Pages

திங்கள், பிப்ரவரி 15, 2016

இதுதான் தேசபக்தியா... ?

தேசவிரோதிகள் தங்களை தேசபக்தர்கள் என நாமகரணம் சூட்டிக்கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர்.

தச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் ...

ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்...

ங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்...

ந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழமுடியாது என அறிவித்து, இரு நாடு கொள்கையை பிரச்சாரம் செய்து, முஸ்லீம் லீக்கின் கண்ணாடி பிம்பாக செயல்பட்டவர்கள்.

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, முஸ்லீம் லீக் போலவே இவர்களும் வெள்ளையனை ஆதரித்தவர்கள்.

1947 - இந்தியா விடுதலை பெற்றபோது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக்கொடியை ஏற்றியவர்கள்.

தேசத்தந்தையை படுகொலை செய்ததுடன், இனிப்பு வழங்கி கொண்டாடியவர்கள்.

1950களில் இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்த்து விஷம் கக்கினர். மனுஸ்மிருதியை புகழ்ந்து எழுதினர்.

ந்து ஆண்களுக்குரிய உரிமை பெண்களுக்கும் பொருந்தும் என சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து செயல்பட்டவர்கள்.

1956-ல் அம்பேத்கர் சாதிய அடக்குமுறைக்கு எதிராக புத்தமதத்தை தழுவியபோது கடுமையாக எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்கள்.

தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் அரணாக இருக்கின்ற அரசியல் சட்டபிரிவு 370 ஐ எதிர்த்து வருகிறவர்கள்.

ணவன் பிணத்துடன் மனைவியை உயிருடன் வைத்து எரித்து கொள்ளும் சதி எனும் படுபாதக செயலை 1987-ல் இராஜஸ்தானில் ஆதரித்து புகழ்ந்து பேசியவர்கள்.

லித் மற்றும் இதர பிற்படுத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசி வருபவர்கள். ஒழித்துக்கட்ட உறங்காது உழைப்பவர்கள்.

1992-ல் பாபர் மசூதியை இடித்தவர்கள். இந்து முஸ்லீம் பகைமை தீயை நாடு முழுவதும் எரியவிட்டவர்கள்.

பூர்வகுடி மக்களின் கல்வி, மருத்துவ தேவைகளுக்கு உதவி செய்த கிறிஸ்தவர்களை உயிருடன் கொளுத்தியவர்கள்

ணுகுண்டுக்கு கோவில் கட்டி, அதை பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவோம் என போதனை செய்து வருபவர்கள்.

தேர்தல் ஆதாயத்திற்காக குஜராத் துவங்கி முசாபர் நகர் வரை வகுப்புக் கலவரங்களை எரியவிட்டு எண்ணற்ற உயிர்பலி கொடுத்தவர்கள். வகுப்புக் கலவரங்கள் காளான்கள் போல் வளர வழிவகுத்தவர்கள்.

கோவா, தானே, மாலேகான், சம்ஜிதா ரயில், மெக்கா மஸ்ஜித் என பல இடங்களில் காவித் தீவிரவாதம் மூலமாக குண்டு வெடிப்புகளை நடத்தி, இஸ்லாமியர் மீது பழிபோட நினைத்தவர்கள். இதை அம்பலப்படுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கரே படுகொலைக்கு பக்கபலமாக இருந்தவர்கள்.

2013-ல் கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி, நரேந்திர தபோல்கர் என புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர்களை படுகொலை செய்தவர்கள்.

மாட்டுக்கறி பெயரால் மனித படுகொலை செய்பவர்கள்.

ங்களது காவி பயங்கரவாத செயல்களை தற்போது சென்னை ஐஐடி துவங்கி, ஹைதராபாத், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் செயல்படும் மாணவ அமைப்புகளுக்கு எதிராக இறக்கி உள்ளனர்.

