Pages

திங்கள், மார்ச் 07, 2016

கண்ணாமூச்சி ஏனடா? கருப்புப் பணம் எங்கடா?

ஏ.பாக்கியம்
நம்ம புள்ள நம்ம தொழிலை கத்துக் கலையே என்று பெத்த அப்பனுக்கு பெரும் கவலை...!

அரட்டியும், அடித்தும் சொல்லிக் கொடுத்துப் பார்த்தான். பையனுக்கு ஏறிய பாடில்லை.,,,

கெஞ்சியும் பார்த்தான் கேட்கவில்லை.,,,

வேறு வழியில்லை பையனை ஆத்துல அமுக்கிவிடலாம் என கருதி தோளில் சுமந்து சென்றான்.,,

கழுத்தளவு தண்ணீரில் நின்று புள்ளையை மூழ்கடிக்க நினைத்த போது,,,,

பையன் இரு கைகளையும் தண்ணீரில் அடித்து, யப்பா என்று கத்தினான்,,,

என்னடா மகனே ?

ஒரு மீனை புடிச்சிட்டேன் !

எங்கே காட்டு !

சுட்டு சாப்பிட்டேன்.

ஆஹா நீதான்டா அருமை மகன். எங்கே... பொய்த் தொழிலை நீ தொ லைத்துவிடுவாயோ என்று பயந்தேன் என்றான். அப்பனுக்கு அளவற்ற மகிழ்ச்சி! நம் புள்ள இனிமே பெரிய ஆளுதான் என கரையில் இறக்கிவிட்டான்.அப்படிப்பட்ட புள்ளதான் வளர்ந்து இப்ப நம் நாட்டு நிதி அமைச்சராகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

                    அந்தளவிற்கு பொய்த் தொழிலை கூச்சநாச்சமின்றி செய்துகொண்டிருக்கிறார் அருண் ஜெட்லி. கருப்பு பண விவகாரத்தில் மத்தியநிதி அமைச்சர் ஜெட்லி தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாடிக் கொண் டிருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது 13 முறை கருப்புப் பணம் என்ற வார்த்தையை பயன் படுத்தினார். இந்திய பொருளாதாரத் தை நசுக்கி சீர்குலைக்கும் பணியை இந்த கருப்புப் பணம் செய்கின்றது எனஅருண்ஜெட்லி அங்கலாய்த்தார். கருப்புப்பணத்தை மீட்டெடுப்போம், பதுக்கிய வர்களை தண்டிப்போம் என்று சூளுரைத் தார். இதற்காக தனிச்சட்டம் இயற்ற வேண் டும் என்ற அறிவார்ந்த ஆலோசனை யையும் முன்வைத்தார்.ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச் சாரத்தின்போது பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருக்கும் கருப்புப்பணத்தை திருப்பிக் கொண்டு வந்தால் ஒவ்வொரு ஏழைக்கும் ரூ.15 லட்சம் முதல்ரூ.20 லட்சம் வரை கொடுக்கலாம் (2013, நவம்பர் 7) என்று பேசினார். அந்த வாய்ச்சொல் வீரரின், நடிப்புச் சுதேசி யின் சொல்லாடலை பலரும் சிலாகித்த னர். வெற்றிபெற்று நாடாளுமன்ற படிக் கட்டை முத்தமிடும் வரை மோடியின் இந்தகருப்புப் பண பேச்சு தொடர்ந்தது. நாடாளு மன்றத்தை அவர் முத்தமிட்ட போதே கருப்புப் பண பேச்சை ஆழக் குழிதோண்டி புதைத்துவிட்டார்.

                  கருப்புப் பண விவ காரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பிறகு, கள்ள மவுனத்தைக் கலைத்த பாஜக தலைவர் அமித்ஷா, அது வெறும் அரசியலின் வழக்கமான உணர்ச்சி வெளிப்பாடுதான், உண்மையல்ல (2015 பிப்ரவரி 5) என்றுவெட்கமில்லாமல் அறிக்கை விட்டார்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா... என்று கவுண்டமணி காமெடி செய்ததற் கும், அமித்ஷா அறிக்கைவிட்டதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலி யுறுத்தியதால், வேறுவழியின்றி அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் கருப்புப் பணச் சட்டம் (க்ஷடடிஉம அடிநேல ரனேளைஉடடிளநன கடிசநபைn inஉடிஅந யனே யளளநவள - யனே iஅயீடிளவைiடிn டிக வயஒ யஉவ - 2015) கொண்டு வந்தார். கருப்புப் பணச் சட்ட விதியின்படி ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கலாம்.

கத்தி வந்தது... வால் போனது... டும்! டும்! டும்!

               சட்டம் வந்தது. ஆனால் கருப்புப்பணம் வந்ததா..? என்றால் இல்லை. இருந்த பணத்தை எடுத்துச் சென்ற லலித் மோடிக்கு சுஷ்மா உதவி(?) புரிந்தார். வசுந்தரராஜே தனது மகன் மூலம் வர்த்த கம் செய்தார். இவர்கள் கருப்புப் பணத் திற்கு காவலாக நின்றனர்.. பாதுகாப்பு கொடுத்தனர்.கருப்புப் பணச் சட்டம் கொண்டு வந்த தற்காக 644 பேரின் பட்டியலை வெளியிட்டனர். இந்த பட்டியலில் உள்ள வர்கள் மூலம் ரூ.4,164 கோடி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப் படுத்தினர். இவற்றிற்கு 30 சதவீதம் வரி, 30 சதவீதம் அபராதம் என ரூ. 2428 கோடி வரவாகி உள்ளது. மோடி சொன்னது போல், தலைக்கு 15 லட்சம் ரூபாய் அல்ல..20 ரூபாய்கூட தேறவில்லை.

