Pages

சனி, ஜனவரி 07, 2012

பேராயத்தின் வழித்தடத்தில் ஒரு பேரியக்கம்


.
ஏ.பாக்கியம்

                      இந்திய கம்யூனி°ட் கட்சி(மார்க்சி°ட்) தனது 20வது மாநாட்டை நோக்கி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் கட்சி மாநாட்டையும், சுதந்திர இந்தியாவில் 18 கட்சி மாநாடுகளையும் நடத்தியுள்ளது. 1920ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சி அமைப்பு உருவாக்கப்பட்டது. 1930ம் ஆண்டுதான் “செயல்மேடை” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது.

                          1934ம் ஆண்டுதான் மையப்படுத்தப்பட்ட கட்சி அமைப்பு உருவாக்கப்பட்டு கம்யூனி°ட் அகிலத்துடன் இணைக்கப்பட்டது. இதன் பிறகு 10 ஆண்டுகள் கடந்துதான் 1943ம் ஆண்டு மே 23 முதல் ஜூன் 1ம் தேதி வரை பம்பாயில் (மும்பை) முதல் அகில இந்திய கட்சி மாநாடு (காங்கிர°) நடைபெற்றது. மேற்கண்ட 23 ஆண்டுகளிலும், இவ்வியக்கம் பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற பெரும் வழக்குகளையும், எண்ணற்ற தாக்குதல்களையும் சந்தித்தது. பெரும்பாலான தொழில் நகரங்களிலும் கம்யூனி°ட் குழுக்கள் உருவாகின. வேலை நிறுத்தங்களும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களும் இக்குழுக்களால் நடத்தப்பட்டது.

                   அகில இந்திய தொழிற்சங்க அமைப்பும், மாணவர் அமைப்புகளும் உருவாகிட இக்குழுக்கள் முக்கிய பங்கினை வகித்தது. 1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அனைத்து மாநாடுகளிலும், அறிக்கைகளை கம்யூனி°ட் குழுக்கள் சமர்ப்பித்தது. பூரண சுதந்திரம், விவசாய புரட்சி ஆகியவற்றை வலியுறுத்துவதாக இந்த அறிக்கைகள் அமைந்தன. தடை செய்யப்பட்ட காலத்திலும், சதி வழக்குகள் புனையப்பட்ட காலத்திலும், விடுதலைப்போரில் வீறு கொண்ட பங்கினை தொழிலாளி, விவசாயிகள் தளங்கள் மூலமாக கம்யூனி°ட் குழுக்கள் செலுத்தியுள்ளன.


                இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம், இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வெடித்துக்கிளம்பிய பின்னணியில் முதல் அகில  இந்திய மாநாடு நடைபெற்றது. யுத்தமும் அதன் போக்குகளுமே மாநாட்டின் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. இந்த யுத்தம் “மக்கள் யுத்தம்” என்று சரியாகவே பாசிச எதிர்ப்பு போராட்ட முன்னணியுடன் இணைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது. தேசப் பாதுகாப்பிற்கான தேசிய அரசாங்கத்தை பெறுவதற்கு தேச ஒற்றுமை என்ற கொள்கையை உருவாக்கியது. நாடு முழுவதும் செல்வாக்கை பரப்பியது. வங்கப்பஞ்சம் நிவாரணப் பணிகளில் கட்சி மாபெரும் பங்காற்றியது. அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் நிலவிய முரண்பாடுகளை, தேச அரங்கில் நிலவிய முரண்பாடுகளுடன் இணைக்கத் தவறியதால், பல போராட்டங்களை வலுவிழக்கச் செய்தது.


               சுதந்திர இந்தியாவில் 1964 கட்சி பிளவுபட்டு இந்திய கம்யூனி°ட் கட்சி மார்க்சி°ட் உருவாகின்ற வரை 6 அகில இந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளது. இரண்டாவது அகில இந்திய மாநாடு 1948 பிப்ரவரியில் கல்கத்தாவில் கூடியது. இம்மாநாட்டில் அரசியல் கோட்பாடு மற்றும் சீர்திருத்தவாத  திரியை பற்றி என் இரு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வெகுஜன எழுச்சி நடைபெற்றகாலத்தில் மாநாடு கூடியது. தொழிலாளர், விவசாய பகுதிகளில் மட்டும் கட்சியின் செயல்பாட்டை நிறுத்தாமல், மன்னராட்சி மாநில மக்களின் இயக்கங்களை கட்சி வெகுவாக ஈர்த்தது. அதே நேரத்தில் இந்திய மக்கள் திரளின் மீது காங்கிர° கட்சியின் பிடிப்பையும், சம°தானங்களை இணைய வைக்கும் அதன் திறனையும் மாநாடு குறைத்து மதிப்பிட்டது. தவறான மதிப்பீட்டின் படி அமுல்படுத்திய கொள்கையால் கட்சி அமைப்புகள் சீர்குலைந்தன.எனவே அன்றைய உலகில் மதிப்பு மிக்க சோவியத் கம்யூனி°ட் கட்சியுடன் விவாதித்து ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டு அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 1951ல் அக்டோபரில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இந்த ஆவணம் நிறைவேற்றப்பட்டு 1953ல் மதுரையில் நடைபெற்ற மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


