Pages

வியாழன், செப்டம்பர் 15, 2011

வளரும் பொருளாதாரம்? வீழும் வாழ்வாதாரம்?.


ஏ.பாக்கியம்

.முனைப்பாக இயங்கும் ஒரு அரசு, வேலைவாய்ப்புகளை மேம்படுத்து வதையோ அல்லதுநலத் திட்டங்களை வழங்குவதையோ அல்லதுசிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் செய்யப்படுவதையோ நிதிமூலதனம் விரும்புவதில்லை. ஆனால் தனது சொந்தநலனுக்காக மட்டும் அரசு முனைப்புடன் செயல்படுவதை அது விரும்புகின்றது. எனவே, சமுதாயத்திற்கு மேலாக நிற்கக்கூடிய வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பின் தோற்றத்துடன் இருந்துகொண்டு சமுதாய நன்மைக்காக கருணையுடன்தலையிடும் அரசு என்ற நிலையிலிருந்து நிதிமூலதனத்தின் நலன்கள் மீது மட்டுமே தனியான அக்கறைஎடுத்துக் கொள்ளும் அரசு என்ற நிலைக்குஅரசின் தன்மையிலேயேநிதி மூலதனம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுகிறது.
                                               (பிரபாத் பட்நாயக்)

 பருளதர ம்வளர்ந்தால், வாழ்வாதாரம் வளரும் என்பதுபொதுவிதி. ஆனால்
முதலாளித்துவ சமூகஅமைப்பில் பொருளாதாரம் வளர்ந்தால்,வாழ்வாதாரம் வீழும்என்பது சுரண்ட லின்விதி. அதுவும், நிதிமூலதன ஆட்சியின் கீழ் இந்த விதிகூடுதல் பலத்துடன் செயல்படும். இன்றைக்குஏற்பட்டுள்ள வளர்ச்சி வேலை வாய்ப்பற்றவளர்ச்சி என்ற உண்மையை மூடிமறைத்திட ஆட்சியாளர்கள் பல தகிடு தத்தங்களையும்,செய்து ஏமாற்றப்பார்க்கிறார்கள். ஆட்சியாளர்களின் கொள்கை அடித்தட்டு மக்கள் அதாவது90 சத மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏஏற்படுத்தவில்லை என்பதை அரசின் புள்ளி விபரங்களேவெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமீபத்தில்தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் (சூளுளுடீ) தனது66வது சுற்று ஆய்வைவெளி யிட்ட து .வேலைவாய்ப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டவீழ்ச்சியை இந்த புள்ளி விபரங்கள் வெளிப்படுத்தியது. ஆட்சியாளர்களால் பொறுக்க
முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு
வந்தது. சுய முரண்பாடுகள் நிறைந்த புள்ளி விப
ரங்கள். ஆய்வு முறைகள் அனைத்தும் தவறானது
(ழகூ. 20/6/11)  என்று திட்டக்குழுவின் துணைத்
தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தி
யாவின் புள்ளியல் துறைத் தலைவர் இந்த ஆய்வு
சரியானது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தனது அரசுக்கு கீழ் இயங்கும் நிறுவனங்கள் வ ளி யி டு ம்
உ ண் ம க  ள
மறுத்தும், தாக்
கி ப் ப சு வ து ம்
இந்த ஐ. மு. கூ.
அரசுக்கு புதி
தல்ல. வறுமைக்
கோடு பற்றிய
ஆய்வுகள் வெளி
வந்த போது
அதை மறுத்து
பேசினர். பண
வீக்கம் பற்றிய
ஆய்வுகள் வெளியான
போது வெளியிட்ட
அரசு நிறுவனத்தையே
கடுமையான முறையில்
விமர்சித்தனர். இந்தியாவில் 77
சதம் மக்கள் வறுமையில் வாழ்
கின்றனர் என்று அரசு நியமித்த
அர்ஜூன் சென் குப்தா
ஆய்வு முடிவை,
நாடாளுமன்றத்திலேயே
அப்போதைய நிதி அமைச்சர்
ப. சிதம்பரம் தாக்கிப் பேசினார்.
ஆள்வோரின் அனுகுமுறை எண்ணெய் குடித்த
நாயை விட்டு விட்டு எதிர்க்க வந்த நாயை அடித்த
கதையாகத்தான் உள்ளது. தேசிய மாதிரி ஆய்வு
நிறு வனம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல
வளரும் நாடுகளும் மதிக்கத்தக்க நிறுவனமாகும்.
ஆள்வோரின் கொள்கைகள் தோல்வி  அடைந்
ததை புள்ளி விபரங்கள் தோலுரித்துக் காட்டு
வதால் தான் இந்த தாக்குதல்கள் தொடர்கிறது.
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகாலமும்
வேலை வாய்ப்பு வளர்ச்சியில் பெரும் வீழ்ச்சிஏற்பட்டுள்ளது. 2000-2005ம் ஆண்டுகளில்
வளர்ச்சி விகிதம் 2.7 சதமாக இருந்தது. இது 2005-
2010ம் ஆண்டுகளில் 0.8 சதவீதமாக வீழ்ந்தது.
குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பு இந்த
ஐந்து ஆண்டுகளில் உழைப்பு சக்தியில் 17 சத
வீதம் குறைந்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு நிறு
வனத்தை குறைகூறிய மத்திய அரசு, தொழி
லாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையை ஆய்வு
நடத்த பணித்தது. இத்துறையும் வேலைவாய்ப்பு
பற்றி 54 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையின் படி 1983 முதல் 1993-94ம்
ஆண்டுவரை வேலை வாய்ப்பு வளர்ச்சி விகிதம்
2.06 சதமாக இருந்தது. ஆனால் 1994-95 முதல்
2004-2005 காலத்தில் 1. 87 சதமாக குறைந்து
காணப்பட்டது.
வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் குறைந்
துள்ள இக்காலத்தில் இந்தியாவில் மொத்த
உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 8 சதவீதம்
வளர்ந்துள்ளது. தீவிர வேலை வாய்ப்புத் திட்
டங்கள் இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உத்தரவாதச் சட்டம் (ஆழுசூசுநுழுஹ), பிரதமர்
வேலைவாய்ப்புத் திட்டம் (ஞஆநுழுஞ) மற்றும்
சுவர்ண ஜெயந்தி கிராம சுவரோஜ்கர் திட்டம்
(ளுழுளுலு),  சுவர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர்
யோஜனா (ளுதுளுசுலு) போன்ற பல திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டன. எத்தனை திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்டாலும், என்ன வளர்ச்சி
என்று மார்தட்டினாலும் இவை அனைத்தும்
வேலைவாய்ப்பில் பிரதிபலிக்கவில்லை.


