவை தனது சொந்த ஊரான அல்வாருக்கு   கொண்டு வந்துள்ளார். இந்த நேரத்தில் பசு குண்டர்கள் (05.04.2017) அவரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கினர். பெகுலுகானை அதே இடத்தில் அடித்துக் கொலை செய்தனர். இவை அனைத்தும் காவல்துறை சுற்றி நிற்க, பட்டப்பகலில் நடைபெற்றது. அது மட்டுமல்லல அடித்து கொள்வதை காணொளி எடுத்து வளைதளத்தில் பரப்பினர்.
 
       மற்றொரு மோசமான   நிகழ்வு முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டது. தலைநகர் டெல்லியிலிருந்து 50 கி.மீ.தூரத்தில் உ.பி.யின் தாத்திரி என்ற இடத்தில் இது நடக்கிறது. அவரது வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று கூறி கோயிலில் உள்ள ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஆட்களை திரட்டி கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.  

        16வயது நிரம்பிய ஜூனைத் என்ற இளைஞன் தனது இரு சகோதரர்கள் ஹசிம், மௌசிம் ஆகியோருடன் ஈத் பண்டிகைக்காக 22.06.2017 அன்று டெல்லிக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு தனது சொந்த ஊரான அரியானா காந்தவால் கிராமத்திற்கு இரயிலில் திரும்பிக் கொண்டி ருக்கையில், பசு குண்டர்கள் இவர்களை ரயிலில் தாக்குகின்றனர். இவர்கள் மாடுகளையோ மாட்டிறைச்சியையோ கொண்டு செல்லவில்லை. முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்துக்காக ரயிலுக்குள் வைத்து 2 மணி நேரம் தாக்கியுள்ளனர். இதில் கத்தியால் குத்துப்பட்டு ஜூனைத் இறந்தான். உடன் வந்த இரு சகோதரர்களும் வாங்கிய ஈத் பொருட்களை கைவிட்டு இரத்தம் தோய்ந்த தனது தம்பியின்  உடலை  பகலில் மக்கள் கூட்ட நடுவில், ஆயுதம் தரித்த காவலர்கள் வேடிக்கை பார்க்க தூக்கிச் சென்றனர் 
.
            “இது இனியும் வெறும் சகிப்புத்தன்மையின்மை என வகைப்படுத்தக் கூடாது. இது ஒரு அடக்குமுறை ஆட்சியின் தோற்றமும் நிலைநிறுத்தமும ஆகும். அது இந்தியாவின் சிறுபான்மையினரை உண்மையிலேயே வெளியேற்றவும், ராஷ்டிரிய சுயம்சேவக்(ஆர்.ஆர்.எஸ்)-ஐ தோற்றுவித்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்துராஷ்டிரா-வை பிரகடனம் செய்ய விரும்புவது ஆகும்.” 

(டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் பிரண்ட்லைன் பத்திரிக்கையில்)
             
மே 18, 2017 அன்று ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் 7 பேர் கும்பல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டதை, வேடிக்கை பார்த்தவர்களில் துணை காவல் கண்காணிப்பாளர், வட்டார காவல் ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீஸ்காரர்கள் அடங்குவார்கள். வன்முறை குண்டர்கள் மற்றும் காவல்துறை இணைப்பு எப்படி நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

          ஏப்ரல் 30, 2017 மத்திய அசாம் நவகான் மாவட்டத்தில் அபு அனிபா (23) ரிசாவுதின் அலி (24) ஆகிய இரு இளைஞர்கள் பசுத் திருடர்கள் என பழி சுமத்தி அடித்து ரத்த வெள்ளத்தில் சாலையில் போட்டுச் சென்றனர்.
ஏப்ரல் 22, 2017 டெல்லி கால்கஞ்சி பகுதியில் வாகனத்தில் கால்நடைகளை கொண்டு சென்றவர்கள் 4 பேர்களை அடித்து காயப்படுத்தினர். கால்நடை கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தினர்.

ஏப்ரல் 21, 2017 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ரெய்சி மாவட்டத்தில் (சுநுஹளுஐ) மந்தைகளை ஓட்டிச் சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர்களை அடித்துக் கொலை செய்ய முயற்சித்தனர்.

2017-ம் ஆண்டில் மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து ஐந்துபேர்கள் அடித்துகொல்லப்பட்டுள்ளர். கூச்பிஹார் மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்களிடம் கும்பல் 50000 பணம் கேட்டு அவை கொடுக்க இயலாததால் 3 பேர்களை அடித்து கொலை செய்த கொடுரம் நடந்துள்ளது. 