                    சில ஆண்டுகளிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராத நிலை உணரப்பட்டது. திட்டத்தில் கூறப்பட்ட புரட்சியின் கட்டமோ, நீண்டகால நடைமுறைத் தந்திரம், உடனடியான நடைமுறைக் கொள்கையைப் பின்பற்ற முடியவில்லை. சூழ்நிலையால் நிர்பந்திக்கப்பட்டு தெலுங்கானா போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் தெலுங்கானா போராட்டம், கொச்சி, திருவிதாங்கூர், திரிபுரா, தஞ்சை என இன்னும் பல பகுதிகளிலும் நமது தோழர்களின் தியாகங்களின் விளைவாகவும், விவசாய புரட்சியை உயர்த்திப்பிடித்தாலும் மக்கள் செல்வாக்கை பெற்றிருந்தனர். இதன் பலனாக 1952ல் நடைபெற்ற முதல் தேர்தலில் கட்சி நாடாளுமன்றத்தில் முதல்பெறும் எதிர்க்கட்சியாக விளங்கியது. சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்தில் ஆட்சிக்கு சவால் விடும் அளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தனர்.


               இரண்டாவது மற்றும் மூன்றாவது அகில இந்திய மாநாடுகள் (1948 / 53) மக்கள் எழுச்சி ஏற்பட்ட சூழலில், ஆயுதம் தாங்கிய போராட்டமா? இல்லையா? என்ற தளத்தில் முடிவெடுக்க வேண்டியதாயிற்று. மூன்றாவது மாநாடு முதல் பொதுத்தேர்தல் முடிவுகள் பின்னணியில் நடைபெற்றது.


                   நான்காவது மாநாடு, ஐந்தாவது மாநாடு, ஆறாவது மாநாடு புதிய சூழல் நிலைகளுக்கு ஏற்ப சவால்களை சந்தித்தது. சோவியத் கம்யூனி°ட் கட்சியின் 20வது மாநாடு நடைபெற்ற பிறகு நான்காவது மாநாடு நடைபெற்றது. இதில் அரசின் வர்க்கத்தன்மை, தொழிலாளர் வர்க்கத் தலைமை ஆகியவற்றில் திருத்தல்வாதப் போக்கு தலைதூக்கியது.“தேசிய ஒற்றுமை வளர்ச்சியின் விளைவாகவும், முற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக வர்க்க சக்திகளின் சேர்மானம் மாற்றியுள்ளதின் அடிப்படையிலும், தேச ஒற்றுமைக்கான மாற்று அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் என்று இந்திய கம்யூனி°ட் கட்சி நம்புகிறது\” என்ற வரிகள் காங்கிர° கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க அறைகூவல் விடுப்பதாக உள்ளது.


                      1958ல் ஐந்தாவது கட்சி மாநாடு கூடியபோது 12 உலக கம்யூனி°ட் கட்சிகள் கூடி, உலக கம்யூனி°ட் இயக்கத்தின் பிரதான அபாயம் திருத்தல்வாதம் என்று அறைகூவல் விடுத்துள்ளது. எனினும் இந்திய நாட்டில் நேரு அயலுறவுக் கொள்கையில் ஏற்படுத்திய மாற்றம், பொதுத்துறை பற்றிய அறிவிப்புகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் திருத்தல்வாதப்போக்கு நீடித்தது.


       எனவே கட்சித் திட்டம், நடைமுறைக் கொள்கை, தத்துவார்த்த பிரச்சனைகளை தீவிரமான கருத்துவேறுபாடுகள் தோன்றின. ஆறாவது கட்சி மாநாட்டில் (1961) கட்சித் தலைமையின் வர்க்க சமரசத்தை எதிர்த்து 21 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானம் பெரும்பாலான கட்சி உறுப்பினர்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எனினும் கட்சித் தலைமையின் திருத்தல்வாதப் போக்கால், இவை நிராகரிக்கப்பட்டபோது, பெரும்பாலான கட்சி உறுப்பினர்களின் கருத்தாக, உழைப்பாளி மக்களின் முன்னணி படையான கட்சியை பாதுகாக்க தனியாக 1964ல் டிசம்பரில் 7வது கட்சி மாநாடு கல்கத்தாவில் கூடியது.