தசார்பற்ற சிந்தனையாளர்கள், ஜனநாயகவாதிகள், காந்தியவாதிகள், இடதுசாரிகள், தலித் அமைப்புகள், அம்பேத்கர் பெயரால் இயங்கும் அமைப்புகள் என அனைத்துக்கும் தேசவிரோத முத்திரை குத்தி வேட்டையாடத் தொடங்கிவிட்டனர்.

சுதந்திர சந்தை மூலமாக இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகுவைத்துவிட்டு, இயற்கை வளங்களை கிழக்கிந்திய கம்பெனிகளின் புதிய அவதாரமான பன்னாட்டு கம்பெனிகளிடம் அடகுவைத்துவிட்டு, மத்தியகால சிந்தனையான பிற்போக்குதனத்தை மீட்டெடுக்க நினைக்கும் இவர்கள் தேசபக்த வேடம் பூண்டு வருகின்றனர்.

கூலி கேட்டால், குடிநீர் கேட்டால், குடியிருப்பு கேட்டால், விலை உயர்வுக்கு எதிராக போராடினால், ஜனநாயக உரிமை கேட்டால் இனிமேல் தேசவிரோத முத்திரை குத்தப்படும். இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் நியதி.

மீண்டும் சாதிய வர்ணாசிரம கட்டமைப்புக்குள் இந்திய சமூகத்தை கட்டமைக்க துடிக்கும் இந்த மக்கள் விரோதிகள், எல்லா மக்களுக்கும், எல்லா தேசத்திற்கும் எதிரானவர்கள். அவர்களின் போலி தேச பக்த பதாகை பறிக்கப்படும் நாட்கள் எண்ணப்பட வேண்டும்.

- ஏ.பாக்கியம்.

செவ்வாய், பிப்ரவரி 09, 2016

கழக ஆட்சிகளால் களவாடப்பட்ட பள்ளிக்கரணை நன்னீர் சதுப்புநிலம்


ஏ.பாக்கியம் 

               நூற்றாண்டு காணாத பெருமழையாலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்புக்காக எவருடைய உத்தரவுக்காகவோ கடைசி வரை காத்திருந்து, கடைசி நேரத்தில் அதிகப்படியான நீரை திறந்துவிட்டதால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தாலும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். (அரசு கணக்கின்படி நானூற்று சொச்சம்தான்) பல லட்சம் பேர் உடமைகளை இழந்தனர். ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சென்னையையே தலைகீழாக புரட்டி போட்டது வெள்ளம். விடியாத இரவுகள்; வடியாத வெள்ளம்; முடியாத துயரம் என்று அந்த வெள்ள நாட்களை சென்னைவாசிகளால் மறக்கவே முடியாது.2004 சுனாமி - இயற்கை பேரிடர் 2015 சென்னை பெருவெள்ளம் - செயற்கை பேரிடர்இப்போதும் முதல்வர் ஜெயலலிதாதான்.
                    
                    இந்த செயற்கை பேரிடருக்கு காரணம் என்ன? ஏரி, குளங்களை, நீரை உறிஞ்சும் சதுப்பு நிலங்களை தற்போது ஆளும், ஏற்கனவே ஆண்ட ஆட்சியாளர்கள் விழுங்கி ஏப்பம் விட்டதுதான்.இவர்கள் ஏப்பம் விடாமல் இருந்திருந்தால் வெள்ள நீர் ஏரி, குளங்களில் தேங்கி இருக்கும். சதுப்பு நிலங்களால் உறிஞ்சப்பட்டிருக்கும்.கடந்த 40 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக கட்சிகளின் ‘கபளீகர கொள்கைதான்’செயற்கை பேரிடருக்கு காரணம். நிலத்தையும், நீர்நிலைகளையும், அதற்கான நிதியையும் நீண்ட காலமாக கொள்ளையடித்துதமதாக்கிக் கொண்ட இரு கட்சிகளின் (திமுக, அதிமுக) கொள்கையும், தலைமையும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இதோ உள்ளங்கை நெல்லிக்கனிபோல் மேலும் ஒரு ஆதாரம்தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாழாக்கியது.