கடந்த 2010 முதல் 2017 வரை உள்ள 8 ஆண்டுகளில் பசுதொடர்பான தாக்குதல்கள் 75 நடந்துள்ளன. இவற்றில் மோடி ஆட்சிக்கு வந்த மே 2014-க்கு பிறகு நடைபெற்ற வன்முறைகள் 73 ஆகும்.அதாவது 97 சதம். இதில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கியது 56 சதமாகும். மேற்கண்ட 75 வன்முறைகளில் 86 சதவிகிதம் மரணத்தில் முடிந்துள்ளது.

ஒரு துப்பாக்கி இருகொலைகள்:
  இவர்கள் பாமர மக்களை மட்டுமல்ல பகுத்தறிவாளர்களை, முற்போக்குவாதிகளை, ஜனநாயக சிந்தனையாளர்களையும் கொலை செய்வதற்கான கும்பல்களையும் தயார்படுத்தி கொலை செய்துவருகின்றனர். சமீபத்தில் கௌரி லங்கேஷ்(செப்,5-2017) என்ற பத்திரிக்கையாளர் தனது வீட்டு வாசலில்  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று பூனாவில் நரேந்திர தபோல்கர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.  2015-பிப்.16  அன்று கோவிந்த் பன்சாரே மராட்டியத்தில் சுடப்பட்டு பிப்-20-ல் மரணடைந்தார்.  2015-ல் ஆகஸ்ட் 30-ல் கர்நாடகாவின் டர்வாத் மாவட்டத்தில் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டார்.  4ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்து ஜனஜாகுரிதி சமிதி(hதள)யின் மேற்குபகுதி கமாண்டர் டாக்டர்.வீரேந்திர தவ்டே மீது குற்றப்பதிவு நடந்துள்ளது.  

தற்போதைய அதிர்ச்சியான தகவல் இரு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் கல்புர்கியை சுட்டுக்கொன்ற அதே துப்பாக்கிதான் கௌரி லங்கேஷ் படுகொலைக்கும் பயன்படுத்ப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் படுகொலைகளை செய்துவருவது இந்து ஜனஜாகுரிதி சமிதி என்ற என்ற  அமைப்புதான என்று அம்பலமாகி உள்ளது.  கோவாவில் நடைபெற்ற சங்பரி வாரங்களின்  மாநாட்டில் இந்த அமைப்பு முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள் அவர்களை சுட்டுகொல்ல வேணடும் என்று பேசி இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் 19வது பிரிவு பேச்சு சுதந்திரத்தையும், 21 வது பிரிவு தனிமனித உரிமையும், 25-வது பிரிவு வழிபாட்டு உரிமையையும் அளித்துள்ளது. அரசியல் சட்டப்படி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அவற்றை பாதுகாக்காமல் குண்டர்களின் படைகளை உருவாக்கி  குறைந்தபட்ச உரிமைகளை வழங்கிடும் குடியரசையும் குழிதோண்டி புதைக்கிறது.
 
ராஜ குருவும்-சீடகோடிகளும்
    மேற்கண்ட வன்முறைகள் தன்னெழுச்சியாகவோ, எதேச்சையாகவோ நடப்பது இல்லை. மாறாக நன்கு திட்டமிடப்பட்டு, திரட்டப்பட்டு நடக்கிறது. அடித்துக் கொள்வதை காணொளி எடுத்து சமூக வளைதளங்களில் பரப்புகிறார்கள் என்றால், அவர்களுக்கு எதிலும் எந்த பாதிப்பும் வராது என்று தெரியும். மன்னர் ஆட்சி காலத்தில் மந்திரி சபையில் ராஜ குரு ஒருவர் அவசியம் (?) இருப்பார். அவரின் ஆலோசனையே எந்த ஒரு விஷயத்திலும் இறுதி முடிவுக்கு இட்டுச்செல்லும். அதுபோல் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்கசால மோகன் பகவத், அதிகாரப்பூர்வமற்ற ராஜ குருவாக கோலோச்சுகிறார். இவர், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதித்த பிறகும் மோகன் பகவத், நாடு தழுவிய பசு வதை தடையை வலியுறுத்தி வருகிறார். சட்டம் வரும் முன்பே, பாஜ ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த அறிவுறுத்தினார். "ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பசு பாதுகாப்பில் உள்ள உள்ளூர் சிக்கல்களை தீர்க்க ‘சுட்டிக்காட்டிய திசை வழியில் செல்வார்கள்’ என நான் நம்புகிறேன்" என்று அமலாக்கத்திற்கான அதிகாரப்பூர்வமற்ற ஆணையை பிறப்பித்தார் (ஏப் 9, 2017).