                7வது கட்சி மாநாடு கம்யூனி°ட்  இயக்க வரலாறஅறில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது புதிய கட்சித் திட்டத்தையும், கடமைகள் பற்றிய தீர்மானத்தில் நீண்டகால நடைமுறைத் தந்திரம், நடைமுறைக் கொள்கை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டு விளக்கப்பட்டன. ரசின் வர்க்கத்தன்மையை பெரு முதலாளித்துவ தலைமையிலான முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அரசு என்று சரியாகவே தீர்மானித்தது. இந்திய அரசாங்கம் தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், எனவே அதை ஆதரிக்க வேண்டும் என்ற சோவியத் கம்யூனி°ட் கட்சியின் நிலைபாட்டை இம்மாநாடு நிராகரித்தது. நேரு தலைமையிலான இந்திய அரசாற்கம் தரகு முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொம்மை அரசாங்கம் என்ற நிலை கம்யூனி°ட் கட்சி நிலைபாட்டையும் மாநாடு நிராகரித்தது.

                7வது கட்சி மாநாட்டில் அரசியல் நடைமுறைக்கள்கை வெகுவாக வரவேற்கப்பட்டது. நமது திட்டத்தை ஏற்பவர்களை மட்டுமே இணைப்பது என்ற நிலையிலிருந்து நாட்டின் அரசியல் சூழலிலிருந்து, அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டுவது என்ற முடிவுக்கு வந்தது. மாற்றுக் கொள்கையை பிரச்சாரம் செய்வது, உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்று பிரச்சாரம், உலக சமாதானம், பேரழிவு ஆயுதம் தடை செய்வதற்கான இயக்கம், திருத்தல்வாதிகள் ஆளும் கட்சிக்கு வால்பிடிப்பதை அம்பலப்படுத்தல் போன்ற உடனடிக் கொள்கை வகுக்கப்பட்டன. இதன் விளைவாக 1967ல் நடைபெற்ற 8 மாநில தேர்தல்களிலும் காங்கிர° கட்சியின் தோல்விக்கு மார்க்சி°ட் கட்சியின் நிலைபாடும் உதவியது. குறிப்பாக வங்கத்தின் ஆட்சி மாற்றத்திலும், தமிழகத்தின் ஆட்சி மாறஅறத்திலும் முக்கிய பங்கு வகித்தது. 


                     அடக்குமுறைகளை எதிர்த்து ஜனநாயக சக்திகளை ஒன்றுசேர்ப்பது என்ற நிலைகளை எடுத்தாலும், 1967ல் சில மாநிலங்களில் வலதுசாரிகள் ஆட்சி அமைத்தபோது அதில் கட்சி பங்கேற்காமல் இருந்து சரியான நிலை எடுத்தது. கட்சியின் செல்வாக்கு உயர்ந்தது.எட்டு மாநிலங்களில் காங்கிர° கட்சியின் படுதோல்வி பின்னணியில், வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் சில மாநிலங்களில் அதிகாரத்திற்கு வந்த பின்னணியில் எட்டாவது மாநாடு 1968 கொச்சியிலும், ஒன்பதாவது மாநாடு 1972 மதுரையிலும் கூடியது. வலதுசாரிகளின் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்தோம். இடதுசாரி அதிதீவிரவாதப் போக்கு கட்சிக்குள் தலைதூக்கியபோது அதற்கு எதிரான போராட்டத்தை நடத்திட முடிவெடுத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இதறஅகு மேல் மிக முக்கிய அரசியல் கடமையாக காங்கிர° கட்சியின் ஏகபோகத்தை தகர்ப்பது என்ற முடிவு மாநாடு நிறைவேற்றியது. எனவே, 1971ல் காங்கிரசின் இருபிரிவையும் (இன்டிகேட்/சிணஅடிகேட்) ஆதரிக்காமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டோம்.