அரிதான விஷயம்

                  இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது மக்களின் பண்பாடு மற்றும் மொழியில் மட்டும் அல்ல, அதன் நிலவியல் அமைப்பையும் சேர்த்துதான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வளமை நிறைந்த சமவெளிகளையும், உலகில் உயர்ந்த மலைத்தொடரையும், பரந்த பாலைவனத்தையும், மடிப்புகள் நிறைந்த பீடபூமிகளையும், சதுப்பு நிலங்களையும் வகைவகையான விலங்குகளையும், பறவைகளையும் ஒரே நாட்டில் காண்பது அரிது! அத்தகைய அரிதான பல விஷயங்களை இந்தியா பெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் சதுப்பு நிலப்பகுதி.

நன்னீர் சதுப்பு நிலம்;

         உலகின் நிலப்பரப்பில் 6 சதவீதம் சதுப்புநிலங்களால் ஆனது. அதாவது வருடத்தின் பெரும்பாலான நாட்கள் அல்லது வருடம் முழுவதும் நீர் வற்றாமல் இருந்து கொண்டே இருக்கும். பல வகையான சதுப்பு நிலங்கள் உள்ளன.அதில் பள்ளிக்கரணை மாறுபட்டது. சதுப்பு தாழ்நிலம், சதுப்புநிலம், கடலேரிகள் அல்லது உப்பு நீர் ஏரி, சகதி நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் எனப் பலவகை உண்டு. இந்த வகை நிலங்கள் அனைத்தும் நீரை தேக்கி வைத்து, வெள்ளத்தடுப்பு, கடலோர நிலஅரிப்பு, இயற்கைப் பேரிடரான புயல் மற்றும் கடல் அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் பெரும் பணியினை செய்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ‘ஸ்பாஞ்சு’ போல் நீரை உள் வாங்கி வைத்துக் கொள்ளும். அத்துடன் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டும்தான் ‘நன்னீர் சதுப்பு நிலமாகும்.’இந்திய அரசால் 1985-86 ல் அறிவிக்கப்பட்ட 94 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணை மட்டுமே நன்னீர் சதுப்பு நிலமாகும்.

              வங்கக் கடலிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. கடல்நீரை உள்வாங்கும் பகுதியாக இருந்ததால் பருவகாலங்களில் வெள்ளப் பெருக்கினால், சுத்தமான நீரும், கடல் நீரும் கலந்து ஒன்றாக மாறியது. 1876-ல் பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டபிறகு, கடல் நீர் உள்ளே வருவது முழுவதுமாக தடுக்கப்பட்டது. சதுப்பு நிலத்தின் தண்ணீரில் உப்பு தன்மை குறைந்து சுத்தமான தண்ணீர் நிறைந்த ‘நன்னீர் சதுப்பு நிலமாக’மாறியது. இந்திய நில அளவை துறையின் கணக்கெடுப்பின்படி 1965-ம் ஆண்டு இந்த நன்னீர் சதுப்பு நிலம் 5,500 ஹெக்டேராக (14,000 ஏக்கர்) இருந்துள்ளது.

வேடந்தாங்கலைவிட சிறந்தது
                    பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம் “பலவகைப்பட்ட இயற்கை சூழல் அமைப்பு” ஆகும். இது 337 வகையான தாவர மற்றும் உயிரின தொகுதிகளை பாதுகாத்தது. 115 வகையான விதவிதமான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள்,21 வகையான ஊர்வன,10 வகையான ஆமை, தவளை உட்பட இருவாழ்விகள், 46 வகையான மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள், 7 வகையான பட்டாம்பூச்சிகள், 5 வகையான நீர் பூச்சிகள், 29 வகையான புற்கள் உட்பட 114 வகையான தாவரங்கள் என அற்புதமான இயற்கை உயிரினப் பெட்டகத்தை கொண்ட இடமாக இருந்தது. 

