Pages

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

பாஜக; பின்தொடரும் பாலியல் வக்கிரம்

.
      அரியானா  பாஜக மாநில தலைவராக சுபாஷ் பர்லா உள்ளார். இவரது மகன் விகாஷ் அவரது நண்பர்  ஆசிஷ் இருவரும் சண்டிகரில்  இளம்பெண்ணை இந்த மாதம் 5ம் தேதி காரில் பின்தொடர்ந்து பாலியல் வக்கிரம் செய்ய முயற்சித்தனர். காவல்துறை அப்பெண்ணை மீட்டனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்து 9 சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை என்று கூறி குற்றவாளிகளை தப்பிக்கவைக்க முயற்சி செய்கின்றனர். 

      பாஜக ஆட்சிபீடம் ஏறிய விடன் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுவது அதிகமாகி உள்ளது.

       2017 ஜுலை மாதம் டெல்லியில் 21 வயதுள்ள விமானப்பணிப்பெண் பின்தொடர்ந்த இளைஞனால் தெருவில் குத்தி கொலை செய்யப்பட்டாள். பலமுறை புகார் செய்தும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.

     இதே ஆண்டு மே மாதம் டெல்லியில் 24 வயதுள்ள பெண் பின்தொடர்ந்தவன் வீட்டுவாசலில் வந்து குத்தி கொலை செய்கிறான். 

       2016 செப்டம்பர் மாதம் டெல்லியில் 22 வயதுள்ள பெண் பட்டபகலில் பின்தொடர்ந்தவனால் படுகொலை செய்யப்படுகிறாள்.
        
          2014-ல் பெண்கள் மீதான பின்தொடர்ந்த பாலியல் வன்முறை 4699 இருந்தது. 2015-ல் இது 6266 ஆக அதிகரித்துள்ளது.
           
            2015-ல் டெல்லியில் அதிகபட்சமாக 1124 வன்முறைகள்  அதாவது மொத்த குற்றங்களில் 12.1 சதமாக உளளது. அடுத்ததாக மராட்டியத்தில் 1399, தெலங்கானாவில் 766  ஆந்திரபிரதேசதில் 551 ஆக உள்ளது. 

               பெண்களை பின்தொடர்ந்து பாலியில் வன்முறை நடைபெறுவதில் மிகவும் ஆபத்தான நகரங்களாக டெல்லி, மும்பைய்,பூனே, அவுரங்காபாத், கொல்கத்தா உள்ளது.

              மொத்தமாக 2015-ல் விசாரிக்கப்படவேண்டிய 9083 வழக்குகளில் 146 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது அல்லது திரும்பபெறப்பட்டுள்ளது. மற்றபை அப்படியே உள்ளது.

         
மொத்தமாக நடைபெறும் குற்றங்களில் நாடுமுழுவதும் 46.9 சதம் தண்டிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களில் 26.4 சதம் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...