                காங்கிர° கட்சியின் மீது அதிருப்தி மேலும் மேலும்  அதிகரித்தபோது து, அரைப்பாசிச அடக்குமுறைகளை வங்கத்தில் நடத்தியது. ஒரு எதேச்சாதிகார, தனிநபர் ஆட்சியை நோக்கி நடைபோடுவதையும், அதன் அபாயத்தையும் 1972ல் மதுரை மாநாடு எச்சரித்தது. இடதுசாரி சக்திகளை வென்றெடுப்பது, இதர ஜனநாயக சக்திகளை ஒற்றுமை ஏற்படுத்தியது என்ற முடிவை கட்சி எடுத்து சீரிய முறையில் அமுலாக்கியது. இதன் விளைவாக காங்கிர° கட்சியினஅ அவசரகால ஆட்சியை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது.
இக்காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் இயக்கம் எழுந்தது. காங்கிரசின் அவசரகால கொடுமைகளை வீழ்த்திட கட்சி இப்போராட்டத்தை ஆதரித்தது. எதிர்க்கட்சிகளும், சோஷலி°ட்டுகளும் இவ்வியக்கத்தில் ஐக்கியமாகினர்.  இதன் விளைவாக, 1977ல் ஜனதா ஆட்சியில் சோஷலிடுகளும், தீவிர காங்கிரசாரும் ஜனதா கட்சியில் இணைந்து விடுவது என்ற முடிவை எடுத்தனர். நமது இதில் சேராமல் இருந்தோம். இக்கட்டிக்குள் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கவிழும் சூழ்நிலையில் நாம் அதைச் செய்யாமல் காங்கிர° எதிர்ப்பணியை ஒற்றுமை ஏற்படுத்த முயற்சி செய்தோம்.


                  மார்க்சி°ட் கட்சியின் நாடு தழுவிய இந்த நடைமுறைக் கொள்கையாலும், வெகுஜன இயக்கத்தாலும், வங்கத்திலும், திரிபுராவிலும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னணியில் 1978 ஏப்ரலில் பத்தாவது மாநாடு ஜலந்தரில் கூடியது. ஜனதா ஆட்சி, காங்கிர° கட்சிக்கு மாற்றான பொருளாதார கொள்கைகளையோ, காங்கிர° அரசு உருவாக்கிய அரசு கட்டமைப்பை முழுமையாக கலைப்பதற்குக்கூட தயாராக இல்லாத நிலையிலும், ஜனதா கட்சி ஒன்றிணைந்த பொருளாதார கொள்கைகள் இல்லாத நிலையில் பலவீனமாக இருந்ததை மாநாடு விவாதித்தது. ஜனதா அரசின் கொள்கைகளுக்கு எதிராக மக்கலைத் திரட்டி எதிர்ப்பு இயக்கங்களை நடத்துவதில் கட்சி முன்னணி பாத்திரம் வகித்தது. மேற்குவங்கம், திரிபுராவில் இடது முன்னணி அரசின் செயல்பாடுகள் மக்களை ஈர்த்தது.


             பத்தாவது கட்சி மாநாட்டின் முடிவின்படி கட்சி அமைப்பு பிரச்சனைகளை விவாதிக்க 1978 டிசம்பரில் சால்கியாவில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. நாட்டில் உள்ள அரசியல் சக்திகளில் ஒரு தீவிரமான மறுசேர்க்கையை உருவாக்க வேண்டியது கட்சியின் முழுமுதல் கடமை என்று முடிவெடுத்தது. இந்த மறுசேர்க்கையில் இடதுசாரி - ஜனநாயக சக்திகளின் நாடு தழுவிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவியது. தற்போதுள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளான காங்கிர° மற்றும் ஜனதா கட்சிக்கு மாற்றாக இடதுசாரி - ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணியே மாற்றாக முடியும் என்று முடிவெடுத்தது சால்கியா மாநாடு.


                                                   கட்சியில், புரட்சிகரமான கட்சி, வெகுஜன புரட்சி கட்சி என்ற தன்மையோடு செயல்பட வேண்டும என்ற முடிவெடுத்தது. கட்சியின் தலைமை தலைநகரங்களில் இருந்து செயல்படுவது, அரசியல் தலைமைக்குழு மாநில தலைவர்கள் கட்சி ணைசத்தில் இருந்து செயல்படுவது என்று முடிவாகி அமுலாக்கப்பட்டது. கட்சிப் பத்திரிகைகள், இலக்கியங்கள் ஒன்றிணைப்பது என்று முடிவெடுத்தது. வர்க்க °தாபனங்களை கடந்து பாதிக்கப்படும் அனைத்து பிரிவு மக்களையும் திரட்டக் கூடிய அமைப்புகளை நாடு தழுவியதாக மாற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் என பல பிரிவு மக்களின் அமைப்பின் அகில இந்திய அமைப்புகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. மேலும் பழங்குடி மக்களின் அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. மேற்கண்ட முடிவால் அடுத்த பத்தாண்டுகளில் கட்சியின் எழுச்சியும், வளர்ச்சியும் மேலோங்கியது. கட்சியின் அரசியல் அந்த°தும், பங்களிப்பும் அதிகமானது.