           பறவைகள் சரணாலயத்தின் பாதுகாப்பாக வேடந்தாங்கலைவிட 4 மடங்கு அதிகமாக இந்த நன்னீர் சதுப்பு நிலம் இருந்தது. இந்த பகுதி அழகான கோரையும், கீரைகளும் நிறைந்த பகுதியாகும். இந்த நிலம் பறவைகள், பூச்சிகள், விலங்குகளின் வீடாகவும், புகலிடமாகவும், இனப்பெருக்க மையமாகவும் இருந்தது.பருவ காலங்களில் 31 ஏரிகளின் உபரி நீரை உள்வாங்கும் பகுதியாக இந்த நன்னீர் சதுப்பு நிலம் இருந்தது.வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் உயரவும், பெருமளவு உதவியது.

கழுதைக்குத்தான் தெரியாது; கவர்மெண்ட்டுக்குமா தெரியாது?
                கழுதைக்கு வேண்டுமானால் கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம். கவர்மெண்ட்டுக்கு தெரியாமலா இருக்கும்? கண்டிப்பாக தெரியும். கற்பூரத்தின் விலையும் தெரியும். அதன் வாசனையின் விளைவும் தெரியும். எனவேதான் 40 ஆண்டுகால திமுக-அதிமுக ஆட்சிகள் ‘வாரிச்சுருட்டுவதில்’ வரலாறு படைத்தன.1965-ம் ஆண்டு 5500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) சதுப்பு நிலமாக இருந்தது. 1972-ல் இந்திய வன கணக்கெடுப்பின்போதுகூட இது இருந்துள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலத்தில் உயிரினங்களின் கணக்கெடுப்பை நடத்திய போதுகூட சுமார் 200 வகையான உயிரினங்கள் வரை இருந்த தகவல்களை பதிவு செய்துள்ளது.

இருக்கு, ஆனா இல்லை
          இருக்கும் ஆனால் இருக்காது என்பது போல், கணக்கெடுப்பிலும், காகிதங்களிலும் அனைத்தும் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இவை கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. கடந்த 25 ஆண்டுகாலம் இரு கழகங்களும் இயற்கை பாதுகாவலனை முறைவைத்து விழுங்கி தீர்த்துவிட்டன. 1965-ல் 5,500 ஹெக்டேராககிழக்கில் மகாபலிபுரம் சாலை, மேற்கே தாம்பரம். வேளச்சேரி சாலை, வடக்கில் வேளச்சேரி கிராமம், தெற்கில் மேடவாக்கம் சாலை என்பது இதன் எல்லையாக பரந்து விரிந்து தமிழகத்தின் உயிரின சமநிலை, சுற்றுச் சூழலை பாதுகாத்து வந்தது. 

        தற்போது 317 ஹெக்டேர் அதாவது 793 ஏக்கர் மட்மே இருப்பதாக அரசுதெரிவிக்கிறது. இதைத்தான் வனத்துறையிடம் அளந்து, காப்புக்காடு சட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது. மீதமுள்ள 5,183 ஹெக்டேர் (12,905 ஏக்கர்) எங்கே சென்றது? நிலம் இருக்கிறது. ஆனால் சதுப்பு நிலமாக இல்லை. ஆக்கிரமிப்பு கட்டிடங்களாக, சாக்கடைகளாக, குப்பை மேடுகளாக, வானுயர அடுக்குமாடிகளாக உள்ளது.

சதுப்பு நிலத்தின் மீது வணிக சாம்ராஜ்யங்கள்
               ‘வேலியே பயிரை மேய்வதுதான்’ திமுக, அதிமுக ஆட்சிகளின் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டது இதற்கு இந்த சதுப்பு நில கபளீகரமே சாட்சியாகும். தேசிய கடல்சார் ஆய்வு மையம், காற்றாலை தொழில்நுட்ப ஆய்வு மையம், பறக்கும் ரயிலின் தூண்கள் என முக்கிய நிறுவனங்கள் எந்தவித கூச்சநாச்சமின்றி நன்னீர் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டு கட்டிடம் கட்டின. இந்த அமைப்புகள் வேறு இடத்தில் இருந்துகூட செயல்பட முடியும். இந்த சதுப்பு நிலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. 