ராஜகுருவே இப்படி என்றால் சீடகோடிகள் பற்றி கேட்கவா வேண்டும்.  யோகி ஆதித்தியநாத் உத்திர பிரதேசத்தில் பசுவதை தடை மட்டும் செய்யவிலலை அனைத்து இறைச்சிக் கடைகளுக்கும் எதிராக தாக்குதல் தொடுத்துள்ளார்.  குஜராத் மாநிலத்தில் தற்போதைய சட்டத்தை திருத்தி பசுவதைக்கு ஆயுள் தண்டனை என அறிவித்து விட்டனர். விரைவில் குஜராத் மாநிலத்தை ஒரு சைவ மாநிலமாக மாற்றுவோம் என் அறிவித்து வருகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் பசுவதைக்கு தூக்கு தண்டனை என அமைச்சர்கள பேசி வருகின்றனர். அதே மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பசுவை அவமதித்தால் கை கால்களை உடைப்பேன் என்கிறார்; ஒட்டு மொத்தமாக மாட்டிறைச்சிக்கே தடைவிதிக்க வேண்டும் என்கிறார். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பசுவை மட்டுமல்ல எந்த மாடுகளையும் ஏற்றிச் செல்லக் கூடாது என்று தடை விதித்துவிட்டனர். மத்திய அமைச்சராக இருந்து தற்போது துணை குடியரசுத்தலைவராக மாறியுள்ள  வெங்கய்யாநாயுடுவோ "உங்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவன் இல்லை" என்பதுபோல், "உணவு உண்பது அவரவர் உரிமைதான் என்றாலும், அரசியல் சட்டப்படிதான் உண்ண வேண்டும்" என்று மிரட்டுகிறார். அரியானா உள்துறை அமைச்சர் பெகுலுகான் பசுவை கடத்தியதால்  அடித்துக் கொல்லப்பட்டார் என்று படுகொலையை நியாயப்படுத்தினார்.
   இந்த செயல்பாடுகள் சங்பரிவாரங்களின் பாசிச அரசியல் அணிதிரட்டலுக்கே பயன்படும். இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு தலைவன், ஒரு மதம், ஒரே உணவு என்ற பாசிச கொள்கையின் நீட்சி மறைந்து கிடக்கிறது.

பிரதம சீடகோடியின்  நாடகம
         நமது நாட்டின் பிரதமர் அடித்துக்கொல்லும் கொள்கைகளுக்கு எதிராக பேசவில்லை. முhறாக கூட்டுக்கொலை நடந்தாலும் அது பற்றி பொதுவான வாய்சவடால்தான் பேசுகிறார். இந்த பேச்சுக்களை சங்கபரிவாரங்கள் துளியளவும் ஏற்றுக்கொள்வதில்லை. "பசு ரட்சகர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டு கடை திறந்திருப்பவர்கள் என்னை அதிகம் கோபப்படுத்தியுள்ளனர்". "பலர் இரவில் சமூக விரோதிகளாகவும், பகலில் பசு பாதுகாவலர்களாகவும் வேஷம் போடுவதை நான் பார்க்கிறேன்". (2016, ஆக 6) என பிரதமர் நரேந்திர மோடி பசு ரட்சகர்களை எச்சரித்த பிறகு இந்த படுகொலைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. இது மோ(ச)டி வேஷம் தரித்த பேச்சு என்பதை தொடரும் படுகொலைகள் அம்பலப்படுத்துகின்றன. 
    இவரது கட்சி ஆளும் மாநிலங்களில்தான் அவர் குறிப்பிடும் படுகொலைகள் நடக்கின்றன. அதற்கும் மேலாக இவரது தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஎச்பி அமைப்புகள் இவரது இந்த போலி கூற்றைக்கூட ஏற்கவில்லை. "பிரதமர் சொன்னது எங்களுக்கு பொருந்தாது. மோடி பிஜேபி-யில் இல்லாத காலத்திலிருந்து நாங்கள் இந்த பசு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே இந்த குற்றச்சாட்டு எங்களை கட்டுப்படுத்தாது" என்று விஎச்பியின் பசு ரட்சகர்கள் பிரிவு தலைவர்களில் ஒருவரான உக்கம்சிங் சாவ்லா அறிவித்துவிட்டார் (2016, ஆக 8). "மோடி இப்படி பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். அவர், "பசு ரட்சகர்கள் நடத்தும் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட பிரச்சனை. நிர்வாக நடவடிக்கை சார்ந்தது. இதில் பிரதமர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" (ஆக 7, 2016) என்றும் கூறியுள்ளார். 2014-ம்ஆண்டு மேமாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பாக மோடி கலந்துகொண்ட கூட்டங்களில் “மோடிக்கு வாக்களியுங்கள் பசுவை வாழ வையுங்கள்” “பசு பாதுகாக்கப்பட்டால் நாடு பாதுகாக்கப்படும்” என்று பாஜகவின் உட்பிரிவான பசுமுன்னேற்ற செல்(உடிற னநஎநடடியீஅநவே உநடட) பிரச்சாரம் செய்தது. இப்போது பிரதமர் சொல்வதை அவர்கள் எப்படி கேட்பார்கள். 
                    