விவசாயத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான்
வேலைவாய்ப்பு குறைவிற்கு காரணம் என்று
கூறுவது மேலோட்டமான கருத்து. காரணம்
விவசாயம் சாராத தொழில்களிலும் வேலைவாய்ப்பு பெருகி இருக்க வேண்டும் அல்லவா?
அதுவும் நடக்கவில்லை. இத்துறைகளில் 2000
முதல் 2005 வரை வேலைவாய்ப்பு  வளர்ச்சி
விகிதம் 4.65 சதமாக இருந்தது. இதுவே 2005-
2010ல் 2.53 சதமாக குறைந்துள்ளது. இத்துறை
யில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு வளர்ச்சி
விகிதம் 4. 42 சதத்திலிருந்து 2. 89 சதமாகவும்,
பெண்களுக்கான வேலைவாய்ப்பு 5.76 சதத்தி
லிருந்து 0.76 சதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
சுய தொழிலிலிருந்து...தினக்கூலிக்கு
இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில்
சுமார் 51 சதவீதம் சுயவேலை வாய்ப்பாகும்.
கிராமப்புற உழைப்பு சக்தியில் 60 சதவீதமும்,
நகர்ப்புற உழைப்பு சக்தியில் 45 சதவீதமும், சுய
வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்
டது. 2000ம் ஆண்டிற்கு முன்புவரை சுயவேலை
வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. இதே
காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு கிராமப்
புறத்தில் 7 சதத்திற்கு கீழேயும், நகர்ப்புறத்தில் 40
சதவீதத்திற்கு கீழேயும் தேக்கமடைந்திருந்தது.
2005 முதல் 2010வரை இந்த ஐந்து ஆண்டுகளில்
சுயவேலை வாய்ப்பு பெண்களிடையே 20 சத
வீதம் குறைந்துள்ளது.  இதே அளவு ஆண்
களிடம் சுயவேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
தீவிர வேலைவாய்ப்பு திட்டங்கள் அறிவித்த
இக்காலத்தில், வெறும் 2 கோடியே 82 லட்சம்
வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகி உள்ளது.
இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது ஒரு
கோடியே 82 லட்சம் தினக்கூலிகளும், 40 லட்சம்
சுயவேலை வாய்ப்பும், 60 லட்சம் நிரந்தர
வேலைவாய்ப்பும் ஆகும்.
முறைசாரா இந்தியா?
தினக்கூலி மட்டுமே இந்தியாவின் மிகப்பெரிய
வேலைவாய்ப்புத் துறையாக உள்ளது. அதுமட்டு
மல்ல, இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,
ஏழைகளுக்கும் ஒதுக்கப்பட்ட ஒரே வேலை
வாய்ப்பு தளமாக மாறிவிட்டது. பழங்குடி
இனத்தவர்களில் நிரந்தர வேலை செய்வோர் 6.7
சதம் மட்டுமே. தாழ்த்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினரில் நிரந்தர வேலை செய்
வோர் 12 சதமாக உள்ளது. மற்றவர்களில் நிரந்தர
பணி 24 சதவீதம் உள்ளது. குறிப்பாக தாழ்த்தப்
பட்டோரில் 48 சதம் தினக்கூலிகளாகவே
உள்ளனர்.
வறுமை ஒழிப்பு பற்றியும், வறுமைக் கோடு
பற்றியும், ஆள்வோர்கள் வானளாவிய விளக்கங்
களையும், வாய்கிழிய சபதங்களையும் விடு
கின்றனர். ஆனால் இந்த தினக்கூலிகள்தான்
வஞ்சிக்கப்பட்டு வறுமையில் தள்ளப்படுகின்ற
னர். 2004-2005ன் கணக்குப்படி இந்த தினக்கூலி
செய்வோரில் 22 சதம் வறுமைக் கோட்டிற்கு கீழேஉள்ளனர். இந்தியாவில் உள்ள மொத்த
உழைப்பாளர்களான 45. 19 கோடியில் இந்த
தினக்கூலி பட்டியலாளர்கள் கோடிப்பேர்க
ளாகும். தற்போது தேசிய மாதிரி ஆய்வு மையம்
மதிப்பீட்டின்படி, தினக் கூலிகளில் வறுமையில்
வாடுவோர் 32 சதமும், சுய தொழில் புரிவோரில்
18 சதமும், நிரந்தர தொழிலில் 13 சதமும் வறுமை
யில் வாடுவோர்கள் என்று மதிப்பீடு செய்
துள்ளது.
இந்த லட்சணத்தில் எதிர்கால இந்தியா
எப்படி வல்லரசு இந்தியாவாக இருக்க முடியும்?
ஊழல் இந்தியா என்ற பெரும் பட்டத்தை
பெற்றுவிட்டது. அடுத்து முறைசாரா தொழில்
மட்டுமே உழைப்புக்களமாக மாறிவிட்டது. 2004-
2005 கணக்கின்படி 6 சதம் மட்டும். அமைப்புச்
சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர். இவர்களிலும்
மூன்றில் இரண்டு பகுதி பொதுத்துறை நிறுவனங்
களில் பணிபுரிவோர். கடந்த ஐந்து ஆண்டுகளில்
உருவான வேலைவாய்ப்புகள் குறைவாக இருந்
தாலும் அவை அனைத்துமே முறைசாரா தொழி
லில் மட்டுமே உருவாகியுள்ளது. இந்தியாவில்
பணிபுரியும் பெண்களில் 96 சதமும், ஆண்களில்
91 சதமும் முறைசாரா தொழில் பணிபுரிவோர்கள்
ஆவார்கள். இந்திய அரசின் தொழிலாளர் மற்றும்
வேலை வாய்ப்புத்துறை, இந்தியாவின் எதிர்காலம்
முறைசாரா தொழிலில்தான் உள்ளது என்று
பறைசாற்றியுள்ளனர். இதற்கு இன்னொரு பெயர்
வேலை ஒழிப்பு , வறுமை வளர்ப்பு என்பதாகும்.


