Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

நோய்நாடி…..


     இந்தியாவில் வந்த நோயை தீர்க்க மருத்துவமனை சென்று/ இருந்த வாழ்வை மட்டுமல்ல எதிர்கால தலைமுறையையும் நடுவீதியில் நிறுத்தும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.  தனியார் மருத்துவ மனைகள் பொது மருத்துவமனைகளைவிட பலமடங்கு பணம் பறிக்கின்றனர்.
 
  1. புற்று நோய்க்கு பொதுமருத்துவனையைவிட முன்று மடங்கு தனியா                    மருத்துவனையில் செலவாகிறது. 
  2. இதய அறுவை சிகிச்சைக்கு இதே அளவு செலவாகிறது.
  3. கிராமபுறத்தில் பாலியல் மற்றும் சிறுநீரக பிரச்சனைக்கு பலமடங்கு                       செலவாகிறது
.4. சாலைவிபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு தனியாரிடம்                  பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

       ஒரு குடும்பம் தங்களத வருமானத்திலும், சேமிப்பிலும் பெரும்பகுதியை மருத்துவத்திற்காக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.கிராமபுறத்தில் 67.8 சதம் வருமானம் அல்லது சேமிப்பிலிருந்தும், 24.9 சதம் கடன் வாங்கியும் 0.8 சதம் சொத்துக்ளை விற்பனை செய்தும் 5.4சதம் நண்பர்கள் , உறவினர்கள் உதவி பெற்றும், 0.7 சதம் இதரவழிகளிருலும் செலவு செய்கின்றனர்.நகர்புறத்தில் இது முறையே 74.9 வருமானத்திலும், 18.2, கடன் வாங்கியும் 0.4, சொத்துக்ளை விற்றும் 5.0 மற்றவர்களின் உதவியுடன் , 1.3 இதர வழிகளிலும் செலவு செய்கின்றனர்.

     5 இந்தியர்களில் 4 பேர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டம் இல்லை.இந்திய கிராமபுறங்களில் 85.9 சதமான மக்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள் இல்லை. அரசு உதவியுடனான மருத்துவ காப்பீட்டில் 13.1 சதமும், வேலை அளிப்பவர் உதவியுடனான மருத்துவ காப்பீட்டில் 0.6 சதமும், உள்ளனர்.

       காப்பீட்டுக்கம்பெனிகள் மூலமாக 0.3 சதம் மட்டுமே மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இதுவே நகர்புறத்தில் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் 82 சதமும் அரசு உதவியுடன் 12 சதமும், வேலை அளிப்பவரின் உதவியுடன் 2.4 சதமும், கம்பெனிகள் மூலமாக 3.5 சதமும் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர்.


       அரசின் திட்டங்கள் அறிவிப்பு ஏட்டுடன் நிற்கவே செய்கிறது. தனியார் கம்பெனிகளும் அரசும் லாபம் தரும் துறையில் மட்டுமே முதலீடு செய்வதும் மற்றவை அறிவிப்பு செய்வதுமாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...