                                                            பத்தாவது கட்சி மாநாட்டின் முடிவால், வங்கம், கேரளா, திரிபுரா தளங்களை உறுதிப்படுத்திட உதவியது. 77க்கு முன் காலங்களுடன் ஒப்பிடுகையில் நமது தளங்களை கூட்டாக தாக்குவது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகியது. ஆளும் வர்க்க தாக்குதலுக்கு எதிராக மற்ற முதலாளித்துவ கட்சிகளை ஒன்றுதிரட்ட முடிந்தது. இது தேசிய அளவில் இடதுசாரிகளின் மரியாதையை உயர்த்தியது.பிரிவினை வாதத்திற்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமை தூக்கும் போராட்டம்,மக்கள் உரிமை காக்கும் போராட்டம், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் கட்சி முக்கிய பங்காற்றியதற்கு பத்தாவது மாநாட்டு முடிவுகள் வழிகாட்டின.


              11வது கட்சி மாநாடு முதல் காங்கிர° ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டுவது, எதிர்க்கட்சி முதல்வர்களை அணிதிரட்டுவது என்று மாநில உரிமைகளை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் கட்சியின் செயல் இருந்தது. இது 1989லும், 1998 காங்கிர° மாற்று அரசு உருவாக்கும் நிலைக்குக் கொண்டுசென்றது. இடதுசாரிகள் தவிர்க்க முடியாத சக்திகளாக மாறினர்.
14வது கட்சி மாநாடு கூடியபோது, இந்திய அரசியல் வலதுசாரிகள் பக்கம் சாய்ந்தது. வகுப்புவாத வளர்ச்சியும், தாராளமய கொள்கையும் தொழிலாளர் மீது தாக்குதல்களைத் தொடுத்தன. இடதுசாரிகள் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. காங்கிரசின் இடத்தை இதர வலதுசாரி கட்சிகள் பிடித்தன. பிராந்திய கட்சிகளின் வளர்ச்சியும் வேகமாக ஏற்பட்டது.


                       எனவே அடுத்தடுத்து நடைபெற்ற மாநாடுகளில் கட்சி வகுப்புவாத அபாயத்திற்கு எதிராகவும், காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலையில், மக்களை அணிதிரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்னுக்கு வருகிற பிரதான அபாயங்களை வீழ்த்த வேண்டிய கடமைகள் உருவாகின, 

                                    கட்சியின் 17வது மாநாட்டில், முதலாளித்துவ குட்டி முதலாளித்துவ கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி கடைப்பிடிப்பது பற்றி விளக்கியது. இடதுசாரி கட்சிகள், முதலாளித்துவ கட்சிகள், மதவெறி கட்சிகளுக்கிடையிலேயான வேறுபாடுகளை விளக்குவதும், மக்களிடம் கொண்டு செல்வதும் அவசியமாகியது. இடது ஜனநாயக அணி என்பது ரு தேர்தல் அணி என்ற கருத்தை உடைத்தெறிய வேண்டும் என்று அறைகூவியது.

                       18வது மாநாட்டில், மதவெறிக்கு எதிரான அனைத்து முனைகளிலும் போராடுவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராக மாற்றுத் திட்டம் முன்வைத்து வலுவான இயக்கம் உருவாக்கியது. அமெரிக்க ஆக்கிரமிப்பையும், நமது நாட்டில் ஊடுருவுவதையும் எதிர்த்து போராடுவது. இடது ஜனநாயக சக்திகளை பலப்படுத்துவதை கடமையாக்கி களத்தில் இறங்கியது. மதவெறி சக்திகள் ஆட்சியிலிருந்து இறங்கினாலும், அதன் அபாயம் நீடிப்பதை இம்மாநாடு வலுவாக சுட்டிக்காட்டியது. 
                   
    19வது மாநாட்டில் ஐக்கிய முற்போக்கு அரசிற்கு இடதுசாரிகள் வெளியிலிருந்து கொடுத்த ஆதரவுகள், அதன் பலாபலன்களை பரிசீலிப்பதாக அமைந்தது.    ( டிசம்பர்  தமிழ்  மார்க்சிஸ்டில்  வெளியிடப்பட்டது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...