பெண்கள் வேலைக்கு வராதது ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் தொகை
யில் பெண்களின் உழைப்பு சக்தி 17 சதம்குறைந்துள்ளது. அதாவது 14 கோடியே 85லட்சத்திலிருந்து 12 கோடியே 30 லட்சமாகக்
குறைந்துள்ளது. இதே காலத்தில் பெண்கள்
வேலையில் பங்கேற்பது (றுஞசு) 49 சதத்திலிருந்து
39 சதமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு பல
குழப்பமான அறிக்கைகளையும் ஆய்வுகளையும்
கொடுத்து, உள்ளங்கை நெல்லிக்கனியாய் உள்ள
உண்மைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.
என்றுமில்லாத அளவிற்கு சம்பளம், கூலி
உயர்ந்துவிட்டது. எனவே, ஆண்கள் சம்பாதித்
தால் போதும் என பெண்கள் வீட்டுக்குள்ளே
முடங்கிவிட்டனர் என்ற விளக்கம் விவரங்
கெட்ட விளக்கமாகும்.  சம்பளம் உயர்ந்துள்ளது
என்பது உண்மைதான். ஆனால் அதைவிட அதிக
மாக விலை உயர்வும், உணவுப் பணவீக்கமும்
உயர்ந்துள்ளது என்பதை கணக்கில் கொள்ள
வேண்டாமா? 90 சதவீதம் தினக்கூலிகளாக
இருப்பவர்களுக்கு விலைவாசிப் புள்ளி கணக்
கிலா சம்பளம் உயர்கிறது? இவர்கள் எந்த பாது
காப்பும் இல்லாமல் வறுமையில் வாடுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு போகக் கூடாது என்ற
பழமைவாதக் கண்ணோட்டம்தான் இந்த பெண்
களின் வேலைக்கு வருவது குறைந்துள்ளது என்று
கூறப்படுகிறது. இது இந்தியாவில் நீண்ட
காலமாக இருக்கும் கண்ணோட்டம். ஆனாலும்
இது பல மாற்றங்களை கடந்து வந்துள்ளது. பொது
வாக இதர நாடுகளைவிட சராசரியில் பெண்
உழைப்பாளர்கள் குறைவாக உள்ளனர். இந்தியாவில்
கிராமப்புறத்தில் 25 முதல் 30 சதமும், நகர்ப்புறத்
தில் 15 முதல் 18 சதமும் உள்ளனர். பெண்களின்
பல பணிகளை அங்கீகரிக்காததால் உலக நாடுகளின் சராசரியில் இது குறைவாக உள்ளது. 2000-
2005ல் உயர்வதற்கு 2005-2010ல் பெண்கள் பங்கேற்பு
குறைவதற்கு இது ஒரு காரணம் இல்லை.
15 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்
கள் உயர்கல்வி படிக்கச் செல்வதால் பெண்கள்
வேலைக்கு வருவது குறைந்துள்ளது என்றவாதம்
முன்வைக்கப்படுகிறது. இது காரணமாக இருந்
தால் வரவேற்கத் தக்கதாகும். அதே நேரத்தில்
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருப்ப
தற்கு இது எப்படி காரணமாக இருக்க முடியும்.
15-24 வயதுடைய பெண்கள் படிப்புக்குச் சென்று
விட்டால் அந்த இடத்தில் இதர பெண்கள்
பணிக்கு வருவார்கள் இல்லையா? அதுவும்
நடக்கவில்லை. பெண்கள் வேலைக்கு வருவது
குறைந்திருப்பது 15-24 வயது மட்டுமல்ல
அனைத்து வயதிலும் இந்த வேலையில் பங்கேற்பு
குறைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
எத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும் புதிய
வேலைவாய்ப்புகள் உருவாகாததுதான் இந்த
வீழ்ச்சிக்குக் காரணம். 2007-2008ல் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடி கணிசமான பெண்
களை வேலையைவிட்டு விரட்டியது. குறிப்பாக
ஏற்றுமதி சார்ந்த தொழிலில் ஏற்பட்ட சரிவும்
முக்கிய காரணம். அப்படி வெளியேற்றப்பட்ட
பெண்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க
வில்லை என்பதும் முக்கிய காரணமாகும். முறை
சாரா தொழில் சுமார் 6 சதம் அளவிற்கு இந்த
பொருளாதார நெருக்கடி வீழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்ல, சுமார் 80 லட்சம் புதிய வேலை
வாய்ப்புகளையும் தடுத்தது.