    நாட்டில் நடைபெற்று வரும் கூட்டுக்கொலை அல்லது அடித்துக்கொல்லப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக மோடி இதுவரை மூன்று முறை பேசிஉள்ளார். அதற்கான காரணம் உள்ளது. சில சம்பவங்கள் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் பொதுவான செல்வாக்iக் கேள்விக் குள்ளாக்கியபோது சம்வங்களை கண்டிக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் பொதுவான தளத்தில் நாடக நடிகர் போல் தனது வசனத்தை மோடி ஒப்புவித்தார். 

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஹாரில் தேர்தல் நடைபெற இருந்தது. செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தாத்ரி கிராமத்தில் முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டபோது நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு பிஹார் தேர்தலை பாதிக்கும் என்பதால் “ இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து ஏழ்மைக்கு எதிராக போராட வேண்டும்” என்று பேசினார்.

2016-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் குஜராத்தில் உனா மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காக நான்கு தலித் இளைஞர்களை கட்டி வைத்து தாக்கியது வீடியோ காட்சியாக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலக அளவில்கூட  எதிர்ப்பை கிளப்பியது.  பாஜகவின் பிம்பத்தை சிதைத்தது.  எனவே மோடி சற்று கூடுதல் நடிப்புடன் பேசினார்.“ சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட ஒருசிலர் இரவு முழுவதும் அவ்வாறு செய்தததை நான் பார்த்தேன். அந்நாளில் அவர்கள் பசுபாதுகாவர்கள் என்ற ஆடையை போர்த்தி இருந்தார்கள்” என்று பேசினார். மேலும் “ அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், தாக்கவேண்டும் என்றால் என்னை தாக்குங்கள் எனது தலித் சகோதரனை தாக்குவதை நிறுத்துங்கள், நீங்கள் சுடவேண்டும் என்றால் என்னை சுடுங்கள் எனது தலித் சகோதரனை சுடாதீர்கள் , இந்த விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும்” என்று பேசினார். ஆனால் இந்த விளையாட்டு நிறுத்தபட வில்லை. மேலும் கூடுதாலக நடக்க ஆரம்பித்தது.

மீண்டும் மூன்றாவது முறையாக 2017-ம் ஆண்டு  ஜுன் 29ம் தேதியன்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சாத்தான் வேதம் ஓதியது போல் அகிம்சையை பற்றி அற்புதமாக பேசினார்.  “இந்தியாவில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிபோக்குகள் பற்றிய எனது வலியையும் கண்டனத்தையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நாடு ஒரு எறும்பைக்கூட கொன்றதில்லை. இந்த நாடு சுற்றித்தெரியும் தெருநாய்களுக்குகூட உணவளித்த நாடு. கடலில் உள்ள மீன்களுக்கு உணவளித்த நாடு. இந்த நாட்டில்தான் பாபு என்ற மனிதர் நமக்கு அகிம்சையை போதித்தார்.  நமக்கு என்ன நேர்ந்து விட்டது? இந்த நாடு பாபுவின் நாடு தானா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ” என்று பேசிமுடித்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு அடுத்த நாள் ஜுன் 30-ம் தேதி ஜுனைத் என்ற 16 வயது நிரம்பிய இளைஞன் ரயிலில் அடித்துக்கொல்லப்பட்டான். இப்படி பேசும் பிரதமர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தாத போது இந்த பேச்சுக்கள் அனைத்தும் பகல்வேஷம் என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அது மட்டுமல்ல தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மட்டும் பிரித்து பேசி முஸ்லிம் மக்களை தனிமைப்படுததும் பணியையும் சாதுரியமாக செய்தது வருகிறார்.

வன்முறை புதியதல்ல... நோக்கம் புதிது, படை புதிது.

இந்தியாவில் கும்பல் வன்முறை புதியதல்ல. வரலாற்றில் பல காலங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. குறிப்பாக சூனிய வேட்டை என்ற பெயரில் கிராமங்களில் பிள்ளை பிடிக்க வந்துள்ளார்கள் என்று அடித்துக் கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதே போன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மந்திரம், தந்திரம் செய்யக்கூடியவர்களை பல  நேரங்களில் அடித்து சாகடித்துள்ளனர். இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை சுமார் 2097 பேர்கள் 12 மாநிலங்களில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக நடைபெற்றுள்ளது. மற்றொரு விதம் தலித்துகளுக்கு எதிராக பாலியல் வன்முறை, கொலைகள் மற்றும் இதர தாக்குதல்கள் போன்ற கும்பல் வன்முறை நடந்துள்ளது. வேறொரு வகையில் வகுப்புவாத காட்டுத் தீ பரவியபொழுது 1984 ல் சீக்கியர்களுக்கு எதிராகவும், 2009 ல் காந்தமஹாலில் கிறிஸ்த்துவர்களுக்கு எதிராகவும், 2002 ல் குஜராத்தில், 2013 ல் முசாபர் நகரில், 2015 ல் பக்ஷா போன்ற இடங்களில் கும்பல் வன்முறை நடைபெற்றது. ஆனால் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருந்தது. 