          உதாரணமாக ‘காக்னிஸான்ட்’, ‘எச்.சி.எல்.’ போன்ற பல்வேறு நிறுவனங்கள் சதுப்பு நிலத்தை அழித்துவிட்டன. ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள், தங்கவேலு கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், முகமது சதக் கல்லூரி என காசுமேலே காசு பார்க்க, நன்னீர் சதுப்பு நிலத்தை புதைத்து அதன்மேல் தங்களது ‘வியாபார’ ஸ்தலங்களை கட்டமைத்துவிட்டனர். குளோபல் மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, காமாட்சி மருத்துவமனை என மருத்துவமனைகளின் பட்டியல் நீளும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சியின் பிரமுகர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சொந்தமானது.
         இவைதவிர, நன்னீர் சதுப்பு நிலத்தை எட்டயபுரம் ஜமீனுக்கு சொந்தம் என்று போலி ஆவணங்கள் தயார் செய்து பலநூறு ஏக்கரை விற்றுவிட்டனர். பூமிபாலா என்ற போலி அறக்கட்டளையை ஆரம்பித்து 66 ஏக்கரை ஏப்பம் விட்டனர். பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நில ஆக்கிரமிப்பு அனைத்தையும் நடுத்தர வர்க்கம் அல்லது அடித்தட்டு மனிதனால் செய்ய முடியாது. அனைத்தும் ஆட்சியாளர்களால், ஆட்சியாளர்களுக்கு செய்யப்பட்டுக் கொண்டது.

கழிவுநீர் சதுப்பு நிலம்
                     ’மழைநீர் வடிகால்வாய் கட்ட வேண்டிய பணத்தை கொள்ளையடித்து சாலைகளிலும், வீடுகளிலும் மழைநீரை தேங்கவைத்த இரு கழக அரசுகள், கழிவுநீரைக்கூட வெளியேற்ற வழிவகை செய்ய முடியாததுதான் இவர்களின் சாதனை. நன்னீர் சதுப்பு நிலத்தை கழிவுநீர் சதுப்பு நிலமாக மாற்றிய சாதனை இவர்களுடையது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆலந்தூர் நகராட்சியின் கழிவுநீர் முழுவதும் கொட்டப்படுகிறது. இவை தவிர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் தினசரி 3 கோடியே 20 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்படாமல் இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகிறது. இந்த கழிவுநீர் அனைத்து நீர் ஆதாரங்களையும் அழித்துவிட்டது.

மாநகராட்சியும் விட்டு வைக்கல...
                    பெருங்குடியை மையமாக வைத்து சென்னையில் திடக்கழிவு கொட்டப்படுகிறது. தற்போது சுமார் 136 ஹெக்டேர் வரை (340 ஏக்கர்) சென்னையின் சரிபாதி திடக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. தினசரி 4500 டன் சென்னை மாநகராட்சியால் கொட்டப்படுகிறது. குப்பைகளைப் பிரித்துக் கையாள்வது, மறுசுழற்சி என்ற எதையும் செய்யாமல் மாநகராட்சி அப்படியே கொட்டுவதால் ஆண்டுக்கு 4 ஹெக்டேர் வீதம் இந்த குப்பைகள் நன்னீர் சதுப்பு நிலத்தை விழுங்கி கொண்டிருக்கின்றன. 