         இதுவும்கூட ஐமுகூ அரசு காலத்தில் ரூ.6,500 கோடி கருப்புப்பணம் இருக்கும் என்ற அனு மானத்தின் தொடர்ச்சியாகத்தான் நடந்தது. தலைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கிடைக்கும் என பேசியதுஏமாற்று வேலை என்பதற்கு அமித்ஷா ஏற் கனவே ஒப்புதல் அறிக்கை கொடுத்து விட்டார். இதில் இன்னும் ஒரு கேலிக்கூத்து, ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் பட்டியலில் உள்ள 644 பேர்களும் உண்மையான கருப்புப் பண பேர்வழிகள் அல்ல. சிறு வியாபாரிகள், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள். டாக்டர்கள் என்ற அள வில் உள்ளவர்கள்.

கண்ணா... ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

                   நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி, அத்வானி பேசிய அள விற்கு, வெளிநாட்டில் கருப்புப்பணம் இல்லை என்று பாஜகவினர் அந்தர் பல்டி அடித்தனர். இருந்தாலும் நிதி அமைச்சர் ஜெட்லி 500 பில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பீடு செய்தார். இந்த பணம் நம்நாட்டிற்கு வந்துவிட்டது என்று இப்போது பலர் கருத்து தெரி வித்துள்ளனர். இனிமேல் கருப்புப் பணத்தை கொண்டுவர முடியாது என்ற னர். 2ஜி மற்றும் நிலக்கரி சுரங்க ஊழல் பணம்தான் வெளியேறிய அதிக தொகை என்று மதிப்பீடு செய்தனர். இந்த ஊழல்பணம், நேரடி அந்நிய முதலீடு (குனுஐ) மூல மும், அந்நிய நிதிநிறுவன முதலீடு (குஐஐள) மூலமும் மற்றும் போலி ஏற்றுமதி மூலமும், இதர வழிகளிலும் இந்தியாவிற்கு வந்துவிட்டது. இதில் குறிப்பாக நேரடி அந்நிய முதலீடு வரவில் மிகப்பெரும் சந்தேகம் உள்ளது என மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய (ஊநவேசயட க்ஷடியசன டிக னுசைநஉவ கூயஒநள) முன்னாள் சேர்மன் ஆர்.பிரசாத் தெரிவித்துள்ளார். கடந்த 19 மாதங்களில் இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இது குறைந்த போது நம் நாட் டிற்கு வந்தது இந்த கருப்புப் பணம் தான்.மேலும், நேரடி அந்நிய முதலீடு செய்த நாடுகள் பெரும் தொழில்வள நாடுகள் அல்ல.

                                மாறாக சிறிய நாடுகள் ஆகும். ஏப்ரல் 15 முதல் செப் 15, 2015 வரை, 16.6 பில்லியன் டாலர் (ரூ. 1.06 லட்சம் கோடி) அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. இதில் 62 சதம் மிகச்சிறிய நாடான சிங்கப்பூர், மொரீஷியஸ் நாடு களிலிருந்து வந்துள்ளது. மற்றொரு நாடு சைப்ரஸ் ஆகும். இந்த நாடு களிலிருந்து வந்த முதலீடு நமது நாட் டிலிருந்து சென்ற கருப்புப் பணம் என அனுமானிக்கப்படுகிறது.மத்திய குற்றப்பிரிவு கமிஷனர் கே.வி. சவுத்ரி சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று வரி ஏய்ப்பு பற்றி விசாரணை நடத்தினார். அவர்,மேற்கண்ட நாடுகளிலிருந்து கருப்புப்பணம் இந்தியாவிற்கு வந்துள்ளதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
    
              இந்த கருப்புப்பணம் வருவதற்கு இந்தியச்சட்டம் இடம் தருகிறது என்ற கருத்தையும் சேர்த்தே அவர் சொல்லியுள்ளார்.கொல்கத்தாவைச் சேர்ந்த முன்னாள் வருமான வரித்துறை தலைமை அதிகாரி தேவதயாள், இன்னும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் அந்நிய நாட்டில் உள்ளது. அவர்கள் மீது அரசு கைவைக்காது. சுமார் 80 நாடுகளில் கருப்புப் பணம் இருக் கிறது. இதில் சில நாடுகள் மட்டுமே இந்தியா வுடன் தகவல் பரிமாற்றத்தில் ஒப்பந்தம் செய்து தகவல் தந்துள்ளன. மற்ற நாடு களிலிருந்து தகவல் பெற முடியாது என்று கூறியுள்ளார்.

                          கருப்புப் பணத்தில் லட்டு தின்ன ஆசையா என்பது போல் இந்திய செல் வம் கொள்ளை போக ஐ.மு.கூட்டணி அரசு வழிவிட்டது. பாஜக அரசோ இரண்டு லட்டு தின்ன ஆசையா என்பதுபோல், வெளியேறிய பணத்தை கொண்டு வரவில்லை. கொல்லைப்புறமாக கருப்புப் பணம் வந்திட வரிச்சலுகை கொடுத்து உள்ளது. வரி 30 சதவீதம், அபராதம் 30சதவீதம் என்பதும், 10 ஆண்டு தண்டனை என்பதும் அமலாகாமல் கருப்பாக சென்று, கருப்பாக (விடாது கருப்பு?) உள்ளே நுழைகிறது. அதற்கு ராஜமரியாதை அளித்து வெள்ளையாக மாற்றும் அருண் ஜெட்லி வகையறாக்கள் இந்தியாவில் வெறும் 2 லட்சம் ரூபாய் பணத்தை செலவுசெய்ய பான்கார்டு தேவை என்று உத்தரவு போடுகின்றனர்.

என்னே கொடுமை!
தீக்கதிர் 7.3.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...