தற்போது பாஜக ஆட்சியில் பிரவாகம் எடுத்துள்ள கும்பல் வன்முறை மாறுபட்ட வடிவமும், குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டதாக உள்ளது.  பெரும்பாலான வன்முறைகள் பசு குண்டர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. 2014 மோடி ஆட்சிக்கு வந்தபிறகு பசுபாதுகாப்பு சட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், திருத்தங்கள், கெட்டித்தன்மை ஆகியவற்றின் விளைவால் இந்த வன்முறைகள் அரங்கேறி உள்ளது. பசு பாதுகாப்பு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களில் 86 சதவீதம் முஸ்லீம்கள் ஆவார்கள்.  பெரும்பாலான படுகொலைகள் தவறான குற்றச்சாட்டுகளால் நடந்துள்ளது. 

இந்த வன்முறையின் மற்றொரு வடிவம் இந்துத்துவா அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டுள்ளன. கோயில் ஒலிப்பெருக்கி மூலமாகவோ இதர தகவல் தொடர்பு சாதனங்கள்  மூலமாக குறிப்பிட்ட பகுதியினரை திரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விஷ்வ இந்து பர்ஷித், பஜ்ரங் தள், கௌ ரக்ஷா தள், கௌ ரக்ஷா சமிதி ஆகிய அமைப்புகளால் நடைபெற்றுள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மறுபுறத்தில் ஆட்சியாளர்களின் நேரடி ஆதரவு இந்த வன்முறையாளர்களுக்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வார்த்தைகள் அளவில் இந்த வன்முறைகளை கண்டித்தாலும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபொழுது வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவரது அரசு இதற்காக நிதி ஒதுக்கீடுகளை கூட செய்தது. 2011 ஆம் ஆண்டு குஜராத்தில் கௌசேவா மற்றும் கௌசார் விகாஸ் வாரியத்திற்கு (ழுழுஏக்ஷ) 1.5 கோடியிலிருந்து 150 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்தார். 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் 1394 பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு ரூ.75 லட்சம் அளவில் வெகுமதி வழங்கியுள்ளார். 1999 ல் அமைக்கப்பட்ட இந்த வாரியம் 2010 வரை செயல்படவில்லை. மோடி 2011 ல் பெருந்தொகை ஒதுக்கீடு செய்து புத்துயிரூட்டினார். பசுவை எடுத்துச் சென்றாலோ அல்லது வதை செய்வதை பசு குண்டர்கள் பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.500 வெகுமதி அளிக்கப்பட்டது. சிறந்த பசு பாதுகாவலர் என்ற பட்டமளித்து ரூ.25000 வெகுமதி கொடுத்தார். அரியானா அரசு கௌவான்ஷ் சன்ரக்ஷான் அண்டு கௌசம்வதன் சட்டம் 2015 ஐ கொண்டு வந்து அதன் மூலமாக பசு குண்டர் படைகளை உருவாக்கியது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தனர். 2017 ஆம் ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 1900 பேர்கள் பசு பாதுகாவலர்கள் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். 

இந்தியாவில் நடைபெற்று வரக்கூடிய வன்முறைகளின் தன்மைகள் மாறுபடுகிறது. கலவரங்கள் நடப்பதும், தனிநபர் குரோதங்களால் நடைபெறக்கூடிய வன்முறைகளில் பல  நேரங்களில் கும்பபல் வன்முறைகள் தலை தூக்குவது தனி ரகம். ஆனால் பாஜக ஆட்சியில் வந்த பிறகு நடைபெறக்கூடிய வன்முறைகள் கும்பல் ஆட்சி வன்முறைகளாக உருவம் எடுத்துள்ளது. சிறுபான்மையினரை அழிப்பது, ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், நிதி உதவியும் பெறுவது, அமைப்புகளை உருவாக்கி அடையாள அட்டை பெற்றுக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது புதிய வகையிலானது.  பெரும்பான்மை மக்களின் உணர்வு என்ற போர்வையில் இந்த வன்முறைகளை முடிவில்லாமல் நடத்தி கொண்டே வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் நடைபெறுகிறது என்பதற்கு பீஹார் சிறந்த உதாரணம் ஆகும். லாலு-நிதிஷ் கூட்டணி ஆட்சியில் பசுவின் பெயரால் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால் நிதிஷ் கட்சிமாறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் பசுவின் பெயரால் தாக்குதல் துவங்கிவிட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று பிஹார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் டுமா கிராமத்தில் முகமது சஹாபுதின் என்பவர் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று விஎச்பி தலைமையில் 50 பேர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 4 பேர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் மீது “திட்டமிட்டு பெரும்பான்மை மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக” வழக்கு தொடுத்துள்ளது. தாக்கியவர்கள் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்றால் அப்படி எந்த புகாரும் வரவில்லை என்று காரணம் கூறுகின்றனர். நிதிஷ் கட்சிமாறி பாஜகவுடன் கூட்டு வைத்த கடந்த 15 நாட்களில் இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பிஹாரில் கடந்த 2010-லிருந்த இப்படி எந்த சம்பவமும் நடைபெற்றதில்லை. ஆட்சியாளர் ஆதரவில்லை என்றால்  பசு குண்டர்கள் வாலை சுருட்டி இருக்கின்றனர். அதிகாரம் கையில் வந்தால் அடித்துக்கொல்கின்றனர். 