              1970-ம் ஆண்டுகளில் பெருங்குடி சீவரம் கிராமத்தில் 7 ஹெக்டேர் குப்பை கொட்டுவது என்ற வரையறையை மீறி 80-ம் ஆண்டுகளில் மாநகராட்சி நன்னீர் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்தது. 2002-ல் 56 ஹெக்டேர், 2007-ல் 136 ஹெக்டேர் (340 ஏக்கர்) வரை குப்பை கொட்டுவது அதிகமாகி கொண்டே போகிறது. 2005-ம் ஆண்டு வரை 70 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் (சூயவiடியேட ஞசடினரஉவiஎவைல ஊடிரnஉடை) தெரிவித்துள்ளது. 
       
          2005-ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நன்னீர் சதுப்பு நிலத்தில் மாநகராட்சி திடக்கழிவு கொட்டுவது 74.13 ஹெக்டேரை தாண்டக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கும்போதே அதை மீறுவது என்று தீர்மானித்து இன்று 136 ஹெக்டேர் வரை திடக்கழிவு கொட்டப்பட்டுள்ளது.

34 ஆயிரம் மடங்கு மரண ஆபத்து
               கொட்டப்படும் குப்பைகளில் வீடுகளிலிருந்து வரும் குப்பைகள் மிகமிகக் குறைவு. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவ திடக்கழிவுகள் மிக அதிகமாக கொட்டப்படுவதால் ஆபத்தான நோய்கள் உருவாகிக் கொண்டுள்ளன. இந்த வட்டாரத்தில் உள்ள கிணறுகளில் நீர் மஞ்சள், பச்சை, கருப்பு, சிவப்பு என பல வண்ணத்தில் உள்ளது. நீரும் அதன் குணமும் இந்த கழிவுகளால் சீரழிக்கப்பட்டுவிட்டது. 

             தொழிற்சாலை, மருத்துவக் கழிவுகளால் மெட்டல், காப்பர், மெர்குரி அளவுகள் மிக அதிகமாகி உள்ளன. 27 வகையான இரசாயனக் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதாவது சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் வரையறுத்துள்ள அளவைத் தாண்டி பல மடங்கு இரசாயனக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோயை உருவாக்கக்கூடிய மூன்று இரசாயனங்களின் அளவு, வரையறுத்த எல்லையை விட 34,000 மடங்கு அதிகமாக இந்த குப்பைகளில் உள்ளது.

தாய்ப்பாலும் நஞ்சானது
                  சமீபத்தில் ஜப்பான் பல்கலைக்கழகம் சென்னை பெருங்குடி மற்றும் கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள இடங்களில் தாய்ப்பால் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதில் பெருங்குடிதான் மிக ஆபத்தான இரசாயன கழிவுகள் உள்ள இடம் என கண்டறியப்பட்டுள்ளது. பெருங்குடியில் உள்ள சிலரின் தாய்ப்பாலில் டயாக்சின் என்ற ஆபத்தான இரசாயனம் இருந்துள்ளது. இவை அங்குள்ள மருத்துவக் கழிவுகளில் உள்ள இரசாயனமாகும். இதனால்தான் “நீலக்குழந்தை நோய்” (க்ஷடரந யெலெ ளுலனேசடிஅந) இப்பகுதியில் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

              இந்த நோயால் இதய பலவீனம், இதயத்தில் ஓட்டை ஆகிய பாதிப்புகளும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், ஹீமோகுளோபின் குறைவால் குழந்தை மரணம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் குப்பைகளில் உள்ள இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்துள்ளதால் ஏற்படும் நோய்கள்.சென்னை மாநகராட்சி, குப்பையின் அளவை குறைத்துக்காட்ட அவ்வப்போது தீயிட்டு கொளுத்தி விடுகிறது. ஆனால் இந்த பழியை குப்பை சேகரிக்கும் அப்பாவிகள் (சுயபயீiஉமநசள) மீது சுமத்துகிறது. முழுமையாக பயன்படுத்தப்படாத இரசாயனக் கழிவுகளால் (ஞஐஊ - ஞசடினரஉவள டிக inஉடிஅயீடநவந ஊடிஅரௌவiடிn) மிக பெரிய நோய்கள் காற்றில் பரவுகின்றன. 1000 மைல்கள் வரை இது நோய் தாக்கத்தை ஏற்படுத்தும். என்னதான் தமிழக முதல்வர் பெருமாளை பெத்தபெருமாள் என்று பெயர் மாற்றியது போல் சென்னை மாநகராட்சியை சென்னை ‘பெருநகர’ மாநகராட்சி என்று மாற்றினாலும் அது இன்றும் மா‘நரக’hட்சியாகவே உள்ளது.

