Pages

செவ்வாய், மே 31, 2011

7. நாங்கள் வலிமையானவர்கள்.


       எந்தவொரு சமூக அரசியல் மாற்றங்களுக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கும் இணைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும், தனிநபர் சாகசங்களும் முன்தேவையாக அமைந்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.சமுதாயத்தில் புதிய பொருளாதார அரசியல் வளர்ச்சிப்போக்குகள் உருவாகிறபோது புதியவிதமான பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.அவற்றிற்கான மாற்று மார்க்கம் உடனடியாக தெரியாதபோது  இதுபோன்ற ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் மற்றும் சாகசங்கள் மூலமாக தீர்வுக்கான தேடல் நடைபெறுகின்றது. இதற்கு ருஷ்யநாட்டு இளைஞர் இயக்க செயல்பாடுகள்  சிறந்த உதாரணமாகும். இக்காலத்தில் (1815-1890) செயல்பட்ட இளைஞர் அமைப்புகளில் இளம் ருஷ்யர்கள் பங்கேற்ற  அமைப்புகள் பலபோக்குகள் அதனுள் இருந்தாலும்  சிறந்த, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாகவும் திகழ்ந்தது.
          பத்தொன்பதாம்  நுற்றாண்டின் மிகப்பெரிய நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் ருஷ்யா இருந்தது.அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும் சட்டம், சட்டமன்றம் எதுவுமற்ற சார் மன்னனிடமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நாடாக ருஷ்யா திகழ்ந்தது.6-ல் 5பங்கு மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருன்தனர்.

   உற்பத்தி திறன்மிகவும் குறைவாக உள்ள விவசாயத்தில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டிருந்ததாக லெனின் பிற்காலத்தில் ஆய்வு செய்து எழுதினார்.  1833-ல் 43 சதவீத மக்கள் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 1859-ல் 66 சதவீதமாக உயர்ந்தது. 1861-ம் ஆண்டு பண்ணைஅடிமைத்தனம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு ருஷ்யாவில் இயந்திர ஆலைமுதலாளித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது.

               1865-ம் ஆண்டுக்கும் 1890-ம் ஆண்டுக்கம் இடையில் உள்ள 25 ஆண்டுகளில் பெரிய ஆலைகளிலும் இரயிவேக்களிலும் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 லட்சத்திலிருந்து 14.3லட்சமாக உயர்ந்தது.அடுததசில வருடங்களில் இது 27 லட்சமாக உயர்ந்தது.ஆலைமுதலாளித்துவத்தின் விளைவாக 1870-ம் ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.1875-ல் ஒடேஸ்ஸா நகரத்திலும் 1878-ல்பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் தொழிற்சங்கம் உருவாகியது.1881 முதல் 1886-வரை 5 ஆண்டுகளில் 48-க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

                        இதே காலத்தில் சார் அரசு அதன தேவைகளை முன்னிறுத்தி அதிகார வர்க்க எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியது.          மறுபுறத்தில் புதிய சூழலுக்கான நிர்வாகிகளின் தேவைகளுக்காக உயர்கல்வி    விவாக்கம் வேகமாக நடந்தது. ருஷ்யாவின் 5 பல்கலை கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்தது.இம்மாணவர்களில் பெரும்பகுதி நடுத்தர, மற்றும் கீழ்மட்ட மக்கள் பிரிவிலிருந்து வந்தனர். பாரம்பரிய உயர்வர்க்கமும் அதன் தலைமையும் இக்காலத்தில் குறைய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
                        இந்த பின்னனியில்தான் இளைஞர் கலகங்களும் எழுச்சிகளும், அப்புகளும் உருவாகின.1825-ம் ஆண்டு சார் மன்னன் முதலாம் நிக்கோலசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் இருந்த இளம் அதிகாரிகள் குழு பெரும் கலகத்தில் ஈடுபட்டது.அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இளம் வீரர்கள் கலகத்தில் இறங்கியது மன்னனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போராட்டம் கடுமையாக அடக்கப்பட்டு ஐந்து இளம் இராணுவ அதிகாரிகளின் தலை கொய்யப்பட்டது.இவர்களை டிசம்பரிஸ்டுகள் என்று அழைப்பார்கள்.

                        டிசம்படிரிஸ்டுகளின் தாக்கம் அடுத்தடுத்த ருஷ்ய சமுகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது.இன்றளவும் டிசம்பரிஸ்டுகள் பற்றி நினைவுகூறல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1830-1860-ம் ஆண்டுகளில் ருஷ்ய சமூகத்தில் தத்துவார்த்த கருத்து மோதல்கள் தீவிரமடைந்தன. 1848-ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கை இந்த மோதலுக்கு புதிய வழித்தடத்தை திறந்து விட்டது. 

                 பல எழுத்தாளர்கள் சோசலிசத்தை பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தனர். பண்ணை அடிமைகள் விடுதலைசெய்வது, அரசின் அதிகாரத்தை குறைப்பது, பத்திரிக்கை சுதந்திரத்தை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இக்கருத்துக்களின் ஊடாக சமூக அவலங்களை எதிர்த்து இளைஞர்களின் அணிதிரட்சி நடைபெற்றது.

1 கருத்து:

  1. பயனுள்ள நல்ல கட்டுரைத்தொடர். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். மருதன்.

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...