அளப்பெரிய வாய்ப்பா?
மிகப்பெரிய ஆபத்தா?
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய காரண
மாக உள்ளது வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி  (துடிடெநளள
ழுசடிறவா) தான். இதை மூடிமறைக்கவே, மேற்கண்ட
பலவிதமான காரணங்களை கூறுகின்றனர்.
இந்தக் கொள்கையால் புதிய வேலைவாய்ப்புகள்
உருவாகவில்லை என்பதுதான் உண்மையாகும்.
இந்தியாவில் இளம் வயதினரிடையே வேலை
யின்மை அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் 2011
முதல் 2016ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வேலைக்
குத் தகுதி படைத்தவர்கள் அதாவது 15 முதல்
59வயது வரை உள்ளவர்கள் சுமார் 63.5  கோடி
யாக உயரும். இதில் 20 முதல் 35 வயது வரை
உள்ளவர்களே அதிகமாக இருப்பார்கள். உலகி
லேயே இந்தியாதான் இளம் இந்தியாவாக
இருக்கும். அதாவது இந்திய மக்களின் சராசரி
வயது 29 ஆகும். சீனா, அமெரிக்காவில் சராசரி
வயது 37ஆகவும், மேற்கு ஐரோப்பாவில் 45
வயதாகவும், ஜப்பானில் 48 வயதாகவும் இருக்கும்.
எனவே, படித்து விட்டு உழைப்புச் சந்தைக்கு
இளைய சக்திகள் மடைதிறந்த வெள்ளம்போல்
வருகிறபோது, புதிய வேலைவாய்ப்புகள் உரு
வாகவில்லை என்றால் அதன் விளைவுகள்
என்ன? இந்த அளப்பரிய வாய்ப்பை பயன்படுத்த
வில்லை என்றால் மிகப்பெரிய ஆபத்தாக மாறும்?

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...