இந்த கும்பலாட்சி வன்முறைகள் பல இடங்களில் காவல்துறையின் ஆதரவுடனோ அல்லது அவர்களின் பங்களிப்புடனும் நடந்துள்ளதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. சம்பவ இடத்திலேயே படுகொலைகள் நடந்த பிறகும் தண்டனை சட்டம் 302 என்ற குற்றப்பிரிவை பதிவு செய்வதே இல்லை. பொது மக்களின் போராட்டத்திற்கு பிறகே சில இடங்களில் பதிவு செய்கிறார்கள். பெரும்பாலான மரணங்களில்  பாதிக்கப்பட்டவரின் மரண வாக்குமூலத்தில் குற்றவாளிகளின் பெயர்கள் உட்பட தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் அடையாளம் தெரியாதவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்கின்றனர். பரிதாபாத், பானிபட், யமுனா நகர், அகமதாபாத், உ.பி போன்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்கு உதாரணம் ஆகும். பல இடங்களில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், மரணமடைந்தவர்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்கின்றனர். பசு திருடர்கள், பசு வதையாளர்கள், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தார்கள், விலங்குவதை சட்டத்தை  மீறியவர்கள், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தியவர்கள் என்ற பிரிவில் பதிவு செய்தனர். இதுவரை நடைபெற்றுள்ள இந்த கும்பலாட்சி வன்முறை படுகொலைகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை. வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கூட்டத்தினரால் நடத்தப்படக்கூடிய நிகழ்வாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஊடகம், நீதித்துறை பாராமுகம்

  நமது நாட்டின் “ஜனநாயகத்தின் கண்காணிப்பாளன்”(றயவஉhனடிப டிக னநஅடிஉசயஉல) என்று பெருமிதபட்டுக்கொள்ளும் ஊடகங்கள் இந்த கும்பலாட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கவலைப்படுவது இல்லை என்பதைவிட இருட்டடிப்பு செய்கின்றனர். போலி தேசவெறியை தூண்டும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மை விஷயங்களை மறைக்கும் அநீதியை செய்துகொண்டுள்ளன.  

       மறுபுறத்தில் நீதித்துறையும் இதுபோன்ற சம்பவங்களில் போதுமான தலையீடு செய்வதில்லை. துடிப்பாக செயல்படும் நீதிதுறை (தரனiஉயைட யஉவiஎளையஅ) என்று அழைத்துக்கொள்ளும் இக்காலத்தில் பல தனிநபர் விஷயங்களில் செய்திகள் மூலம் தானாக தலையிட்டு  நடவடிக்கை எடுக்கும் நீதித்துறை இதுபோன்ற கும்பல் வன்முறைகளில் தலையிடுவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அஹமதி 

“செயல்துடிப்புள்ள நீதித்துறை என அதிகம்பேசும் இக்காலத்தில்  வகுப்புக் கலவரங்கள், துவேஷ பேச்சுக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் குறிவைத்து தாக்கப்படும் நிகழ்வுகளின் வாசலுடன் ஏன் இந்த நீதித்துறை நின்றுவிடுகிறது” 
என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது நினைவுகூறத்தக்கது.