தீர்ப்பும், திருந்தாத நிர்வாகமும்
                   2002-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது கண்துடைப்பு என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. காரணம் இதற்குபிறகும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. குப்பை கொட்டுவது நிறுத்தப்படவில்லை. கழிவுநீர் தடுக்கப்படவில்லை. பழைய கதையே தொடர்கிறது. ஆனால் 29 இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக நிர்வாகம் வழக்குப் பதிவு செய்து 20 இடங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

            ஆனால், எப்படி கைப்பற்றினார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை. பொதுவெளியிலும் தெரிவிக்கவில்லை. காரணம் 2004-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பூமிபாலா என்ற போலி அறக்கட்டளைக்கு 66.70 ஏக்கர் நிலம், ராயபுரம் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கும் உள்ளது.

                       இதே போன்று எட்டயபுரம் ஜமீனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இலவசமாக இந்த சதுப்பு நிலத்தை வழங்கியதாக போலி தஸ்தாவேஜுகள் தயார் செய்து விற்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இதையெல்லாம் சாதாரண குப்பனும் சுப்பனும் செய்ய முடியாது. சதுப்பு நிலத்தை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் கல்வி நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 
                 இந்த ஆக்கிரமிப்பின் போது அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாகவும் கண்டித்துள்ளார்.இந்த தீர்ப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எத்தனை ஏக்கர்? ஆக்கிரமிக்கப்பட்டது எத்தனை ஏக்கர்? என்பது உள்ளிட்ட வரைபடத்தை 2015 செப்டம்பர் க்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதுவரை அப்படி ஒரு வரைபடம் ஒப்படைக்கப்படவில்லை.

மக்கள் எழுச்சியே தீர்வு
                நீதிமன்றம் எத்தனை முறை கேட்டாலும் அரசு நிர்வாகம் அடிபணியாது. காரணம் யாரிடம் நீதிமன்றம் கேட்டதோ அவர்கள்தானே ஆக்கிரமிப்பின் சூத்திரதாரிகள். அவர்கள்தானே ஆட்சியாளர்கள்.இயற்கையாக அமையபெற்றநன்னீர் சதுப்புநிலம் அரசாலும் அதன் நிறுவனங்களாலும், அவர்களின் செல்வாக்குமிக்க தகவல் தொழில்நுட்ப, கல்வி, மருத்துவ முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 

                    இதனால் நிலம் கெட்டு, நீர் கெட்டு, காற்றும் கெட்டு, மனித உயிருக்கே உலைவைக்கிறது.லாபம் மட்டுமே கொள்கையாக கொண்ட முதலாளித்துவ சந்தைக்கு வித்திடும் கழக அரசுகள் இதை தடுக்குமா? நீதிமன்றத் தீர்ப்புகள் மட்டும் இதற்கு விடிவுகாண முடியமா? முடியாது!இந்த ஆக்கிரமிப்புக்கு காரணமான, ஆட்சி செய்த, செய்கிற இரு பெரும் கட்சிகளையும் இனி அரியணை ஏற அனுமதிக்கக்கூடாது. சென்னை மற்றும் தமிழக மக்களின் உயிராதாரமான நன்னீர் சதுப்பு நிலம் மீட்கப்பட வேண்டும். இதற்கு மாற்றுக் கொள்கையுடைய மக்கள் எழுச்சியே தீர்வாக அமையும்.
ஏ.பாக்கியம் மாநிலக்குழு உறுப்பினர்
தீக்கதிர் 08.02.2016

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...