    பசுபாதுகாப்பு என்பதில் ஆரம்பித்து  மதநிந்தனை, காதல், என்று பரவி இப்போது சந்தேகத்தினி பெயரிலேயே அடித்துகொள்வது அன்றாட நிகழ்வாக உள்ளது. இவை அனைத்தும் சட்டத்தின் ஆடசியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையிலேயே நடைபெறுகிறது. அனைத்துக்கும் பெருபான்மையினரின் நம்பிக்கை என்ற வகையில் சட்டரீதியாக நியாயப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச நெடி இந்த வார்த்தைகளில் வீசுகின்றது.  அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங் 

“அடால்ப் இட்லர் ஜெர்மனில் என்னசெய்தாரோ அவை அனைத்தும் சட்டபூர்வமானது என்றும் ஹங்கேரி விடுதலை  போராட்ட வீரர்கள் தங்களது விடுதலைக்காக என்ன செய்தார்களோ அவை அனைத்தும் சட்டவிரோதமானது  என்றும் பார்க்கப் பட்டது. இட்லரின் ஜெர்மனியில் ஒரு யூதருக்க உதவிசெய்வது அல்லது ஆறுதல் கூறுவதுகூட சட்டவிரோதம் என்றனர். இருந்தாலும் அக்காலத்தில் நான் ஜெர்மனியில் வாழ்ந்திருந்தால் நிச்சயமாக எனது யூத சகோதரனுக்கு உதவி யிருப்பேன் ஆறுதல் கூறி இருப்பேன். இவை அனைத்தையும் நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.” 
(பெர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதம்)

இங்குமட்டுமல்ல.. சனாதன நீட்சியெங்கும்

எங்கெல்லாம் மதம் பழமைவாதம் அரசியல் ஆதாயத்திற்கு தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் மதம் பொருளாதாhத சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிறதோ உழைப்பாளி மக்களும் அவர்களது சிந்தனையாளர்களும் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நமது அண்டை நாடான பாகிஸ்தான் இதற்கு விதிவிலக்கல்ல.  பாகிஸ்தானில் கைபர்-பதுன்கவா நான்கு முக்கிய ஆட்சி பிரதேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள கான் அப்துல் வாலி கான் பல்கலை கழகத்தில் இதழியல் படித்து வந்த மாஷெல் கான் என்ற மாணவன் 50-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கடைசியாக தலையில் சுட்டுக்கொன்றனர். மதம் பற்றி விமர்சன அடிப்படையில் பேசியதால்   தெய்வநிந்தனை குற்றம் சுமத்தி கொலை செய்தனர். 

இதே போன்று பாகிஸ்தாள் லாகூருக்கு அருசில் கோட் ராதா கிஷன் தாலுகாவில் ஷாமா மற்றும் ஷஷாத் மசி என்ற கிறிஸ்துவ தம்பதியினர் தஞ்சம் கேட்டு வந்தனர். அவர்களை தெய்த்திற்கு விரோதமானவர்கள் என்று குற்றம் சுமத்தி 100-க்கும் மேற்பட்ட கும்பல் சேர்ந்து 10அடி குழியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர். 

1987 முதல் 2015 வரை பாகிஸ்தானில் தெய்வநிந்தனை என்ற பெயரில் 62 பேர்கள் நடுவீதியில் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக இதுவரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இதே காலத்தில் 1462 பேர்கள் தெய்வநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர் என்று சமூகநீதி மைய்யம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 730 முஸ்லீம்கள், 501 அகமதியர்கள், 205 கிறிஸ்துவர்கள், 26 இந்துக்கள் ஆவார்கள். தெற்காசிய நாடுகளில் பல முஸ்லீம் அமைப்புகள் இதுபோன்ற அடித்துக்கொல்லும் நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.

வகுப்பசிந்தாங்களை கொண்டுள்ள அமைப்பள் எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அங்கெல்லாம் அனைத்துவிதமான சுதந்திரங்களும் தனிமனித உரிமைகளும் தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவின் 71-ம் ஆண்டு  சுதந்திர தினத்தன்று கட்டுரை எழுதிய (டைம்ஸ் ஆப் இந்தியா) பாஜக செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் வாஜ்பாய் அரசில் பாஜகவில் இருவர் மட்டுமே அரசியல் சட்டபதவியில் இருந்தனர் (வாஜ்பாய், பைரோன் சிங் கெய்க்வாட்), தற்போது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் என அனைத்து அரசியல் சட்ட பதவிகளும் எங்களிடமே உள்ளது என்று எழுதியுள்ளார். இதன் அர்த்தம் விரைவில் இந்துராஷ்டிரா அறிவிக்கப்படும் என்பதாகும்.  எனவே இன்றைய தேவை இந்த குடியாட்சியையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. பாசிசம் தனது கோரமுகங்களை வேகமாக வெளிப்படுத்தி வருகிறது. தடுக்கப்பட வேண்டிய ஆகப்பெரும் கடமையாக ஜனநாயக சக்திகள் முன் உள்ளது. 
- அ.பாக்கியம்
                                                                                                                                                                       bakkiam1960@gmail.com
மார்க்சிஸ்ட் மாத இதழ் அக்டோபர்.2017

       

திங்கள், அக்டோபர் 02, 2017

ஓசான்குளம் கிருஷ்ணன்: களச்செயற்பாட்டின் மறுபெயர்


                   கடந்த 29.09.2017 அன்று ஓசாங்குளம் தோழர்.கே.கிருஷ்ணன் தனது 68-வது வயதில் மரணமடைந்தார். நான் அண்ணாநகர் கமிட்டியில் செயல்பட்டபோது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தனது சிறு வயதிலேயே சென்னைக்கு வந்தவர். சற்று உயரம் குறைவான  சிறுத்த உடல், எப்போதும் மடித்து கட்டிய  வேஷ்டி, நரைத்தமுடி,  கள்ளங் கபடமற்ற சிரித்த முகம் இதுதான் அவரது தோற்றம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை புல்லாபுரத்திற்கு பின்புறம் கட்டப்பட்டடுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் டீக்கடை நடத்திவந்தார். 1990-ம் ஆண்டு முதல் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடைவைத்திருப்பவர்கள் கட்சியில் அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அதுவும் டீக்கடை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் இவர் கடையையும் நடத்திக்கொண்டே கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வார். கிளைக்கூட்டத்தை இவர் தவிர்ப்பதே இல்லை.கிளைக்கூட்டத்தில் அரசியல் விவாதங்களை நம்பிக்கை அளிக்கும் வகையில் புதியவர்கள் பயனடையும் வகையிலும் பேசுவார். 

     ட்சியின் லெவி செலுத்துவதில் முன்னுதாரணமாக இருப்பார். மாதாமாதம் லெவிசெலுத்துவார். உடல்நிலை சரியில்லாதபோதும் இந்து ஆண்டு டிசம்பர்வரை லெவி செலுத்தியிருப்பதாக பகுதிக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். இங்கு குறிப்பிட பட வேண்டிய முக்கிய அம்சம் இவரது உயிரோட்டமான  மக்கள் தொடர்பு. கட்சி நிதிவசூல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வருடந்ததோறும் சுமார்  ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் டீக்கடையில் இருந்துகொண்டே நிதிவசூல் நடத்துவார். தொகை என்பதைவிட அவர் சந்திக்கும் அனைவரிடமும் நிதிவாங்கிவிடுவார். அவரது கடையில் ஒரு முறைக்குமேல் டீக்குடிக்க வந்தால் அவரிடம் கண்டிப்பாக நிதிகேட்டிருப்பார். டீ போட்டுக்கொடுக்கும் போதே ரசீது புத்தகத்தையும் நீட்டிவிடுவார்.பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய்வரைதான் ஒருவரிடம் வசூலிப்பார். அங்கு வருகின்றவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். சுமார் 300 முதல் 400 பேர்கள் வரை உள்ளுரிலேயே வசூலித்துவிடுவார். உடனடியாக ரசீதை கொடுத்துவிடுவார்.நாங்கள் பலநேரங்களில் அவரது கடையில் நிற்கிறபோது பலர் நிதிகொடுத்துச் செல்வதை பார்த்துள்ளோம். 

            இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் அவர் எப்போதும் ஒரு பெரும் வேலையாக பேசாமல் இயல்பாக செய்தார் என்பதுதான் குறிப்பிட வேண்டியது  என்பதைவிட கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. கடையில் இருந்து கொண்டே முறைசாரா சங்கத்தை அமைத்து வாரிய உதவிகளை வாங்கிக்கொடுத்து வந்தார். ஓசான் குளத்தில் பல குழந்தைகள் படிக்க வைக்க கட்சிவேறுபாடின்றி பலரின் உதவியை பெற்று படிப்புக்கு உதவினார். அருகாமையில் உள்ள பூபதிநகர் உட்பட சில இடங்களில் வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு காரணமாய் இருந்தார். அதுமட்டுமல்ல அங்குள்ள கட்சிக்கிளையை செயல்படுத்திக்கொண்டே இருந்தார். பொறுப்புக்களில் இளைவர்களை முன்னிருத்தி தான் எந்த பொறுப்பையும் ஏற்காமல் அதற்கெல்லாம் மேலாக பணியினை செய்தார். 

       லட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஆக்கப்பூர்வமான பணியினை மேற்கொள்வது என்பதற்கு ஆசானாக தோழர்.கிருண்ன் இருந்தார். அவரது டீக்கடை உள்ளுர்மக்களின் உதவிசெய்யும் அலுவலகமாகவும், அவர் உதவும் கரங்களாகவும் வாழ்ந்தார் என்பதற்கு அவரின் இறுதியாதிரையே சாட்சியமாக அமைந்தது. கருத்தாளர்களுக்கே இன்று செயற்பாட்டாளர் என்ற அடைமொழி கொடுக்கப் படுகிறது. ஆனால் உண்மையில் களச்செயற்பாட்டாளர் என்பதற்கு மறுபெயராக தோழர்.கிருஷ்ணன் வாழ்ந்தார். 
பாக்கியம் 
30.09.2017

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...